அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் 01
அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் பாசமும், மாவீரர் தியாகமும் பேசி, புலம் பெயர் தமிழர்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டி வரும் ஒரு பிம்பத்தின் பின்னால், இத்தனை கொடூரமான துரோகங்களும், கொலைகளும் ஒளிந்திருக்கின்றனவா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகால வரலாறு.
மேடைகளில் "ஆமைக்கறி சாப்பிட்டேன்", "புலிகளோடு இருந்தேன்" என்று சீமான் கட்டவிழ்த்து விடும் கதைகளுக்கு நடுவே, நிஜமாகவே களத்தில் நின்று போராடிய ஒரு 'உண்மையான புலி வீரன்' எப்படி சதி செய்து வீழ்த்தப்பட்டார்? அதன் பின்னால் இருக்கும் அயோக்கியத்தனம் என்ன? என்பதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஈழத் தமிழ் சமுதாயம்.
யார் இந்த உண்மையான புலி வீரன் சுப. முத்துக்குமார்?
திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சுப. முத்துக்குமார், வெறும் 18 வயதிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, இலங்கை சென்று 4 ஆண்டுகள் கடுமையான ராணுவப் பயிற்சி பெற்றவர்.பல சண்டைக்களங்களை கண்டவர்.
புதுக்கோட்டை பாவாணன் வீட்டில் தங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி போன்ற கடலோரப் பகுதிகளில் இருந்து பெட்ரோல், டீசல், ரத்தம், உணவு, மருந்துகளைத் தன் உயிரைப் பணையம் வைத்து கடல் மார்க்கமாக ஈழத்திற்குத் தடையின்றி அனுப்பியவர்.
1994 ஆகஸ்ட் 15-ல் வேலூர் கோட்டை முகாமில் இருந்த 80 புலிகளைத் தப்ப வைக்க, 90 அடி சுரங்கம் தோண்டிக் கொடுத்ததில் முத்துக்குமாரின் பங்கு அளப்பரியது. ஆபத்தான அகழியில் இருந்து 28 போராளிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
1995-ல் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பிய, பிரபாகரனின் முக்கிய மெய்க்காப்பாளரான 'ரோமியோ' உள்ளிட்ட 5 புலிகளைப் பாதுகாப்பாக ஈழத்திற்குக் கொண்டு சேர்த்தவர் இந்த முத்துக்குமார் தான்.
இறுதிக்கட்டப் போரின் போது கூட, தன் கார் விபத்துக்குள்ளான நிலையிலும், உயிரைக் கொடுத்து ஈழத்திற்கு பெருமளவான மருந்துகளையும் உபகரணங்களையும் அனுப்பி வைத்தார் முத்துக்குமார்.
ஈழப்போரும் முடிவடைந்தநு.
ஈழப் போர் முடிவடைந்த நிலையில், 'காங்கிரஸ் எதிர்ப்பு' என்ற முழக்கத்தோடு சீமான் களம் இறங்கியபோது, முத்துக்குமாரும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், இங்கே தான் பார்ப்பன லாபியின் சதி அரங்கேறியது.
கட்சியில் தலமை ஒருங்கிணைப்பாளராக முத்துக்குமாரே இருந்தார்.
ஆனால் கட்சி எப்படி ஆரம்பித்தது என்ற மறைக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
சி.பா. ஆதித்தனார் தொடங்கிய "நாம் தமிழர்" என்ற கட்சியின் பெயரை, சிவந்தி ஆதித்தனிடமிருந்து சீமானுக்கு வாங்கிக் கொடுத்ததே துக்ளக் சோ மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி தான். இவர்கள் இருவரும் தீவிர தமிழின மற்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.
மத்திய உளவுத்துறைக்கும் பார்ப்பன கும்பலுக்கும் அடிபணியும் ஒரு 'கைப்பாவை' மட்டுமே தமிழகத்தில் தேவைப்பட்டது. அந்த இடத்தில் சீமான் கச்சிதமாகப் பொருந்தினார்.
ஆனால், கட்சியில் முத்துக்குமார் போன்ற ஒரிஜினல் புலிகள் இருக்கும் வரை, புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க முடியாது என்பதையும், தமிழர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்வதை தடுக்க முடியாது என்பதையும் சீமானும், மத்திய உளவுத்துறையும் உணர்ந்தனர்.
கட்சியில் முத்துக்குமாரின் செல்வாக்கு உயர்ந்தது, சீமானுக்கும் அவனது அள்ளு சில்லுகளுக்கும் பொறுக்கவில்லை. மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்குத் தொல்லை என்று நினைத்து, பழைய கடத்தல் வழக்குகளைத் தூசி தட்டினர்.
அதுவும் வேலைக்காகாத போது, மத்திய உளவுத்துறையின் ஆசியோடு, இயக்கப் பகைமை கொண்ட ஆட்களை வைத்து சுப. முத்துக்குமார் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
முத்துக்குமார் கொலை வழக்கில் அவரோடு இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இரண்டே வருடங்களில் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. தன் கட்சியின் முக்கியத் தூணாக இருந்த முத்துக்குமாரின் கொலைக்கு, சீமான் ஒரு மேல்முறையீடு கூட செய்யவில்லை.
இந்த அசிங்கமான அரசியல் மற்றும் கொலையின் பின்னணி முழுமையாகத் தெரிந்ததால்தான், அப்போதே கட்சியின் 17 முக்கிய நிர்வாகிகள் சீமானை 'அயோக்கியன்' என்று காறி உமிழ்ந்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர்.
முத்துக்குமாரைக் கொன்றதோடு இவர்களின் வெறி அடங்கவில்லை. முத்துக்குமாரின் சொத்துக்களையும், புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் கோடிக்கணக்கான பணத்தையும் முழுமையாகக் கைப்பற்ற சீமானும் அவனது அல்லக்கைகளும் அசிங்கமான திட்டங்களைத் தீட்டினர்.
முத்துக்குமாரின் மனைவி மாதரசியை (அப்போது இளம் வயதுப் பெண்) எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று 25 வயது வித்தியாசம் பாராமல் சீமான் முயன்றான். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை.
உடனே, சீமான் தன் அசிங்கமான தொடர்புகளை மறைக்கவும், அந்தப் பெண்ணின் வசமிருந்த அதிகாரத்தைக் கைப்பற்றவும் தன் விசுவாசமான அல்லக்கை 'சாட்டை' துரைமுருகனுக்கு மாதரசியைத் திருமணம் செய்து வைத்தான்.
இதன் மூலம் முத்துக்குமாரின் மனைவி 'சாட்டை'யின் மனைவியாக்கப்பட்டார். முத்துக்குமார் வகித்த கட்சியின் முக்கியப் பதவியை 'சாட்டை' துரைமுருகன் எடுத்துக் கொண்டான்.
சிங்கள அரசு பாலச்சந்திரனைச் சுட்டுக் கொன்றதைப் போல, போராளியின் வாரிசு நாளை வளர்ந்து வந்து அமைப்பைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, முத்துக்குமாரின் வாரிசு கருவிலேயே அழிக்கப்பட்டது. (பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமியைப் பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்த காமுகன் சீமானுக்கு இது ஒன்றும் புதியதல்ல).
மேலும், மக்கள் யாரும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஈழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ராணுவம் இடித்ததைப் போல, சுப. முத்துக்குமாரின் கல்லறையையும் இடித்து நொருக்கி, தடம் தெரியாமல் அழித்தது இந்த சீமான் - பார்ப்பனக் கும்பல்.
ஈழத்து மண்ணில் மாபெரும் விடுதலைப் போரை வழிநடத்திய தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் தார்மீக அரசியல் களத்தை வழிநடத்தும் பொறுப்பை சுப. முத்துக்குமார் போன்ற ஒரு மெய்யான களப் போராளியிடம் தான் ஒப்படைத்திருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உயிரைப் பணையம் வைத்து ஆயுதம் கடத்திய, சிறை உடைத்த, தலைவரின் மெய்க்காப்பாளரையே மீட்டெடுத்த ஒரு நிஜமான புலியின் கைகளில்தான் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலமும், இளைஞர்களின் நல்வாழ்வும் பாதுகாப்பாக இருந்திருக்கும்.
அதை விடுத்து, வெற்று மேடைப் பேச்சையே முதலீடாகக் கொண்ட ஒரு சினிமாக்காரனிடம் ஒட்டுமொத்த இனத்தின் தலைவிதியையும் தலைவர் நிச்சயம் ஒப்படைத்திருக்க மாட்டார்.
களத்தில் நின்ற சுப. முத்துக்குமார் உள்ளிட்ட உண்மையான புலிகள் அனைவரும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர், இனி தங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்று உறுதி செய்த பின்னரே, சீமானின் அண்டப்புழுகுகளும் ஆகாசப்புழுகுகளும் கட்டுப்பாடின்றி வெளிவரத் தொடங்கின.
முத்துக்குமார் என்ற ஒரிஜினல் புலி உயிரோடு இருந்திருந்தால், சீமானின் 'ஆமைக்கறி', 'பூனைக்கறி' கதைகளுக்கு முறையாக பச்சமட்டையால் பதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
முத்துக்குமாரின் மர்ம மரணமும், அவரது மனைவியையும் பதவியையும் சாட்டை துரைமுருகன் ஆட்டையப் போட்ட அசிங்கமும், ஆர்.எஸ்.எஸ் - பார்ப்பன லாபியின் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம், சீமானின் பின்னால் இருக்கும் "பார்ப்பனக் குடுமி" இன்று உலகத் தமிழர்களின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
முக முத்துவிற்கு அஞ்சலி செலுத்தத் தெரிந்த சீமானுக்கு, நாம் தமிழர் கட்சியின் உண்மையான பலமாக இருந்த விடுதலைப்புலி மாவீரன் சுப. முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த மனமில்லை. அவரைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து வருகிறான்.
ஆனால், தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. ஈழத்தமிழர்களின் குருதியையும், கண்ணீரையும் காசாக்கிப் பிழைப்பு நடத்தும் இந்த வியாபாரக் கும்பலின் தராதரமும், சீமான் என்பவன் யார் என்ற கசப்பான உண்மையும் இன்று தமிழக மக்களுக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது.
அதனால்தான், தேர்தல் களம் தோறும் மக்கள் அவனை எங்கு வைக்க வேண்டுமோ, அங்குதான் வைத்திருக்கிறார்கள்.
மாவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, அடுத்தவன் மனைவியையும் பதவியையும் ஆட்டையப் போடும் இந்த அயோக்கியர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
அறிவார்ந்த சமூகமும் தமிழுணர்வு கொண்ட மக்களும் இந்த பார்ப்பனக் கைக்கூலிக் கயவர்களை என்றென்றும் புறக்கணித்தே தீரும்!
No comments:
Post a Comment