Tuesday 9 July 2019

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.. ஆண்டவர் எனக்கு தந்த தாலந்தை விலை பேச மாட்டேன்.. என்று ஒவ்வொருவரும் ஒழுங்காக ஊனமின்றி நடந்து செல்ல அவர் கண்டுபிடித்த போலியோ சொட்டும் மருந்தும் ஒரு காரணம் . Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த யூதர்...!! சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு கடவுள் தந்த தாலந்தை விலைபேச மாட்டேன் என்று Pattern Right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, ஆண்டவர் படைத்த சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!

No comments:

Post a Comment