Tuesday 27 February 2024

தேன் தமிழ் ஓசை

 நோர்வே நாடும் இலங்கை அரசும் CeyNor என்ற மீன்பிடி துறை சார் பொருளாதார திட்டத்தை அறிமுகம் செய்த காலத்தில், இலங்கை நாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவு மக்கள் நோர்வே நாட்டிற்கு வந்தார்கள், அதனையொட்டி Folkehøyskole கல்வி நடவடிக்கை ஊடாகவும் பெருமளவு இலங்கைத்தமிழர்கள் நோர்வே நாட்டுக்கு வந்தார்கள், இதன் பிறகு 1986 காலகட்டத்தில் அகதிகளாக பெருமளவு மக்கள் நோர்வே நாட்டுக்குள் வந்தார்கள். இவர்களின் சுகாதார ந்டவைக்கைகளுக்காக பேர்கன் கம்யூன் சில அறிவுத்தல்களை தமிழ் மொழி மூலமாக கொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் அடைப்படையில் வானொலிசெவை ஒன்றை வாரம் ஒருதடவை ஒரு மணித்தியால தமிழ் சேவையை நடத்தும் சந்தர்ப்பம், தமிழ்ச்சங்கத்துக்கு கிட்டியது.

                                                              இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வானொலி குழு ஒன்றை சந்திரமோகன் ஏற்பஆடு செய்திருந்தார். இந்த வானொலி குழுவானது தமிழ் சங்கத்தின் ஆதரவில் உருவாக்கப்பட்டு வானொலி முன்னெடுக்கப்பட்டது.  தேன் மதுரம் என்ற பெயர் அப்போது என்னால் முன்மொழியப்பட்டது பின்னர் தேன் தமிழ் ஓசை என்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு வானொலி சேவை ஆரம்பமானது. இந்த குழுவில் எல்மர், தேவநாதன், க்ரோலின், னிதி, எலிசபேத், யூலியஸ், சந்திரமோகன் இன்னும் பலர் இந்த வானொலியில் ஆர்வமாக ப்ங்கெடுத்தனர். நான் சிறுவர் நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொண்டு அதனை பல வருடங்களாக நடத்தி வந்தேன். அதனால்தான் வானொலி மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டேன்.

                                                         நான் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்றிருந்தேன், தொடர்ந்தும் பேர்கன் பல்கலைக்கழக த்தில் அதே துறையில் முதுகலைமானியும் பெற்றேன், பின்னர் கலாநிதி பட்டம் பெறுவதற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில்  M Phil படிக்க சென்றுவிட்டேன். பின்னர் மீண்டும் பேர்கன் வந்தேன். அப்பொழுது தேன் தமிழ் ஓசையின் உரிமம் தனிப்பட்ட நபர்களின் பெயரில் மாற்றப்பட்டு வானொலி சேவையானது நடைபெற்றது. சிற்றலை வரிசையில், வாரம் இரண்டு மணித்தியாலம், Student Radio Station வழியாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

                                                      நான் பேர்கன் நகருக்கு மீண்டும் வந்தபோது வானொலியில் இணைந்து செயலாற்ற ஆசைப்பட்டேன் பல வருடங்களாக காத்திருந்தேன். ஏனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் வானொலி விழாவிலும் நான் ப்றக்கனிக்கப்பட்டேன், அழைப்பு விடுவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நான் நோர்வே வானொலி அதிகார சபை  Mediatilsynet தொடர்பு கொண்டு தேன் தமிழ் ஓசை வானொலி பற்றி கேட்டபொழுது வருடாவாருடம் 100000 குரோனர் வழக்கப்படு வந்தவிடயம் எனக்கு தெரியவந்த்தது. அதற்கான நிதி அறிக்கையும் எனக்கு தரப்பட்டது. 

                                                     நான் தமிழ் சன்ன்கத்தோடு தொடர்பு கொண்டு, தமிழ் சங்கத்தின் பெயரில் இருந்த வானொலி எப்படி தனியார் கைகளுக்கு மாறியது என்று கேட்டேன், தமிழ் சங்கம் அதற்கான பதிலை தரவில்லை. பின்னர் நான் தேன் தமிழ் வானொலிக்கு கிடைத்த மானிய விபரங்களை நான் முக நூலிலே தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பேர்கன் நகரில் பெரும் சலசல்ப்பு ஏர்பட்டது. இதன் எதிரொலி தமிழ் சங்கத்திலும், தமிழ் கிறிஸ்தவ ஒன்றியத்திலும் எனக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டது.

                                                   தேன் தமிழ் ஓசை பொதுவான மக்களுக்கானது என்பதை நான் நிலை நாட்டவேண்டும் என்பதற்க்காக Bronøysund 

No comments:

Post a Comment