Sunday 28 July 2019

மெழுகுவர்த்தியிடம் சில கேள்விகள்"

புதுக்கவிதை உலகில் தனக்கென ஒரு நிதந்தர இடத்தில் இருக்கம் கவிஞர் மு. மேத்தா அவர்களின் என்னுடைய போதி மரங்கள் என்னும் கவிதைத் தொகிப்பிலிருந்து எனக்கு பிடித்த கவிதை....
"மெழுகுவர்த்தியிடம் சில கேள்விகள்"
எத்தனை காலமாக நீ
எரிந்து கொண்டிருக்கிறாய்?
உன் வயது உனக்கு
மறந்து போனது!
எத்தனை யுகங்களின் வெப்பம்
உன் ஒற்றை உடலில்?
உன் வாழ்க்கை உனக்கு
மறந்து போனத!
இருட்டை விரட்டுவதற்காக
நீ
ஏற்றப்பட்டாய்
ஆனால்
வெளிச்சத்தை யாருக்கு
விநியோகம் செய்கின்றாய்!
உன்னுடைய சுடர்
உன்னை உபயோகிப்பவர்களின்
புன்னகையோ?
நிமிர்ந்து தான் நிற்கிறாய்...
ஆனால்
உன்னுடைய உயரம்
குறைந்து கொண்டே வருவதை
உணர்கிறாயா?
உருகிக் கொண்டே ... இருப்பவனே
நீ மற்றவர்களை
உருக்கப் புறப்படுவது எப்போது?
தீபமே
நீ எப்போது
தீயாக மாறுவாய்?
நன்றி கவிஞர் மேத்தா அவர்களுக்கு

No comments:

Post a Comment