Saturday 28 October 2023

                                               விழி மூடிய நீதி!

                                   ( சரித்திர நாடகம்)

                                                           காட்சி ஒன்று

மேடை எங்கும் இருள் பரவி நிற்கின்றது. மேடையின் நடுவே, மிக மிக முன் பாக ஒரு தூண் கம்பீர மாக நிற்கின்றது. அதன் மேலே ஒரு மண்டை யோடு தெரிகின்றது. அதன் மீது மட்டும் ஒலி பாய்ச்சப்படுள்ளது. பின் பக்கம் கறு ப்பு திரை உள்ளது. அரசதரப்பு வழக்குரைஞர் மேடையிலே தோன்றுகின்றார்

வழக்கறிஞர்: சபையோரே,சரித்திரம் பற்பல கொலைகளை  சந்தித்துள்

                           ளது. அந்த கொலைகளுக்கு நீதி விசாரணைகள் நடத்தப்

                              படவில்லை. அக்கொலைகள் யாவுமே நீதியின் கண்களு 

                             க்கு மறைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோடு கிறிஸ்து 

                            வாழ்ந்த காலத்திற்கு  உரியது என தடயவியல் சான்றுகள் 

                            சொல்கின்றது, அதுவும் சிரைச்சேதம் செய்யப்பட்ட 

                            கொலையாக இருக்கின்றது என தடய வல்லுணர்கள் எடு 

                           த்திரக்கின்றார்கள். அப்படி இயேசு காலத்தில் சிரைச்சேதம்

                           நடந்து உள்ளது என்றால் அது யோவான் என அழைக்கப்படு

                           கின்ற ஸ்நாபக அருளப்பரின் கொலையாகவே இருக்க 

                           முடியும், வாருங்கள் என்ன நடந்தது என்று பார்ப்போம்!

                           பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூனையும், மண்டையோ

                           ட்டையும் எடுத்து செல்கின்றார். பின் பக்கம் உள்ள கறுப்பு 

                            திரை விலகுகின்றது)


                                                        காட்சி இரண்டு

 ஏரோது, ஏரோதியாள், மந்திரிகள் சபையில் வீற்றிருக்க, சலோமி ஆடலுடன் அரங்கத் தில் பிரவேசிக்கின்றாள். சலோமியின் நடனம், எபிரேய பாணியில் அமைவது நல்லது.

ஏரோது: அபாரம் அற்புதம் கலிலேயா தெசமெங்கும் இப்படிப்பட்ட ஒரு

                   நடனத்தை யாருமே கண்டுகளித்திருக்கமாட்டார்கள், நாட்டிய

                  நாடகபேரொளி, உலகம் போற்றும் நடன நர்த்தகி என் மகள்

                  சலோமையே உன் நாட்டிய விருந்துக்கு நான் ஒரு பரிசு தர 

                  வேண்டுமே! கேள் எதுவானாலும் கேள் தருகின்றேன்.

                                  (உடனே எரோதியள் எழுந்து)

ஏரோதியாள்: சலோமை, யோவானின் தலையை பரிசாக கேள்!

ஏரோது:  யோவான் தலையா? பரிசாகவா? ஏன் இந்த கொலைவெறி?

                     எதற்காக அவன் தலை உனக்கு?

ஏரோதியாள்: என் மணவாளரே! அந்த யோவான் ஒரு விச ஜந்து! உம்மை

                                யும் என்னையும் பற்றி அவதூறு பேசித்திரிகின்றான்,

                               அதுமட்டுமல்ல இயேசு என்ற புரட்சியாளனுக்கு ஸ்நானம்

                               கொடுத்து, வரப்போகின்ற யூத ராஜா இயேசு என நாடெ

                               ங்கும் பிரசங்கம் செய்கின்றான். இறை அரசை இந்த 

                               உலகத்தில் நிறுவவேண்டும் என துடிக்கின்றான். 

                              இவனை விட்டால் உமதுப்பதவிக்கே ஆபத்து, உடனே 

                              அவனை படுகொலை செய்யவேண்டும்!

ஏரோது:    என்ன இன்னுமொரு அரசு, உரோமை பேரரசுக்கு எதிராகவா?

                      அரச சதிப்புரட்சிக்கு யோவானும் இயேசுவும் தீட்டம் தீட்டுகின்

                      றார்களா? இத அப்படியே விட்டுவிடக்கூடாது, முளையிலேயே

                     கிள்ளி எறியவேண்டும், ஏரோதியாள் சொல்லவதே சரியானது!

                      எங்கே காவலா! யோவானின் தலையை சிரைச்சேதம் செய்து

                      அவன் தலையை பரிசாக சலோமைக்கு கொடு

                                                   (திரை மூடுகின்றது,)


காட்சி மூன்று

(மீண்டும் வழக்கறிஞர் மண்டையோட்டு தூணுடன் மேடையிலே, மிக மிக முன் பக்கமாக தோன்று கின்றார். பின் பக்கமாக கறுப்பு திரைச்சீலை தென்படுகின்றது. )

வழக்கறிஞன்: யோவானுக்கு என்ன நடந்தது என்று இப்போது எல்லோருக்

                             கும் தெரியும், இந்த கொலை பற்றி விசாரிக்கப்பட வேண்

                             டியவர்கள் ஏரோது அவன் மணைவி எரோதியாள், இந்த

                             குறுக்கு விசானையை தொடங்கு முன்பு, இந்த கொலை 

                             க்கு முக்கிய காரணம், யோவான் இயேசுவோடு இணை

                             ந்து இறை இராட்சியத்தை இவ்வுலகத்தில் அமைக்க முய 

                             ற்ச்சிக்கின்றார்கள் என்பதே! இந்த சந்தேகத்தின் அடிப் 

                             படையில், இயசுவை கொலை செய்வதற்கு பரிசேயர்கள், 

                             சதுசேயர்களின் சதித்திட்டம் பின்னணியாக இருக்கின்றது

                             என்பதே உண்மை! இயேசுவின் கொலை ஆய்வு செய்ய

                             ப்பட வேண்டும்.

( வழக்கறிஞன் மீண்டும் மண்டையோட்டு தூணை துக்கிக்கொண்டு மறை கின்றார், பின்பக்க உள்ள கறுப்பு திரை விலகுகின்றது, மேடையில் இடப் புறமாக இருந்து சில சிறுவர்கள் அரங்கத்தில் பிரவேசிக்கின்றார் கள். அவர்கள் கைகளில் ஒலிவ மரக்கிளைகள் இருக்கின்றன, ஓசானா தாவீ தின் குமரன் ஓசானா ஓசானா என்று சிறுவர்கள் பாட பின்னணி குழுவி னரும் சேர்ந்து குரல் கொடுக்க இயேசு வெள்ளை அங்கியோடு மேடைக்கு வந்து அப்படியே வலப்புறமாக மேடையை விட்டு விலகுகி ன்றார், மெல்லி தயாக, ஓசான்னா என்ற பாடல் இசை இசைத்துக் கொண்டே இருக்க வேண் டும். பின்பக்கமுள்ள கறுப்பு சீலை விலகுகின் றது,  மேடை இப்போது சியோன் ஆலையாமாக காட்சி அளிக்கின்றது. சதுசேயர்கள், பரிசேயர் கள் கூட்டமாக ஒரே தொனியில் ஜெகோவை கடவுளை  ஆராதிக்கின்றா ர்கள். ஆராதனை செபத்தை தலைமக்குரு ஆனாஸ் ஆரம்பிக்கின்றார்)

ஆனாஸ்: வானத்தையும் பூமியையும் சகல சிருஸ்டிகளையும் படைத்தளி  

                      த்த எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம். எங்கள் பிதாப்

                     பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்,யாக்கோபு, மோசே இவர்கள்

                     கடவுளான எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம், உமது 

                     தெரிந்து கொள்ளப்பட்ட இனமாக இஸ்ரவேலராகிய எம்மை

                     உமது பிள்ளைகாக தெரிந்தெடுத்தமைக்காக எமது தந்தையே

                     உம்மை புகழ்கின்றோம். 

பரி+ சதுசேயர்கள் எல்லோரும், எமது தந்தையே உம்மை  புகழ்கின்றோம். 

என்பதை மட்டும் உச்சரிக்கின்றார்கள், இப்பொழுது ஓசான்னா என்ற பாட லின் இசை சற்று பெரிதாக கேட்கின்றது.

ஆனாஸ்: ஓசான்னா என்ற வாழ்த்தொலி கேட்கின்றதே! என்ன அது?

 (என்று கேட்க பரிசேயரில் ஒருவன்)

பரிசேயன் 1: அதை என்னவென்று சொல்வது தலைமைக்குருவே! இயேசு

                             என்ற அந்த மந்திரக்காரன் பாஸ்கா பண்டிகையை 

                           கொண்டாட எமது புனித நகராம் ஜெருசலேமுக்கு வருகை

                           தந்துள்ளான். அவனை யூதர்களின் இராசாவே வருக வருக 

                           என வாழத்தி வரவவேற்பதாக கேள்விப்பட்டேன்.

ஆனாஸ்:  என்ன உளறுகின்றாய், யூதர்களின் இராசாவா? அப்படியா 

                    என்ற அவன் சொன்னான்.

பரிசேயன் 2: அதுமட்டுமல்ல குருவே, தான் கடவுளால் அனுப்பட்ட 

                          மெசியா என்று தன்னைத்தானே சொல்லித்திரிகின்றான்.

சதுசேயன் : ஆமாம் ஆமாம் அப்படித்தான் அவன் சொல்லித்திரிகின் 

                        றான். அதுமட்டுமா? தான் கடவுளின் மகன், ஒரே பேரான 

                        மகன் என்றும் பிதற்றுகின்றான்

ஆனாஸ்: கடவுளின் மகனா? அபச்சாரம அபச்சாரம்! இது தேவ தூசணம்!

                      இவன் தச்சன் மகன் யோசேப்பின் மகனல்லவா? இவன் தாய்

                      மரியாளும் தாவீது குலத்தவள் தானே! இவளது உறவுகளும் 

                      நமக்குள் இருக்கின்றார்களே! அப்படி இருக்க இறை மகன் 

                      என்று எப்படி அவன் சொல்லக்கூடும்? கேட்கவே காது 

                      கூசுகின்றது!

பரிசேயன்1: அதுமட்டுமா சொன்னான்! ஜெருசலேம் ஆலையத்தை இடித்

                            துவிடுங்கள், நான் மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்பு 

                          வேன் என்று சொல்கின்றான்.

                                           (எல்லோரும் சிரிக்கின்றார்கள்)

ஆனாஸ்: என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சி இது! எம் பிதாப்பிதாக்

                     கள் இந்த ஆலையத்தைக்கட்டி முடிக்க பல்லாண்டுகள் முயற் 

                    ச்சித்தார்கள், இயேசு என்ற முட்டாள் மூன்று நாளில் முடிப்பா 

                    னாம்!

                                              (மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றார்கள்)

பரிசேயன் 2: அதுமட்டுமா சொன்னான், புனித நகரம் ஜெருசலேம், அதன்

                              ஆலயம், கோட்டை கொத்தளங்கள், அரண்மனை, இந்த

                             ஜெபக்கூடம் எல்லாம் இடித்து அழிக்கப்படும், கல்லின் 

                             மேல் கல் இராதபடி இடித்து அழிக்கப்படும், புதிய ஜெருச 

                         லேம், புதிய வானம் புதிய பூமி உருவாகப்படும் என எச்சரி 

                         க்கின்ரான் இயேசு!

சதுசேயன்: ஆமாம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன், உரோமை

                          இராச்சியம், யூத இராட்சியம் இவைகளை அழித்து, இறை

                          அரசை தன் தலமையில் அமைப்பதுவே அவன் திட்டம்!

பரிசேயன் 1: இந்த மாயக்காரன் இயேசு, பேயேல்ஸேபு என்ற பேய்களின் 

                             தலைமைப்பேயின் உதவியால், குருடர்களுக்கு பார்வை

                            அளிக்கின்றான், முடவர்களை நடக்கவைக்கின்றான்

பரிசேயன் 2: தொழு நோயாளர்களை தொட்டுக் குணமாக்கின்றான்,

                          இறந்தவர்களை உயிரோடு எழுப்புகின்றான். தனது மந்திர

                          தந்திரத்தால் மாயங்கள் செய்து, அதனை புதுமை என நம்

                          பவைத்து மக்களை புரட்சிக்கு வழிவகுக்கின்றான். இவனை

                          ஆதரித்து பேசிய பரபாஸும் இப்போது சிறையில் இருக்கி

                          ன்றான்.

சதுசேயன்: மக்களின் ஆதரவை அவன் திரட்டுவதும் உண்மையே!  இயேசு

                           சொல்வதையும், அவன் செய்வதையும் ஒருங்கிணைத்து

                          பார்த்தால் யூதர்களின் இராசா நான் தான் என்று சொல்லா 

                          மல் சொல்கின்றன்

பரிசேயன் 1: இப்படியே இந்த பைத்தியக்கார இயேசு உளறித்திரிந்தால்,

                          அதன் விளைவு என்னவாகும் தெரியுமா?

பரிசேயன் 2: யூத இராணுவம் ஜெருசலேமை ஆக்கிரமிக்கும், மக்களை

                          வாட்டி வதைக்கும்

பரிசேயன் 1: நாம் மீண்டும் நாடறவர்களாக, நாடோடிகளாக பாலைவனத்

                             தில் அலையவேன்டியது தான்!

பரி1+பரி2: ஆம் நாம் மீண்டும் பாலைவனத்தில் நாடறவர்களாக அலைய

                      வேண்டியதுதான்.

( எல்லோரும் ஒருமிக்க குரல் கொடுக்க, அங்கே கூச்சலும் குழப்பு உண்டா கின்றது)

ஆனாஸ் : அமைதி அமைதி சற்று பொறுமைகாருங்கள், இது பற்றி நான்

                    தமைக்குரு கயாபாவிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், அதற்

                    முன்னர் இயேசுவை அழைத்து அவனை கண்டித்து திருத்த

                    பார்க்கலாம், அல்லது நம் பக்கம் வளைக்கப்பார்க்கலாம்

                    என்ன சொல்கின்றிர்கள் சதுசேயரே!

சதுசேயர்: ஆமாம் அதுவும் சிறந்த யோசனைதான், இது பற்றி நான் முன்

                    னமே நினைத்ததுண்டு, ஆனால் அது இலேசான காரியமல்ல, 

                    இயேசுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு.

                    கூடவே அவனது சீடர்களும் எப்போதும் புடை சூழ்ந்தவண்னம்

                    உள்ளார்கள். அவனை யாரும் அறிய வண்ணம் படை வீரர்

                    களை கொண்டு கைது செய்து அழைத்து வந்து, எச்சரித்தால்

                    அவன் அடங்கிவிடுவான்

பரிசேயன்1 : அவனை தனியாக கைது செய்வது இயலாத காரியம், கூட் 

                          டம் அவன் பின்னால் அலைமோதுகின்றது.

சதுசேயர் : கொஞ்சம் பொறுங்கள், நான் திட்டம் வகுத்துள்ளேன், இயேசு

                      வின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்கரியோத்திடம் இரக

                      சியமாக தொடர்பு கொண்டு,  இயேசு தனிமையாக இருக்கும்

                      இரவு நேரம் எது? எந்த இடம் என்பதை தெரிவிக்க சொல்லி

                      இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் உடண்பட்டால் அவனை

                      இங்கே அழைக்கின்றேன்.

( எல்லோரும் தலையாட்டி ஆமோதிக்கின்றார்கள், சதுசேயன் ஆலையக் காவலாளியை அழைத்து, யூதாசை வரவழைக்கச்சொல்கின்றான்)

சதுசேயன்: யூதாஸ் ஜெருசலேமில் தான் இருக்கின்றான், இன்னும் சொற்ப

                       வினாடிக்குள் வந்துவிடுவான்.

(யூதாஸ் சபைக்கு வருகின்றான்)

சதுசேயன் : வருக வருக ஸ்காரியோத்! உன் வருகைக்காகவே நாங்கள் 

                       காத்திருந்தோம். நான் கேட்டதின் பிரகாரம் யேசு தனிமை

                       யாக இருக்கும் இடம், அவரை அழைத்துவரும், நேரம், காலம்

                       வசதியான சந்தர்ப்பம் இவைகளை சொல்வாயா ஸ்கரி 

                       யோத்! உனக்கு முப்பது வெள்ளிக்காசுகள் தருகின்றோம்

யூதாஸ்:        வசதியான சந்தர்ப்பம்,,,,,,,, முப்பது வெள்ளிக்காசுகள் ,,,,,,

                      நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தால்,  ஏதோ ஒரு

                      உள்நோக்கம் இருப்பதாக தெரிகின்றதே!

சதுசேயன்: இல்லை இல்லை நீ நினைப்பது போல எந்த தீய உள்நோக்கம்,

                       எம்மிடம் இல்லை. இயேசுவின் செல்வாக்கும், அவரது புகழும்

                        யூத தேசம், கலிலியாதேசம் எங்கும் பரவி நிற்கின்றது,  அதி 

                       லும் சிறப்பாக இறை இராச்சியம் அமைக்கும் நோக்கமும்,

                       அவருக்கு இருக்கின்றது அல்லவா!

யூதாஸ்:      நீங்கள் சொல்வதும் சரிதான், இறை அரசை, பரலோக இராச்சி

                      யத்தை அறிவிப்பதே அவரின் போதனையின் நோக்கம்.

சதுசேயன் : ஆமாம் அதினால் தான், அவர் அமைக்க இருக்கும் இராச்சிய

                        பரிபாலனத்தில் நாங்களும் பங்கு கொள்ள சந்தர்ப்பம் கிடை

                        க்குமா? என்பதை இயேசுவிடம் இரகசியமாக கேட்டு அறிவ

                        தற்கே அவரை தனியாக உரோமை இராணுவத்தை அனுப்பி

                        அவரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்கின்றோம். இது

                          குறி த்து உரோமை ஆளுணர் பிலாத்துவுக்கு சந்தேகம் வரக்

                          கூடாது அல்லவா! அதற்குத்தான் இந்த ஏற்பாடு!

யூதாஸ்:        அப்படியா இது சிறந்த யோசனை,நான் தான் சீடர்களின் கஜா

                       னாவுக்கு பொறுப்பாளன், பாஸ்கா பண்டிகை கொண்டாட்டம்

                         வேறு, கையில் பணம் ஏதும் இல்லை, இந்த முப்பது வெள்ளிக்

                          காசு துணையாக இருக்கும்!

( யூதாஸ் பணப்பை சதுசேயரிடம் இருந்து வாங்குகின்றான்)

பரிசேயன்1: இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது, உரோமை வீரர்களுக்கு 

                        இயேசு யார் என்று தெரியாது, ஒருவேளை ஆள் மாறி அழை

                        த்துவந்துவிட்டால்,,,,,,,,,,,?

யூதாஸ் :      அந்த பிரச்சனை உங்களுக்கு ஏன்? நான் யாரை முத்துமிடுகி

                         ன்றேனோ, அவர்தான் இயேசு என இராணுவ வீரர்களுக்கு

                         சொல்லிவிடுகின்றேன்.

சதுசேயன்: நீ ரெம்ப ரெம்ப புத்திசாலி ஸ்காரியோத்!

( பணப்பை வாங்கிக்கொண்டு யூதாஸ் செல்கின்றான்.  மற்றவர்கள் சந்

தோச அக்களிப்பில் மனமகிழ்கின்றார்கள், திரை மூடுகின்றது)


No comments:

Post a Comment