Saturday, 30 May 2026

 ஒரு விவசாயி ஒரு செத்த பன்றியைத் தூக்கி ஒரு பாழ்ங்கிணற்றுக்குள் போட்டார். அடுத்த சில நிமிடங்களில், எழுபது முதல் எண்பது எலிகள் அந்தப் பன்றியைத் தின்பதற்காக கிணற்றுக்குள் குதித்தன. 

ஆரம்பத்தில் எல்லாம் எளிதாகத் தெரிந்தது.

உணவைக் கண்டதும் அவை அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்தன. ஆனால், பன்றியை உண்டு முடித்த பிறகுதான் அவற்றுக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை புரிந்தது... 

அந்தக் கிணற்றின் சுவர்கள் மிகவும் உயரமாகவும், வழுவழுப்பாகவும் இருந்தன. தப்பித்து வெளியேற வழியே இல்லை.

மெல்ல மெல்ல உணவு தீர்ந்தது.

பசி அதிகரித்தது.

அந்தக் கிணறு ஒரு போர்க்களமாக மாறியது.

உயிர்பிழைக்க வேண்டும் என்ற வெறியில், அந்த எலிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கின. ஒன்றை ஒன்று கொன்று, உயிருடன் தின்னத் தொடங்கின.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கிணற்றில் ஒரே ஒரு எலி மட்டுமே மிஞ்சியது.

அதன் கண்கள் ரத்தத்தைப் போல சிவந்திருந்தன. 

அப்போது அந்த விவசாயி ஒரு கயிற்றைக் கீழே இறக்கி, அந்த எலியை மேலே தூக்கி, மீண்டும் வயல்வெளிக்குள்ளேயே விட்டார்.

அந்த விவசாயிக்கு அந்த எலி மீது பரிதாபம் ஏற்பட்டதா?

நிச்சயமாக இல்லை.

பெரும்பாலான மக்களுக்குப் புரியாத ஒரு ரகசியம் அந்த விவசாயிக்குத் தெரிந்திருந்தது...

அந்த எலி இப்போது தன் இனத்தையே தின்று பழகிவிட்டது. அது இனி ஒருபோதும் தானியங்களைத் தேடிப் போகாது. மாறாக, மற்ற எலிகளையே வேட்டையாடித் தின்னும்.

இதுதான் "பிரித்தாளும் சூழ்ச்சி" (Divide and Rule) என்பதன் உண்மையான அர்த்தம். 

நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை:

உச்சியில் இருப்பவர்கள் ஒருபோதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லை.

அதற்குப் பதிலாக, கீழே இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவும், சண்டையிடவும், அழித்துக் கொள்ளவும் தேவையான சூழலை அவர்கள் உருவாக்குகிறார்கள். 

உண்மையான சூத்திரதாரிகள் பின்னால் அமர்ந்து இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

எப்போது இரண்டு பேர் தங்களுக்குள் சண்டையிடுகிறார்களோ, அதன் லாபம் எப்போதும் மூன்றாவதாக ஒருவனுக்கே போய்ச் சேரும்... 

திரைக்குப் பின்னால் இருந்து ஆட்டத்தை ஆட்டுவிப்பவனுக்கே அந்த வெற்றி.

இந்த சதியை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.

இதை நீங்கள் உணரவில்லை என்றால்... நீங்களும் ஏற்கனவே ஒரு கிணற்றுக்குள் தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்க

 

🙏வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்கும்


வரலாறு என்பது நடந்து முடிந்த சம்பவங்களை தற்போது காணப்படுகின்ற பல்வேறு தரப்பட்ட சாட்சியங்களின் பின்னணியில் உய்த்துணர்ந்து
நறுவு கின்ற அறிவியலாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கையின் வரலாற்றை
தொகுத்துரைக்கின்ற நூல்களாக மகாவம்சம் (பெரிய)
சூளவம்சம் (சிறிய) என இரு நூல்கள் ஆதாரமாக
அமைகின்றன.
அந்தவகையில் இலங்கையின் வரலாற்று மாந்தர்களின் தொடக்கமாக விஜயன் மற்றும் அவரது தோழர்களின் வருகையில் அதைத் தொடர்ந்து அவர்கள் வந்து இறங்கிய இடம் அவர்கள் சந்தித்தமுதல் இலங்கைப் பெண் அதை தொடர்ந்தான சம்பவங்கள் என நீண்டுசெல்லும்
வரலாற்றில் அவ்வாறு வந்தவர்கள் வந்து இறங்கிய இடம் அவர்கள் சந்தித்த பெண் தொடர்பாக நிலவி வருகின்றகருத்துக்களை இடப்பெயர் ஆய்வு எனும் பொறிமுறையைப் பின்பற்றி பல்வேறு சான்றாதாரங்களுடன் நிறுவுவதற்கு நூலாசிரியர் ஜெகன் அவர்கள் எடுத்திருக்கின்ற இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.
இவர் இதற்கும் முன்னரும் “உலக ஆரம்பமும் மன்னார்
மாவட்டமும் என்னும் வரலாற்று நூலை வெளியீடு செய்திருந்தார் தொழில் முறை பத்திரிகையாளராக இருக்கின்றபடியினால் அவர் சந்திக்கின்றவர்களிடமிருந்தும் அவர் பயணிக்கின்ற இடங்களில் கண்டுணர்ந்ததின் அடிப்படையிலும் தான் யாத்த நூலின் மையக் கருத்தை தர்க்கபூர்வமாக நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.
குறிப்பாக தான் வாழ்கின்ற அவருக்கு மிகவும் பரிட்சையமான பிரதேசத்தின் இடப்பெயர்களையும் கம்பராமாயணம் போன்ற வரலாற்று இலக்கியங்களின்
பின்னணியில் சீர்தூக்கி ஒப்பு நோக்கி நிறுவ முயன்றுள்ளமை மிகவும் சிறப்பானதுடன் இதனைத் தொடர்ந்து வருகின்றவர்களுக்கு ஆய்வுக்கான
களமாகவும் இது விரிகின்றது. வரலாற்றை புறந்தள்ளிய மானிட வாழ்வு வரலாற்றில் நிலைத்திருக்காது என்பதற்கு அமைய மன்னார் மாவட்டத்தில்
மாதோட்ட பிரதேசம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் சிறப்பான ஒரு இடத்தை புவியியல் ரீதியாக பெற்றிருக்கின்றது.
இதற்கூடாகவே இலங்கைக்கான வருகையை எல்லோரும் மேற்கொண்டுள்ளனர் என்பது
தெளிவு. அதிலும் இன்று நீரில் மூழ்கி கிடக்கின்ற கட்டுக்கரை பிரதேசம் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய மாந்தை பிரதேசம் என்பன அக்காலத்தில் சிறப்புற விளங்கிய பிரதேசங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் போக்கில் பயணிக்கின்ற போது பெரிதும் மாற்றத்தை சந்திக்காது.
இன்றுவரை காணப்படுகின்றது இடப்பெயர்கள் என்பதை பிரித்தானியரின் வருடாந்த ஆண்டறிக்கைகளை பார்க்கின்றபோது அதிசயப்படத்தக்க ஒன்றாகும். காலங்கள் பல கடந்து ஓடினாலும் வாய்மொழியாக வருகின்ற பெயர்கள் அன்றும் இன்றும் என்றும் வழங்கி வரும் இது வரலாற்றில் சிறிதும் மாறாதது என்பது மட்டுமல்ல இலக்கியங்களிலும் அவ்வாறே உள்ளது என்பதை தனது ஆய்வுக்கு வழிகாட்டியாக வைத்திருப்பத காலத்திற்கு பொருத்தமானதாகும் ஏனெனில் தொல்லியல் சான்றுகள் உட்பட ஏனைய சான்றுகள் காலத்திடம் அழிவடைந்தும் பல்வேறு விதமான வியாக்கியானங்கள்
மற்றும் வாதப் பிரதிவாதங்களுக்கு ஊடாக சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால் இடப்பெயர் ஆய்வு அப்படி அல்ல. அவை வழிவழியாகவே அதே பொருளில் அதே கருத்தில் அமைந்திருக்கின்றன.
எனினும் வட்டார வழக்கு மற்றும் பிரதேச மொழி ஆளுமை போன்றவற்றினால் சிறிய
சிதைவுகளுக்கு உட்பட்டாலும் அதன் வேர்கள் மற்றும் பொருள் விளக்கங்கள் அவ்வாறே உள்ளன.
எனவே இடப்பெயர் ஆய்வின் மூலம் நூலின் மையக்கருத்தை நிறுவுகிறார் நூலாசிரியரின் இந்த முயற்சியை பாராட்டுவதோடு இவர் இன்னும் இத்துறையில் பல நூல்களைப் படைக்க வேண்டும். இதனை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இன்னும் பலரின் வருகையையும் விரும்பி என்னுரையை நிறைவு செய்கின்றேன்
'வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்கும் உலகில்'
மாணிக்கவாசகர் சிறிஸ் கந்தகுமார்

அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் 01

 அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் 01 


அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் பாசமும், மாவீரர் தியாகமும் பேசி, புலம் பெயர் தமிழர்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டி வரும் ஒரு பிம்பத்தின் பின்னால், இத்தனை கொடூரமான துரோகங்களும், கொலைகளும் ஒளிந்திருக்கின்றனவா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகால வரலாறு.

மேடைகளில் "ஆமைக்கறி சாப்பிட்டேன்", "புலிகளோடு இருந்தேன்" என்று சீமான் கட்டவிழ்த்து விடும் கதைகளுக்கு நடுவே, நிஜமாகவே களத்தில் நின்று போராடிய ஒரு 'உண்மையான புலி வீரன்' எப்படி சதி செய்து வீழ்த்தப்பட்டார்? அதன் பின்னால் இருக்கும் அயோக்கியத்தனம் என்ன? என்பதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஈழத் தமிழ் சமுதாயம். 

யார் இந்த உண்மையான புலி வீரன் சுப. முத்துக்குமார்?

திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சுப. முத்துக்குமார், வெறும் 18 வயதிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, இலங்கை சென்று 4 ஆண்டுகள் கடுமையான ராணுவப் பயிற்சி பெற்றவர்.பல சண்டைக்களங்களை கண்டவர். 

புதுக்கோட்டை பாவாணன் வீட்டில் தங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி போன்ற கடலோரப் பகுதிகளில் இருந்து பெட்ரோல், டீசல், ரத்தம், உணவு, மருந்துகளைத் தன் உயிரைப் பணையம் வைத்து கடல் மார்க்கமாக ஈழத்திற்குத் தடையின்றி அனுப்பியவர்.

1994 ஆகஸ்ட் 15-ல் வேலூர் கோட்டை முகாமில் இருந்த 80 புலிகளைத் தப்ப வைக்க, 90 அடி சுரங்கம் தோண்டிக் கொடுத்ததில் முத்துக்குமாரின் பங்கு அளப்பரியது. ஆபத்தான அகழியில் இருந்து 28 போராளிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.

1995-ல் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பிய, பிரபாகரனின் முக்கிய மெய்க்காப்பாளரான 'ரோமியோ' உள்ளிட்ட 5 புலிகளைப் பாதுகாப்பாக ஈழத்திற்குக் கொண்டு சேர்த்தவர் இந்த முத்துக்குமார் தான்.

இறுதிக்கட்டப் போரின் போது கூட, தன் கார் விபத்துக்குள்ளான நிலையிலும், உயிரைக் கொடுத்து ஈழத்திற்கு பெருமளவான மருந்துகளையும் உபகரணங்களையும் அனுப்பி வைத்தார் முத்துக்குமார்.

ஈழப்போரும் முடிவடைந்தநு.

ஈழப் போர் முடிவடைந்த நிலையில், 'காங்கிரஸ் எதிர்ப்பு' என்ற முழக்கத்தோடு சீமான் களம் இறங்கியபோது, முத்துக்குமாரும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், இங்கே தான் பார்ப்பன லாபியின் சதி அரங்கேறியது.

கட்சியில் தலமை ஒருங்கிணைப்பாளராக முத்துக்குமாரே இருந்தார். 

ஆனால் கட்சி எப்படி ஆரம்பித்தது என்ற மறைக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

சி.பா. ஆதித்தனார் தொடங்கிய "நாம் தமிழர்" என்ற கட்சியின் பெயரை, சிவந்தி ஆதித்தனிடமிருந்து சீமானுக்கு வாங்கிக் கொடுத்ததே துக்ளக் சோ மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி தான். இவர்கள் இருவரும் தீவிர தமிழின மற்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

மத்திய உளவுத்துறைக்கும் பார்ப்பன கும்பலுக்கும் அடிபணியும் ஒரு 'கைப்பாவை' மட்டுமே தமிழகத்தில் தேவைப்பட்டது. அந்த இடத்தில் சீமான் கச்சிதமாகப் பொருந்தினார். 

ஆனால், கட்சியில் முத்துக்குமார் போன்ற ஒரிஜினல் புலிகள் இருக்கும் வரை, புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க முடியாது என்பதையும், தமிழர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்வதை தடுக்க முடியாது என்பதையும் சீமானும், மத்திய உளவுத்துறையும் உணர்ந்தனர்.

கட்சியில் முத்துக்குமாரின் செல்வாக்கு உயர்ந்தது, சீமானுக்கும் அவனது அள்ளு சில்லுகளுக்கும் பொறுக்கவில்லை. மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்குத் தொல்லை என்று நினைத்து, பழைய கடத்தல் வழக்குகளைத் தூசி தட்டினர். 

அதுவும் வேலைக்காகாத போது, மத்திய உளவுத்துறையின் ஆசியோடு, இயக்கப் பகைமை கொண்ட ஆட்களை வைத்து சுப. முத்துக்குமார் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

முத்துக்குமார் கொலை வழக்கில் அவரோடு இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இரண்டே வருடங்களில் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. தன் கட்சியின் முக்கியத் தூணாக இருந்த முத்துக்குமாரின் கொலைக்கு, சீமான் ஒரு மேல்முறையீடு கூட செய்யவில்லை.

இந்த அசிங்கமான அரசியல் மற்றும் கொலையின் பின்னணி முழுமையாகத் தெரிந்ததால்தான், அப்போதே கட்சியின் 17 முக்கிய நிர்வாகிகள் சீமானை 'அயோக்கியன்' என்று காறி உமிழ்ந்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

முத்துக்குமாரைக் கொன்றதோடு இவர்களின் வெறி அடங்கவில்லை. முத்துக்குமாரின் சொத்துக்களையும், புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் கோடிக்கணக்கான பணத்தையும் முழுமையாகக் கைப்பற்ற சீமானும் அவனது அல்லக்கைகளும் அசிங்கமான திட்டங்களைத் தீட்டினர்.

முத்துக்குமாரின் மனைவி மாதரசியை (அப்போது இளம் வயதுப் பெண்) எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று 25 வயது வித்தியாசம் பாராமல் சீமான் முயன்றான். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை.

உடனே, சீமான் தன் அசிங்கமான தொடர்புகளை மறைக்கவும், அந்தப் பெண்ணின் வசமிருந்த அதிகாரத்தைக் கைப்பற்றவும் தன் விசுவாசமான அல்லக்கை 'சாட்டை' துரைமுருகனுக்கு மாதரசியைத் திருமணம் செய்து வைத்தான்.

இதன் மூலம் முத்துக்குமாரின் மனைவி 'சாட்டை'யின் மனைவியாக்கப்பட்டார். முத்துக்குமார் வகித்த கட்சியின் முக்கியப் பதவியை 'சாட்டை' துரைமுருகன் எடுத்துக் கொண்டான்.

சிங்கள அரசு பாலச்சந்திரனைச் சுட்டுக் கொன்றதைப் போல, போராளியின் வாரிசு நாளை வளர்ந்து வந்து அமைப்பைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, முத்துக்குமாரின் வாரிசு கருவிலேயே அழிக்கப்பட்டது. (பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமியைப் பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்த காமுகன் சீமானுக்கு இது ஒன்றும் புதியதல்ல).

மேலும், மக்கள் யாரும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஈழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ராணுவம் இடித்ததைப் போல, சுப. முத்துக்குமாரின் கல்லறையையும் இடித்து நொருக்கி, தடம் தெரியாமல் அழித்தது இந்த சீமான் - பார்ப்பனக் கும்பல்.

ஈழத்து மண்ணில் மாபெரும் விடுதலைப் போரை வழிநடத்திய தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் தார்மீக அரசியல் களத்தை வழிநடத்தும் பொறுப்பை சுப. முத்துக்குமார் போன்ற ஒரு மெய்யான களப் போராளியிடம் தான் ஒப்படைத்திருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

உயிரைப் பணையம் வைத்து ஆயுதம் கடத்திய, சிறை உடைத்த, தலைவரின் மெய்க்காப்பாளரையே மீட்டெடுத்த ஒரு நிஜமான புலியின் கைகளில்தான் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலமும், இளைஞர்களின் நல்வாழ்வும் பாதுகாப்பாக இருந்திருக்கும். 

அதை விடுத்து, வெற்று மேடைப் பேச்சையே முதலீடாகக் கொண்ட ஒரு சினிமாக்காரனிடம் ஒட்டுமொத்த இனத்தின் தலைவிதியையும் தலைவர் நிச்சயம் ஒப்படைத்திருக்க மாட்டார்.

களத்தில் நின்ற சுப. முத்துக்குமார் உள்ளிட்ட உண்மையான புலிகள் அனைவரும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர், இனி தங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்று உறுதி செய்த பின்னரே, சீமானின் அண்டப்புழுகுகளும் ஆகாசப்புழுகுகளும் கட்டுப்பாடின்றி வெளிவரத் தொடங்கின. 

முத்துக்குமார் என்ற ஒரிஜினல் புலி உயிரோடு இருந்திருந்தால், சீமானின் 'ஆமைக்கறி', 'பூனைக்கறி' கதைகளுக்கு முறையாக பச்சமட்டையால் பதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

முத்துக்குமாரின் மர்ம மரணமும், அவரது மனைவியையும் பதவியையும் சாட்டை துரைமுருகன் ஆட்டையப் போட்ட அசிங்கமும், ஆர்.எஸ்.எஸ் - பார்ப்பன லாபியின் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம், சீமானின் பின்னால் இருக்கும் "பார்ப்பனக் குடுமி" இன்று உலகத் தமிழர்களின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

முக முத்துவிற்கு அஞ்சலி செலுத்தத் தெரிந்த சீமானுக்கு, நாம் தமிழர் கட்சியின் உண்மையான பலமாக இருந்த விடுதலைப்புலி மாவீரன் சுப. முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த மனமில்லை. அவரைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து வருகிறான்.

ஆனால், தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. ஈழத்தமிழர்களின் குருதியையும், கண்ணீரையும் காசாக்கிப் பிழைப்பு நடத்தும் இந்த வியாபாரக் கும்பலின் தராதரமும், சீமான் என்பவன் யார் என்ற கசப்பான உண்மையும் இன்று தமிழக மக்களுக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது. 

அதனால்தான், தேர்தல் களம் தோறும் மக்கள் அவனை எங்கு வைக்க வேண்டுமோ, அங்குதான் வைத்திருக்கிறார்கள். 

மாவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, அடுத்தவன் மனைவியையும் பதவியையும் ஆட்டையப் போடும் இந்த அயோக்கியர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. 

அறிவார்ந்த சமூகமும் தமிழுணர்வு கொண்ட மக்களும் இந்த பார்ப்பனக் கைக்கூலிக் கயவர்களை என்றென்றும் புறக்கணித்தே தீரும்!

Thursday, 14 May 2026

விஜய்01

 காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?


தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்குகளுள் ஒருவராக இருக்கிறார்..


காரணம், இவருக்கும் விஜய்க்குமான உறவு பேசு பொருளாகி இருப்பதுதான். இதையடுத்து, அவரது சமீபத்திய பதிவு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.


விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்த த்ரிஷா!


நடிகராக மட்டும் இருந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பாேட்டியிட்டார். 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக, 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, மே 10ஆம் தேதியான நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்..


இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபனா, நண்பர்கள் சஞ்சீவ், ஜெய், கிரிஷ்-சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், முக்கிய நபராக நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டார். அவருக்கு முன் வரிசையில் இருக்கை வைக்கப்பட்டிருந்தது. விழா நடக்கும் போது, நிகழ்விடத்திற்கு வந்த த்ரிஷா, தனக்கு தெரிந்தவர்களை பார்த்ததும் ஆறத்தழுவி ஹாய் சொன்னார். பின்பு, விஜய்யின் தாயாரான ஷோபாவை கட்டிப்பிடித்தார்.


அதே சேலையில் வெளியிட்ட பதிவு..


விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு த்ரிஷா வந்தது குறித்து பலரும் பலவாரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த விழாவிற்கு த்ரிஷா, ஒரு நீல நிற புடவையும், கொண்டையில் மல்லிப்பூ சுற்றியும் வருகை தந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே கெட்-அப்பில் சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் கேப்ஷனில், "காதல் எப்போதும் சத்தமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து, இந்த பதிவானது வைரலாகி வருகிறது. ஏற்கனவே த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், த்ரிஷா இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கண்ணீர் வடித்த த்ரிஷா..


விஜய், நேற்று "ஜோசப் விஜய் எனும் நான்" என்று கூறி முதலமைச்சராக பதவியேற்ற போது, கீழே அமர்ந்திருந்த த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகிறது. விஜய் பதவியேற்கும் போது, த்ரிஷா ரொம்பவும் எமோஷனலாகி கண் கலங்கினார். இந்த ரியாக்ஷன் குறித்து பலரும் பேசி வருகின்றனர்..


இருவருக்கும் என்ன உறவு?


விஜய்க்கும் த்ரிஷாவிற்கும் என்ன உறவு என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கிறது. இருவரும் 'கில்லி படத்தில் முதலில் ஒன்றாக நடித்தனர். இந்த ஜோடி நன்றாக இருக்கவே தொடர்ந்து ஆதி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு எந்த காரணத்தினாலோ இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவே இல்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ திரைப்படத்தில்தான் இருவரும் ஜோடியாக நடித்தனர். அந்த படத்திலும் இருவருக்கும் இருந்த லிப் லாக் சீன், சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐட்டம் டான்ஸே ஆட மாட்டேன் என்று சாெல்லியிருந்த த்ரிஷா, திடீரென விஜய்யின் கோட் படத்தில் 'மட்ட' பாடலுக்கு மஞ்ச புடவையில் நடனமாடியது வைரலானது.


இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதா, தனக்கு விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி மனு கொடுத்திருந்தார். அதில் அவர் விஜய் மீது வைத்திருந்த குற்றச்சாட்டுகள் பலவித சர்ச்சைகளை கிளப்பியது. விஜய்க்கும் வேறு ஒரு பிரபல நடிகைக்கும் உறவு இருப்பதாகவும், இதை கைவிட்டுவிடுமாறு கூறிய போது, அதற்கு ஒப்புக்கொண்டு அதிலேயே அவர் தொடர்ந்து இருந்ததால், அவை விட்டு பிரிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.


அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததோடு,பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாகவும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் தனக்கு தொடர் அவமானங்கள் ஏற்பட்டதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.


சங்கீதாவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி வசதிகளை விஜய் குறைத்ததோடு அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தையும் அவர் கட்டுப்படுத்தியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, இருவருக்கும் இடையிலான திருமண உறவு வெறும் காகித அளவில் மட்டும் இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.


திருமணத்தை மீறி உறவு நார்மலைஸ் செய்யப்படுகிறதா?


விஜய்யும் த்ரிஷாவும் தங்களது உறவு குறித்து எங்கும் வெளியில் சொன்னதில்லை. தவெக ஆதரவாளர்கள் பலர், த்ரிஷாவுடனான விஜய்யின் உறவு குறித்து பிறர் விமர்சனங்களை முன் வைக்கும் போது, அவரை 'அண்ணி' என்று குறிப்பிட்டு பேசி வருகின்றனர். நேற்றைய விழாவில் கூட விஜய்யின் மனைவியான சங்கீதாவோ, அவரது பிள்ளைகளான ஜேசன் சஞ்சையோ, திவ்யா சாஷாவோ வரவில்லை. அவர்கள் இல்லாதது குறித்து விஜய்யோ அவரது குடும்பத்தினரோ பேசவில்லை. ஆனால், த்ரிஷா வந்த போது அவருக்கு அறிந்தே அறியாமலோ பல பேர் வரவேற்பு அளிக்கின்றனர். பல ஆண்டுகளாக சிங்கிளாக இருக்கும் த்ரிஷா, இப்படி இன்னொருவருடைய கணவனுக்கு ஆதரவாக இருப்பதும், தன் மனைவியை விட்டுவிட்டு தனக்கு தேவையான பிறரை விஜய் தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததும் பலரால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பலரும், "இது போன்ற உறவுகள் இன்றைய காலத்தில் நார்மலைஸ் செய்யப்படுகிறதா?" என்கிற கேள்வியும் எழுகிறது. சில தவெக ஆதரவாளர்களும் கூட, இது குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நடிகை

 பூ நடிகை தொலைந்து போன "மைக் மோகனின்" வாழ்க்கை.. தலையில் அடித்து புலம்பிய பாக்யராஜ்!!


மணிவண்ணன், ரங்கராஜ், மனோபாலா போன்றோர்களை டைரக்டர்களாக மாற்றிய பெருமைக்குரியவர் மோகன். கோபுரங்கள் சாய்வதில்லை, என்று மணிவண்ணனுக்கு இவர்தான் வாய்ப்பு தந்தார். அதனால், டைரக்டர்களுக்கு எப்போதுமே மோகன் மீது தனி மரியாதை உண்டு என்று பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.


 யூ*டியூப் சேனலில் சமீபத்தில் பேசியிருந்த சபிதா ஜோசப், "மைக் மோகன் என்பது அவரது பட்டம் கிடையாது. "வெள்ளி விழா நாயகன்" என்பதே அவரது பட்டம்.. அவரது சொந்த பெயர் மோகன் ராவ். பெங்களூரில் ஒரு பேங்க்கில் வேலை பார்த்துட்டு இருந்தார். சினிமா ஆசையால் நடிக்க வந்தவர்.. எம்ஜிஆர் மீது மிகப்பெரிய ஆசை, பற்று அவருக்கு இருந்தது. எம்ஜிஆரின் தமிழ் படங்கள் பெங்களூரில் ரிலீஸ் ஆனால், அதை முதலிலேயே சென்று பார்த்து விடுவார்.


அந்த நேரத்தில் பாலுமகேந்திரா, கோகிலா என்ற ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார்.. கமல் சார் ஹீரோவாக நடித்திருந்த அந்த படித்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து, பாலுமகேந்திராவின் மூடுபனி படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். டைரக்டர் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுஹாசினி,.. கேமரா வுமனாகவும் சுகாசினி அதில் பணியாற்றினார்.


தமிழ் சினிமாவில் ஹிட் ஜோடி

கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை இந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஹிட்டாயின. பிறகு மோகனுக்கு வரிசையாக படங்கள் ஹிட்டாயின. அதில் மோகனுக்கு சில படங்களில் ஜோடியாக நடித்திருந்தார் பூ நடிகை.. இதனால் இவர்களை ராசியான ஜோடி என்று சினிமா உலகில் சொன்னார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது.. இருவருமே லவ் பண்ணுவதாக, அன்னைக்கு கிசுகிசுக்களும் பெரிய அளவில் பேசப்பட்டன..


பாம்குரோவ் ஓட்டலில்தான் மோகன் தங்கியிருந்தார்.. தமிழ் சினிமாவின் பெரும்பாலான டிஸ்கஷனும் அங்கேதான் நடக்கும். ஒருநாள், பாம்குரோவ் ஓட்டல் வாசலில் மோகனின் கார் நிற்கிறது.. காரின் முன்பகுதியில், இருவருமே ஏறி உட்கார்ந்திருந்தனர்.. அப்போது பூ நடிகை, மோகனின் தோள் மீது கை போட்டுக்கொண்டு பேசிக் கொண்டிருந்தாராம்.. இதைப்பார்த்த பாக்யராஜ், "என்ன கலிகாலம்? இப்படியெல்லாம் ஹீரோயின்கள் பேசிட்டு இருந்தால் எப்படி?" என்று புலம்பிட்டே போனதாக, நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.


மோகனை பூ நடிகை விரும்பினார், ஆனால் மோகன் அவரை விரும்பவில்லை.. இந்த கோபம் பூ நடிகைக்கு இருந்தது.. அந்த கோபத்தில்தான், ஏதோ ஒரு நோய் மோகனுக்கு இருப்பதாக பரப்பிவிடப்பட்டது.. "யானைக்கும் பெண்ணுக்கும் ஏமாற்றம் தாங்க முடியாது" என்பார்கள்.. அந்த வகையில், பூ நடிகையின் கோபத்துக்கு மோகன் பழிவாங்கப்பட்டார்.


ஆனால், இப்படியொரு குற்றச்சாட்டை அவர் நேரடியாக வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தார் மோகன் எதிர்வினையாற்றியிருப்பார். அப்படியே இருந்தாலும், இந்த புரளியை கிளப்பிவிட்டது பூ நடிகைதான் என்பதை உறுதிப்படுத்தவும் முடியாது. எனவே, அதை பெரிதாக எடுத்துக்கல.


அதற்கு பிறகு மோகனுக்கு படங்கள் எல்லாம் குறைய துவங்கிவிட்டன. சின்ன சின்ன படங்கள் மட்டுமே நடித்தார்.. வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளப்பட்டார்..


அதேபோல, உருவம் என்ற படத்தில் கொ*டூரமான பேயாக நடித்திருந்தார்.. மோகன் மாதிரியே தங்களுக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் எல்லாரும் விரும்பினார்கள்.. ஆனால் அவர் பேய் உருவத்தில் நடித்ததால்,அவரது இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது. அவரது மார்க்கெட்டும் குறைந்து ஓரங்கட்டப்பட்டார். அந்த இமேஜ் அப்போதைக்கு டேமேஜ் ஆனாலும், இப்போதும் அவருக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது. இப்போதும் நடித்து வருகிறார். ஆனால், அவர் எடுத்த 2 படங்களும் சரியாக போகல.


எஸ்.என். சுரேந்தரும் நன்றியும்

மணிவண்ணன், ரங்கராஜ், மனோபாலா போன்றோர்களை டைரக்டர்களாக மாற்றியவர் மோகன். கோபுரங்கள் சாய்வதில்லை, என்று மணிவண்ணனுக்கு இவர்தான் வாய்ப்பு தந்தார். அதனால், டைரக்டர்களுக்கு எப்போதுமே மோகன் மீது தனி மரியாதை உண்டு..


மோகனுக்கு டப்பிங் பேசியவர் மோகனின் மாமா எஸ்.என்.சுரேந்தர்.. மோகனுக்கு டப்பங் பேசியே நிறைய சம்பாதித்தார். ஆனாலும் தனக்கு மோகன் நன்றி சொல்லல என்று சுரேந்தர் புலம்பிட்டே இருந்தார். மோகனும் பலமுறை சுரேந்தருக்கு நன்றி சொன்னாராம்.. அதுக்காக சுரேந்தர் வீட்டு கதவை தினமும் தட்டி, "நன்றி சார்" என்று சொல்லிட்டே இருக்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.

அவிழ்க்க முடியா சர்ச்சை

 அவிழ்க்க முடியா சர்ச்சையுடன் தொடரும் மர்ம மரணங்களும் ராஜபக்சக்களின் பங்களிப்பும்!


இலங்கையின் அரசியல் மற்றும் ஊழல் விசாரணை வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள எயார்பஸ் ஒப்பந்த விவகாரம், மீண்டும் ராஜபக்ச அரசியல் குடும்பத்தை மையமாகக் கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இலங்கை விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றய தினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியருந்தன!


அந்த விசாரணையின் போது, “நீங்கள் மெதமுலனவில் வசிக்கிறீர்களா?” என ஆணைக்குழு கேள்வி எழுப்பியபோது, “நான் கார்ல்டன் இல்லத்தில் வசிக்கிறேன்” என்று மகிந்த ராஜபக்ச பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, “கார்ல்டன் இல்லத்தில் மூன்று தவணைகளாக தலா 20 மில்லியன் ரூபாய், மொத்தமாக 60 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது” என்ற கபில சந்திரசேனவின் வாக்குமூலம் குறித்து கேட்கப்பட்டபோது, “அது உண்மையெனில் அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள்” என மகிந்த பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த பதில் என்பது ராஜபக்ச அரசியல் நடைமுறையின் பரிச்சயமான பதிலாகவே பலரால் பார்க்கப்படுகிறது. தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடி விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, தகவலை வெளியிட்டவர்களிடமே  பொறுப்பை திருப்பி விடும் நடைமுறையும் சாணக்கியமும் மீண்டும் வெளிப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளுவது அவ்வளவு கடினமாகாது!


கடந்த கால ரஜபக்சக்களின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு புரியும் அவர்களுக்கு எதிராக கருத்துரைத்தவர்கள் , அல்லது அசட்டு துணிவில் அவர்களுக்கெதிராக சாட்சியளிக்க முன்வந்தவர்களுக்கும் என்ன நடந்தது அல்லது நடக்கும் என்பது!


இலங்கை அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், ராஜபக்ச ஆட்சிக் கால ஊழல்கள் மற்றும் கொலைகள் ஆட்கடத்தல்கள் , வன்முறைகள்்என்பவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பலர் மர்மமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டனர் , கொல்லப்பட்டனர் அல்லது அவர்களாகவே நாட்டை விட்டு தப்பியோடி தலைமறைவு வாழ்க்கைக்குக்குள வாழ்ந்து வருவது என்பது புதிதாக விசாரணை ஆணைகுழு அமைத்து கண்டு பிடிக்க வேண்டிய செயல்கள் அல்ல!


ராஜபக்ச குடும்பம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது,மிக் விமான ஒப்பந்த ஊழலை துணிந்து வெளிப்படுத்திய மகிந்தவின் மிக நெருங்கிய நண்பரான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த போத்தல ஜயந்த தாக்கப்பட்டு இன்று வரை வெளிநாட்டில் உடல் நலக்குறைவுடன் வாழ்ந்து வருவது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் ராஜபக்சக்களால் புதுபிக்கப்பட்டு வருவதனை கபில சந்திரசேனவின் மரணம் கோடிட்டு காட்டுகின்றது


அதேபோன்று தமிழ்மக்களிற்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், ஊடகவியலாளர்கள் தராக்கி, நிமலன் என பல ஊடகர்கர்கள் ஒட்டுக்குழு மற்றும் ராஜபக்சக்களால் இயக்கப்பட்ட “பரா மிலிட்டரிகளால்”படுகொலை செய்யப்பட்டமை கொலை செய்தமை போன்ற பல குற்ற கொடுஞ்ச்செயல் களை அடுக்கி கொண்டே போகலாம்.


அதேபோல் உபாலி தென்னகோன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், உண்மையை அடக்குவதற்கான அரசியல் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.


விசாரணைகளின் அடிப்படையில் வெளிவரும் தகவல்களின்படி, எயார்பஸ் ஒப்பந்தத்தில் மொத்தமாக 17.5 மில்லியன் அமெரிக்க டொலர் தரகு பண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் முன்பணமாக 2.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டதாகவும், அந்தத் தொகையில் ஒரு பகுதி கபில சந்திரசேனவின் மனைவியின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டதாகவும் விசாரணை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பணத்தின் ஒரு பகுதி ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.


ஒருகாலத்தில் சாதாரண அரசியல் பின்னணியில் இருந்த மெதமுலன ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய செல்வச் செழிப்புகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக பசில் ராஜபக்ச உள்ளிட்டோரின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் பெருமளவு சொத்துக்கள் தொடர்பாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.


எயார்பஸ் கொள்வனவு வழக்கில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சமாக மாறியிருப்பது கபில சந்திரசேனவிற்கு பிணையாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட போலி நபர்களின் சம்பவமாகும்.


கபில சந்திர சேனவிற்கு உண்மையான உறவுக்காரர்கள் நண்பர்கள் என பலரிற்கு பிணைக்கு முன்னிற்க கூடிய சூழல் மற்றும் தகுதி இருந்தபோதும்,  சாதரண தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்களை பிணைதாரர்களாக (அதுவும் 15 .000 ரூபா தரகு பணம் செலுத்தி) முன்னிலைபடுத்திய சம்பவம் விசாரணை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் ஆச்சரியத்தையும

 ஏற்படுத்தியுள்ளது!

 


இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கபில சந்திரசேன நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அது நடந்திருந்தால் வழக்கின் முக்கிய சாட்சியாளர் சுதந்திரமாக உயிராபத்தின் அச்சமின்றி  ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக மேலும் பல உண்மைகளை வெளிகொணர வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர்கள் அந்த பிடியில் இருந்த தப்ப வாய்ப்பே இருந்திருக்காது  என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


கபில சந்திரசேன மரணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆரம்பத்தில் இது தற்கொலை முயற்சியாக சித்தரிக்கப்பட்டாலும், தற்போது அது சந்தேகத்திற்கிடமான மரணமாகவே விசாரிக்கப்படுகிறது.


சம்பவ இடத்தில் அடையாளம் காணப்படாத இரசாயனப் பொருள், இரத்தக் கறைகள், கழுத்தில் கட்டப்பட்டிருந்த உடல் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும ஒருவகை பட்டி ,போன்ற ஆதாரங்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச இரசாயன ஆய்வாளர் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்தச் சம்பவம், தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மரணத்தை நினைவூட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ராஜா மகேந்திரன் ஆகியோரின் மரணங்களும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் இடம்பெற்றதாக மீண்டும் பேசப்படுகிறது.


அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான டி என் ஏ சோதனை நடவடிக்பைகளில்  முக்கிய பங்கு வகித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்கவின் மரணமும் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. அவர் மீது அரசியல் அழுத்தங்கள் செலுத்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட டி என் ஏ அறிக்கையை மாற்றுமாறு ராஜபக்ச தரப்பினரால் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன!


இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழல் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவான அரசியல், நிதி மற்றும் குற்ற வலையமைப்புகள் இன்னும் செயலில் உள்ளன என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் கும்பல்கள், பாதாள அமைப்புகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் தற்போதைய ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளும் விரைவில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ புலனாய்வு பிரிவுகளுடன் தொடர்புடைய சிலரின் பெயர்கள் வெளிவரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்வாறான சூழ்நிலையில், வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்தின் ஆதிக்கத்துடனும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், மக்களின் நம்பிக்கை மீண்டும் முறியடிக்கப்படும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

#kamalanathanswiss

சீமான்03

 ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை ஆற்றிய உரையை நேற்று பார்த்தேன்.


சர்வதேச அளவில் படித்த அறிஞர்களுக்கு மத்தியில் இந்தியாவின் சவால்களை அவர் விளக்கிய விதம், உலகளாவிய பார்வையும் உள்ளூர் புரிதலும் கொண்ட ஒரு தேர்ந்த ஆளுமை அவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் ஒருவருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது என்றால், அவர் முன்வைக்கும் அரசியல் வெறும் சத்தமல்ல, அது காத்திரமான அறிவுசார் வாதம் என்று அர்த்தம்.


அண்ணாமலை என்ற ஒற்றைப் பெயர் இன்று வெறும் அரசியலல்ல, அது ஒரு மாபெரும் எதிர்பார்ப்பு. ஆரோக்கியமான அரசியலின் ஒற்றை நம்பிக்கை.


இத்தனை ஆண்டுகாலம் ஆபாச வார்த்தைகளும், தரம் தாழ்ந்த தனிமனித விமர்சனங்களும் மட்டுமே அரசியல் என்று சுழன்று கொண்டிருந்த மரபை முதலில் உடைத்தெறிந்தவர் அண்ணாமலை.


அரசியலைத் தெளிவான புள்ளிவிவரங்களோடும், தர்க்கரீதியான வாதங்களோடும் அணுகிய அவரது பாணி, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அறிவுசார் புரட்சி.


எத்தனையோ தலைவர்கள் வந்து சென்றிருக்கலாம், ஆனால் அரசியலை ஒரு சாக்கடை என்று ஒதுங்கி நின்ற படித்த இளைஞர்களை, வாருங்கள் நாட்டை மாற்றுவோம்" என்று களத்திற்கு இழுத்து வந்த காந்தசக்தி அண்ணாமலை. அவர் முன்னெடுத்த அந்த சமரசமற்ற போர்க்குணமும், தெளிவான அரசியலும் தமிழ்நாட்டில் வேறு எந்த அரசியல்வாதியிடமும் நான் கண்டதில்லை.  


தமிழக பாஜகவின் ஐம்பதாண்டு கால வரலாற்றை, அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்கு பின் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


டெல்லி அதிகார மையத்தின் பார்வையைத் தமிழகத்தின் பக்கம் திருப்பியவர் அவர். தமிழக அரசியலின் நாடித் துடிப்பை தேசியத் தலைவர்கள் துல்லியமாக உணரச் செய்ததில் அண்ணாமலையின் பங்கு முக்கியமானது.


ரங்கராஜ் பாண்டேயின் சமீபத்திய ஒரு நேர்காணலில், தமிழ்நாட்டின் அடுத்த எதிர்க்கட்சி திமுக அல்ல, பிஜெபி தான். அடுத்தகட்ட அரசியல் விஜய் Vs உதயநிதி' அல்ல, 'விஜய் Vs அண்ணாமலை என்று தான் மாறும். பாஜக சரியாக, முறையாக பயன்படுத்திக்கொண்டால் இது நிச்சயம் நடக்கும் என்றார்.


உண்மை தான்.


உதயநிதியின் அரசியல் வியர்வை சிந்திப் பெற்ற வெற்றியல்ல. அது விளம்பரங்களால் மட்டுமே ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பலூன். பதவி, அதிகாரம் என அனைத்தும் அவருக்குத் தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்ட இலவசங்கள். எத்தனையோ பில்டப்புகள் கொடுக்கப்பட்டாலும், நிஜத்தில் உதயநிதி என்பவர் ஆளுமையே இல்லாத ஒரு வெறும் அட்டைக் கத்தி.


ஆனால்,


நான் யாரையும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை. உதயநிதியும் தன் குறைகளை சரி செய்து, தன்னை மெருகூட்டி ஒரு சிறந்த அரசியல்வாதியாக எதிர்காலத்தில் மாறலாம். ஆனால் அதற்கு அவர் இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது. நிறைய தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஆனால் விஜய் முதலமைச்சராகத் தன் பணிகளைத் தொடரும்போது, ஒவ்வொரு நிலையிலும் அவரைத் தரம் பார்க்கவும், குறைகளை அறிவுபூர்வமாக சுட்டிக்காட்டவும் அண்ணாமலை என்கிற ஒரு ஆளுமைமிக்க எதிர்க்கட்சித் தலைவர் அவசியம்.


விஜய்யின் அரசியல் என்பது பெரும்பாலும் உணர்ச்சிகளைச் சார்ந்தது, ஆனால் அண்ணாமலையின் அரசியல் தரவுகளைச் சார்ந்தது.


வரும் காலங்களில் நிர்வாக ரீதியான குளறுபடிகளை விஜய் அரசு சந்திக்கும்போது, அதைத் தட்டிக்கேட்கும் முதல் ஆளாக அண்ணாமலை உருவெடுத்தால், நிச்சயம் 2031-ம் ஆண்டு அவருக்கானதாக இருக்கும்.


அண்ணாமலையின் பலமே அவரது Disruptive Politics தான். எஸ்டாபிளிஷ்மென்ட் அரசியலை உடைத்தெறிந்து, ஆளுங்கட்சியின் ஊழல்களைத் தரவுகளுடன் 'வாட்ச்' முதல் 'ஃபைல்கள்' வரை அம்பலப்படுத்திய அவரது வேகம், திராவிடக் கட்சிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது.


அவர் மீண்டும் முழுநேர அரசியலில் களம் இறங்கினால், அதே அதிரடி தவெக அரசுக்கும் தொடரலாம். பழைய அரசியலைத் துவம்சம் செய்த அதே 'டேட்டா' பவர், புதிய அரசுக்கும் ஒரு தலைவலியாக மாறலாம். 70 வருட கால திராவிடக் கட்சிகளையே திணறடித்த அந்த வேகம், மீண்டும் முழு வீச்சில் வெளிப்பட்டால் தவெக அரசின் ஒவ்வொரு நகர்வும் அண்ணாமலையினால் மிகக் கடுமையாகச் சோதிக்கப்படலாம்!


ஆனால் இது எல்லாம் நடக்குமா….?


இந்தக் கேள்விக்கான பதில் அண்ணாமலை விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்திலேயே ஒளிந்திருக்கிறது.


அண்ணாமலை என்கிற ஒற்றை மனிதனைச் சுற்றித்தான் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக பாஜகவின் ஒட்டுமொத்த அரசியலும் சுழன்றது. முன்பெல்லாம் டிஜிட்டல் திரையில் இருந்து தெருமுனை வரை அதிரடி காட்டிய கட்சி, இன்று தன் அடையாளத்தையே தொலைத்து, மேய்ப்பன் இல்லாத மந்தையைப் போல சிதறிக் கிடக்கிறது


அண்ணாமலையைப் போலத் தார்மீகத் தலைவன் இன்று அந்தக் கட்சியில் இல்லை. டெல்லி தலைமையின் நேரடித் தொடர்பும், தமிழக இளைஞர்களைத் தன்பக்கம் இழுக்கும் காந்தசக்தியும் அண்ணாமலைக்கு மட்டுமே கைவந்த கலை. ஒருவேளை அவர் நிரந்தமாக  ஒதுக்கப்பட்டால் அல்லது ஓரங்கட்டப்பட்டால், தமிழகத்தில் பாஜக 'நோட்டா'வுடன் போட்டி போடும் கட்சியாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.


என்னிடம் சில உபி நண்பர்கள் கேட்பார்கள், அப்படியென்றால் உங்கள் அண்ணாமலையின் அரசியல் இனி அவ்வளவு தானா? என்று..


No. Never.


அண்ணாமலையின் அமைதி என்பது வெறும் மௌனம் அல்ல, அது ஒரு மகா புயலுக்கான மிரட்டலான காத்திருப்பு! களம் காணப் பிறந்த ஒரு பிறவித் தலைவன் ஒருபோதும் அடங்கிப் போவதில்லை.


சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாய், பழைய கணக்குகளைத் தீர்க்கவும் புதிய வரலாற்றைப் படைக்கவும் அவர் முன்னைவிட அதீத வீரியத்தோடு விஸ்வரூபம் எடுப்பார். அப்போது தமிழக அரசியல் களம் இதுவரை பார்த்திராத ஒரு பிரம்மாண்ட அதிர்வைச் சந்திக்கும்.


அண்ணாமலைக்கு முன்னால் இப்போது இரண்டு பாதைகள் உள்ளன.


ஒன்று, டெல்லியின் அதிகார மையத்தில் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசியலைத் தூரத்திலிருந்து இயக்குவது.


மற்றொன்று, தமிழகத்திலேயே தங்கி, அரசின் மீதான நேர்மையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, தன்னை ஒரு மாற்று சக்தியாக நிலைநிறுத்துவது.


அவர் தமிழகத்திற்கு கிடைத்த வரமா அல்லது இந்தியாவிற்கே வழிகாட்டப் போகும் பேராளுமையா என்பதை காலம் முடிவு பண்ணும்.


எது எப்படி அமைந்தாலும்,


அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக அண்ணாமலை உருவெடுப்பார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.!


அவரின் கோடானு கோடி ரசிகர்களைப் போல நானும் அந்த பொன்னான நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சீமான்02

 அருண் ராஜ் IRS அதிகாரி விஜய் மீது வருமான வரி.. ரெய்டு நடத்துகிறார். 


அடுத்து விஜய் இன் மாமா பிரிட்டோ சேவியர்  மீது ரெய்டு நடத்தப்படுகிறது. 


விஜய் அமித்ஷாவை சந்திக்கிறார். 


விஜய் அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிறது பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ். 


கட்சி தொடங்கப்படுகிறது. 

பிஜேபி it wing ல் செயல் பட்ட நிர்மல் குமார் விஜய் கட்சி இல் சேருகிறார். 

அடுத்து அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து ஒரு பதவியை பெறுகிறார். 


அடுத்து ஆதவ் அர்ஜுனா இணைகிறார்.. மார்டின் மீது IT ரெய்டு.. விஜய் கட்சிக்கான அனைத்து செலவுகளையும். மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவுவருகிறது அமித்ஷாவிடம் இருந்து. 


அடுத்து ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும் என்று உத்தரவு.


பிரசாரத்தில் கரூர் சம்பவம் சிபிஐ வழக்கு. விஜய் அரசியலை விட்டு விலகுவதாக ஒரு முடிவை எடுக்கிறார். 


மீண்டும் அமித்ஷா சந்திப்பு

 முதல் தேர்தலிலேயே விஜயை வெற்றி பெற வைத்து விடுகிறோம் என்று அமித்ஷா உறுதி செய்தார்.


அதன்படியே 108 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து விட்டார்.. விஜய் முதல்வர் பதவி ஏற்றுவிட்டார்.


திரைமறைவில் அனைத்து வேலைகளை செய்தது பிஜேபி. RSS.. 


இதை மூடி மறைக்க எப்படி வேணாலும் உருட்டலாம். 


விஜய் வெற்றியை கொண்டாடுவது

நாக்பூர் RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.

சீமான் 01

 தமிழக அரசியலில் 

"இயற்கை", 

"தமிழ் தேசியம்", 

"மாற்று அரசியல்" 

"விவசாயம் வாழ்வியல்" 

என உணர்ச்சிப்பூர்வமான முழக்கங்களை முன்வைத்துத் தங்களை ஒரு தூய்மையான அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். 


ஆனால், அவரது இந்த கவர்ச்சிகரமான மேடைப் பேச்சுகளுக்குப் பின்னால், மிக நுணுக்கமான நிதி வசூல் திட்டங்களும், கார்ப்பரேட் கைகோர்ப்புகளும் ஒளிந்திருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். 


ஆரம்பத்தில் சீமானின் தீவிர ஆதரவாளனாக இருந்த நான் அந்த ஆதரவை விலக்கிக்கொள்ள பல காரணங்களை சீமானே உருவாக்கித் தந்தார். அது வேறு கதை. 


அது அப்படியே இருக்க,  விவசாயியின் மகன், எளிய பிள்ளை எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் சீமானின் வாழ்க்கை முறைக்கும், அவரது கட்சியின் நிதி ஆதாரங்களுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளைப் பற்றிய ஒரு விரிவான அலசல் ஒன்றை மேற்கொள்ள வேண்டி உள்ளது.


சீமான் மேடைதோறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக முழங்குவார். ஆனால், ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து லட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி, அந்த நிறுவனத்தை மூடும் வரை அவர் போராடிய வரலாறு உண்டா?


உண்மையில், போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று ஒரு 'அட்டெண்டன்ஸ்' போட்டுவிட்டுத் திரும்புவதே இவரது வழக்கம். ஸ்டெர்லைட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடாமல் பின்வாங்கியதற்குப் பின்னால், கட்சி வளர்ச்சி நிதியாகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இருக்கின்றது.


குறிப்பாக, ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து நிதி பெறப்பட்டது அவரது போராட்டங்களின் நேர்மையைக் கேள்விக்குறியாகி சீமான் ஒரு போலித்தன்மையானவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


சீமான் தன்னை ஒரு சமரசமற்றப் போராட்டக்காரராகவும், "மண்ணையும் மக்களையும் காக்கும் ஒரே தலைவன்" என்றும் முன்னிறுத்திக்கொள்கிறார். ஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் வெளிவந்த தகவல்கள் அவர் ஒரு "கார்ப்பரேட் கமிஷன் அரசியல்வாதி" என்ற பிம்பத்தையே வலுப்படுத்துகின்றன.


ஒரு பக்கம் மேடையில் "தூத்துக்குடி மக்களைக் கொன்ற ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழ்நாட்டை விட்டே விரட்டுவோம்" என்று ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு, அதே நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் வாங்குவது என்பது பச்சைத் துரோகமாகவே பார்க்கப்படுகிறது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் 100 நாட்களைக் கடந்து தீவிரமடைந்தபோது, சீமான் அங்கே வந்து தற்காலிகமாக ஆதரவு தெரிவித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு நடந்த அந்தப் பதற்றமான நேரத்தில் அவர் களத்தில் இல்லை.


ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கிய பிறகு, அந்த நிறுவனத்தை முழுமையாக மூடுவதற்கு அவர் எந்த ஒரு நேரடி சட்டப் போராட்டத்தையோ அல்லது தொடர் போராட்டங்களையோ முன்னெடுக்கவில்லை. மாறாக, மக்களைத் திசைதிருப்பும் உணர்ச்சிப் பேச்சுகளை மட்டுமே பேசினார்.


அரசியலில் ஒரு கொள்கையை முன்னிறுத்தும் போது, அந்தக் கொள்கைக்கு எதிரானவர்களிடம் நிதியைப் பெறுவது என்பது அந்தப் போராட்டத்தின் நேர்மையைக் கொன்றுவிடும்.


ஸ்டெர்லைட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சும்மா பணம் கொடுப்பதில்லை. தங்கள் நிறுவனத்திற்கு எதிராகப் பெரிய அளவில் மக்கள் எழுச்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவே இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு "கட்சி நிதி" என்ற பெயரில் 'வாயடைப்புப் பணம்' (Lobbying money) கொடுக்கின்றன.


சீமான் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம், தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை அவர் விலை பேசிவிட்டார் என்பதே உண்மை.


தங்கள் அண்ணன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் பெரும் புரட்சி செய்கிறார் என்று தம்பிகள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அதே ஸ்டெர்லைட் பணத்தில்தான் கட்சியின் அலுவலகச் செலவுகளும், அண்ணனின் சொகுசு வாழ்க்கையும் ஓடுகிறது என்பதுதான் நிதர்சனம்.


அடுத்ததாக…


இயற்கை வளங்களைக் காப்பேன் என்று கூறும் சீமானின் 2013-ஆம் ஆண்டு திருமணத்தை முன்னின்று நடத்தியவர் தாது மணல் அதிபர் வைகுண்டராஜன். 


மணல் கொள்ளையில் பல ஆயிரம் கோடி ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வைகுண்டராஜனுக்கும் சீமானுக்கும் இடையிலான நெருக்கம் ஊரறிந்த ரகசியம்.


சீமானின் திருமணம் 2013-ஆம் ஆண்டு நடைபெற்றபோது, அதன் ஒட்டுமொத்தச் செலவான சுமார் 50 லட்ச ரூபாயை வைகுண்டராஜனே ஏற்றதாகக் கூறப்படுகிறது. தாது மணல் அள்ளுவதன் மூலம் சுமார் 96,120 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வைகுண்டராஜன், சீமானுக்குப் பின்னால் இருந்து நிதி உதவி அளிக்கும் முக்கிய நபராகப் பார்க்கப்படுகிறார்.


வைகுண்டராஜனின் மணல் கொள்ளைக்கு எதிராகச் சீமான் ஒருபோதும் ஆக்கப்பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்ததில்லை.


குறிப்பாக, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பகலில் போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான், அன்றைய இரவே வைகுண்டராஜன் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்துகொண்டது அவரது 'நன்றி உணர்வை'க் காட்டுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


வைகுண்டராஜனுக்குச் சொந்தமான 'நியூஸ் 7' (News 7 Tamil) தொலைக்காட்சி மற்றும் 'தமிழ் நெக்ஸ்ட்' (Tamil Next) போன்ற ஊடகங்கள் சீமானுக்குத் தொடர்ச்சியாகப் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றன. இதன் பின்னணியில் வைகுண்டராஜனின் நிதி பலம் இருப்பதாகக் கருதப்படுகிறது.


வைகுண்டராஜனின் நிறுவனமான வி.வி. மினரல்ஸ் (V.V. Mineral) மூலமாகச் சீமானுக்கு மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை (Payorder/Monthly amount) வழங்கப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகவே தென் மாவட்டங்களில் நடக்கும் இயற்கை வளச் சுரண்டல்களைச் சீமான் கண்டுகொள்வதில்லை .


வைகுண்டராஜனின் மகனுடைய திருமணம் தாஜ் ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றபோது, அந்தத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர்களில் 'எளிய பிள்ளை' சீமானும் ஒருவர். 


இயற்கை வளங்களை அழிப்பதாகக் கூறப்படும் ஒருவருடன் இவ்வளவு நெருக்கமான நிதி மற்றும் தனிப்பட்ட உறவை வைத்திருப்பது, சீமானின் 'இயற்கை பாதுகாப்பு' முழக்கங்களுக்கு முரணாக உள்ளது.


அதேபோல், கிரானைட் முறைகேட்டில் சிக்கிய பி.ஆர்.பி பழனிச்சாமியை "இந்த நாட்டுக்கு அஞ்சு லட்சம் கோடி ஈட்டிக் கொடுத்தவர்" எனப் புகழ்ந்து தள்ளினார் சீமான். 


கிரானைட் குவாரிகளால் இயற்கை அழிவதைப் பேசாமல், கொள்ளையடித்தவர்களுக்கு ஆதரவாகப் பேசியது அவரது 'இயற்கை ஆர்வத்தின்' உண்மை முகத்தைக் காட்டுகிறது.


சுமார் 16,000 கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு நடந்ததாக அரசு அதிகாரிகளே அறிக்கை தாக்கல் செய்தபோது, சீமான் மட்டும் மேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பி.ஆர்.பி அவர்கள் இந்த நாட்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்தவர். அவர் எப்படி குற்றவாளி ஆவார்? ஆட்சியாளர்கள் தான் குற்றவாளி" என்று பகிரங்கமாக முட்டுக்கொடுத்தார். 


ஒரு இயற்கை ஆர்வலராகத் தன்னை அடையாளப்படுத்தும் ஒருவர், மலைகளை உடைத்து அழித்தவருக்கு ஆதரவாகப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்த சமயத்தில், சீமானின் கட்சிப் பணிகளுக்காக பி.ஆர்.பி தரப்பிலிருந்து பல கோடி ரூபாய்கள் கைமாறியுள்ளன.


பி.ஆர்.பி-க்கு ஆதரவாகச் செயல்படுவதற்காகத் தேர்தல் காலங்களில் சீமானின் "தம்பிகள்" படைக்குத் தேவையான வாகன வசதிகள் மற்றும் இதர செலவுகளை அந்த நிறுவனமே கவனித்துக் கொண்டன.


பி.ஆர்.பி பழனிச்சாமி ஏழு முறை சிறந்த ஏற்றுமதியாளர் விருது வாங்கியவர் என்று சுட்டிக்காட்டிய சீமான், "அவர் எப்படி கல்லை உடைப்பார்?" என்று மிகச் சாதாரணமான ஒரு கேள்வியைக் கேட்டு, சட்ட விரோதக் குவாரி உரிமையாளரை ஒரு புனிதராகச் சித்திரிக்க முயன்றார்.


மலைகளைக் காப்பேன் என்று கூறிக்கொண்டு, அதே மலைகளைச் சிதைத்த பி.ஆர்.பி-யிடம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவாகப் பேசியது, சீமானின் அரசியல் என்பது ஒரு 'வசூல் அரசியல்' என்பதையே காட்டுகிறது.


அடுத்ததாக……&வெளியில் "திராவிடத்தை ஒழிப்போம்" என ஆக்ரோஷமாகப் பேசும் சீமான், திரைமறைவில் திமுகவின் முக்கியப் புள்ளிகளுடன் நட்புறவில் இருப்பது தெரியுமா?


திமுகவின் குடும்ப உறவான சபரீசன் உடன் ரகசிய சந்திப்புகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே ₹50 லட்சம் மதிப்பிலான Fortuner கார் சீமானுக்குக் கிடைத்தது.


மேடையில் திமுகவைத் திட்டினாலும், உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட்' நிறுவனம் வெளியிடும் படங்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதும், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியைப் புகழ்ந்து பேசுவதும் சீமானின் இரட்டை நிலையை உறுதிப்படுத்துகிறது.


இது எல்லாவற்றையும் விடக் கொடுமையானது, இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது ஈழத் தமிழர்களுக்கு உதவுவதாகக் கூறி வசூலிக்கப்பட்ட நிதி.


அதற்காக உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டது.


சுமார் 224 டன் (2,24,000 கிலோ) நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுவதாகக் கூறி, அவை முறையாகச் சென்றடையாமல் துறைமுகக் கிடங்குகளிலேயே விற்கப்பட்டன.


சுமார் ₹6 கோடி மதிப்பிலான இந்தப் பொருட்கள் ஈழத் தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் 'அபேஸ்' செய்யப்பட்டது மனிதாபிமானமற்ற செயலின் உச்சம்.


காவிரி மேலாண்மை வாரியத்திற்காகத் தீக்குளித்து இறந்த விக்னேஷ் என்ற இளைஞரின் தியாகத்தைக் கூட சீமான் விட்டுவைக்கவில்லை.


விக்னேஷின் தாய்க்கு வீடு கட்டித் தருவதாகவும், மணிமண்டபம் கட்டுவதாகவும் கூறி லட்சக்கணக்கில் வசூல் செய்யப்பட்டது.


ஆனால், அந்தத் தாய்க்கு வழங்கப்பட்ட ₹10 லட்சத்திற்கான காசோலை (Cheque) வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது (Bounce).


அந்தத் தாயின் கண் அறுவை சிகிச்சைக்காக நிதி வசூலித்துவிட்டு, அவருக்கு ஒரு பைசா கூடக் கொடுக்காமல் ஏமாற்றியது சீமானின் அரசியல் எந்தப் பிணந்தின்னிக் கலாச்சாரத்தைச் சார்ந்தது என்பதற்குத் தெளிவான சான்று.


புலம்பெயர் தமிழர்கள் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்து அனுப்பும் பணம், சீமானின் சொகுசு வாழ்க்கைக்கும், அவரது மெய்க்காப்பாளர்களுக்கும், கார் பெட்ரோலுக்கும் செலவிடப்படுகிறதே தவிர, தமிழினத்தின் முன்னேற்றத்திற்கோ அல்லது இயற்கை வளங்களைக் காப்பதற்கோ அல்ல.


திருச்செந்தூர் முருகனுக்கு ₹40-50 லட்சம் மதிப்பில் தங்க வேல் காணிக்கை கொடுக்கும் அளவிற்குச் சீமானுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? 


எளிய பிள்ளையெனக் கூறிக்கொண்டு கோடீஸ்வர வாழ்க்கை வாழும் இவரை இனியாவது அவரது 'தம்பிகள்' அடையாளம் காணப்போகிறார்களா அல்லது Zombie கள் போல இந்த மாய வலையிலேயே சிக்கிக் கிடக்கப் போகிறார்களா?


அந்த திருச்செந்தூர் முருகனுக்குத் தான் வெளிச்சம்.

Thursday, 20 June 2024



நானாட்டான் நறுவிலிக்குளத்திலே வறிய விதவை கைவிடப்பட்ட பெண்களுக்காக தைப்பெண்கள் என்ற அமைப்பை உருவாக்கி தையல் ஆடைத்தொழிலில் வருமானம் ஈட்ட முயற்சி செய்கின்றோம். நானாட்டான் பிரதேச செயலகமானது, பல பொருளாதார திட்டங்களை அமுல்படுத்தி வருகின் றது. அத்தகைய திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக செயல்படுத்தினால் நாமும் பயன் அடைவோம். எமது அமைப்பில் இன்னும் பல பெண்கள் இணைய உள்ளார்கள் ஆனால் எம்மிடம் போதிய அளவு தையல் இயந்திரங்கள் இல்லை. அதனை நீங்கள் எமக்கு தரும்படியும், கொஞ்சம் நிதியுதவியும் நல்கும் படி  

Tuesday, 19 March 2024

இசை உலகின் மாமா கே.வி. மகாதேவன்

              தேன் தமிழ் ஓசை வழங்கும் இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி: 

திரைப்பட இசைத்துறையில் பிரபல்யமான இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர்கள் இவர்களைப்பற்றி சிலாகிக்கும் ஓர் நிகழ்ச்சியாக இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றோம்! 

இன்றைய இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சியில் இடம்பெறுவது, இசை உலகில் மாமா என்று செல்லமாக அழைழைக்கப்படும் கே.வி. மகாதேவன். எழுத்துருவாக்கம் பேசாலைதாஸ், குரல் வடிவம் உங்கள் அபிமான அனுஷியா!

1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன், தனது 24-வது வயதில், 1942-ம் ஆண்டு, திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்தார் இவர். ‘மனோன்மணி’ என்கிற படத்துக்கு ஒரேயொரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில், இவர் இசையமைத்த பாடல் தனித்துத் தெரிந்தது.

கர்நாடக சங்கீதம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. ஆனால், தன் இசையால் கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தினார் கே.வி.மகாதேவன். எளிய மனிதர்களுக்கும் கொண்டு சேர்த்தார். இன்னும் சொல்லப் போனால், எந்தவிதமான பாடலாக இருந்தாலும், அங்கே கர்நாடக சங்கீத பாணியை மெல்லிய இழைபோல் பாட்டு முழுவதும் விரவவிட்டிருப்பார் மகாதேவன். ஒருகட்டத்தில், ‘இது கே.வி.மகாதேவன் பாணி’ என்றே ஆனது.
நிலவோடு வான் முகில் விளையாடுதே’ என்ற பாடல், முழுக்க முழுக்க இசை ஞானம் அறிந்தவர்களால் கூட சுலபமாகப் பாடமுடியாது. ஆனால், கிராமத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, இந்தப் பாட்டுப்புத்தகத்தை வாங்கிவைத்துக் கொண்டு, அச்சுஅசல் அதே ஏற்ற இறக்கங்களுடன் பாடினார்கள். அதற்குக் காரணம்... கே.வி.மகாதேவனின் கர்நாடக இசை. இன்னொரு காரணம். அந்த இசையை எல்லோர்க்குமாகக் கொண்டு சேர்த்த ஸ்டைல்!
முக்தா சீனிவாசனின் ‘முதலாளி’ படத்தில், ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே. நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’ என்ற பாடல், நகர்ப்புற மக்களாலும் பட்டிதொட்டி கிராம மக்களாலும் ரசிக்கப்பட்டது. முணுமுணுக்கப்பட்டது. ஒருபக்கம் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தன் படங்களுக்கு திரை இசைத் திலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அதேபோல், பி.ஆர்.பந்துலுவும் தன் படங்களுக்கு மகாதேவனின் பாடல்களும் இசையும் மிக அவசியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். தொடர்ந்து பயன்படுத்தினார்.
கே.வி.மகாதேவனின், காதல் பாடல்கள் பலாச்சுளை. சோகப்பாடல்கள் வீணையின் இதம். உற்சாகப் பாடல்கள், தபேலாவின் வேகம். தத்துவப் பாடல்கள் புல்லாங்குழலின் மென்மை. இப்படித்தான், கே.வி.மகாதேவனின் பாடல்கள், ஹிட்டடித்தன. ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்று உருகவைப்பார். ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்று கிறங்கடிப்பார். ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி’ என்றும் ‘பறவைகள் பலவிதம்’ என்றும் ‘கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்’ என்றும் ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன், பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார்.
’நலந்தானா நலந்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல், இன்றைக்கும் காதலர்கள் குசலம் விசாரித்துக்கொள்கிற பாடல். பேரறிஞர் அண்ணாவே வியந்து மகிழ்ந்து நெகிழ்ந்த பாடல். இவர்தான் ‘எலந்தபயம்’ பாடலையும் இசைத்து மிகப்பெரிய ஹிட்டாக்கினார் என்றால் நம்பவே மாட்டார்கள்.
தேவர் பிலிம்ஸ் தன் படங்களில், தொடர்ந்து கே.வி.மகாதேவனின் இசையையே பயன்படுத்திக் கொண்டது. படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுக்கிற மேஜிக், மாமா என்று அன்புடன் அழைக்கப்படுகிற கே.வி.மகாதேவனு க்கே உரிய ஸ்டைல்! ‘ஏதோ ஏதோ ஏதோவொரு மயக்கம், அது எப்படி எப்படி வந்தது எனக்கும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான்கு நிமிடத்துக்கு நாம் மயங்கிச் சுதாரிப்போம். ’திருமணமாம் திருமணமாம் ஊரெங்கும் திருமணமாம்’ என்ற பாடல், கல்யாண ஊர்வலத்தில் நம்மையும் ஒருவராக அழைத்துச் செல்லும்.
குரலால் தனித்துவம் மிக்க பாடகியாக மிகப்பெரிய பேரெடுத்த எல்.ஆர்.ஈஸ்வரியை அறிமுகப்படுத்தினார் கே.வி.மகாதேவன். ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்று மெல்லிசை மன்னரின் இசையில் முதன்முதலாகப் பாடினாலும் எஸ்பி.பி-யின் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலும் இசையும் மிகப்பெரிய கவனம் பெற்றது. அந்தப் பாடலின் நடுவே வருகிற ஒவ்வொரு இசையும் நம்மைத் துள்ளாடச் செய்யும். வரிகளும் இசையுமாக வந்து மனதை தள்ளாடச் செய்யும்.
இசையின் மகத்துவங்களை அறிந்த கே.வி.மகாதேவனின் முக்கியமான ஸ்டைல்... சைலண்ட். அதாவது மெளனம். பாடல் வந்துகொண்டிருக்கும். இசையும் வரிகளுமாகக் கலந்து கைகோத்து நம்மை என்னவோ செய்துகொண்டிருக்கும். 'என்னதான் ரகசியமோ இதயத்திலே/ நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள்... நடுநடுவே இசையே இல்லாமல் வரிகள் மட்டும் வந்து பச்சக்கென்று இன்னும் பாடலுடன் உறவாடத் தொடங்குவோம்.
அன்னத்தைத் தொட்ட கைகளிலே மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று பாடிக்கொண்டே இருக்கும்போது, ’உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர்போனாலும் தரமாட்டேன்... உயிர் போனாலும் தரமாட்டேன்’ என்று சொல்லும்போது இசையை மெளனமாக்கி, வார்த்தைகளை கனமாக்கி காதலுக்குள் மூழ்கடித்துவிடுவார் கே.வி.மகாதேவன்.
ஜெயலலிதா பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ’’ஜெயலலிதா குரலில் ஒரு மேஜிக் இருக்கு. அதனால இந்தப் பாட்டை அவங்களே பாடட்டும்’’ என்று எம்ஜிஆரிடம் சொல்ல, எம்ஜிஆரும் சம்மதம் தெரிவிக்க, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார் ஜெயலலிதா.
நாற்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிய மகாதேவன் மாமாவின் இசைப்பயணம் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தது. 1967-ம் ஆண்டில், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான்!
இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பல படங்கள் இசையை மையமாகக் கொண்டும் கலைக்கு முக்கியத்துவம் கொண்டும் உருவாக்கப்பட்டன. அப்படி அவர் உருவாக்கிய ‘சங்கராபரணம்’ படத்துக்கு கே.வி.மகாதேவனே இசையமைத்தார். தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழகத்திலும் தெலுங்கு மொழியிலேயே வந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்தப் படம். இந்தப் படத்தின் பாடலைப் பாடாத இசைக்கச்சேரிக்காரர்களே இல்லை. இந்தப் படத்துக்காக எஸ்பி.பி-க்கு சிறந்த பாடகர் விருதும் கே.வி.மகாதேவனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தன.
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...’ என்ற பாடலும் ‘மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக் கையைத் தொட்டு அள்ளியள்ளி அணைக்கத்தாவினேன்... நீயும் அச்சத்தோடு விலகி ஓடினாய்’ என்பதுமான எத்தனையோ ஆயிரமாயிரம் முத்துமுத்தான பாடல்களைக் கொடுத்த திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், கர்நாடக சங்கீதம் எனும் முரட்டுக்குழந்தைக்குத் திலகமிட்டு, பூச்சூட்டி, மெல்லிசையாக்கி அழகுபார்த்த செல்ல மாமா!
1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன். நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிற, போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற, கொண்டாடிக்கொண்டே இருக்கிற மகா இசைமேதை மகாதேவனின் 106-வது பிறந்தநாள் இன்று!
மகாதேவன் எனும் இசை மாமாவைக் கொண்டாடுவோம்! மீண்டும் மற்றுமொரு இன்னிசைப்பாடகன் நிகச்சி வழியாக உங்களை சந்திப்போம் நேயர்களே! அதுவரை எழுத்துர்வாகம் கொடுத்த பேசாலைதாஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி விடை பெறுவது உங்கள் அபிமான அனுஷியா

Friday, 1 March 2024

சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்!

தேன் தமிழ் ஓசை வழங்கும் இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி! நேயர்களே, இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி ஊடாக நாம் செவ்விதழ் இசைத்தமிழிலே பிரபல்யமான இசை அமைப்பாளர்க;, பாடலாசிரியர்கள், பாடகர்களைப்பற்றி அவ்,வப்போது சிலாகித்து வருகின்றோம்; அந்த வரிசையில் இன்று இடம் பெறுபவர், சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்! பிரதி ஆக்கம் பேசாலைதாஸ், தொகுத்து வழங்குபவர் உங்கள் அபிமான அனுசியா!


சில குரல்கள், எல்லோருக்கும் பிடித்தமான குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா இசையமைப்பாளர்களுக்கும் விருப்பமான குரலாக அமைந்திருக்கும். அப்படி, இசையமைப்பாளர்களின் உணர்வுக்குத் தக்க குரல் கிடைத்துவிட்டால், நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்!

அப்பா மிகப்பெரிய இசைக்கலைஞர். கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவர். ஆனாலும் எளிமையாகத்தான் வாழ்ந்தார்கள். மகனையும் மிக மிக எளிமையாகவே வளர்த்தார்கள்.
பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னைக்கு வந்தார் ஜெயச்சந்திரன். டிகிரி கையில் இருந்தது. மிருதங்கம் பக்கத்திலேயே இருந்தது. ஆனாலும் தனக்குள் இரண்டறக் கலந்திருந்த குரலின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது அவருக்கு!
1965-ம் ஆண்டு, போருக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மெய்யுருகப் பாடினார். இந்தப் பாடலை இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்பட்டவரும் இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமான ஏ.வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு இருவரும் கேட்டார்கள். உடனே ஜெயச்சந்திரனை அழைத்து கைகுலுக்கினார்கள். தோள் தட்டிப் பாராட்டினார்கள். ’குஞ்சாலி மரக்கார்’ எனும் படத்துக்கு பாடவைத்தார்கள். இதுவே அவருக்கு முதல் படம்; முதல் பாட்டு! ஆனால், இதையடுத்துக் கிடைத்த வாய்ப்பு, முதல் படமாக, முதல் பாடலாக அமைந்தது. ’களித்தோழன்’ படத்தில் ஜெயச்சந்திரனின் பாடல் ஒலித்தது. குரலில் கட்டுண்டுபோனார்கள் கேரள ரசிகர்கள்.
மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும் ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும் ‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்.
கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார். புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.
பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த ‘ஒருதலை ராகம்’ படத்திலேயே, ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம். அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று ‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.
‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல். ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல். ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார். ’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
குரலில் இன்னமும் அதே குழைவு. இப்போது உடலையும் கட்டுமஸ்தாக, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
மாயக்குரலால் வசீகரித்த ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒரு இரவு வேளையில், கேட்டுப்பாருங்கள். மறுநாள்... ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ என்று யாராவது நம்மிடம் கேட்டால்... அதற்கு, ‘ஜெயச்சந்திரன் பாட்டுகள்தான்’ என்று பதில் சொல்லுவோம். அப்படியொரு ஆனந்தமான குரல் அவருக்கு. நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிற குரல் ஜெயச்சந்திரனுடையது! சரி நேயர்களே மற்றுமொரு இசைப்பாடகன் நிகழ்ச்சியிலே சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அபிமான அனுசியா

Tuesday, 27 February 2024

தேன் தமிழ் ஓசை

 நோர்வே நாடும் இலங்கை அரசும் CeyNor என்ற மீன்பிடி துறை சார் பொருளாதார திட்டத்தை அறிமுகம் செய்த காலத்தில், இலங்கை நாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவு மக்கள் நோர்வே நாட்டிற்கு வந்தார்கள், அதனையொட்டி Folkehøyskole கல்வி நடவடிக்கை ஊடாகவும் பெருமளவு இலங்கைத்தமிழர்கள் நோர்வே நாட்டுக்கு வந்தார்கள், இதன் பிறகு 1986 காலகட்டத்தில் அகதிகளாக பெருமளவு மக்கள் நோர்வே நாட்டுக்குள் வந்தார்கள். இவர்களின் சுகாதார ந்டவைக்கைகளுக்காக பேர்கன் கம்யூன் சில அறிவுத்தல்களை தமிழ் மொழி மூலமாக கொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் அடைப்படையில் வானொலிசெவை ஒன்றை வாரம் ஒருதடவை ஒரு மணித்தியால தமிழ் சேவையை நடத்தும் சந்தர்ப்பம், தமிழ்ச்சங்கத்துக்கு கிட்டியது.

                                                              இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வானொலி குழு ஒன்றை சந்திரமோகன் ஏற்பஆடு செய்திருந்தார். இந்த வானொலி குழுவானது தமிழ் சங்கத்தின் ஆதரவில் உருவாக்கப்பட்டு வானொலி முன்னெடுக்கப்பட்டது.  தேன் மதுரம் என்ற பெயர் அப்போது என்னால் முன்மொழியப்பட்டது பின்னர் தேன் தமிழ் ஓசை என்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு வானொலி சேவை ஆரம்பமானது. இந்த குழுவில் எல்மர், தேவநாதன், க்ரோலின், னிதி, எலிசபேத், யூலியஸ், சந்திரமோகன் இன்னும் பலர் இந்த வானொலியில் ஆர்வமாக ப்ங்கெடுத்தனர். நான் சிறுவர் நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொண்டு அதனை பல வருடங்களாக நடத்தி வந்தேன். அதனால்தான் வானொலி மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டேன்.

                                                         நான் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்றிருந்தேன், தொடர்ந்தும் பேர்கன் பல்கலைக்கழக த்தில் அதே துறையில் முதுகலைமானியும் பெற்றேன், பின்னர் கலாநிதி பட்டம் பெறுவதற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில்  M Phil படிக்க சென்றுவிட்டேன். பின்னர் மீண்டும் பேர்கன் வந்தேன். அப்பொழுது தேன் தமிழ் ஓசையின் உரிமம் தனிப்பட்ட நபர்களின் பெயரில் மாற்றப்பட்டு வானொலி சேவையானது நடைபெற்றது. சிற்றலை வரிசையில், வாரம் இரண்டு மணித்தியாலம், Student Radio Station வழியாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

                                                      நான் பேர்கன் நகருக்கு மீண்டும் வந்தபோது வானொலியில் இணைந்து செயலாற்ற ஆசைப்பட்டேன் பல வருடங்களாக காத்திருந்தேன். ஏனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் வானொலி விழாவிலும் நான் ப்றக்கனிக்கப்பட்டேன், அழைப்பு விடுவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நான் நோர்வே வானொலி அதிகார சபை  Mediatilsynet தொடர்பு கொண்டு தேன் தமிழ் ஓசை வானொலி பற்றி கேட்டபொழுது வருடாவாருடம் 100000 குரோனர் வழக்கப்படு வந்தவிடயம் எனக்கு தெரியவந்த்தது. அதற்கான நிதி அறிக்கையும் எனக்கு தரப்பட்டது. 

                                                     நான் தமிழ் சன்ன்கத்தோடு தொடர்பு கொண்டு, தமிழ் சங்கத்தின் பெயரில் இருந்த வானொலி எப்படி தனியார் கைகளுக்கு மாறியது என்று கேட்டேன், தமிழ் சங்கம் அதற்கான பதிலை தரவில்லை. பின்னர் நான் தேன் தமிழ் வானொலிக்கு கிடைத்த மானிய விபரங்களை நான் முக நூலிலே தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பேர்கன் நகரில் பெரும் சலசல்ப்பு ஏர்பட்டது. இதன் எதிரொலி தமிழ் சங்கத்திலும், தமிழ் கிறிஸ்தவ ஒன்றியத்திலும் எனக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டது.

                                                   தேன் தமிழ் ஓசை பொதுவான மக்களுக்கானது என்பதை நான் நிலை நாட்டவேண்டும் என்பதற்க்காக Bronøysund