Saturday, 9 February 2019

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

                                                                        மன்னார் நலன்புரிச்சங்கத்தின் அவசர கலந்துறையாடல் 2019 மாசி 9 திகதி மாலை 06.00 மணியளவில், Shultun மியுஸியத்தில் செயலாளரினால் கூட்டப்பட்டது, அண்மைக்காலமாக மன்னார் நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், நிர்வாகிகள்  செயல்திறன் அற்று செயல்படுவது குறித்து ஆராய்வதற்காக கூட்டப்படது, ஆரம் பத்தில் சிறிய செபத்துடன் ஆரம்பமான இக்கலந்துறையாடலில், கடந்த வாரம் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டியில், உணவகம் நடத்துவ தில் பாரிய சிக்கல் ஏன் உருவானது என சபையில் அதிருப்திகள் தெரிவி க்கப்பட்டது, 

                                                 அதற்கான பின்னடைவுக்கு குணா தானே காரனம் என்பதை ஒத்துக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார், பின்னர் பொருளா ளர் வங்கி கணக்கை ஆய்வு செய்து,  பணவரவு ஏதாவது வந்ததா? அமல்ராஜ் கேள்வி கேட்டு, பொருளாள்ர் தன் கடமையில் இருந்து தவறுகி ன்றார் என சுட்டிக்காடினார், சென்ற விளையாடு போடியில் நடத்தப்பட்ட உணவகத்தில் இருந்து, 1000 குரோணர் கிடைக்கப்படது எனவும், விளை யாட்டு போட்டியில் வென்ற பரிசு தொகை 500 குரோணரும்  மன்னார் நலன்புரிக்கு கொடுக்கப்பட்டது என அவர் கூறினார்.எதிர்காலத்தில் கணக்கில் அதிக சிரத்தை எடுக்கும் படி, கண்டிப்பாக எடுத்து கூறப்ப ட்டது. 

                                                  ஏன் செயலாளர் அறிக்கை கொண்டுவரவில்லை என அமல்ராஜ் காரசாரமாக கேள்வி, எழுப்பினார், அத்ற்கு செயலாளர் இது கூட்டம் அல்ல எனவும், நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைபற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு அவசர கலந்துறையாடல் என செயலாளரினல் விளக்கம் அளிக்கப்பட்டது, தொடர்ந்து நாம் இயங்கு வதா இல்லையா என இன்று முடிவு எடுக்கவேண்டும் என அமல்ராஜ் வாதிட்டபொழுது மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுவோம் 

                                                                    பொருளாளர், செயலாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புடையவர்கள் என்றாலும், நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொறுப்புகளை பகிர்ந்து செய்வதி னால், திறம்பட இயங்கமுடியும் என வும் எல்லோரும் எல்லாத்திற்கும் பொறுப்புடையவர்கள் என்ற கூட்டு பொறுப்பு தத்துவத்துடன் செயல்படுவோம் என ஜெயந்தன் சிறந்த கரு த்தை முன்வைத்தார், 

                                                       அது ஏற்றுக்கொள்லப்பட்டது, விரைவில் பொது கூட்டம்  எதிர்வரும் 27 திகதி ஏப்ரல் நடத்துவது எனவும், அதில், பதவிகள், பொறுப்புகள் பற்றி விவாதிக்கவேண்டும் எனவும், ஆவணி 24 திகதி அல்லது 31 திகதி ஒன்று கூடல் நடத்துவது பறிய முடிவுகள் எடுக்கபடவே ண்டும் என தெரிவிக்கப்பட்டது,  Whatsup குழு ஒன்று உருவாக்கி அதன் மூலம் தொடர்புகளை விரவு படுத்தவேண்டும் என்ற அறிவுரை செயலா ளருக்கு வழங்கப்பட்டது! 

                                         மன்னாரில் எமது அமைப்பின் வழியாக பயணைந்த பயணாளிகளிடம் இருந்து, ஒத்துழைப்பு கோரவேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படது, அது தொடர்பாக மன்னாருக்கு உடனடியாக அழைப்பு விடுவிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது! கடந்தவருடம் நானாட்டான் பாடசாலை கட்டிடத்துக்கு தனிப்பட்ட ரீதியில் பணம் சேகரித்து கொடுக் கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது அதனை அதனை அனுப்பிவை க்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் கலந்துறையாடல் இனிதே கலைந்தது 

Friday, 8 February 2019

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே!

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே! பேசாலைதாஸ்

வாழ்வில் சலித்துக்கொண்டவர்கள் நிறையப்பேரை நான் பார்த்திருக்கின்றேன், என்னடா வாழ்க்கை என்று நானும் கூட சலித்துக்கொண்டதுண்டு, இந்த சலிப்புத்தன்மை ஏற்படுவதற்கு அடிப்படைக்காரனம், நமது எண்ணத்தில் உண்டாகும் அதிருப்தி அற்றதன்மை தான். எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக மாறுகின்றபோது, வாழ்வில் சலிப்பு தன்மை ஏற்படுகின்றது,  கிடைக்கின்ற வாழ்வில் நிறைவுகண்டு, திருப்தியுடன் வாழப்பழகிவிட்டால், எந்தவித சலிப்புத்தன்மையும் வாழ்வில் ஏற்படாது, ஒரு காட்டில், காட்டு லீலிப்புஸ்பங்கள் அழகாக மலர்ந்தது, காடு முழுவதும் நறுமணமாய் கமழ்ந்தது,  இந்த காட்டு லீலிப்புஸ்பங்களுடன், காகம் ஒன்று, தவறான எண்ணங்களையும், சிந்தனைகளையும் விதைத்தது, காகம் அந்த அழகான காட்டு லீல்லிகளுக்கு சொன்னது, நீங்கள் எவ்வளவு அழகாக பூத்துக்குழுங்கி, நறுமணம் வீசுகின்றீர்கள், இருந்தும் அதனால் என்ன பயன்? வெறும் காட்டுக்குள்ளேயே உங்கள் அழகும், வாசமும் வீணாகிப்போகின்றது, காட்டில் பூத்து குழுங்குவதைவிட, இளவரசியின் தோட்டத்தில் நீங்கள் இருந்தால், உங்களின் செல்வாக்கும், மகிமையும் நாடே போற்றும் என்று சொன்னது அந்த காகம்,  அதுவரையும், மனதில் மகிழ்ச்சியோடு மலர்ந்த லீலி மலர்கள், மனம் வாடத்தோடங்கியது, சீக்கிரமாக மலர் வதனம் கெட்டு, கருகி, வெறும் குப்பை மேடாகிவிட்டது,  கொஞ்ச நாட்களித்து, அதே காகம் அந்த லீலி மலர்களிடம் கேட்டது,  உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் கருகி குப்பைமேடாகிவிட்டீர்கள் என்று கேட்டது, அதற்கு அந்த மலர்கள், சலிப்போடு சொன்னது, காட்டில் மலர்ந்து என்ன பயன்? அரசியின் அந்தப்புரத்தில் மலர்ந்தாளவு, மாட்சிமையோடும், மன மகிழ்வாய் வாழ்ந்து மலர்ந்திருக்கலாம், எல்லாம் விதிப்பயன் என சலிப்போடு சொன்ன மலர்கள், காகத்திடம் ஒரு உதவிகேட்டது, எங்கள் வாழ்வுமலர, மகிழ்சியாக வாழ, எங்களை உன் அலகினால் காவிக்கொண்டு, அரண்மனையின் அந்தபுரத்துக்கொள் போட்டுவிடு, நாங்கள் எப்படியோ பிழத்துக்கொள்வோம் என மன்றாட்டமாக கேட்டது, காகமும் அதற்கு ஒத்துக்கொண்டு, தன் அலகினால் அவைகள கொத்திக்கொண்டு, நீண்டதூரம், மலைகளை, கற்பாறைகளை கடந்து உயரப்பறந்தது. திடீரென்று காற்று உரமாக வீசவே, அதைசமாளிக்க முடியாத காகம், தன் அலகில், கொத்தியிருந்த, அந்த லீலிகிழங்குகளைகீழே வீசி எறிந்தது.அந்தோ பாவம்,அந்த லீலிக்கிழங்கள் ஒரு பாறையின் மீது விழுந்து நொருங்கியது! லீலிமலர்களின் நினைப்பே அதன் பிழைப்பைக்கெடுத்து, அன்பின் பேசாலைதாஸ்øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Thursday, 7 February 2019

யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு


யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு
கட்டுரை: பாலசிங்கம் பிரான்சிஸ்
1943 இல் யாழப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் (லீக்) ஆரம்பிக்ப்பட்ட காலம் தொட்டு இன்று வரை உதைபந்தாட்டத்தில் பங்கு கொள்ளும் கழகங்களில் இரண்டு கழகங்களே உள்ளன. அதல் ஒன்று நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம். மற்றொண்டு பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகமாகும். இக்கழகத்தில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தில் எனக்கு தெரிந்த காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கிய மதிப்புக்குரிய திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதுவதில் பெருமை கொள்ளுகின்றேன்.
எனக்கு உதைபந்தாட்ட அறிவு தெரிய வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த கழகங்களாக நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம், நாவாந்துறை சென் மேரிஸ் உதைபந்தாட்ட கழகம், பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகம மற்றும் குருநகர் பாடும் மீன் விளையாட்டு கழகம் ஆகியன சிறந்த கழகங்களாக விளங்கியமையை யாவரும் அறிவார்கள். இதில் திரு ஜெயரெட்ணம் அவர்கள் சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகத்தில் மிகச்சிறந்த வீரராக திகழ்தமையை நான் கண்டும், கேட்டும் மகிழ்ந்துள்ளேன். அவ்வேளையில் என் வயதும், அதற்கு குறைந்த வயதுடைய இளைஞர்களும் உதைபந்தாட்டத்தில் ஆவல் கொள்வதற்கு திரு. ஜெயரெட்ணம் அவர்களின் விளையாட்டு வடிவமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
திரு. ஜெயரெட்ணம் அவர்கள் மைதானத்துக்குள் விளையாட இறங்கினால் அவர் எந்த நிலையில் (Pழளைளழn) நின்று விளையாடுவார் என்பதனை எதிர்த்தரப்பு வீரர்களால் ஊகிக்க முடியாது, அப்படி அவரின் விளையாட்டு ஆளுமை முழு மைதானத்தையும் ஆக்கிரமித்தாக இருப்பதனை கண்டு வியந்துள்ளேன். அதே போல் திரு.nஜேயரெட்ணம் அவர்களிடம் என்னை கவர்ந்த இன்னுமொரு திறமை என்னவென்றால் அவரின் கால்கள் இரண்டுமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் (டீயடட ஊழவெசழட) வைத்திருக்கும் திறமையும், அந்த கட்டுப்பாட்டோடு எதிரணியின் பின் கழ வீரர்களை லாவகமாக தாண்டி சென்று பந்தை கோல்களாக்கும் அழகும் தான்.
இதே காலப்பகுதியில் யாழ் முஸ்லிம மக்களிடையில் அதி வேகமாக இரண்டு கழகங்கள் தங்களுக்;;குள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று டைகர். வி.கழகம் மற்றொண்று சம்சுங் விளையாட்டு கழகம். இந்த இரண்டு கழகங்களுக்கிடையிலும் யாழ் ஓஸ்மேனியா கல்லுரியின் ஜின்னா மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் டைகர் விளையாட்டு கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த சில வீரர்களும், சம்சுங் வி. கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த திரு. ஜெயரெட்ணம் அவர்களும் விளையாடுவர்கள்.
இதில் டைகர் வி. கழகத்தில் மதிப்புக்குரிய ஜேக்கப் இளம்சிங்கம் அவர்களும் விளையாடினார்.திரு. ஜேக்கப் இளஞ்சிங்கம் அவர்களுக்கும், திரு. ஜெயரெட்ணம் அவர்களுக்கும் கடும் போட்டியும், இரண்டு வீரர்களின் இரசிகர்கள் எழுப்பும் குரலொலி அந்த மைதானத்திலிருந்து அதிக துhரம் கேட்டுக்கொண்டிருப்பதை மறக்கவே முடியாது. பிற்காலத்தில் இந்த இரண்டு கழகங்களும் ஒன்றாக இணைந்து யாழ் முஸ்லிம் உதைபந்தாட்ட கழகமாக மாற்றம் பெற்று மிகச்சிறந்து விளங்கிய மேற் சொல்லப்பட்ட நாலு கழகங்களுக்கும் பெரும் சவாலாக விளங்கியமையை உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களிடம் ஒரு விளையாட்டு வீரனுக்கான பண்புகள் நிறைந்திருந்தமையும், அந்த பண்புகளை அவர் கடைப்பிடித்த தன்மையும் அவரை அதிக இரசிகர்கள் விரும்பியமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆரம்ப உதைபந்தாட்ட விதிமுறைக்கு எல்லா வீரர்களும் பாதணிகள் (டீழழவள) அணியவேண்டிய தேவை இருக்கவில்லை. இந்த சட்டத்தை தனக்கு சாதகமா பயன் படுத்தி திரு. ஜெரெட்ணம் அவர்கள் பாதணிகள் பாவிக்காமல் விளையாடியமை குறிப்பிட தக்கது. அவர் உதைபந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் காலப்பகுதி வந்த வேளையில் முழு வீரர்களும் பாதணிகள் உபயோகப்படுத்த வேண்டுமென்ற கட்டாய சட்டம் ஏற்பட்டபோது பாதணிகளை அணிந்து என்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிருபித்து ஓய்வு பெற்ற வீரர் திரு. ஜெயரெட்ணம் அவர்கள் என்பதனையும் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்ளுகின்றேன்.
மேற்கூறியவைகளையும் கடந்து நான் விளையாடிய காலத்தில் திரு. ஜேக்கப் இளஞ்சிகம் மாமா (நான் மாமா என்றே அழைப்பது வழக்கம்;)
திரு. ஜேயரெட்ணம், இருவரும் என் தந்தையாருடன் சேர்ந்து என்
சிறப்பான விளையாட்டை பாராட்டுவதும், அதே வேளை என் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அவர்களின் விளையாட்டு பண்புகளின் மகுடமாக இன்றும் எண்ணிக்கொள்வேன். இந்த வழிநடத்தல் என் விளையாட்டின் சிறப்புக்கு காரணங்களாக அமைந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டி இன்னுமொரு வீரரின் கட்டுரையுடன் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.
நன்றிகள்.

Oshoவில் ஈடுபாடு எப்படி வந்தது?

Oshoவில் ஈடுபாடு
எப்படி வந்தது?
என் நண்பரின் கேள்வி.
வித்தியாசமான கோணங்களில்,எதிர்பாரத அதிர்வலைகள், மடையென வந்த யதார்த்த சிந்தனைகள் என்னை ஓஷோவுடன் இணைத்தது " என்றேன்.
எப்படி?
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் புரியாமல் மனம் போன போக்கில் திரிந்தவனை, இதுதான் என்று பிடரியில் அடித்து பொறி கலங்க புரிய வைத்தவன் ஓஷோ.
எல்லா துக்கங்களையும் ஜீரணித்து நடைபிணமான என்னை, வாழ்வே ஒரு கொண்டாட்டம் என்று என்னையும் குதியாட்டம் போட வைத்தவன் ஓஷோ.
நான் யார்? என்று தேடியலைந்த என்னை தலையில் தட்டி எல்லாமும் நீ, நீயோ எல்லாம் என்று சிந்தனையை தூண்டியவன்.
Sex, காமம் என்றாலே தகாத வார்த்தைகள் என்றெண்ணி வளர்த்தப்பட்ட என்னன, காமமின்றி ஏது படைப்பு, நீ ஏது, நான் ஏது, ஜீவராசிகள் ஏது என்று காமம் ஒரு புனிதம் என்று என் அறியாமைத் திரையை எரித்தவன் ஓஷோ.
பெண்கள் மீது வருவதே காதல் என்று பிதற்றித் திரிந்த இந்த பித்தனை, காதல் என்பது பிரபஞ்ச தோற்றங்கள் அனைத்திலும்(பாரதி கூற்றுப்படி நிற்பதுவே, நடப்பதுவே) உண்டு என்று என் மனம் விரிந்து விரிந்து பிரபஞ்ச காதலனாக மாற்றியவன் ஓஷோ.
இசையும், உன்னை மறந்து ஆடும் நடனமும் தெய்வீகக் கதவை தட்டும் என்று உணர்த்திய மாயாஜாலக்காரன்.
மரணமும் ஒரு கொண்டாட்டமே என்று மரணத்தையே நேசிக்க வைத்த பித்தன்.
பயத்தை கேள்வி கேள் என்று வித்தியாசமான கோணத்தில் பயத்தை வேரறுத்த ஆன்மீக மருத்துவன்.
புத்தன் என்றால் என்னவென்று ஆராய்ந்து கொண்டிருந்த என்னை,
நீயே புத்தன்தான் என்று ஓங்கி அறைந்தவன் அவன்.
எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதி முழக்கத்தை போல, எல்லாமே தெய்வீகம் தான் இப்பிரபஞ்சத்திலே என்னையே தெய்வமாக உணரச்செய்த ஜாலக்காரன்.
Be at the moment என்று தறிகெட்டு ஓடிய மனமெனும் முரட்டு குதிரையை அடக்கும் வித்தையை கற்று கொடுத்த சித்தன்.
காமம் என்பது வெறும் புணர்ச்சியல்ல, அது தெய்வீகத்தை உணரக்கூடிய அற்புத திறவுகோல் என்று எல்லோரையும் அலறவைத்த அற்புத மனிதன்.
மூச்சை தியானமாக்கி உன்னுள் நீயே தொலைந்து போ என்று விரட்டிய அரக்கன் அவன்.
சுருக்கமாக, எண்ணங்களே வாழ்வாக என்னுள் நானே வழி தெரியாமல்,என்னையே நானே புரிந்து கொள்ளாமல் திகைத்த போது, வா இங்கே என்று என்னோடு ஆத்மார்த்தமாக கலந்து, நீயே சிவம், நீயே எல்லாம் என்று ஞானமெனும் குளத்தில் முங்கி முங்கி எடுத்து புனிதமாக்கிய ஆசான் அவன்.
வெற்றுப்படகாக என்னை மாற்றி, எண்ணமற்ற நிலைக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற மூர்க்கன் அவன்.
கடந்ததை மற, எதிர்காலத்தை துற, இந்தக் கணம் வாழ் என்ற சூத்திரத்தை புரிய வைத்த சூத்திரதாரி அவன்.
என்னுள் மூழ்க மூழ்க என்னை நானே தொலைக்க தொலைக்க, தொலைந்து போ என்று ஆசீர்வதித்தவன் அவன்.
ஒரு கணத்தில், இருட்டை வெளிச்சம் துரத்துவது போல, உன் கடந்தகால கர்மவினைகள் தொலையும் என்று நம்பிக்கை ஊட்டியவன் அவன்.
வாழ்வையும், அதன் நிகழ்வுகளையும் பார்வையாளனாக அனுபவி என்று நிதர்சனத்தை புரிய வைத்தவன் அவன்.
ஜென்னையும், சூஃபியைும் அறிமுகப்படுத்தி அறிவில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவன் அவன்.

ஒரு தாயின் அர்ப்பணம்

ஒரு தாயின் அர்ப்பணம் பற்றிய நெகிழ்வான
கதை இது.
பூமி அதிர்ச்சிக்குப் பேர் போன
நாடு ஜப்பான்.அங்கு கடுமையான
சேதங்களோடு நடந்து முடிந்த
ஒரு பூமி அதிர்ச்சியின் பின்னர், தொண்டர்கள்
குழுவொன்று ஒர் இளம் பெண்ணின் இடிந்து போன
வீட்டின் சிதைபாடுகளை நோக்கி நடக்கிறார்கள்.
சிதிலங்களின் நடுவே அந்தப்பெண்ணின் சடலம்
தென்படுகிறது.ஆனால் அந்த சடலம் ஏனைய
சடலங்களிலிருந்து வித்தியாசமாக
இருக்கிறது.அது ஒரு பிரார்த்தனைக்காக
மண்டியிட்டிருப்பது போன்று முழந்தாளிட்ட
வண்ணம் முன்னோக்கி வளைந்திருக்கிறத
ு.அவளது இரு கைகளையும்
தாங்கி நின்றிருக்கிறது சுருட்டிய துணிக்குவியல்
ஒன்று.இடிந்து விழுந்த வீடு அவள் முதுகிலும்
தலையிலும் ஆழமான காயங்களை ஏற்படுத்திய
வண்ணம் சரிந்திருக்கிறது.
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தொண்டர் அணியின்
தலைவர் சுவரினூடே உள்ள குறுகலான
இடைவெளிக்கூடாக தனது கைகளை விட்டு அந்தப்
பெண்ணின் உடலைத் தொட்டுப்பார்க்க
ிறார்.சிலசமயம் அந்தப் பெண் உயிரோடிருக்கலாம்
என்று மனதில் ஒரு நம்பிக்கை.ஆனால்
குளிர்ந்து விறைத்திருந்த சடலம் அவள் நிச்சயமாக
இறந்து விட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
தொண்டர் அணி அடுத்த இடிந்து விழுந்திருக்கும்
கட்டடத்தை நோக்கி நடக்கிறது.குழுத்தலைவரின்
உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வு. சொல்ல
முடியாதவொரு சக்தி மீண்டும் அந்த
வீட்டை நோக்கி அவரை உந்தித் தள்ளுகிறது.திரு
ம்பவும் அவர் மண்டியிட்டு,குறுகலான
வெடிப்புக்கூடே அந்தப்பெண்ணுக்கு அடியில்
இருக்கும் அந்தத் துணிக்குவியலை கைகளால்
தடவிப்பார்க்கிறார்.திடீரென’
இங்கே ஒரு குழந்தை,குழந்தை’ என அவர் துக்கம்
மகிழ்வும் கலந்த உணர்ச்சிப்பெருக்கில் வீரிடுகிறார்.
தொண்டர்
அணி ஒருங்கிணைந்து வேலை செய்கிறது.சடலத்
தை சுற்றியிருந்த இடிந்து விழுந்த
சிதைவுகளை மிகக்கவனமாக அகற்றுகிறார்கள்
.தாயின் சடலத்திணடியில் இன்னும் உறக்கம்
கலையாத மூன்று மாதப் பிஞ்சுக்
குழந்தை ,பூப்போட்ட ஒரு போர்வைத்துணிக்குள்
பொதிந்து கிடக்கிறது.
தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் தாய் கொடுத்த
விலை தான் இந்த அர்ப்பணம்.குழுத்தலைவர் அந்த
பூவைக்கையில் எடுத்த போதும் அதன்
அமைதியான உறக்கம் கலையவில்லை.
குழந்தையின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக
மருத்துவர் அவசரமாக வருவிக்கப்படுகி
றார்.குழந்தையைச் சுற்றியிருந்த
பூத்துணியை திறந்த போது அதற்குள் ஒர் செல்
தொலைபேசி இருக்கிறது.அதன் முகப்பில்
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் –
” If you can survive, you must remember that I love
you.”( “உன்னால் வாழ முடிந்தால்,நான்
உன்னோடு மிகுந்த அன்போடிருக்கிறேன்
என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும்”).
அந்த செல் மெசேஜை ஒருவர் மாற்றி ஒருவர்
வாசிக்கிறார்கள்.வாசித்த ஒவ்வொருவரது உள்ளமும்
விம்மியழுகிறது.

Saturday, 2 February 2019

தந்த்ரா யுக்திகள்

கவனித்தல் என்பது
ஒரே ஒரு விஷயத்திற்குத் தனிப்பட்டுக் கவனம் கொடுப்பது
விழிப்புணர்வு என்பது
கவனம் கொடுப்பது அல்ல
அது கவனமாய் இருப்பது
அது எல்லாவற்றையும் பற்றி உணர்வோடு இருப்பது மட்டுமே
விழிப்புணர்வு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது
கவனித்தல் என்பது தனிப்பட்டது
மெது மெதுவாக உன்னுடைய கவனித்தலை விழிப்புணர்வாக மாற்றிக் கொள்ள முடியும்
உன்னால் உனது மூச்சை தளர்வாக
எந்த முயற்சியும் இல்லாமல்
சந்தோஷமாக அனுபவிக்கும்போது
நீ விழிப்புணர்வை அடைந்து விட்டாய்
நம்மால் எல்லோரையும் சந்தேகப்பட முடியும்
ஆனால்
நாம் ஒருபோதும் நமது மனதை சந்தேகப் படுவதில்லை
நீ எதையாவது சந்தேகப்பட போகிறாய் என்றால்
முதலில் உன்னுடைய சொந்த மனதை சந்தேகப்படு
மேலும் உன் மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம்
இரண்டு முறை யோசி
இறந்த காலமே உன் மனதை உருவாக்குகிறது
உன் மனதை ஆட்சி செய்கிறது
மனம் உனக்கு மிகவும் நெருக்கமானது
இடைவெளி மிகவும் குறைவு
ஆகவே மனதோடு உன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறாய்
நீ வெறும் எளிமையான வெகுளியான ஜீவனாகவேப் பிறந்தாய்
இந்த சமுதாயம்தான் உனக்கு மனதைக் கொடுத்தது
அதன்பின் வாழ்க்கை இந்த மனத்தோடு சேர்த்துக் கொண்டே வந்தது
மனம் அதனுடைய போக்கிலேயே உன்னைத் தள்ளிக் கொண்டே போகிறது
உன்னுடைய இறந்த காலம் உன் ஒவ்வொரு நிகழ் கால
கணத்தையும் கட்டுப் படுத்துகிறது
அதனால் நீ நிகழ் காலத்தை திறந்த நிலையில் புதுவிதமாக அணுக முடியவில்லை
இறந்த காலமும் மனமும் நிகழ் காலத்தை அழித்துக் கொண்டே இருக்கும்
நீ மனமற்ற நிலையை அடையும் கணத்திலேயே
இறந்த காலம் மறைந்து போகிறது
உன்னுடைய மனம் ஒரு வெங்காயம் போன்றது
முடிவில் ஒன்றுமில்லாத சூன்யம்தான் மிஞ்சும் 🍂
🍁 ஓஷோ
தந்த்ரா யுக்திகள் 

மனமே சாத்தான்


மனமே சாத்தான்   பேசாலைதாஸ்
அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு
ஆனால்
அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை
அது இயல்பு தானே
எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும்
அதன் மீது ஆசை எழுவது இயல்பு
மனம் அப்படித்தான் செயல் படும்
மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு
அது உங்களைத் தூண்டிவிடும்
பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்
எப்போது எது தடுக்கப் பட்டாலும்
அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்
அது ஒரு அழைப்பு போல
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது
அங்கே வேறு யாரும் இல்லை
ஆனால் கதை என்ன சொல்கிறது......???
சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது
இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்
சாத்தான் ஒரு பலிகடா தான்
அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு
சாத்தான் தூண்டினான்
மயக்கி ஏமாற்றி விட்டான்
என்று சொல்லி விட்டால்
நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா..???
ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ
தடுக்கப் பட்டதனால்தான்
மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது
ஆனால் கதை அழகானது
மனமே சாத்தான்
தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு
மனமே பாம்பு

Connection!
ல்லா நஸ்ருதீன் தன் கடையில் யாராவது ஏதாவது வாங்க வருவாரா என்று பார்த்துக் காத்திருந்தார்
ஒரு ஆள் வந்தான்
முல்லா தன் கடையில் என்னென்னவெல்லாம் விற்பனைக்கு உள்ளன என்று பேச ஆரம்பித்தவர் பேசிக்கொண்டே இருந்தார்
வந்தவன் ஒரு வார்த்தை சொல்லவும் சந்தர்ப்பம் தரவில்லை
கைவீச்சில் அந்த ஆளை ஒரு நாற்காலியில் உட்கார சொல்லி விட்டு டெலிபோனை எடுத்து
"அப்படியா ஒரு கோடிதானே...!!! வாங்கிக்கொள்" என்றார்
வந்தவனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை
"பொறு...பொறு...
டெலிபோனுக்கு கனெக்ஷன் கொடுக்க டெலிபோன் கம்பெனியிலிருந்து தான் நான் வந்திருக்கிறேன்" என்றான்
டெலிபோனுக்குக் கனெக்ஷனே கொடுக்கவில்லை
ஒரு கோடியாவது ஒன்றாவது
பம்மாத்துப் பண்ணினார்
தொடர்புகள் அறுந்துவிட்ட உணர்வு வந்துவிட்டதா....???
சரிதான்
அந்தத் தொடர்புகளே மயக்கங்களாகத்தானே இருந்து விட்டன....?!?
தொடர்பே இல்லை
ஆனால், பிரார்த்தனைகளைச் சொல்லி நேரடியான லைனில் கடவுளோடு பேசிக்கொண்டு இருந்து விட்டீர்கள்
திடீரென நான் வந்து உன் டெலிபோனுக்கு இன்னும் கனெக்ஷனே கொடுக்கவில்லை என்பதை உணர வைத்து விட்டேன்
யாரிடம் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்....???
கனெக்ஷன் தராத டெலிபோனில் பிரார்த்தனைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாய்
வாழ்வோடு தொடர்புடையவனாகிக் கொள்
ஒரே வழி உனக்குள் போவதுதான்
ஏனென்றால்
உன்னுடைய அந்த மையத்தில்தான் உன் தொடர்பு இருக்கிறது
பிரபஞ்சத்திலிருந்து நீ பிரிந்துவிட்டவனல்லன்
பிரபஞ்சத்தோடான உனது தொடர்பே பிரக்ஞை
அதை உன்னால் பார்க்க முடியாது
அதனால்
மிகவும் எச்சரிக்கையோடு, கவனிப்போடு
சாட்சியாக நின்றிக்கும் உணர்வோடு
ஆழத்துக்கு - அடி ஆழத்துக்குப் போகும்போது
அந்த கனெக்ஷனை கண்டுபிடித்து விடுவாய்
புத்த நிலைதான் அந்த கனெக்ஷன்

Rail Journy
முதன் முதலாக ரயிலில் பிரயாணம் ஒரு கிராமத்துவாசி
தான் கொண்டு வந்த மூட்டைகளை தன் தலையில்
சுமந்து கொண்டு பிரயாணம் 
செய்தானாம்
கீழே வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக இருக்கும் என்று இப்படி செய்தானாம்
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும் சேர்த்துதான் சுமக்கிறது
அவன் அந்த மூட்டையை தலையில் வைத்தாலும்
தரையில் வைத்தாலும்
ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அவனுக்கு தெரியவில்லை
அதுபோலவே
உன்னுடைய மனமும்
தேவையற்ற சுமை
நாள் முழுவதும் அந்த சுமையை
சுமந்து கொண்டு திரிகிறாய்
தேவையற்ற சமயத்தில்
மனதை கொஞ்சம் இறக்கி வைக்க தெரிந்து கொள்
ஒரு நிமிட நேரம் நீ அதை கீழே இறக்கி வைக்க முடியுமானால்
உன்னுடைய முழு வாழ்க்கையும்
மாற்றப் பட்டு விடும்
அப்போது நீ பாரமின்றி இருப்பதை உணர்வாய்
பாரமின்றி இருத்தல் உனக்கு சிறகுகள் கிடைப்பது போல
அதன் மூலம் நீ இந்த வானத்துக்கும்
சொர்க்கத்துக்கும் பறக்கலாம்
ஆன்மிக வாழ்வில் நீ பாரமற்றவனாக பறந்து கொண்டும்
ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டும் இருக்கலாம்

Intution


ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி
உங்களுக்கு ஜாதகத்திலும்... மதத்திலும்...
நம்பிக்கை உண்டா...??? என்பதுதான்
அதற்கு அவர் கூறும் பதில் -
" கிடையாது."
ஆனால் ...
அது என்னவென்று எனக்குத் தெரியும் என்பதுதான்...
ஓஷோ சிறுவனாக இருந்த போது
ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து
" நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்"
அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ...
அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது
பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்...
அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்
அதற்கு அவர்
" என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
போகிறாயா....???
" ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் "
அவர் சிரித்துக் கொண்டே
" அது நடக்காது
ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது"
அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்
அது நடக்கும்
அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்...???
அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல
நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது...
நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை
ஏனெனில்
என்னிடம் எதுவும் கிடையாது...
பிறகு அந்த ஜோசியர்
சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் ...
இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்
ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை...
அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது
ஒரு சதவீதம்தான் உண்மையானது
அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த... தீர்க்கமான...
நுண்ணறிவும்...
ஒரு ஞானியின் தன்மையும் வேண்டும்
ஏனெனில் ஒருவரது வருங்காலம்
அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது
என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ
ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது
அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்
அப்பொழுது வாரணாசிக்கும் சாரநாத்துக்கும்
இடையில் ஒரு கோவிலின் வாசலில்
ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்
நேரே அவரிடம் சென்று
ஓஷோ பெரியவரே
என்னை அடையாளம் தெரிகிறதா..??? என்றார்
அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்
ஓஷோ அவரிடம்
ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்
சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்..???
அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
அங்கியிலிருந்து எடுத்து
ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்
உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி
சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்
அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட
மனதளவில் பெரியவன்
நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்
அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்
நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்
ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை...!!!
நீ எப்படி அதைச் செய்தாய்.....???
அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார்
ஓஷோ - அது உள் உணர்வு
( Intution) அதை விளக்க முடியாது என்றார் 

கலீல் ஜிப்ரான் கவிதைகள்
துறவி
மலைகளுக்கு அப்பால் இருந்த 
துறவியின் குடிலில்
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்

அப்போது ஒரு திருடன்
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
அவரை நாடி வந்தான்
"முனிவரே..!!!
எனக்கு நிம்மதி தாருங்கள்
உங்களால் மட்டுமே முடியும்
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."
"வருந்தாதே..!!!
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."
"ஆனால்
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!!"
"நானும் திருடன் தான்
கொள்ளைக்காரன் தான்..!!!"
"நான் ஒரு கொலைகாரன்
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!!"
"நானும் கொலைகாரன் தான்
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!!"
"நான் எண்ணிலடங்கா
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!!"
"நானும் செய்துள்ளேன்..!!!"
திருடன் எழுந்து நின்றான்
புரிந்து கொள்ள முடியாத
ஒரு பார்வை அவனிடம்
திரும்பி நடந்தான்
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்
நான் துறவியிடம் கேட்டேன்
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..???
அவன் உங்கள் மேல்
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!!"
துறவி சிரித்துக் கொண்டே கூறினார்
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்
ஆனால்
நிம்மதி அடைந்து போகிறான்..!!!"
நான் அப்போது தான் கவனித்தேன்
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது

சுவாமி விவேகானந்தர் 
 சகோதரா.....!!!
நீ ஏன் அழுகுகிறாய்..???
உனக்கு மரணம் இல்லை
நோய் இல்லை
துன்பம் இல்லை
உனக்கு துரதிர்ஷ்டம் இல்லை
நீ ஏன் அழ வேண்டும்..???
மாறுதலோ, மரணமோ உனக்கு இல்லை
இருக்கின்ற ஒரே பொருள் நீயே
உன் ஆன்மாவாக இரு 🔥
💥 சுவாமி விவேகானந்தர் 💥