Saturday 9 February 2019

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

                                                                        மன்னார் நலன்புரிச்சங்கத்தின் அவசர கலந்துறையாடல் 2019 மாசி 9 திகதி மாலை 06.00 மணியளவில், Shultun மியுஸியத்தில் செயலாளரினால் கூட்டப்பட்டது, அண்மைக்காலமாக மன்னார் நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், நிர்வாகிகள்  செயல்திறன் அற்று செயல்படுவது குறித்து ஆராய்வதற்காக கூட்டப்படது, ஆரம் பத்தில் சிறிய செபத்துடன் ஆரம்பமான இக்கலந்துறையாடலில், கடந்த வாரம் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டியில், உணவகம் நடத்துவ தில் பாரிய சிக்கல் ஏன் உருவானது என சபையில் அதிருப்திகள் தெரிவி க்கப்பட்டது, 

                                                 அதற்கான பின்னடைவுக்கு குணா தானே காரனம் என்பதை ஒத்துக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார், பின்னர் பொருளா ளர் வங்கி கணக்கை ஆய்வு செய்து,  பணவரவு ஏதாவது வந்ததா? அமல்ராஜ் கேள்வி கேட்டு, பொருளாள்ர் தன் கடமையில் இருந்து தவறுகி ன்றார் என சுட்டிக்காடினார், சென்ற விளையாடு போடியில் நடத்தப்பட்ட உணவகத்தில் இருந்து, 1000 குரோணர் கிடைக்கப்படது எனவும், விளை யாட்டு போட்டியில் வென்ற பரிசு தொகை 500 குரோணரும்  மன்னார் நலன்புரிக்கு கொடுக்கப்பட்டது என அவர் கூறினார்.எதிர்காலத்தில் கணக்கில் அதிக சிரத்தை எடுக்கும் படி, கண்டிப்பாக எடுத்து கூறப்ப ட்டது. 

                                                  ஏன் செயலாளர் அறிக்கை கொண்டுவரவில்லை என அமல்ராஜ் காரசாரமாக கேள்வி, எழுப்பினார், அத்ற்கு செயலாளர் இது கூட்டம் அல்ல எனவும், நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைபற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு அவசர கலந்துறையாடல் என செயலாளரினல் விளக்கம் அளிக்கப்பட்டது, தொடர்ந்து நாம் இயங்கு வதா இல்லையா என இன்று முடிவு எடுக்கவேண்டும் என அமல்ராஜ் வாதிட்டபொழுது மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுவோம் 

                                                                    பொருளாளர், செயலாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புடையவர்கள் என்றாலும், நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொறுப்புகளை பகிர்ந்து செய்வதி னால், திறம்பட இயங்கமுடியும் என வும் எல்லோரும் எல்லாத்திற்கும் பொறுப்புடையவர்கள் என்ற கூட்டு பொறுப்பு தத்துவத்துடன் செயல்படுவோம் என ஜெயந்தன் சிறந்த கரு த்தை முன்வைத்தார், 

                                                       அது ஏற்றுக்கொள்லப்பட்டது, விரைவில் பொது கூட்டம்  எதிர்வரும் 27 திகதி ஏப்ரல் நடத்துவது எனவும், அதில், பதவிகள், பொறுப்புகள் பற்றி விவாதிக்கவேண்டும் எனவும், ஆவணி 24 திகதி அல்லது 31 திகதி ஒன்று கூடல் நடத்துவது பறிய முடிவுகள் எடுக்கபடவே ண்டும் என தெரிவிக்கப்பட்டது,  Whatsup குழு ஒன்று உருவாக்கி அதன் மூலம் தொடர்புகளை விரவு படுத்தவேண்டும் என்ற அறிவுரை செயலா ளருக்கு வழங்கப்பட்டது! 

                                         மன்னாரில் எமது அமைப்பின் வழியாக பயணைந்த பயணாளிகளிடம் இருந்து, ஒத்துழைப்பு கோரவேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படது, அது தொடர்பாக மன்னாருக்கு உடனடியாக அழைப்பு விடுவிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது! கடந்தவருடம் நானாட்டான் பாடசாலை கட்டிடத்துக்கு தனிப்பட்ட ரீதியில் பணம் சேகரித்து கொடுக் கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது அதனை அதனை அனுப்பிவை க்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் கலந்துறையாடல் இனிதே கலைந்தது 

No comments:

Post a Comment