Monday, 30 January 2023

அர்ச். அந்தோணியார் வாழ்கை வரலாறு (பாகம்-12)

 


அர்ச். அந்தோணியார் வாழ்கை வரலாறு (பாகம்-12)

மீன்களுக்கு பிரசங்கம்
ரிமினி என்பது ஜெர்மானிய கடற்கரைப் பட்டணம். ஆல்பிஜீனிய பேதகம் வேரூன்றிய இடம் இதுவே. ஜெர்மானிய மன்னர்கள் பாப்பரசர் மீது வெறுப்புடையவர்கள், எனவே இத்தீய கும்பலை வளர்த்தனர். இவர்களின் தலைமை இடம் ரிமினி. அரசின் ஆதரவு இருந்ததால் கத்தோலிக்கர் துன்புறுத்தப்பட்டனர். 1220ம் ஆண்டு வேதங்கள் போதித்த மறை ஆயரை பேதகத்தினர் கொன்று விட்டனர். அந்தோனியார் ரிமினி வர இரு ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது.
பலர் அதன் மாய்கையில் மூழ்கினர். இதனைத் தகர்த்தெறிய வல்லவர் அர்ச்.அந்தோனியார்தான் என்று மேலாளர்கள் முடிவு செய்தனர். அதற்கென அவரை அனுப்பி வைத்தனர். அவரது போதனைகளுக்குச் செவிமடுக்க மக்கள் மனம் இடம் தரவில்லை . கடல்ஓரம் சென்றார். மீன்களைப் பார்த்து மறையுரை ஆற்றினார். மீன்கள் தங்கள் தலைகளை நீரின் மேல் நீட்டி அணி அணியாய் நின்று மறையுரையைக் கேட்டன. அவர் சொன்னதாவது:
"என் அருமை மீன்களே! நீங்கள் சர்வேசுரனுக்கு நன்றி செலுத்த கடமைபட்டுள்ளீர்கள். உங்களுக்கு நல்லதொரு இடத்தை வாழத் தந்தருளினார். நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லலாம். தண்ணீரையும், உப்பையும் பெற்றுள்ளீர்கள். எந்தப் புயலும், சூறாவளியும், கொந்தளிப்பும் உங்களைத் தாக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பான இடம்.
நீங்கள் பலுகிப் பெருகிட சர்வேசுரன் திருவுளமானார். நோவாவின் பேழையில் இருந்த மிருகங்களைத் தவிர எல்லா விலங்கு புள்ளினங்க ளையும் அழித்தார். ஆனால் உங்களையோ அப்படியே விட்டு வைத்தார். மக்கள் தவம் செய்யத் தூண்டுமாறு யோனாஸ் தீர்க்கதரிசியை நீங்கள் விழுங்கச் செய்து மூன்றாம் நாள் விடுவித்த பெருமை உங்களுக்கு உண்டு. உங்கள் வாயிலிருந்தே ஆண்டவர் காசு பெற்று தனக்கும் அர்ச்.இராயப்பருக்கும் வரி செலுத்தினார்.
பரலோகஞ் செல்லுமுன் நம் மீட்பர் தாம் உயிர்த்ததை அப்போஸ்தலர்களுக்குக் காண்பிக்க உங்களையே உணவாக உண்டார். இது போன்ற பல காரணங்களால் நீங்கள் அவருக்கு ஏனைய பிராணிகளைவிட அதிகமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள்."
(இதனால் தான் மீன்கள் இல்லாத போது அதிக மீன்கள் பிடிபட கடலோரங்களில் அர்ச்.அந்தோனியார் சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது)
இதைக்கண்ட பதிதர்கள் அதிசயப்பட்டனர். அவர் பிரசங்கத்தை கேட்டனர். பலர் மனந்திரும்பினர். அவர்களுள் 30 ஆண்டுகளாய் பதிதத்தில் இருந்த போனில்லோ என்பவன் குறிப்பிடத்தக்கவன்.
போனில்லோவின் வேலைக்காரன் தன் எஜமானின் மனந்திரும்பலைப் பார்த்து வியந்து கானும் மனம் திரும்பினான். நல்ல கிறிஸ்தவனாக பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தான். ஆன்ம ஆவல் மிகவுற்று, மறைத்தொண்டு செய்தான் துறவியுமானான். பின் முத்திப் பேறு பெற்ற பட்டம் பெற்றான். இவர்தான் பரோன்றி அருளப்பர்,
தொடரும்.....
ஆமென்.
எல்லா உணர்ச்சிகளும்:
DL Mêñtîs மற்றும் 331 பேர்
4
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

Tuesday, 17 January 2023

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை?

 

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை?

Sri Lankan TamilsTamil National AllianceSri Lankan political crisis
 2 நாட்கள் முன்
15SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News
Courtesy: நிலாந்தன்

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது.தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான்.இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல.

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான்.வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது.எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது.எனவே பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளியதன் மூலம்,தமிழரசுக் கட்சி அக்கட்சிகளுக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றது.வீட்டு சின்னம் இல்லாமல் வென்று காட்டுங்கள் என்பதே அந்தச்சவால்.

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? | Sri Lankan Political Crisis Tamil Politicians

ஆனால் அந்தச் சவாலை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாமல், தந்திரமாக ஒரு கணிதபூர்வமான காரணத்தை முன்வைக்கிறார்கள்.உள்ளூராட்சி மன்றங்களில் கலப்புத் தேர்தல் முறைமை காரணமாக வெற்றி வாய்ப்புகள் குறைவதை தடுப்பதற்காக இவ்வாறு பங்காளி கட்சிகளை தனியே போட்டியிடுமாறு கேட்டதாக அவர்கள் காரணம் கூறுகிறார்கள்.அதன்படி பிரிந்து நின்று வாக்கு கேட்டு, அவரவர் தங்கள் தங்கள் பலத்தை நிரூபித்தபின் ஒன்றாகச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களை நிர்வாகிக்கலாம் என்பதே தமிழரசுக் கட்சி கூறும் விளக்கம்.

 ஆனால்,தமிழரசுக் கட்சி கடந்த 13 ஆண்டுகளாக கூட்டமைப்புக்குள் இருந்த ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகளை அகற்றி வருகிறது என்பதே உண்மை.இந்த அடிப்படையில் கடைசிவரை நின்று பிடித்த பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

இங்கு வெளித்தள்ளப்பட்டிருப்பது பங்காளிக் கட்சிகள் மட்டுமல்ல ஒரு விதத்தில் மாவையுந்தான்.கட்சிக்குள் அவருடைய தலைமை ஸ்தானம் மேலும் பலவீனமடைந்திருக்கிறது என்று தெரிகிறது.கடந்த பல மாதங்களாக பங்காளிக்கட்சிகள் மற்றும் கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகிய கட்சிகள் என்று ஐந்துக்கும் குறையாத கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன. இந்த ஒருங்கிணைப்புக்குள் மாவையும் அவ்வப்போது வந்து போனார்.

அதனால்தான் விக்னேஸ்வரன் மாவையின் தலைமையின் கீழ் ஐக்கியப்பட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருந்தார்.அதே காலப்பகுதியில் பங்காளிக் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பின் தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதின.பரந்துபட்ட அளவில் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் தமிழரசு கட்சி அவ்வாறான பரந்த தளத்திலான ஐக்கியம் ஒன்றைக் கட்டியெழுப்பத் தயாரில்லை என்று தெரிகிறது. எனவே பங்காளிக் கட்சிகள் வெளித்தள்ளப்பட்டிருக்கின்றன.மாவை சேனாதிராஜா, இனி கட்சிக்கு வெளியே சேர்க்கைகளை வைத்துக் கொள்ள முடியாது.  

இது ஒரு நாள் நடக்கும் என்பது பங்காளி கட்சிகளுக்குத் தெரியும். சம்பந்தருக்குப் பின்னர்தான் அப்படி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் உடலாலும்,முடிவெடுக்கும் திறனாலும் தளரத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணிக்குள்,இரு தசாப்த காலங்களுக்குமேல் அவர் தலைமை தாங்கிய கூட்டு கலைந்து விட்டது. ஆனால் அதற்குரிய விளக்கத்தை ஒரு தலைவர் என்ற முறையில் அவர் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கவில்லை.இதுவும் தமிழ் அரசியலின் சீரழிவைக் காட்டுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உடைந்து வந்த கூட்டமைப்பு இனி ஒரு கூட்டாக இருக்காது.அதே சமயம் விலகிச் சென்ற தரப்புக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தன.அந்த ஒருங்கிணைப்புக்குள் ஜனநாயக போராளிகள் கட்சி,மணிவண்ணன், ஐங்கரநேசன்,ஆனந்தி சசிதரன், போன்றவர்களை உள்ளீர்த்து ஒரு மிகப்பெரிய கூட்டைக் கட்டியெழுப்பினால் அது தமிழரசுக் கட்சிக்கு தலையிடியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்படி அப்படி ஒரு பெரும் கூட்டுக்கான வாய்ப்புக் குறைவு என்றே தெரிகிறது.

புதிய கூட்டின் சின்னம் எது என்பதிலும், அதன் செயலாளர் யார் என்பதிலும் விக்னேஸ்வரனோடு ஏனைய கட்சிகளால் உடன்பட முடியவில்லை.விக்னேஸ்வரன் தனது கட்சியின் சின்னமாகிய மான் சின்னத்தை விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை.அதேசமயம் புளட் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் செயலாளராக இருக்கும் கட்சியின் சின்னத்தை ஏனைய கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது.

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? | Sri Lankan Political Crisis Tamil Politicians

அதை விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் ஏற்கவில்லை.மணிவண்ணன் விக்னேஸ்வரனின் கட்சியில் சேர்ந்து விட்டார்.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பில் மணிவண்ணனும் விக்னேஸ்வரனும் ஒரு தரப்பாகவும் ஏனைய கட்சிகள் மற்றொரு தரப்பாகவும் பிரிந்து நின்றதாகத் தெரிகிறது. ஒரு பொது முடிவை எட்டாமல் விக்னேஸ்வரன் இடையிலேயே எழுந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

சில சமயம் விக்னேஸ்வரன் ஒரு பொது முடிவுக்கு உடன்பட்டிருந்தாலும்கூட புதியகூட்டு தமிழரசுக் கட்சிக்கு சவாலாக மேலெழும் ஒரு புதிய வளர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தேவையான தலைமைப் பண்பு அவருக்குண்டா? என்ற கேள்வி உண்டு. ஏனென்றால் தன் சொந்தக் கட்சியையே பலப்படுத்தாத ஒரு தலைவர் அவர்.அவருடைய கட்சிக்குள் பெருமளவுக்கு அவர் மட்டும்தான் தெரிகிறார்.இப்பொழுது மணிவண்ணனையும் இணைத்திருக்கிறார்.

அவர் கட்சிக்குள் கலந்து பேசி முடிவுகளை எடுப்பதில்லை என்று கட்சி முக்கியஸ்தர்கள் குறைபடுகிறார்கள்.கட்சிக்குள் மட்டுமல்ல,கடந்த பல மாதங்களாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வரும் புதிய கூட்டுக்குள்ளும் அவர் முடிவுகளை கலந்து பேசி எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மணிவண்ணனை கட்சிக்குள் இணைக்கும் முடிவும் அவ்வாறு கலந்து பேசி எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் உண்டு.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் அவருக்கு ஒரு தனிச்சிறப்பான ஆணையை வழங்கினார்கள்.வீட்டுச் சின்னத்துக்கு வெளியே வந்தாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் ஒராணை அது. ஆனால் அந்த மக்கள் ஆணையை ஒரு பெரும் கட்சியாக நிறுவனமயப்படுத்த அவரால் முடியவில்லை.இவ்வாறு தன் சொந்தக் கட்சியையே கட்டியெழுப்ப முடியாத ஒருவர் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டதும், உள்ளதில் பலமானதுமாகிய, தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டை எப்படிக் கட்டியெழுப்புவார் என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? | Sri Lankan Political Crisis Tamil Politicians

மேலும் புதிய கூட்டுக்குள் ஜனநாயக போராளிகள் கட்சியை இணைப்பதற்கும் விக்னேஸ்வரன் இணங்கவில்லை.அதற்கு அவர் கூறிய காரணம்,ஏற்கனவே கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளீர்க்கப்படவில்லை என்பதனால்,முதலில் ஏற்கனவே ஒருங்கிணைந்து செயல்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்தபின்,ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைப்பது தொடர்பாக சிந்திக்கலாம் என்று காரணம் கூறியுள்ளார்.

காரணம் எதுவாகவும் இருக்கலாம்.ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் யார் யார் ஒன்றுபட்டிருக்கிறார்கள்? யார் யார் பிரிந்து நிற்கிறார்கள்? என்று பார்த்தால், முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் யாவும் ஒன்றாகிவிட்டன.இதில் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவரின் கட்சியும் அடங்கும்.அதே சமயம் ஆயுதப் போராட்ட மரபில் வராத அரசியல்வாதிகள் விலகி நிற்கிறார்கள்.

இவ்வாறாக தமிழ்த்தேசியப் பரப்பில் இப்பொழுது மொத்தம் நான்கு கூட்டுக்கள் அல்லது நான்கு சேர்க்கைகள் மேலெழுந்திருக்கின்றன.சிலசமயம் எதிர்காலத்தில் இவற்றுட் சில தங்களுக்கிடையே ஒரு புதிய ஒருங்கிணைப்புக்கு போக முடியும்.

ஆனால் இப்போதுள்ள களநிலவரத்தின்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால்,தமிழ் வாக்குகள் கட்சிகளால் சிதறடிக்கப்படும் ஆபத்தே அதிகம் தெரிகிறது. முன்னைய தேர்தல்களின்போது ஒரு பழமொழி கூறப்படுவதுண்டு.“மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள்தான் இருக்கிறது” என்று.ஆனால் இனி அப்படிக்கூற முடியாது. கடந்த பொதுத் தேர்தல் கற்றுத்தந்த பாடம் அது. கடந்த பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. வீட்டு சின்னத்துக்கு வெளியே போனால் வெல்ல முடியாது என்ற மாயை உடைக்கப்பட்டது.ஆனால் அதேசமயம் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஒரு பலமான கூட்டாக உருத்திரளவில்லை.அதனால் கூட்டமைப்பு இழந்த ஆசனங்களில் மூன்றை அரச சார்பு கட்சிகள் வென்றன.அதாவது மீன் சட்டிக்கு வெளியே போய்விட்டது.

இனிமேலும் அதுதான் நிலைமை என்று தெரிகிறது.தமிழ் மக்கள் தேசமாகத் திரள்வதற்கு பதிலாக கட்சிகளாக சிதறப் போகிறார்களா?அதுவும் இப்படிப்பட்ட உடைவுகள் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றன?

அரசாங்கம் தமிழ்ப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு காலகட்டம் இது. அதே சமயம் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒரு திருப்பகரமான வெற்றியைப் பெற்றிருக்கும் காலகட்டமும் இது பேச்சுவார்த்தைக் காலங்களில் பேரத்தைக் குறையவிடக்கூடாது.பேரம் குறையக்கூடாது என்றால், தமிழ்மக்களைப் பொறுத்தவரை, தேசத் திரட்சியைப் பலப்படுத்த வேண்டும்.ஆனால் எந்த ஒரு தமிழ்க் கட்சியிடமும் அந்தத் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நீதிக்கான போராட்டத்தில் மேலும் ஒரு வெற்றியை பெற்றிருக்கும் அதே காலப்பகுதியில் தாயகத்தில் உள்ள கட்சிகளோ தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதற்குப் பதிலாக கட்சிகளாக,வாக்காளர்களாகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, 13 January 2023

திரைப்படப் பாடல்களில் தென்படும் இலக்கியச் சாயல்கள்.

 

திரைப்படப் பாடல்களில் தென்படும் இலக்கியச் சாயல்கள். http://tamilagam52.blogspot.com/2019/12/blog-post_16.html

திரையிசைப் பாடல்களில் சில இலக்கியக் கூறுகள்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களில் எனக்குத்
தென்பட்ட சில இலக்கியக் கூறுகளை எடுத்தியம்ப விழைகிறேன்.
இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையன்று. மேலும் கவிஞரின் அனைத்துத்
திரைப் பாடல்களையும் நான் படித்திலேன். நான் படித்த மற்றும்
கேட்டு இரசித்த சிற்சில பாடல்களில் எனக்குத் தென்பட்ட இலக்கியத்
தன்மைகளைத் தெரிவித்துள்ளேன்.

தொன்மைமிகு தமிழ்மொழி  மிகப் பெரிய அளவில் இலக்கிய வளம்
படைத்தது. எத்தனையோ புலவர்கள் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
அவ்வப்பொழுது தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளனர். எத்தனையோ
விதமான கற்பனைகள், உவமை, உருவகம் ,சொல்லணி,  பொருளணி
நயங்களைக் கையாண்டு இலக்கியம் படைத்துள்ளனர். இவர்களுக்குப் பின்
வரும் அடுத்த தலைமுறையினர் இலக்கியம் படைக்கும் போது முன் தலை
முறையினர் கையாண்ட வழிமுறைகளை ஆங்காங்கே எடுத்தாள்வது மிக
இயல்பானதே. இதைத் தவிர்க்கவே இயலாது. எடுத்துக் காட்டாகக்  கம்பர் தம்
இராமாயணத்தில்  தமக்கு முன்பிருந்த சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்
தக்கதேவரின் கற்பனை, சொல்லாடல்கள், உவமை உருவக நயங்கள் முத
லியவைகளில் சிலவற்றை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். இதைப் போல
வே கம்பருக்குப் பின்வந்த இலக்கியவாதிகள் கம்பரின் வழிமுறைகளை
எடுத்தாண்டுள்ளனர். இதைப் போலவே கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப்
பாடல்களிலும் முந்திய தலைமுறைப் புலவர்களின் கற்பனைநயம், சொல்நயம்
முதலானவை ஆங்காங்கே தென்படுகின்றன. ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.

தனிப்பாடல் திரட்டு நூலில் இடைக்காலப் புலவர் ஒருவர் பாடிய பாடல் தென்படுகிறது:
"மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின இன்னம்என்மகள் கண்ணுறங்கிலள்" என்னும்
வரிகளையும், தாயுமானவர் பாடிய
"மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே" என்னும்
வரிகளும், கம்பர் இயற்றிய
"நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்"
பாடலில் பயின்று வரும் வரிகளும் கவிஞர் கண்ணதாசனின்
"காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது"
என்னும் பாடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது நன்கு
தெரிகின்றது.(படம்: மாலையிட்ட மங்கை).

மற்றொரு எடுத்துக்காட்டாகக் கம்பர் இயற்றிய கீழ்க்கண்ட
பாடலைப் பார்ப்போம்:
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேநின்
கைவண்ணம்  அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன் ".
விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறியவை: "தாடகைக்கு எதி
ரான போரில் இராமா! உன் கைவண்ணத்தைக் கண்டேன். தற்பொழுது
உன் பாதம் பட்டவுடன் கல்லாக உருமாறியிருந்த அகலிகை மீண்டும்
பெண்ணுருவம் அடைந்ததன் வாயிலாக உன் கால்வண்ணத்தைக்
கண்டேன்" என்றார். இப்பாடலில் 'வண்ணம்' என்ற சொல் எட்டுமுறை
பயின்றுவந்துள்ளது. இந்தப் பாடலின் சாயல் கண்ணதாசனின் பாசம்
என்ற திரைப் படத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டில் தென்படுகிறது:
"பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன் " எனக் கதாநாயகன்
பாடக் கதாநாயகி பதிலிறுக்கும் விதமாகக் கீழ்க்கண்டவாறு
பாடுகிறாள்.
"கண்வண்ணம் அங்கே கண்டேன்; கைவண்ணம் இங்கே கண்டேன்;
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்". இந்தப் பாடலில்
இன்னும் பல வரிகள் உள்ளன. மொத்தமாகப் பன்னிரண்டு முறை
வண்ணம் என்ற சொல் பயின்றுவந்துள்ளது.

இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப் போனான்--பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து".
தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.
பெண் ஒருத்தியின் கூற்று:
மாத்தத்தன் சோழநாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசன்.
அவன் தன் பகுதியிலுள்ள தெருக்களில் உலா வரும்போது
அவன் சிறப்பையறிந்த மக்கள் அவனை வாழ்த்தி வரவேற்
கின்றனர். அக் கூட்டத்திலேயுள்ள கன்னிப் பெண்கள் அவன்
பால் மனத்தைப் பறிகொடுத்துக்  கைவளையல்களை நெகிழ
விட்டனர். இது மன்னர்களையும் சிற்றரசர்களையும் அகப்
பொருள் துறையில் புகழ்ந்து பாடுவதற்காக உலா என்னும்
சிற்றிலக்கியம் படைக்கப் புலவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை.
வழக்கம் போலக் கம்பனைப் பெரிதும் பின்பற்றும் கவிஞர்
கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
"சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு"
என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு
இயற்றியுள்ளார்.

இனி, அனைவரும் நன்கு அறிந்த பட்டினத்தார் பாடல்:
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத் தழும்மைந் தரும்சுடு காடுமட்டே;
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே".
இந்தப் பாடலின் சாயல் பாத காணிக்கை என்னும்
படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
"வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?"
என்ற திரைப் பாடலில் தென்படுகின்றது.

புறநானூற்றையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை.
"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே".
பாரிமகளிர் பாடிய இப்பாட்டில் "கடந்த திங்களில்
வெண்ணிலவு காய்ந்த பொழுது எம் தந்தை எம்
முடன் இருந்தார். எங்கள் குன்றும்(பறம்பு மலை)
எம்வசம் இருந்தது. இந்த மாதத்தில் வெண்ணிலவு
காயும் பொழுது எம் தந்தை எம்முடன் இலர்(மூவேந்
தர்களால் கொல்லப்பட்டார்). எம் குன்றும் எம்வசம்
இல்லை(எம் குன்றைக் கைப்பற்றிக் கொண்டனர்).
இப் பாடலிலுள்ள வரிகளின் சாயல் நாடோடி படத்தில்
கவிஞர் இயற்றிய
"அன்றொருநாள் அதே நிலவில் அவர்இருந்தார் என்
அருகே; நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை;
நீ அறிவாயே வெண்ணிலவே" என்றதிரையிசைப்
பாடலில்  தென்படுகின்றது.

இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல்
மிகப் புகழ்பெற்றது:
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான்  கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான்  ஐயோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான்  பண்ணி  னானே."
இந்தப் பாடலால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன்
பாவமன்னிப்பு என்ற படத்தில் " அத்தான், என்னத்தான்,
அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி" என்ற
திரைப்படப் பாடலை இயற்றினார்.

இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல்
எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".(குறள்:1094). இப்பாடலின்
கருத்தை வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்
அவர் இயற்றிய "நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
உன்னைநான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே;
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே."
என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப்
பட்டிருக்கும்.

இன்னும் ஆராய்ந்தால் பாடல்கள் கிடைக்கும். ஏன்
என்றால் நம் இலக்கியம் மிக  மிகச் செழுமையானது.
திரையிசைப் பாடல்  இயற்றும் கவிஞர்கள் அனைவருமே
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். கவிஞர் கண்ண
தாசன் தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்தவர்.. அதிலும்
குறிப்பாகக் கம்பர் மீது மிகுந்த  ஈடுபாடுடையவர். எனவே
திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள்தென்
படுவதில் வியப்பேதும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு
மேலான இலக்கியத் தொன்மை கொண்ட நம் மொழியில் கூறப்
படாத கருத்தோ கற்பனையோ இல்லை. அதனால் எவர் கவிதை
படைத்தாலும் முந்திய இலக்கியக் கூறுபாடுகள் தென்படுவதில்
தவறேதும் இல்லை. எந்தக் கவிஞரையும் குறை சொல்லவே
இயலாது.

பார்த்தேன்

 https://news7tamil.live/a-collection-of-film-songs-with-literary-style.html

காதலால் கட்டுண்ட இருவரில், காதலி தன்னை பார்க்காமல் செல்வதால் மன நோய் உண்டாவதாக கூறும் காதலன். மறுகணம் அவள் தன்னை பார்த்ததால், தனது நோய் போய்விட்டது என கூறுகிறான். இந்த உணர்வை, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு, நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்கிறார் திருவள்ளுவர்.

மையூட்டப்பட்ட அந்தப்பெண்ணின் கண்களுக்கு இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது என விளக்கம் தருகிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. திருவள்ளுவர் கூறிய அந்த வரிகளை ஒற்றை வரியில் தருகிறார் கவியரசர் கண்ணதாசன்.

18 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அபிராமி அந்தாதியில், “குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து மறித்தேன்” அன அன்னை அபிராமியை போற்றுகிறார் அபிராமி பட்டர். இந்த கருத்தை உள்வாங்கிய கவியரசு கண்ணதாசன், வீர அபிமன்யு திரைப்படத்தில், ”பார்த்தேன், சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன், அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்” என 87 இடங்களில் தேன் என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் பாடலை அமைத்தார். தேன் சிந்தும் கவிதைக்கு ஏற்ற ராகத்தைத் தேர்ந்தெடுத்து, மெல்லிய வீணையின் இசையில், இனிக்கும் இசையை தந்திருப்பார் கே.வி. மகாதேவன்.

மாதா உடல் சலித்தாள்

 

https://www.thagaval360d.com/kannadasan-and-literature/

காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த கண்ணதாசன் அவர்கள். சிலம்புக்கும் மணிமேகலைக்கும் அடுத்து மாறுபட்ட மதங்களைப் போற்றி இலக்கியம் செய்த புண்ணிய மனிதன் அவர்.

ஆடவந்த தெய்வம் படத்திலே செந்தமிழ்த் தேன் மொழியாள் என்ற பாடலுக்கு எழுதிய சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே என்னை நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே என்ற பல்லவி பலராலும் புகழப் பட்டபோது அது என்னுடையது அல்ல. கிராமியப் பாடல் ஒன்றிலிருந்து இருந்து எடுத்தேன் என்று வெளிப்படையாக பேசிய மனிதர் அவர்.

 

அவர் தான் கற்ற இலக்கியங்களில் இருந்து எத்தனையோ செய்யுடகளை எடுத்து தமிழ்ச் சினிமாப் பாடல்களுடன் கலந்து நல்ல பல பாடல்களைத் தந்தார்! அத்தனையுமே இன்றும் இலக்கிய மணம் வீசி நிற்கின்றன!

நன்னெறி என்ற நீதி நூலிலே சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு கருத்தைச் சொன்னார். பலவீனமானவர்கள் தாங்கள் பலமானவர்களோடு கூடி நிற்கும் வசதி கிடைத்தால் எந்தப் பலசாலியான பகைவருக்கும் பயப்பட மாட்டார்கள்! இதற்குச் சிவப்பிரகாசர் ஒரு உதாரணமும் காட்டினார். பொதுவாக பாம்புகள் கருடனுக்குப் பயப்படும். ஆனால் சிவபெருமானின் சடாமுடியிலே இருக்கின்ற பாம்பானது  சிவபெருமான் கூட இருக்கும் தைரியத்தில் பறவைகளுக்கு அரசனான கருடனைப் பார்த்துப் ஒரு போதும் பயப்பட மாட்டாது என்றார் அவர்.

மெலியோர் வலிய வரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தாம் மருவில் – பலிஏர்
கடவுள் அவிசடைமேல் கட்செவி அஞ்சாதே
படர்நிறைப் புள்அரசைப் பார்த்து!

(கட்செவி – பாம்பு  புள் அரசு – கருடன்)

சூரிய காந்தி என்ற படத்துக்கு பாடல் இயற்றும் போது கண்ணதாசன் நன்னெறியில் காணப்படும் இந்தச் செய்யுளைக் கையில் எடுத்தார். பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது! என்று எழுதினார் கண்ணதாசன். இப்பாடல் இன்று கேட்டாலும் மன உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தன்மையுடன் விளங்குவது மட்டுமல்ல சிவப்பிரகாசரின் நன்னெறியைத் தெரியாதவர்கள் மனத்தில் கூட கண்ணதாசன் பாடலாக அந்தக் கருத்து இடம் பிடித்துக் கொண்டது!

அது போல நளவெண்பாவிலே புகழேந்திப் புலவர் அருமையானதொரு இலக்கியக் காட்சியைக் காட்டுவார். அழகான பெண்ணொருத்தி குளத்திலே மலர் பறித்துக் கொண்டிருந்தாள். பூவிலே இருந்த வண்டு ஒன்று அவள் முகத்தைப் பார்த்து அந்த முகமும் ஒரு தாமரை மலர் என்று நினைத்து முகத்தில் அமரப் போனது. உடனே தன் கையை எடுத்து அந்த வண்டைத் தடுத்தாள் அந்தப் பெண். தன்னைத் தடுத்த கையைப் பார்த்த வண்டு அந்தக் கையும் நீரிலே பூத்திருக்கும் காந்தள் மலர்தான் என்று நினைத்து அந்தக் கையிலே பாய்ந்து இருந்து விட்டது. உடனே அந்தப் பெண் பயத்தினால் நடுங்கி வியர்த்து விட்டாள் என்று அந்தக் காட்சி வரும்.

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கையம் என்று எண்ணிப் படிவண்டை – செங்கையால்
காத்தாள் அக் கைமலரை காந்தள் என பாய்தலுமே
வேர்த்தாளை காண் என்றான் வேந்து!

இந்தக் காட்சியை வல்லவனுக்கு வல்லவன் படத்துக்கு பாட்டு எழுதும் போது அங்கே  கொண்டு வருகின்றார் கண்ணதாசன்! நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் என்று தொடங்கியவர் பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!

என்று எழுதினார். உண்மையிலே செய்தி ஒன்றாக இருப்பினும் புகழேந்தியார் காட்சியில் கண்ணதான்  சிறு மாற்றம் செய்து விட்டார். புகழேந்தியார் கருத்தை அப்படியே சிதைக்காமல் பாடலாக்கும் அறிவும் திறமையும் உடையவர் கண்ணதாசன். அப்படியிருந்தும் முழுமையாக இலக்கியச் செய்திகளை பாடல்களில் கொண்டுவர அவரால் முடியவில்லை!

காரணம் மிகவும் வெளிப்படையானது. இசை அமைப்பாளர் தரும் மெட்டுக்குப் பல பாடல்களை இயற்ற வேண்டிய கட்டாயம் அந்தப் பிறவிக் கவிஞனுக்கு இருந்தது. திரைத் துறையில் வர்த்தக ரீதியாக நிலைக்க அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அந்தக் கவிஞனுக்கு இருந்தது.

எனவே கிடைத்த மெட்டுக்களோடு தன்னால் முடிந்த அளவுக்கு இலக்கிய நயங்களைத் தொட்டுக் காட்டிக் கொண்டு போனார் கண்ணதாசன். அவர் தொட்டுக் காட்டிய இலக்கியச் செய்திகள் தமிழ்ச் சினிமாப் பாடல்களில் பலநூற்றுக் கணக்கானவை என்பது பலருக்குத் தெரியாது.

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் வாரணங்கள் கண்டாய் என்ற கவிதை வரிகளில் இருந்து தோன்றியதே கண்ணதாசனின் நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு என்ற திருவிiளையாடல் படப் பாடல் வரிகள் ஆகும்!

கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே! என்றார் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்! கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ என்றார் மன்னாதி மன்னனில் கண்ணதாசன்!

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்! ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்! என்றார் குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடக் கவிராயர்! ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அலையக் காண்பது கன்னியர் உள்ளம் என்றார் கண்ணதாசன்!

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன் என்றார் பட்டினத்தார். பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் என்றார் கவிஞர்! பத்தும் பசி வந்திடப் பறந்து போம் என்றாள் ஒளவை! பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் என்றார் கவிஞர். கொடிது கொடிது வறுமை கொடிது! அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்றாள் ஒளவை! இளமையில் கொடுமையிந்த வறுமையம்மா என்றார் கண்ணதாசன். இதையெல்லாம் சரஸ்வதி சபதம் படத்தில் வரும் தாய் தந்த பிச்சையிலே பிறதேனம்மா என்ற ஒரே பாடலில் காணலாம்.

அது போல கலிங்கத்துப் பரணி குறுந்தொகை நாலடியார் சித்தர் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கம்பராமாயணம் திருக்குறள் முத்தொள்ளாயிரம் என்று எத்தனையோ தமிழ் இலக்கிங்களின் தாக்கத்தினைக் கண்ணதாசன் பாடல்களில் நாம் காண முடியும்!

Tuesday, 10 January 2023

யூதர்கள் சில விசித்திரமான வழக்கங்கள்

 யூதர்கள் சில விசித்திரமான வழக்கங்கள் இருக்கின்றன.

உதாரணமாக கடவுளின் சந்நிதியில், “ஐயோ, நான் ஒன்றுமில்லாத குப்பை" என்று சொல்லிக்கொண்டு மாரில் அடித்துக் கொள்வார்கள்.
அகங்காரம் வரக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்று அவர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
இப்படித்தான் ஒரு நாள் யூதர்களின் மதகுருவும் ஆலய அதிகாரி ஒருவரும் யூதர்களின் ஆலயம் ஒன்றில் அமர்ந்து "நான் குப்பை" நான் குப்பை” என்று கத்தியபடி மார்பில் அடித்துக் கொண்டிருந்தார்கள். "
அப்போது அந்த ஆலயத்தின் காவலாளி அவர்களைப் பார்த்தான். அவனும் வந்து அவர்கள் அருகே அமர்ந்து 'நான் குப்பை' என்று சொல்லியபடி தனது மார்பில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தான்.
இப்போது அந்த ஆலய அதிகாரி ஓரக்கண்ணால் மதகுருவைப் பார்த்தார்.
"காலம் கெட்டுவிட்டது, குருவே. அங்கே பாருங்கள் நமது கோயில் காவல்காரன் நம்மைப் போல் 'நான் குப்பை' என்று சொல்லி மார்பில் அடித்துக் கொண்டிருக்கிறான். யார் எதைச் செய்வது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்?'
கேவலம், ஒரு காவல்காரன், இறைவன் சந்நிதியில் 'நான் குப்பை' என்று சொல்லுவதா? 'நான் குப்பை' என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு குறைந்த பட்சத் தகுதி வேண்டாம்?
இப்போது புரிகிறதா இவர்களின் அகந்தையும்,முட்டாள்தனமும்?
உண்மையை உணராத உங்கள் நம்பிக்கைகள், மத பழக்கவழக்கங்கள் உங்களை மேலும் பந்தப்படுத்தும். அவை உங்கள் விடுதலைப் பாதையின் பெரிய தடைக்கற்களாகவே இருக்கும். அந்த நம்பிக்கைகள் புதிய அடிமை விலங்குகளை உருவாக்கும்.
அந்த அடிமை விலங்குகள் பார்க்க அழகாக, பளபளப்பாக இருக்கலாம். என்றாலும் அவை அடிமை விலங்குகள் தான். பொன்னால் செய்த விலங்கு என்றாலும், அது நம்மைக் கட்டுப்படுத்தத்தானே செய்கிறது?
அப்போது தான் திருமணமாகியிருந்தது அந்த கிராமத்துப் பெண்ணுக்கு. 'தாம்பத்தியத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அப்பாவியாக வளர்ந்து விட்டிருந்தாள் அந்த பெண்.
அவளுடைய தாய் அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்கே சேவல் ஒன்று பெட்டைக் கோழியைப் புணர்வதைக் காட்டினாள்.
இன்று உனக்கு முதலிரவு. ஏறக்குறைய இதைப்போல ஏதோ நடக்கும் எதற்கும் தயாராக இரு." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் தாய்.
அன்று இரவு அவளுடைய கணவன் ஆசையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தான். அவள் இருந்த கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல் படுக்கையில் இருந்தாள் புது மணப்பெண். ஆனால் அவளது தலையில் ஓர் இரும்புச் சட்டியை கட்டிக் கொண்டிருந்தாள்.
பயந்தபடியே கேட்டான் கணவன்.ஏன் இந்தக் கோலம்..."
"இங்கே பாருங்கள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தலையில் கொத்தும் வேலை மட்டும் வேண்டாம். ஆமாம் சொல்லி விட்டேன்.”
தானாகப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவரிடம் கடன் வாங்கும் அறிவு அது போன்ற ஒரு நிலையைத்தான் உங்களுக்குக் கொடுக்கும்.
நீங்கள் ஏசுநாதர் சொன்னதைக் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லலாம். இல்லை,
கிருஷ்ணர் சொன்ன கீதை சுலோகங்களை மனப்பாடமாக ஒப்புவிக்கலாம்.
இல்லை மோசஸ், லா ட்சூ சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவை உங்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.
ஞானம் பெற்ற மகான்களின் வாழ்க்கை உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் வழியில் நடக்கவைக்கலாம். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் சொன்னதையே சொல்வதால் உங்களுக்கு எந்த பயனும் உண்டாகாது.
உங்களுக்குள்ளே ஒரு பெரிய பொக்கிஷம் இருக்கிறது. இந்த உலகத்தையெல்லாம் பிரகாசமாக வைக்கக்கூடிய ஓர் ஒளிஇருக்கிறது.
ஆனால் நீங்கள் கடன் வாங்கிய அறிவைக் கட்டிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதை விட்டொழித்து விட்டு உங்களுடைய மையத்துக்குச் செல்லுங்கள். அங்கே கொட்டிக் கிடக்கும் பொக்கிஷத்தின் உரிமையைக் கோருங்கள்.
நீங்கள் உங்கள் பணம், வீடு, கார் முதலியவற்றைத் துறக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவற்றால் எந்த பிரச்சினையும் இல்லை.
உங்கள் மனதை, துறங்கள். அங்கேதான் பிரச்சினையே இருக்கிறது. உங்கள் அறிவு தான் உங்கள் பாதையில் இருக்கும் மிகப் பெரிய தடைக்கல். உங்களை உங்கள் மையத்துக்குப் போகவிடாமல் தடுப்பது உங்கள் மனம்தான்.
வார்த்தைகள், சாஸ்திரங்கள், புனிதநூல்கள், நம்பிக்கைகள், அறிவு இவை எல்லாம் உங்களைக் கட்டிப் போட்டிருக்கும் விலங்குகள்.
தானாக உணராமல், கடன் வாங்கிய விலங்குகளை உடைத்து வீசுங்கள். உங்கள் உள்ளே செல்லுங்கள்.
புத்தர் தன்னுடைய மையத்தை தேடி அடைந்தார். உங்களுடையதை அல்ல.
நீங்களும் உங்கள் மையத்தை தேடி அடையவேண்டும்.புத்தருடையதை அல்ல.
__ஓஷோ.
1 நபர் மற்றும் வானம் இன் படமாக இருக்கக்கூடும்
289
21 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
அனுப்பு

21 கருத்துகள்

முதன்மை கருத்துகள்

  • Muthu Pandian
    1)மையம் கண்டறியமுடியாமல் மக்கள் தவிக்க, எப்படி புரியும்?. 2) நம்பிக்கை எப்படி கடிப்போடும், அவை தான் மை யித்திருக்கு செல்ல உதவும் கடத்தி. 3) புத்தர், கிருஷ்ணா சொ