டாக்டர்களே மிரண்டுபோன சிறுநீரக கல்லை கரைக்கும் தமிழர்களின் அற்புத நாட்டு மருந்து!




தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியலுக்கு பின்னால் இந்தியாவின் வழிநடத்தல் இல்லை. எமக்கு சாி என தொிந்தவற்றை மட்டும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சில தவறான அணுகுமுறைகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டிணைவு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா்.
தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான கூட்டை உருவாக்க அண்மையில் முயற்சிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் விளக்கமளித்தார். இதன்போது பேசிய அவர்,
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து
வெற்றிகரமாக “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்றுபட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.
வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாணசபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை. எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றது.
மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.
இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன். அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே நான் எதிர்பார்க்கும் இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல் யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக் கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று விரும்பினேன். இந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எமக்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து எதிரான பிரதான சவால்களாக இருந்து வருகின்றன. அத்துடன் எமது தமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக கூறி இருந்தது.
இது முற்றிலும் தவறு. எனது அரசியலில் இதை செய், இதை செய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோ கிடையாது. எது சரி என்று நினைப்பதையே நான் இன்றுவரை செய்துவந்துள்ளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கியமானவை அல்ல. அதனால்தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத் தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அந்தரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இதில் பல விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.
முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒரு கொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்.
தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன். இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன்வர வேண்டும்?
ஆனால் இன்றுவரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், காலைக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நான் அனுப்பிய கடிதம் பற்றிக் குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் கூறியிருந்ததை பார்த்தேன்.
பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார். தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக் கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்லவேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.
இந்தநிலையில் தான், பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டுவருவதற்குத் தான் அனுசரணை வழங்குவதாகக் கூறி எனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அவர் முயற்சித்தார்.
இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே இது அமையவிருந்ததால் எந்த முன்நிபந்தனைகளும் எமக்கு இடையே இருக்கவில்லை.
ஆனால், கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்தபோது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கியபோது நடக்க ஏற்பாடாகி இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. இந்த விடயத்தில் நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை.
நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்து விலகி எமது கொள்கைகளை ஏற்று செயற்படவிரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.
இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமது மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு தான் கட்சிகள் செயற்படவேண்டும்.
அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்படவேண்டும். இந்த முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுமந்திரன் எங்கேயாவது எப்போதாவது தீர்க்கமான ஒரு கருத்தினை தெரிவித்ததாக சரித்திரம் இருக்கிறதா? என EROS கட்சியின் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கட்சியின் மகளிர் அணித் தலைவியை அறிமுகப்படுத்தும் ஊடக மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
சுமந்திரனுடைய கடந்த கால வரலாற்றில், யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் இன்னொரு கதை, முல்லைத்தீவில் ஒரு கதை, அன்னிய நாடு லண்டனில் ஒரு கதை, அவுஸ்திரேலியாவில் ஒரு கதை, லண்டனில் ஏன் மக்கள் உடனடியாக வெளியேறு என்று சொல்லி அடிக்க போனவர்கள்? அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அவர்களை காலில் போடும் செருப்பால் தூக்கி எறிந்து அவுஸ்திரேலியா மண்ணை விட்டு வெளியேறுமாறு சொல்லி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஏன் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தூதுவராக வந்த சுமந்திரனை ஏன் அந்த மக்கள் ஓட வைத்தார்கள்? கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு சரியான ஆளாக இருந்திருந்தால் ஒரு தீர்வு பொதியினை கொண்டு வரப் போகும் ரயில் அந்த தீர்வு பகுதி நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டால் நான் பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார்.
நான் இப்பொழுது ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டே இருக்கின்றேன் பத்து பனிரெண்டு வருடங்களாக எழுதிக் கொண்டு இருக்கின்றார். இன்னும் மூன்று மாதங்களில் ஒரு தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தல் வரும்வரை எழுதிக் கொண்டே இருக்கிறார் போலும். தேர்தல் நெருங்கும் சமயம் அல்லது பாராளுமன்றம் கலைக்கும் பொழுது இந்த கடிதத்தை அவர் கொடுப்பார். மக்கள் நினைப்பார்கள் எங்களுடைய சுமந்திரன் தீர்வு பொதியினை வைக்காமல் ராஜினாமா செய்துவிட்டார் என்று. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களே நான் ஒன்றை மட்டும் உங்களிடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் மட்டுமல்ல போராளி வடகிழக்கு மலையகத்தில் உள்ள அனைவருமே போராளி. போராட்டத்தில் எல்லோரும் அடிபட்டவர்கள். எல்லாரும் போராட்டத்தை ஆதரித்தவர்கள்.
போராளியை மட்டும் பயங்கரவாதி என்று சொல்லவில்லை இந்த பேரினவாதிகள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பயங்கரவாதி என்று சொன்னவர்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலி என்று கூறியவர்கள். ஒட்டுமொத்த தமிழருக்கும் விடுதலை தொடர்பான அபிலாசை இருக்கிறது.
இந்த எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்தையும் திணித்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இன்று இந்த அந்நிய சக்திகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு நீங்கள் என்று எங்களுக்கு கதை கூறிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
கௌரவ பாராளுமன்ற சுமந்திரன் அவர்களே உங்களுடைய கதையினை நிறுத்த வேண்டும். பூச்சாண்டி கதை சொல்லுவதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசியலுக்காக இந்த அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்க வேண்டாம். உங்களுடைய அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு சாலச் சிறந்தது.
நாங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுடைய ஆதங்கமும். அது தமிழ் மக்களுடைய உணர்வு. அது அவர்களுடைய வெளிப்பாடும் கூட. தமிழ் மக்கள் தற்பொழுது ஏமாந்து ஏமாந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
சாதாரண கூலித் தொழில் செய்யும் பணி தொடக்கம் புத்திஜீவி வரைக்கும் இன்றைக்கும் மாற்றம் ஒன்று வருமா என்னுடைய பிள்ளை நல்ல தொழிலினை பெற்றுக் கொள்ளுமா. இப்பொழுது ஒவ்வொரு மாற்றத்தை நோக்கி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நான் கேட்டுக் கொள்வது. மக்களை ஏமாற்றாதீர்கள். எங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் அதுவே எங்கள் கட்சி உங்களுக்குக் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்றார்.

