Monday 8 July 2019

புருவம் உயர்த்தி நான் பார்த்த மனிதன்!

புருவம் உயர்த்தி நான் பார்த்த மனிதன்!  பேசாலைதாஸ்
                       நான் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், விமான சர க்குகளை X Ray கருவி மூலமாக பரி சோதிக்கும் வேலைக்காக Heathrow Gargo Terminale இணைத்துக் கொள்ள ப்பட்டேன், அந்த ஆண்டுதான் சீனாவில் இருந்து, தக்காளிப்பழ பெட்டிகளுக்குள் ஒழிந்திருந்து இங்கிலாந்து நாட்டுக்குள் உள்ளே நுழைந்த இளைஞர் சிலர், சடலாம இறக்கப்பட்டனர். அதனை நேரடியாக பார்த்த நான் அதிர்ந்துபோனேன். 
                                                                                 அதேபோல 1996 ஐப்பசி மாதம் இரு சகோதர்கள் இந்தியாவில் இருந்து திருட்டுத்தனமாக ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தனர்.. 22 வயதான பர்தீப் சைனி மற்றும் அவரது சகோதரர் 19 வயதான விஜய் ஆகிய இருவருமே, போயிங் 747 ரக ராட்சத விமானத்தில் திருட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள். 40,000 அடி உயரத்தில், -60C வெப்பநிலையில் சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட அரிதான அந்த குட்டி அறையில் இந்த இரு இளைஞர்களும் சாகச பயணம் மேற் கொண்டனர்.இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனின் ஹீத்ரோ வரையான இந்த 11 மணி நேர சாகச பயணத்தில் பர்தீப் வெற்றி கண்டாலும் அவரது சகோதரர் விஜய் மரணமடைந்தார்.

                                                விமானம் தரையிறங்கி சில மணி நேரங்களில் ஓடு
தளத்தில் காலூன்றிய பர்தீப் குழப் பத்தில் இருந்துள்ளார். அவரை மீட்ட அங்குள்ள ஊழியர்கள் உடன டியாக மருத்துவமனைக்கு அனு ப்பிவைத்துள்ளனர்.தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங் கேயே தமது சகோதரர் விஜய் இற ந்த தகவலை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.அந்த கொடூரமான நிலையில் விஜய் தாக்குப்பிடிக்க முடியா மல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

                                                              விமானம் தரையிறங்க சக்கரங்களுக்கான பெட்டி திறக்கும்போது, தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருந்து விஜயின் சடலம் விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் 5 நாட்கள் கடந்த பின்னரே ரிச்மண்ட், சர்ரே பகுதியில் இருந்து விஜய்யின் சடலத்தை மீட்டுள்ளனர். பர்தீப் கூட விமானம் புறப்பட்டு சில நிமிடங் களில் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார். தற்போது வெம்ப்லி, வடக்கு லண்டன் பகுதியில் குடியிருக்கும் பர்தீப் சைனி நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னரே பிரித்தானியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.மட்டுமின்றி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பர்தீப் சைனி, அவர் திருட்டுத்தனமாக நுழைந்த அதே ஹீத்ரோ விமான நிலையத்திலேயே சாரதியாக பணியாற்றி வருகிறார்

                                                  நான் அடிக்கடி லண்டன் செல்லும்போதெல்லாம அவரைப்பற்றி எனது சக விமான நிலைய பணியாளர்களிடம் விசாரி ப்பதுண்டு, சில நேரங்களில் சில மனிதர்கள் தம் வாழ்வின் வச‌ந்தங் களுக்காக, இறைப்பையே சாகசமாக சந்திப்பதும் உண்டு என நினைத்து என் புறுவங்கள் சற்றே நிமிர்ந்தன! ன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment