Friday 8 February 2019

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே!

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே! பேசாலைதாஸ்

வாழ்வில் சலித்துக்கொண்டவர்கள் நிறையப்பேரை நான் பார்த்திருக்கின்றேன், என்னடா வாழ்க்கை என்று நானும் கூட சலித்துக்கொண்டதுண்டு, இந்த சலிப்புத்தன்மை ஏற்படுவதற்கு அடிப்படைக்காரனம், நமது எண்ணத்தில் உண்டாகும் அதிருப்தி அற்றதன்மை தான். எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக மாறுகின்றபோது, வாழ்வில் சலிப்பு தன்மை ஏற்படுகின்றது,  கிடைக்கின்ற வாழ்வில் நிறைவுகண்டு, திருப்தியுடன் வாழப்பழகிவிட்டால், எந்தவித சலிப்புத்தன்மையும் வாழ்வில் ஏற்படாது, ஒரு காட்டில், காட்டு லீலிப்புஸ்பங்கள் அழகாக மலர்ந்தது, காடு முழுவதும் நறுமணமாய் கமழ்ந்தது,  இந்த காட்டு லீலிப்புஸ்பங்களுடன், காகம் ஒன்று, தவறான எண்ணங்களையும், சிந்தனைகளையும் விதைத்தது, காகம் அந்த அழகான காட்டு லீல்லிகளுக்கு சொன்னது, நீங்கள் எவ்வளவு அழகாக பூத்துக்குழுங்கி, நறுமணம் வீசுகின்றீர்கள், இருந்தும் அதனால் என்ன பயன்? வெறும் காட்டுக்குள்ளேயே உங்கள் அழகும், வாசமும் வீணாகிப்போகின்றது, காட்டில் பூத்து குழுங்குவதைவிட, இளவரசியின் தோட்டத்தில் நீங்கள் இருந்தால், உங்களின் செல்வாக்கும், மகிமையும் நாடே போற்றும் என்று சொன்னது அந்த காகம்,  அதுவரையும், மனதில் மகிழ்ச்சியோடு மலர்ந்த லீலி மலர்கள், மனம் வாடத்தோடங்கியது, சீக்கிரமாக மலர் வதனம் கெட்டு, கருகி, வெறும் குப்பை மேடாகிவிட்டது,  கொஞ்ச நாட்களித்து, அதே காகம் அந்த லீலி மலர்களிடம் கேட்டது,  உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் கருகி குப்பைமேடாகிவிட்டீர்கள் என்று கேட்டது, அதற்கு அந்த மலர்கள், சலிப்போடு சொன்னது, காட்டில் மலர்ந்து என்ன பயன்? அரசியின் அந்தப்புரத்தில் மலர்ந்தாளவு, மாட்சிமையோடும், மன மகிழ்வாய் வாழ்ந்து மலர்ந்திருக்கலாம், எல்லாம் விதிப்பயன் என சலிப்போடு சொன்ன மலர்கள், காகத்திடம் ஒரு உதவிகேட்டது, எங்கள் வாழ்வுமலர, மகிழ்சியாக வாழ, எங்களை உன் அலகினால் காவிக்கொண்டு, அரண்மனையின் அந்தபுரத்துக்கொள் போட்டுவிடு, நாங்கள் எப்படியோ பிழத்துக்கொள்வோம் என மன்றாட்டமாக கேட்டது, காகமும் அதற்கு ஒத்துக்கொண்டு, தன் அலகினால் அவைகள கொத்திக்கொண்டு, நீண்டதூரம், மலைகளை, கற்பாறைகளை கடந்து உயரப்பறந்தது. திடீரென்று காற்று உரமாக வீசவே, அதைசமாளிக்க முடியாத காகம், தன் அலகில், கொத்தியிருந்த, அந்த லீலிகிழங்குகளைகீழே வீசி எறிந்தது.அந்தோ பாவம்,அந்த லீலிக்கிழங்கள் ஒரு பாறையின் மீது விழுந்து நொருங்கியது! லீலிமலர்களின் நினைப்பே அதன் பிழைப்பைக்கெடுத்து, அன்பின் பேசாலைதாஸ்øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

No comments:

Post a Comment