Thursday, 7 February 2019

Oshoவில் ஈடுபாடு எப்படி வந்தது?

Oshoவில் ஈடுபாடு
எப்படி வந்தது?
என் நண்பரின் கேள்வி.
வித்தியாசமான கோணங்களில்,எதிர்பாரத அதிர்வலைகள், மடையென வந்த யதார்த்த சிந்தனைகள் என்னை ஓஷோவுடன் இணைத்தது " என்றேன்.
எப்படி?
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் புரியாமல் மனம் போன போக்கில் திரிந்தவனை, இதுதான் என்று பிடரியில் அடித்து பொறி கலங்க புரிய வைத்தவன் ஓஷோ.
எல்லா துக்கங்களையும் ஜீரணித்து நடைபிணமான என்னை, வாழ்வே ஒரு கொண்டாட்டம் என்று என்னையும் குதியாட்டம் போட வைத்தவன் ஓஷோ.
நான் யார்? என்று தேடியலைந்த என்னை தலையில் தட்டி எல்லாமும் நீ, நீயோ எல்லாம் என்று சிந்தனையை தூண்டியவன்.
Sex, காமம் என்றாலே தகாத வார்த்தைகள் என்றெண்ணி வளர்த்தப்பட்ட என்னன, காமமின்றி ஏது படைப்பு, நீ ஏது, நான் ஏது, ஜீவராசிகள் ஏது என்று காமம் ஒரு புனிதம் என்று என் அறியாமைத் திரையை எரித்தவன் ஓஷோ.
பெண்கள் மீது வருவதே காதல் என்று பிதற்றித் திரிந்த இந்த பித்தனை, காதல் என்பது பிரபஞ்ச தோற்றங்கள் அனைத்திலும்(பாரதி கூற்றுப்படி நிற்பதுவே, நடப்பதுவே) உண்டு என்று என் மனம் விரிந்து விரிந்து பிரபஞ்ச காதலனாக மாற்றியவன் ஓஷோ.
இசையும், உன்னை மறந்து ஆடும் நடனமும் தெய்வீகக் கதவை தட்டும் என்று உணர்த்திய மாயாஜாலக்காரன்.
மரணமும் ஒரு கொண்டாட்டமே என்று மரணத்தையே நேசிக்க வைத்த பித்தன்.
பயத்தை கேள்வி கேள் என்று வித்தியாசமான கோணத்தில் பயத்தை வேரறுத்த ஆன்மீக மருத்துவன்.
புத்தன் என்றால் என்னவென்று ஆராய்ந்து கொண்டிருந்த என்னை,
நீயே புத்தன்தான் என்று ஓங்கி அறைந்தவன் அவன்.
எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதி முழக்கத்தை போல, எல்லாமே தெய்வீகம் தான் இப்பிரபஞ்சத்திலே என்னையே தெய்வமாக உணரச்செய்த ஜாலக்காரன்.
Be at the moment என்று தறிகெட்டு ஓடிய மனமெனும் முரட்டு குதிரையை அடக்கும் வித்தையை கற்று கொடுத்த சித்தன்.
காமம் என்பது வெறும் புணர்ச்சியல்ல, அது தெய்வீகத்தை உணரக்கூடிய அற்புத திறவுகோல் என்று எல்லோரையும் அலறவைத்த அற்புத மனிதன்.
மூச்சை தியானமாக்கி உன்னுள் நீயே தொலைந்து போ என்று விரட்டிய அரக்கன் அவன்.
சுருக்கமாக, எண்ணங்களே வாழ்வாக என்னுள் நானே வழி தெரியாமல்,என்னையே நானே புரிந்து கொள்ளாமல் திகைத்த போது, வா இங்கே என்று என்னோடு ஆத்மார்த்தமாக கலந்து, நீயே சிவம், நீயே எல்லாம் என்று ஞானமெனும் குளத்தில் முங்கி முங்கி எடுத்து புனிதமாக்கிய ஆசான் அவன்.
வெற்றுப்படகாக என்னை மாற்றி, எண்ணமற்ற நிலைக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற மூர்க்கன் அவன்.
கடந்ததை மற, எதிர்காலத்தை துற, இந்தக் கணம் வாழ் என்ற சூத்திரத்தை புரிய வைத்த சூத்திரதாரி அவன்.
என்னுள் மூழ்க மூழ்க என்னை நானே தொலைக்க தொலைக்க, தொலைந்து போ என்று ஆசீர்வதித்தவன் அவன்.
ஒரு கணத்தில், இருட்டை வெளிச்சம் துரத்துவது போல, உன் கடந்தகால கர்மவினைகள் தொலையும் என்று நம்பிக்கை ஊட்டியவன் அவன்.
வாழ்வையும், அதன் நிகழ்வுகளையும் பார்வையாளனாக அனுபவி என்று நிதர்சனத்தை புரிய வைத்தவன் அவன்.
ஜென்னையும், சூஃபியைும் அறிமுகப்படுத்தி அறிவில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவன் அவன்.

ஒரு தாயின் அர்ப்பணம்

ஒரு தாயின் அர்ப்பணம் பற்றிய நெகிழ்வான
கதை இது.
பூமி அதிர்ச்சிக்குப் பேர் போன
நாடு ஜப்பான்.அங்கு கடுமையான
சேதங்களோடு நடந்து முடிந்த
ஒரு பூமி அதிர்ச்சியின் பின்னர், தொண்டர்கள்
குழுவொன்று ஒர் இளம் பெண்ணின் இடிந்து போன
வீட்டின் சிதைபாடுகளை நோக்கி நடக்கிறார்கள்.
சிதிலங்களின் நடுவே அந்தப்பெண்ணின் சடலம்
தென்படுகிறது.ஆனால் அந்த சடலம் ஏனைய
சடலங்களிலிருந்து வித்தியாசமாக
இருக்கிறது.அது ஒரு பிரார்த்தனைக்காக
மண்டியிட்டிருப்பது போன்று முழந்தாளிட்ட
வண்ணம் முன்னோக்கி வளைந்திருக்கிறத
ு.அவளது இரு கைகளையும்
தாங்கி நின்றிருக்கிறது சுருட்டிய துணிக்குவியல்
ஒன்று.இடிந்து விழுந்த வீடு அவள் முதுகிலும்
தலையிலும் ஆழமான காயங்களை ஏற்படுத்திய
வண்ணம் சரிந்திருக்கிறது.
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தொண்டர் அணியின்
தலைவர் சுவரினூடே உள்ள குறுகலான
இடைவெளிக்கூடாக தனது கைகளை விட்டு அந்தப்
பெண்ணின் உடலைத் தொட்டுப்பார்க்க
ிறார்.சிலசமயம் அந்தப் பெண் உயிரோடிருக்கலாம்
என்று மனதில் ஒரு நம்பிக்கை.ஆனால்
குளிர்ந்து விறைத்திருந்த சடலம் அவள் நிச்சயமாக
இறந்து விட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
தொண்டர் அணி அடுத்த இடிந்து விழுந்திருக்கும்
கட்டடத்தை நோக்கி நடக்கிறது.குழுத்தலைவரின்
உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வு. சொல்ல
முடியாதவொரு சக்தி மீண்டும் அந்த
வீட்டை நோக்கி அவரை உந்தித் தள்ளுகிறது.திரு
ம்பவும் அவர் மண்டியிட்டு,குறுகலான
வெடிப்புக்கூடே அந்தப்பெண்ணுக்கு அடியில்
இருக்கும் அந்தத் துணிக்குவியலை கைகளால்
தடவிப்பார்க்கிறார்.திடீரென’
இங்கே ஒரு குழந்தை,குழந்தை’ என அவர் துக்கம்
மகிழ்வும் கலந்த உணர்ச்சிப்பெருக்கில் வீரிடுகிறார்.
தொண்டர்
அணி ஒருங்கிணைந்து வேலை செய்கிறது.சடலத்
தை சுற்றியிருந்த இடிந்து விழுந்த
சிதைவுகளை மிகக்கவனமாக அகற்றுகிறார்கள்
.தாயின் சடலத்திணடியில் இன்னும் உறக்கம்
கலையாத மூன்று மாதப் பிஞ்சுக்
குழந்தை ,பூப்போட்ட ஒரு போர்வைத்துணிக்குள்
பொதிந்து கிடக்கிறது.
தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் தாய் கொடுத்த
விலை தான் இந்த அர்ப்பணம்.குழுத்தலைவர் அந்த
பூவைக்கையில் எடுத்த போதும் அதன்
அமைதியான உறக்கம் கலையவில்லை.
குழந்தையின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக
மருத்துவர் அவசரமாக வருவிக்கப்படுகி
றார்.குழந்தையைச் சுற்றியிருந்த
பூத்துணியை திறந்த போது அதற்குள் ஒர் செல்
தொலைபேசி இருக்கிறது.அதன் முகப்பில்
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் –
” If you can survive, you must remember that I love
you.”( “உன்னால் வாழ முடிந்தால்,நான்
உன்னோடு மிகுந்த அன்போடிருக்கிறேன்
என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும்”).
அந்த செல் மெசேஜை ஒருவர் மாற்றி ஒருவர்
வாசிக்கிறார்கள்.வாசித்த ஒவ்வொருவரது உள்ளமும்
விம்மியழுகிறது.

Saturday, 2 February 2019

தந்த்ரா யுக்திகள்

கவனித்தல் என்பது
ஒரே ஒரு விஷயத்திற்குத் தனிப்பட்டுக் கவனம் கொடுப்பது
விழிப்புணர்வு என்பது
கவனம் கொடுப்பது அல்ல
அது கவனமாய் இருப்பது
அது எல்லாவற்றையும் பற்றி உணர்வோடு இருப்பது மட்டுமே
விழிப்புணர்வு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது
கவனித்தல் என்பது தனிப்பட்டது
மெது மெதுவாக உன்னுடைய கவனித்தலை விழிப்புணர்வாக மாற்றிக் கொள்ள முடியும்
உன்னால் உனது மூச்சை தளர்வாக
எந்த முயற்சியும் இல்லாமல்
சந்தோஷமாக அனுபவிக்கும்போது
நீ விழிப்புணர்வை அடைந்து விட்டாய்
நம்மால் எல்லோரையும் சந்தேகப்பட முடியும்
ஆனால்
நாம் ஒருபோதும் நமது மனதை சந்தேகப் படுவதில்லை
நீ எதையாவது சந்தேகப்பட போகிறாய் என்றால்
முதலில் உன்னுடைய சொந்த மனதை சந்தேகப்படு
மேலும் உன் மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம்
இரண்டு முறை யோசி
இறந்த காலமே உன் மனதை உருவாக்குகிறது
உன் மனதை ஆட்சி செய்கிறது
மனம் உனக்கு மிகவும் நெருக்கமானது
இடைவெளி மிகவும் குறைவு
ஆகவே மனதோடு உன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறாய்
நீ வெறும் எளிமையான வெகுளியான ஜீவனாகவேப் பிறந்தாய்
இந்த சமுதாயம்தான் உனக்கு மனதைக் கொடுத்தது
அதன்பின் வாழ்க்கை இந்த மனத்தோடு சேர்த்துக் கொண்டே வந்தது
மனம் அதனுடைய போக்கிலேயே உன்னைத் தள்ளிக் கொண்டே போகிறது
உன்னுடைய இறந்த காலம் உன் ஒவ்வொரு நிகழ் கால
கணத்தையும் கட்டுப் படுத்துகிறது
அதனால் நீ நிகழ் காலத்தை திறந்த நிலையில் புதுவிதமாக அணுக முடியவில்லை
இறந்த காலமும் மனமும் நிகழ் காலத்தை அழித்துக் கொண்டே இருக்கும்
நீ மனமற்ற நிலையை அடையும் கணத்திலேயே
இறந்த காலம் மறைந்து போகிறது
உன்னுடைய மனம் ஒரு வெங்காயம் போன்றது
முடிவில் ஒன்றுமில்லாத சூன்யம்தான் மிஞ்சும் 🍂
🍁 ஓஷோ
தந்த்ரா யுக்திகள் 

மனமே சாத்தான்


மனமே சாத்தான்   பேசாலைதாஸ்
அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு
ஆனால்
அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை
அது இயல்பு தானே
எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும்
அதன் மீது ஆசை எழுவது இயல்பு
மனம் அப்படித்தான் செயல் படும்
மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு
அது உங்களைத் தூண்டிவிடும்
பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்
எப்போது எது தடுக்கப் பட்டாலும்
அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்
அது ஒரு அழைப்பு போல
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது
அங்கே வேறு யாரும் இல்லை
ஆனால் கதை என்ன சொல்கிறது......???
சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது
இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்
சாத்தான் ஒரு பலிகடா தான்
அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு
சாத்தான் தூண்டினான்
மயக்கி ஏமாற்றி விட்டான்
என்று சொல்லி விட்டால்
நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா..???
ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ
தடுக்கப் பட்டதனால்தான்
மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது
ஆனால் கதை அழகானது
மனமே சாத்தான்
தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு
மனமே பாம்பு

Connection!
ல்லா நஸ்ருதீன் தன் கடையில் யாராவது ஏதாவது வாங்க வருவாரா என்று பார்த்துக் காத்திருந்தார்
ஒரு ஆள் வந்தான்
முல்லா தன் கடையில் என்னென்னவெல்லாம் விற்பனைக்கு உள்ளன என்று பேச ஆரம்பித்தவர் பேசிக்கொண்டே இருந்தார்
வந்தவன் ஒரு வார்த்தை சொல்லவும் சந்தர்ப்பம் தரவில்லை
கைவீச்சில் அந்த ஆளை ஒரு நாற்காலியில் உட்கார சொல்லி விட்டு டெலிபோனை எடுத்து
"அப்படியா ஒரு கோடிதானே...!!! வாங்கிக்கொள்" என்றார்
வந்தவனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை
"பொறு...பொறு...
டெலிபோனுக்கு கனெக்ஷன் கொடுக்க டெலிபோன் கம்பெனியிலிருந்து தான் நான் வந்திருக்கிறேன்" என்றான்
டெலிபோனுக்குக் கனெக்ஷனே கொடுக்கவில்லை
ஒரு கோடியாவது ஒன்றாவது
பம்மாத்துப் பண்ணினார்
தொடர்புகள் அறுந்துவிட்ட உணர்வு வந்துவிட்டதா....???
சரிதான்
அந்தத் தொடர்புகளே மயக்கங்களாகத்தானே இருந்து விட்டன....?!?
தொடர்பே இல்லை
ஆனால், பிரார்த்தனைகளைச் சொல்லி நேரடியான லைனில் கடவுளோடு பேசிக்கொண்டு இருந்து விட்டீர்கள்
திடீரென நான் வந்து உன் டெலிபோனுக்கு இன்னும் கனெக்ஷனே கொடுக்கவில்லை என்பதை உணர வைத்து விட்டேன்
யாரிடம் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்....???
கனெக்ஷன் தராத டெலிபோனில் பிரார்த்தனைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாய்
வாழ்வோடு தொடர்புடையவனாகிக் கொள்
ஒரே வழி உனக்குள் போவதுதான்
ஏனென்றால்
உன்னுடைய அந்த மையத்தில்தான் உன் தொடர்பு இருக்கிறது
பிரபஞ்சத்திலிருந்து நீ பிரிந்துவிட்டவனல்லன்
பிரபஞ்சத்தோடான உனது தொடர்பே பிரக்ஞை
அதை உன்னால் பார்க்க முடியாது
அதனால்
மிகவும் எச்சரிக்கையோடு, கவனிப்போடு
சாட்சியாக நின்றிக்கும் உணர்வோடு
ஆழத்துக்கு - அடி ஆழத்துக்குப் போகும்போது
அந்த கனெக்ஷனை கண்டுபிடித்து விடுவாய்
புத்த நிலைதான் அந்த கனெக்ஷன்

Rail Journy
முதன் முதலாக ரயிலில் பிரயாணம் ஒரு கிராமத்துவாசி
தான் கொண்டு வந்த மூட்டைகளை தன் தலையில்
சுமந்து கொண்டு பிரயாணம் 
செய்தானாம்
கீழே வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக இருக்கும் என்று இப்படி செய்தானாம்
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும் சேர்த்துதான் சுமக்கிறது
அவன் அந்த மூட்டையை தலையில் வைத்தாலும்
தரையில் வைத்தாலும்
ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அவனுக்கு தெரியவில்லை
அதுபோலவே
உன்னுடைய மனமும்
தேவையற்ற சுமை
நாள் முழுவதும் அந்த சுமையை
சுமந்து கொண்டு திரிகிறாய்
தேவையற்ற சமயத்தில்
மனதை கொஞ்சம் இறக்கி வைக்க தெரிந்து கொள்
ஒரு நிமிட நேரம் நீ அதை கீழே இறக்கி வைக்க முடியுமானால்
உன்னுடைய முழு வாழ்க்கையும்
மாற்றப் பட்டு விடும்
அப்போது நீ பாரமின்றி இருப்பதை உணர்வாய்
பாரமின்றி இருத்தல் உனக்கு சிறகுகள் கிடைப்பது போல
அதன் மூலம் நீ இந்த வானத்துக்கும்
சொர்க்கத்துக்கும் பறக்கலாம்
ஆன்மிக வாழ்வில் நீ பாரமற்றவனாக பறந்து கொண்டும்
ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டும் இருக்கலாம்

Intution


ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி
உங்களுக்கு ஜாதகத்திலும்... மதத்திலும்...
நம்பிக்கை உண்டா...??? என்பதுதான்
அதற்கு அவர் கூறும் பதில் -
" கிடையாது."
ஆனால் ...
அது என்னவென்று எனக்குத் தெரியும் என்பதுதான்...
ஓஷோ சிறுவனாக இருந்த போது
ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து
" நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்"
அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ...
அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது
பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்...
அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்
அதற்கு அவர்
" என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
போகிறாயா....???
" ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் "
அவர் சிரித்துக் கொண்டே
" அது நடக்காது
ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது"
அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்
அது நடக்கும்
அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்...???
அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல
நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது...
நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை
ஏனெனில்
என்னிடம் எதுவும் கிடையாது...
பிறகு அந்த ஜோசியர்
சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் ...
இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்
ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை...
அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது
ஒரு சதவீதம்தான் உண்மையானது
அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த... தீர்க்கமான...
நுண்ணறிவும்...
ஒரு ஞானியின் தன்மையும் வேண்டும்
ஏனெனில் ஒருவரது வருங்காலம்
அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது
என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ
ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது
அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்
அப்பொழுது வாரணாசிக்கும் சாரநாத்துக்கும்
இடையில் ஒரு கோவிலின் வாசலில்
ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்
நேரே அவரிடம் சென்று
ஓஷோ பெரியவரே
என்னை அடையாளம் தெரிகிறதா..??? என்றார்
அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்
ஓஷோ அவரிடம்
ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்
சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்..???
அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
அங்கியிலிருந்து எடுத்து
ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்
உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி
சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்
அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட
மனதளவில் பெரியவன்
நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்
அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்
நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்
ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை...!!!
நீ எப்படி அதைச் செய்தாய்.....???
அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார்
ஓஷோ - அது உள் உணர்வு
( Intution) அதை விளக்க முடியாது என்றார் 

கலீல் ஜிப்ரான் கவிதைகள்
துறவி
மலைகளுக்கு அப்பால் இருந்த 
துறவியின் குடிலில்
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்

அப்போது ஒரு திருடன்
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
அவரை நாடி வந்தான்
"முனிவரே..!!!
எனக்கு நிம்மதி தாருங்கள்
உங்களால் மட்டுமே முடியும்
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."
"வருந்தாதே..!!!
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."
"ஆனால்
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!!"
"நானும் திருடன் தான்
கொள்ளைக்காரன் தான்..!!!"
"நான் ஒரு கொலைகாரன்
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!!"
"நானும் கொலைகாரன் தான்
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!!"
"நான் எண்ணிலடங்கா
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!!"
"நானும் செய்துள்ளேன்..!!!"
திருடன் எழுந்து நின்றான்
புரிந்து கொள்ள முடியாத
ஒரு பார்வை அவனிடம்
திரும்பி நடந்தான்
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்
நான் துறவியிடம் கேட்டேன்
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..???
அவன் உங்கள் மேல்
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!!"
துறவி சிரித்துக் கொண்டே கூறினார்
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்
ஆனால்
நிம்மதி அடைந்து போகிறான்..!!!"
நான் அப்போது தான் கவனித்தேன்
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது

சுவாமி விவேகானந்தர் 
 சகோதரா.....!!!
நீ ஏன் அழுகுகிறாய்..???
உனக்கு மரணம் இல்லை
நோய் இல்லை
துன்பம் இல்லை
உனக்கு துரதிர்ஷ்டம் இல்லை
நீ ஏன் அழ வேண்டும்..???
மாறுதலோ, மரணமோ உனக்கு இல்லை
இருக்கின்ற ஒரே பொருள் நீயே
உன் ஆன்மாவாக இரு 🔥
💥 சுவாமி விவேகானந்தர் 💥

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  பேசாலைதாஸ்
ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்
ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது
தொடர்ந்து புத்தரை நோக்கி
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்
ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது
எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக
அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்
தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்
நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்
நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தை சொல்லுங்கள்
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்
மௌனமாக சிரித்த புத்தர்
“இதுவும் கடந்து போகும்”
என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது
புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது
நன்றாகப் படித்திருந்தும்
பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு
தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால்
என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து
இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்”
என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும்
இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது
இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்”
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார்
இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்”
என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்
அடுத்து இருந்த அழகான பெண்
“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது
“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்
மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது
என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது
“இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சோர்ந்துவிட மாட்டீர்கள்
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது
‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்
அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்
“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்
கண்டிப்பாக மாறிவிடும்
தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள்
அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்
வெற்றி நிச்சயம்


நேசிப்பதற்காகவே நேசி
நீ ஒருவரை நேசித்தால்
நீ அவரை எல்லா
குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்
ஏனெனில்
அவை அவரின் பாகங்கள்
ஆனால்
அவை மாற ஆரம்பிக்கும்
நினைவில் கொள்
அன்பு ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யாது
ஆனால் அது மாற்றிவிடும்
நீ நேசித்தால் அது புரட்சியை கொண்டுவரும்
ஆனால் அது காலடிசப்தம் கூட கேட்காத அளவு
மிக அமைதியான முறையில் அந்த மாறுதலை கொண்டு வரும்
யாருக்கும் என்ன நிகழ்கிறது என்று கூட தெரியாது
ஆனாலும் எல்லாமும், மிகவும் அமைதியாக
மொட்டு மலர்ந்து மலராவது எப்படி யாருக்கும் தெரியாமல்
சப்தமில்லாமல் நிகழ்கிறதோ
அது போல மாறிவிடுவது நிகழும்
நீ நேசிக்கும் மனிதரை மாற்ற ஒருபோதும் முயற்சி செய்யாதே
ஏனெனில்
அந்த முயற்சியே உன்னுடைய நேசம் முழுமையானதாக இல்லை
நீ அந்த மனிதரின் ஒரு பகுதியைத்தான் நேசிக்கிறாய்
மற்றொரு பகுதியை நேசிக்கவில்லை என்பதை காட்டிவிடுகிறது
நான் உன்னை நேசிக்கிறேன்
ஆனால்
உன்னுடைய மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால்
உன்னுடைய முகம் எனக்குப் பிடிக்கவில்லை
என்று சொல்வது போல இருக்கும்
ஒரு மிகவும் குண்டான பெண் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
இதுவரை ஒரே ஒருவர்தான் என்னை நேசிப்பதாக சொன்னார்
ஆனால்
அவரும் நான் உன்னுடைய ஆன்மாவை நேசிக்கிறேன்
உன்னுடைய உடலை அல்ல என்று கூறினாள்
நீ நேசிக்கும்போது வெறுமனே
நேசி
அந்த நேசம் மாறுதலை கொண்டு வந்தால் சரி
அப்படி அது மாறுதலை கொண்டு
வரவில்லையென்றாலும் சரிதான்
நீ நேசிப்பதற்காகவே நேசி போதும்


கேள்வி : - புலன் ஆசைகளை அடக்கலாமா....???
முக்கியமாகப் பெண் ஆசையை...???
பதில் : - புலன் ஆசைகளை - முக்கியமாக பெண் ஆசையை ஒருக்காலும் அடக்கக்கூடாது
அந்த அடக்கப்பட்ட ஆசை பிரக்ஞை மனதிலிருந்து பிரக்ஞையற்ற மனதிற்குச் சென்று ஆழமாகப் பதுங்கிவிடும்
அது மெல்ல மெல்ல நாளமில்லாச் சுரப்பிகளைத் தாக்கும்
இதனால் பல உடல் கோளாறுகள் ஏற்படும்
மேலும் இந்த அடக்கப்பட்ட உணர்வு சந்தர்ப்பம் பார்த்து இருக்கும்
சமயம் வாய்த்தால்
பாம்பு போல சீறிப்பாயும்
அப்பொழுது அவன் தன்னிலை மறந்து ஒரு பைத்தியம்போலச் செயல்படுவான்
அல்லது மிருகம்போல செயல்படுவான்
பெரும்பாலான போலிச்சாமியார்கள் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்தான்
இவர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
எந்தப் புலன் உணர்வையும் அனுபவித்துத்தான் கடந்து செல்ல முடியும்
அதற்கு அதை அனுபவிக்கும் பொழுது நீங்கள் அதிலேயே பிரக்ஞையாக இருக்க வேண்டும்
உங்கள் மனம் அதிலேயே லயிக்க வேண்டும்
நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால்
உங்கள் மனமும் உடலும் நிகழ்காலத்திலேயே ஐக்கியமாகி இருக்க வேண்டும்
இது மிக முக்கியம்
இதற்கு ' தந்திராயோகம் ' என்று பெயர்
இப்படி லயித்து அனுபவித்த மனம்
ஒரு கட்டத்தில் திருப்தியுற்று அதை விட்டுவிடும்
அப்பொழுதுதான் மனம் பிரம்மச்சரிய நிலையை உண்மையாக அடையும்
அதற்கு முன்பு நடக்காது
இது எல்லா பழக்க - வழக்கங்களுக்கும் பொருந்தும்
முக்கியமாக குடிப்பழக்கம் புகைப்பழக்கதுக்குப் பொருந்தும்
இவற்றை மனம் வெறுக்கச் செய்ய
முதலில் மனத்தை அதனால் நிரப்ப வேண்டும்
அதற்கு ஒரே வழி அவற்றை பிரக்ஞையாக அனுபவித்து விடவேண்டும்
மற்ற முயற்சிகள் எல்லாம் தற்காலிகமானதுதான்
நிரந்தரமானது அல்ல
கேள்வி : - ஆசைகளை விட வேண்டும் என்று சொல்லுவதுகூட ஒரு ஆசை இல்லையா...???
அதைப்போலவே கடவுளை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதும் ஒரு ஆசைதானே...???
பதில் : - கிருஷணன் கீதையில் சொன்னது
'பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைச் செய்தால்
அந்தச் செயல் முழுமையாக இருக்காது
முழுமையற்ற செயலினால் ஏற்படும் பலனும் முழுமையாக இருக்காது'
இதற்கு என்ன அர்த்தம்..???
நீங்கள் கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்த்து தியானம் செய்தால்
அது முழுமையாக ஆகாது
தியானத்தை தியானத்திற்காகவே செய்யவும்
அப்பொழுது பலன் தானே வரும்
ஆனால் தியானம் செய்வதில் மட்டும் வைராக்கியமாக உறுதியாக இருக்கவும்
மற்றவை தானேவரும்"
ஒரு சீடன் : " ஓஷோ , உண்மையிலேயே நீங்கள் யார்..???
ஓஷோ : " எனக்குத் தெரியாத விஷயம் இதுதான்
உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்
சீடன் : " நீங்கள் சிருஷ்டிகர்த்தா எனப்படும் கடவுளா..???
ஓஷோ : "நான் அந்தப் பைத்தியக்காரன் இல்லை"
சீடன் : "நீங்கள் உலக மகா ஜெகத்குருவா..???"
ஓஷோ : " அதற்கு என்று சில பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள்"
சீடன் : " நீங்கள் உங்களையே அடிக்கடி 'நான் ஒரு பைத்தியக்காரன் ' என்று கூறிக்கொள்ளுகிறீர்களே...!!! ஏன்..???
ஓஷோ : " வேறு எப்படிச் சொல்ல..???
நான் ஒரு ஆன்மீகப் பைத்தியக்காரன்தான்"
சீடன் : " சுருக்கமாக உங்களுடைய செய்தி என்ன....???"
ஓஷோ : "எல்லாம் நன்மைக்கே"
சீடன் : "உங்களை இந்த நாட்டு பிரதமமந்திரியாக ஆக்கினால்..???"
ஓஷோ : "உடனே ராஜினாமா செய்துவிடுவேன்" 


ஒப்பிடுதல்:

ஒப்பிடுதல்:
மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.
மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.
"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.
ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான். ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
ஓஷோ

 ஓஷோ...... இந்த உலகம் ஆரோக்கியமற்று, மனநோய் பிடித்திருப்பதாக காணுகிறேன்
இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது
இதிலிருந்து தப்பிக்க என்ன வழி...???
‪பதில்‬ : " இதற்கு முக்கிய காரணம்
பழங்காலந்தொட்டே இந்த மனித இனத்தை ஆக்கிரமித்த மூடக்கொள்கைகளும் பிரக்ஞையற்ற செயல்களும்தான்
இதற்கு எல்லா மதங்களும் பொறுப்பேற்க வேண்டும்
இந்த மதங்களெல்லாம்
இந்த உலகத்தை கடவுள் என்ற ஒரு நபர்தான் ஏற்படுத்தினார் என்று கூறுகின்றன
அவர் எங்கும் நிறைந்தவர்
எல்லாம் தெரிந்தவர் என்று அவை கூறுகின்றன
இதனால் , மனிதன் நாம் கடவுளைவிட புத்திசாலி இல்லை என்று நம்பி
ஏதோ வாழ்ந்து மடிகிறான்
தன்னுடைய பகுத்தறிவு, சுயசிந்தனை எல்லாம் இழந்து
இயந்திரம்போல வாழ்கிறான்
இதுதான் இந்த உலகத்து துன்ப - துயரங்களுக்குக் காரணம்
என்னுடைய பார்வையில்
இந்த உலகத்தை எந்த ஒரு தனிநபரும்
ஏதோ ஒரு காரணம் கருதி படைத்திருக்க முடியாது
இந்த மிகப்பெரிய பொறுப்பை இல்லாத ஒரு தனிநபரிடம் ஒப்படைக்காதீர்கள்
நாம் இந்த பூமியில் இருக்கிறோம்
இதன் அழகிற்கும், ஆனந்தத்திற்கும், அழிவிற்கும் நாம்தான் காரணம்
நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்
நாம் இங்குள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும்
ஆகவே கடவுளை அகற்றிவிட்டு
அங்கு மனிதனை அமரச்செய்யுங்கள்
நீங்கள் எந்த அளவுக்கு இந்த உலகத்து பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக்கொள்கிறீர்களோ
அந்த அளவுக்கு இந்த உலகத்து துன்பங்கள் மறையும்
ஆனால்
எல்லா மதங்களும் என்ன சொல்கின்றன...???
" பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுங்கள் " என்று கூறுகின்றன
இது உங்களிடம் ஒரு ஆழமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது
உங்களை ஒரு சோம்பேறியாக்குகிறது
நீங்கள் உங்கள் சக்தியை முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை
எது நடக்குமோ அதுதான் நடக்கும் என்றும்
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்
என்றும் பேசித் திரியாதீர்கள்
உங்கள் தோல்விக்கு மூலகாரணம் உங்கள் சக்தியை நீங்கள் முழுமையாக உபயோகிக்கவில்லை என்பதுதான்
என்னுடைய அணுகுமுறை என்னவென்றால்
நீங்கள் ஒரு படைப்பாளியாக வேண்டும் என்பதே
ஏனெனில்
உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த சக்தி இருக்கிறது
நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும்
அதற்கு ஒரே வழி
நீங்கள் உங்கள் பழைய கடவுள்களை தைரியமாகத் தூக்கி எறியவேண்டும்
அவற்றை உங்கள் வாழ்விலிருந்து துடைத்து எறிய வேண்டும்
இதற்கு உங்களுக்கு மிகுந்த தைரியமும் சுயசிந்தனையும் தேவை
ஏனெனில்
பிறகு நீங்கள் வெறுமையை உணருவீர்கள்
ஒருவித பயம் உங்களிடம் ஏற்படலாம்
ஆனால் அதுதான் உண்மை
நீங்கள் இதுவரை நம்பிவந்த அனைத்தும் பொய், கற்பனை

வீரமும் அச்சமும் வெவ்வேறு அல்ல, அவை இரண்டும் மனிதன் வாழ்ந்திருக்க மிகவும் அவசியம், வீரமுடன் இருக்க வேண்டிய இடத்தில் அச்சப்படுவதும் தவறு, அச்சப்படும் இடத்தில் குருட்டு தைரியத்துடன் இருப்பதும் தவறு, மனிதன் எதற்க்காக அச்சப்படவில்லை என்றாலும் ஆசையிடம் மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனும் இருக்க வேண்டும், ஆசைக்கு கண்களும் இல்லை செவிகளும் இல்லை, ஆசை தோன்றிவிட்டால் அதை கட்டுப்படுத்துவது பெரும்பாலும் நம் கையில் இல்லை, அது நம்மை எங்கு கொண்டு செல்கிறதோ அங்கே போக வேண்டும், ஆசையின் இயல்பே நம் அறிவினை மயக்கி சிந்தனையை மறைத்துவிடுவது தான். எனவே அவ்வாறு நம்மை வஞ்சித்து கெடுதியை கொடுக்கும் ஆசையிடம் அச்சத்துடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது தான் சிறந்த அறமாகும்
இனிய காலை வணக்கம் 🙏
The Valor and Fear are not different,
They are both essential for man to live.
It is wrong to be afraid of where to stay with Valor. blind beaveness is also wrong in the place where the fear needed
Man should not afraid of anything
Anyway he should be Taking great care of desire with fear.
There is no eye and no ear for desire
When it comes to desire, it is not often in our hands to control it, we will be going according to desire where it goes
Nature of the Desire is it fully covers our mind and hides our thinking
Hence we should be fear about our Desires which deceive us and gives bad reputation

புத்தர் கூறுகிறார் :
வேதங்களிலும் உபநிடதங்களிலும் எந்த உண்மையும் இல்லை
அழகிய வார்த்தைகளை கேட்கும் போது கவனமாயிருங்கள்
தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கேளுங்கள்
மோனத்தை கைக் கொள்ளுங்கள்
எதுவெல்லாம் பொய் எனக் கண்டு கொள்ளும்போது
உன்னுடைய உணர்வுகளில் ஒரு மாற்றம் வருகிறது
மெய்யென்பது இருப்பது இருத்தல்
அது ஒரு எதார்த்தம் ஏற்கனவே இருப்பது
மெய் என்பது ஏற்கனவே இருந்து கொண்டே இருப்பது
மெய்யாலுமே ஆன்மீகவாதியாக இருப்பது என்பது ஒரு
மறுபிறப்பெடுப்பது
இன்னொரு முறை குழந்தையாகி விடுவது
நீ அறிந்ததை அழித்து விடு களங்கம் இல்லாதவனாகி விடு
மெய்யைப் பொய்யென்றும்
பொய்யை மெய்யென்றும்
கொள்பவன்
இழப்பது தன் நெஞ்சுதான்
அவன் ஆசையால் தன்னை நிரப்பிக் கொள்பவன்
மனம் என்பது ஆசையன்றி வேறில்லை
இந்தக் கணத்துக்காகவே இதயம் துடிக்கிறது
மனம் மட்டும் இந்தக் கணத்தில் இருப்பதே இல்லை
அது கடந்த கால அனுபவங்களை அசை போட்டுக் கொண்டு இருக்கிறது
அல்லது எதிர் கால கற்பனையில் திளைக்கிறது
மனம் நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை
ஆனால் நிகழ் காலம்தான் உண்மையில் இருப்பது
உன்னுடைய இதயத்திலிருந்து அன்பைக் காட்டு
கடவுளோடு உன்னை இணைப்பது உன் இதயமே 🌷
🌸 ஓஷோ
தம்ம பதம் I
மெய்யா பொய்யா

ஜென்னும்
Sufiம் (சூபி )
ஓஷோ
சிந்தனையில்,,,
ஜென்னும் சுபிசமும் இரு துருவங்கள்.
சுபிகள் மிகவும் அன்புடையவர்கள். மிகவும் அன்பு செலுத்துபவர்கள்.
மனித விழிப்புத் தன்மையின் வரலாற்றில் சுபிகள் போல தைரியமாக, முழுமையாக அன்பைப் பரிமாறிக் கொள்ளுபவர்கள் வேறு யாருமில்லை
அவர்கள் கடவுள் தன்மையை அல்லது கடவுளை காதலியாய் பாவித்து, உள்ளம் முழுக்க காதலாகி கசிந்து உருகுவார்கள்.
சொல்லப்போனால் பெண் தன்மைக்கு ஏற்ற சுபிசம்.(Sufism).
ஜென் நேர்மாறுதல். ஆண் தன்மைக்கு ஏற்றது.
ஜென் சூன்யத்தை வலியுறுத்துகிறது.
பெளத்தத்தில் கடவுள் கொள்கை என்று ஏதும் இல்லை.. அதற்கு தேவையும் இல்லை.
மதங்களின் முக்கிய அம்சம் பிரார்த்தனை.
புத்த மதத்தில் ( ஜென்) பிரார்த்தனையோ, மந்திர ஜபமோ எதுவும் கிடையாது.
நீங்கள் வெறுமையாக சூன்யமாக இருக்க வேண்டும்.
இந்த சூன்யத்தன்மைக்கு உங்கள் கடவுள் எண்ணமோ, பிரார்த்தனையோ, ஜபமோ தடையாக இருக்கும் என்று கருதுகிறது.
புத்த மதத்தின் சாரமே நீங்கள் சூன்யத்தில் இருப்பதுதான்."நீங்கள் "இல்லாத நிலையில் இருங்கள் என்று கூறுகிறது.
புத்தர் தன் மனித மனம் என்ற தன்மையில் ஆழமாக சென்று பார்க்கும் போது, அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று கண்டறிந்தார்.
புத்தர் மனத்தின் உள்நோக்கி பயணம் செய்தார்.
அவர் மேலும் மேலும் மன ஆழத்திற்கு செல்லும் பொழுது, அந்த வெற்றிடம் அல்லது சூன்யம் மிகவும் பரந்து விரிவதைக் கண்டார்.
அந்த சூன்யத்தின் மையமே உங்கள் உயிர்த்தன்மைதான்.
அது ஒரு மகா வெற்றிடம். அவ்வளவுதான்.
அது தன் உணர்வாய், தன் அறிவாய், உன் விழிப்பாய் உள்ளது.
அது ஒரு புரியாத புதிர். நம் மனதிற்கு அப்பால் செயல்படுவது. அந்தத் தன்மையை இதுவரை யாரும் அறிந்ததில்லை.
இந்தியாவில் உள்ளத்தின் மையத்தை ஆத்மா என்று அழைத்தார்கள். ஆனால் யாரும் அதன் பரிமாணத்தை கண்டறியவில்லை.
புத்தர்தான் முதன் முதலில் உணர்ந்தார்.
ஆத்மா என்றும் உள்ளம் என்றும் உள்ளே எதுவும் கிடையாது. ஏன் அங்கே ஒன்றுமே இல்லை.
ஆகவே அதற்கு "அனாதா" என்று பெயரிட்டார்.
இதன் பொருள் "ஆத்மா இல்லை" என்பதே
அங்கு நீ இல்லை. ஆனால் இருப்பது போல் தோற்றமளிக்கிறது.
ஓஷோ
புல் தானாகவே வளர்கிறது,,

ஜென் தனி மனித விழிப்புணர்வையே வலியுறுத்துகிறது
நாம் ஒரே பயிற்சியை திரும்பத் திரும்ப செய்யும்போது அது
பழக்கமாகி இயந்திரத் தன்மையாகி விடுகிறது
அதில் பிறகு எந்த விழிப்புணர்வும் இருக்காது
பிரபஞ்ச மனம் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இயங்கக் கூடியது
உங்கள் மனதை ஒன்றுமற்றதாக ஆக்குங்கள்
பிரபஞ்ச மனம் ஆகுங்கள் ஞானம் பெறுங்கள்
பிரபஞ்ச மனத்தில் காலம் இடம் மறைந்து விடுகின்றன
பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு பயத்தின் வெளிப்பாடு அல்ல
நமது முகம் அன்பால் மகிழ்ச்சியாக மலர்ந்து இருக்கட்டும்
கருணையோடு காதலோடு இருக்கட்டும்
எந்த வித பயமோ குற்ற உணர்வோ இருக்க வேண்டாம்
கடவுளைப் பற்றிய பலவகை எண்ணங்களே கடவுளை அடைய தடையாய் உள்ளன
பிரபஞ்ச மனம் தன்னறிவாய் தன்னுணர்வாய் செயல் படுகிறது
சூன்யம்தான் உருவமாகி வந்துள்ளது
உருவம் திரும்பவும் சூன்யம் ஆகும்
உடல் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இருக்கும்
மனம்தான் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர் காலத்திலேயோ இருக்கும்
மனத்தை நிகழ் காலத்தில் வைக்கும் பயிற்சிதான் ஜாஜென் 🏵
💐 ஓஷோ
ஜென் 💐

சிலைகளைக் கும்பிடுவது
சரியா..???
மஹரிஷி ரமணரின் பதில்
முஸ்லீம் அன்பரின் சந்தேகம்
திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி
தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம்
பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின்
மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம்
சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு
ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர்
அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது
பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா....???
மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது..???
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா..???
மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம்
ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர்
உங்களை எடுத்துக் கொள்வோம்
உங்களுக்கு உருவம் உண்டா...???
பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள்
ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே...!!!
பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்
மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா...???
பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது
ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது
மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால்
இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்...???
உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்..???
பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்
மஹரிஷி: ஓ...!!!
அப்படி என்றால்,
உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது
ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள்
இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள்,
உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது..???
கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார் 

சிறந்த பொய் 🎈
🎁 ஒரு அரசன் நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு
ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்
ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை
அரச சபைக்கு வந்து
தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்
அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்
அந்த ஏழை சொன்னான்
''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..???
நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது
அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்
''அரசனுக்கு கோபம் வந்து விட்டது
''நீ பொய் சொல்கிறாய்
நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது..???' என்று கத்தினான்
உடனே ஏழை சொன்னான்
"அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்
நான் சரியான பொய் சொன்னேன் என்று
எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்
''அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்
உடனே சொன்னான்
''இல்லை, இல்லை
நீ பொய் சொல்லவில்லை'' என்று அவசரமாக மறுத்தான்
ஏழை சொன்னான்
'நல்லது அரசே
நான் சொன்னது பொய் இல்லை
உண்மைதான் என்றால்
எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்
''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று
ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்

கடவுள் இருக்கிறாரா..???
"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை...????'' சீடன் கேட்டான்
குரு ஒரு கதை சொன்னார்
"கடவுள் இருக்கிறார்" என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான்
'கடவுளே...!!! என்னோடு பேசுங்களேன்....!!!'
அப்போது குயில் ஒன்று பாடியது
அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்
'கடவுளே, என்னோடு பேசுங்களேன்..!?!'
உடனே உரத்த இடியோசை, எழுந்தது
அதையும் பொருட்படுத்தாத அவன்
'பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா..???' என்று இறைவனிடம் கேட்டான்
சுடர்விட்டுப் பிரகாசித்த படி
வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது
அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்
'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா..???'
கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்
அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான்
'கடவுள் இல்லை..!!!
இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்
பார்க்க முடிந்திருக்கும்
அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே..!!!''
கதையைக் கேட்ட சீடன் சொன்னான்
"புரிந்தது குருவே..!!!
கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்
நாம் தான் புரிந்து கொள்வதில்லை..!!!''
என்றான்
உண்மை தானே