Saturday 2 February 2019

தந்த்ரா யுக்திகள்

கவனித்தல் என்பது
ஒரே ஒரு விஷயத்திற்குத் தனிப்பட்டுக் கவனம் கொடுப்பது
விழிப்புணர்வு என்பது
கவனம் கொடுப்பது அல்ல
அது கவனமாய் இருப்பது
அது எல்லாவற்றையும் பற்றி உணர்வோடு இருப்பது மட்டுமே
விழிப்புணர்வு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது
கவனித்தல் என்பது தனிப்பட்டது
மெது மெதுவாக உன்னுடைய கவனித்தலை விழிப்புணர்வாக மாற்றிக் கொள்ள முடியும்
உன்னால் உனது மூச்சை தளர்வாக
எந்த முயற்சியும் இல்லாமல்
சந்தோஷமாக அனுபவிக்கும்போது
நீ விழிப்புணர்வை அடைந்து விட்டாய்
நம்மால் எல்லோரையும் சந்தேகப்பட முடியும்
ஆனால்
நாம் ஒருபோதும் நமது மனதை சந்தேகப் படுவதில்லை
நீ எதையாவது சந்தேகப்பட போகிறாய் என்றால்
முதலில் உன்னுடைய சொந்த மனதை சந்தேகப்படு
மேலும் உன் மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம்
இரண்டு முறை யோசி
இறந்த காலமே உன் மனதை உருவாக்குகிறது
உன் மனதை ஆட்சி செய்கிறது
மனம் உனக்கு மிகவும் நெருக்கமானது
இடைவெளி மிகவும் குறைவு
ஆகவே மனதோடு உன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறாய்
நீ வெறும் எளிமையான வெகுளியான ஜீவனாகவேப் பிறந்தாய்
இந்த சமுதாயம்தான் உனக்கு மனதைக் கொடுத்தது
அதன்பின் வாழ்க்கை இந்த மனத்தோடு சேர்த்துக் கொண்டே வந்தது
மனம் அதனுடைய போக்கிலேயே உன்னைத் தள்ளிக் கொண்டே போகிறது
உன்னுடைய இறந்த காலம் உன் ஒவ்வொரு நிகழ் கால
கணத்தையும் கட்டுப் படுத்துகிறது
அதனால் நீ நிகழ் காலத்தை திறந்த நிலையில் புதுவிதமாக அணுக முடியவில்லை
இறந்த காலமும் மனமும் நிகழ் காலத்தை அழித்துக் கொண்டே இருக்கும்
நீ மனமற்ற நிலையை அடையும் கணத்திலேயே
இறந்த காலம் மறைந்து போகிறது
உன்னுடைய மனம் ஒரு வெங்காயம் போன்றது
முடிவில் ஒன்றுமில்லாத சூன்யம்தான் மிஞ்சும் 🍂
🍁 ஓஷோ
தந்த்ரா யுக்திகள் 

No comments:

Post a Comment