வரலாறு என்பது நடந்து முடிந்த சம்பவங்களை தற்போது காணப்படுகின்ற பல்வேறு தரப்பட்ட சாட்சியங்களின் பின்னணியில் உய்த்துணர்ந்து
நறுவு கின்ற அறிவியலாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கையின் வரலாற்றை
தொகுத்துரைக்கின்ற நூல்களாக மகாவம்சம் (பெரிய)
சூளவம்சம் (சிறிய) என இரு நூல்கள் ஆதாரமாக
அமைகின்றன.
அந்தவகையில் இலங்கையின் வரலாற்று மாந்தர்களின் தொடக்கமாக விஜயன் மற்றும் அவரது தோழர்களின் வருகையில் அதைத் தொடர்ந்து அவர்கள் வந்து இறங்கிய இடம் அவர்கள் சந்தித்தமுதல் இலங்கைப் பெண் அதை தொடர்ந்தான சம்பவங்கள் என நீண்டுசெல்லும்
வரலாற்றில் அவ்வாறு வந்தவர்கள் வந்து இறங்கிய இடம் அவர்கள் சந்தித்த பெண் தொடர்பாக நிலவி வருகின்றகருத்துக்களை இடப்பெயர் ஆய்வு எனும் பொறிமுறையைப் பின்பற்றி பல்வேறு சான்றாதாரங்களுடன் நிறுவுவதற்கு நூலாசிரியர் ஜெகன் அவர்கள் எடுத்திருக்கின்ற இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.
இவர் இதற்கும் முன்னரும் “உலக ஆரம்பமும் மன்னார்
மாவட்டமும் என்னும் வரலாற்று நூலை வெளியீடு செய்திருந்தார் தொழில் முறை பத்திரிகையாளராக இருக்கின்றபடியினால் அவர் சந்திக்கின்றவர்களிடமிருந்தும் அவர் பயணிக்கின்ற இடங்களில் கண்டுணர்ந்ததின் அடிப்படையிலும் தான் யாத்த நூலின் மையக் கருத்தை தர்க்கபூர்வமாக நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.
குறிப்பாக தான் வாழ்கின்ற அவருக்கு மிகவும் பரிட்சையமான பிரதேசத்தின் இடப்பெயர்களையும் கம்பராமாயணம் போன்ற வரலாற்று இலக்கியங்களின்
பின்னணியில் சீர்தூக்கி ஒப்பு நோக்கி நிறுவ முயன்றுள்ளமை மிகவும் சிறப்பானதுடன் இதனைத் தொடர்ந்து வருகின்றவர்களுக்கு ஆய்வுக்கான
களமாகவும் இது விரிகின்றது. வரலாற்றை புறந்தள்ளிய மானிட வாழ்வு வரலாற்றில் நிலைத்திருக்காது என்பதற்கு அமைய மன்னார் மாவட்டத்தில்
மாதோட்ட பிரதேசம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் சிறப்பான ஒரு இடத்தை புவியியல் ரீதியாக பெற்றிருக்கின்றது.
இதற்கூடாகவே இலங்கைக்கான வருகையை எல்லோரும் மேற்கொண்டுள்ளனர் என்பது
தெளிவு. அதிலும் இன்று நீரில் மூழ்கி கிடக்கின்ற கட்டுக்கரை பிரதேசம் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய மாந்தை பிரதேசம் என்பன அக்காலத்தில் சிறப்புற விளங்கிய பிரதேசங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் போக்கில் பயணிக்கின்ற போது பெரிதும் மாற்றத்தை சந்திக்காது.
இன்றுவரை காணப்படுகின்றது இடப்பெயர்கள் என்பதை பிரித்தானியரின் வருடாந்த ஆண்டறிக்கைகளை பார்க்கின்றபோது அதிசயப்படத்தக்க ஒன்றாகும். காலங்கள் பல கடந்து ஓடினாலும் வாய்மொழியாக வருகின்ற பெயர்கள் அன்றும் இன்றும் என்றும் வழங்கி வரும் இது வரலாற்றில் சிறிதும் மாறாதது என்பது மட்டுமல்ல இலக்கியங்களிலும் அவ்வாறே உள்ளது என்பதை தனது ஆய்வுக்கு வழிகாட்டியாக வைத்திருப்பத காலத்திற்கு பொருத்தமானதாகும் ஏனெனில் தொல்லியல் சான்றுகள் உட்பட ஏனைய சான்றுகள் காலத்திடம் அழிவடைந்தும் பல்வேறு விதமான வியாக்கியானங்கள்
மற்றும் வாதப் பிரதிவாதங்களுக்கு ஊடாக சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால் இடப்பெயர் ஆய்வு அப்படி அல்ல. அவை வழிவழியாகவே அதே பொருளில் அதே கருத்தில் அமைந்திருக்கின்றன.
எனினும் வட்டார வழக்கு மற்றும் பிரதேச மொழி ஆளுமை போன்றவற்றினால் சிறிய
சிதைவுகளுக்கு உட்பட்டாலும் அதன் வேர்கள் மற்றும் பொருள் விளக்கங்கள் அவ்வாறே உள்ளன.
எனவே இடப்பெயர் ஆய்வின் மூலம் நூலின் மையக்கருத்தை நிறுவுகிறார் நூலாசிரியரின் இந்த முயற்சியை பாராட்டுவதோடு இவர் இன்னும் இத்துறையில் பல நூல்களைப் படைக்க வேண்டும். இதனை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இன்னும் பலரின் வருகையையும் விரும்பி என்னுரையை நிறைவு செய்கின்றேன்
'வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்கும் உலகில்'
மாணிக்கவாசகர் சிறிஸ் கந்தகுமார்
No comments:
Post a Comment