Sunday 27 February 2022

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

 மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

15 பிப்ரவரி 2022

Reincarnation

பட மூலாதாரம்,GETTY IMAGES

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஆறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தொன்மை மிக்கது. நம் முன்னோர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தாழியினுள் தன் தாத்தா/பாட்டி உடலை வைத்துப் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்தனர் என்பதை விடப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் எனலாம்.


இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர்.


பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர்.


விளம்பரம்


இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள்; அவர்களின் ஆன்மா அவர்கள் உடலுடன் பாதுகாக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் என்பதுதான் பண்டைய மக்களின் எண்ணமாக இருந்திருக்கும். மேலும், "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிலப்பதிகாரம். அதாவது முந்தய பிறவியின் பாவ புண்ணியம் இப்பிறவியிலும் விடாது துரத்தும் எனப் பொருள் கொள்ளலாம்.


மறுபிறவியை மையமாக வைத்து எடுத்த திரைப்படங்களான சியாம் சிங்கா ராய், அனேகன், சைத்தான், அருந்ததி, சடுகுடுவண்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவை எடுத்துக்காட்டுவது என்னவென்றால், இன்றைய காலத்திலும் மக்களிடையே மறுபிறவியின்மேல் நம்பிக்கை உள்ளது எனக் கொள்ளலாம்.


இயன் ஸ்டீவென்சன் ஒரு மனநல மருத்துவர். இவர் 1957ல் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனநலத்துத் துறைத் தலைவராக இருந்தவர். இவர் ஆன்மீக உளவியல் (Parapsychology) என்ற துறையில் நம்பிக்கை உள்ளவர். ஆன்மிக உளவியல் என்பது தொலைவிலுள்ள பொருட்களைத் தொடாமல் நகர்த்தல், மரண அனுபவம், மறுபிறப்பு, ஆவியுடன் தொடர்பு மற்றும் பிற இயல்புக்கு ஒவ்வாத உளவியல் சார்ந்த ஆய்வாகும்.


மருத்துவர் ஸ்டீவென்சன் உலகில் பல இடங்களில் குழந்தைகள் முந்தைய பிறவி பற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டார். அத்தகைய குழந்தைகளின் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். அவ்வாறு பேசுபவர்களை உலகம் முழுவதும் சுமார் 3,000 பேரைக் கண்டறிந்தார். இந்தியா, பர்மா, இலங்கை, மற்றும் பிரான்ஸ் என நாடு நாடாகச் சுற்றி மறுபிறப்பு பற்றி ஆராய்ச்சி செய்தார்.


ஆதிச்சநல்லூரில் கிடைத்த மூடி இல்லாத மற்றும் மூடியுடைய முதுமக்கள் தாழிகள் (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,ASI

படக்குறிப்பு,

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மூடி இல்லாத மற்றும் மூடியுடைய முதுமக்கள் தாழிகள் (கோப்புப்படம்)


அவர் கண்டறிந்தது என்னவென்றால், இந்த 3,000 பேரில் இரண்டு வயது முதல் ஆறு வயதுக் குழந்தைகளே இந்த பூர்வஜென்ம அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்தகைய குழந்தைகள் சராசரிக்கும் அதிகமான புத்திசாலிகளாக இருப்பதையும் கண்டறிந்தார்.


பெரியவர்கள் யாரும் இதுமாதிரி பூர்வ ஜென்மத்தைப் பற்றிப் பேசவில்லை. இந்த குழந்தைகளின் கூற்றுப்படி முந்தைய பிறவியில் இவர்களில் 70 சதவிகிதத்தினர் அகால மரணமடைந்தவர்கள். மேலும் இவர்களில் 90 சதவீதத்தினர் முற்பிறவியில் ஆணாக இருந்தால் ஆணாகவும், பெண்ணாக இருந்திருந்தால் பெண்ணாகவும்தான் மறுபிறவி எடுக்கின்றனர்.


மேலும் சில குழந்தைகளின் உடலில் முற்பிறவியிலிருந்த மச்சங்கள் மற்றும் தழும்புகளையும் ஸ்டீவென்சன் கண்டறிந்தது வியப்பாகத்தான் உள்ளது.


மறுபிறப்பைப் பேசும் இந்த குழந்தைகளில் 60 சதவிகிதத்தினர் மறுபிறப்பை நம்பும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். மீதமுள்ள 40 சதவிகிதத்தினர் மறுபிறப்பை மறுக்கும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்.


அது என்ன? மறுபிறப்பை நம்பும் மதம் மற்றும் மறுபிறப்பை நம்பாத மதம்?

காகம்...!?

 காகம்...!? 


காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.

காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை.  கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.

கூச்ச சுபாவம் கொண்டது காகம். மனிதன் கூட விலங்குகள் போல பொது இடத்தில் காதல் என்கின்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில்  நடந்து கொள்வான்.  அந்தரங்கத்தை படம் பிடித்து வியாபாரம் செய்வான்.  

பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம்.

உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

சிறந்த தாய்

காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும்.  "உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய் காகம் தான் என்பதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான், ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை.

ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று  நடக்கும் அசம்பாவிதங்கள்,  விபத்துக்கள், வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.  செய்வினை  கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள்  நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது  உங்கள் முன்னோர் வழிபாடு தான்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி  காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.  தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை  ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா…கா….கா   என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.  அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.  வாழை இலையில் உள்ள் அன்னங்களை  சுவைக்கும்.  அப்படி சுவைக்கும் போது அந்த காக்கைகள் கா... கா... என்ரு  கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.  இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.  இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்....

காக்கை சனி பகவானின் வாகனம்  காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.   காக்கைகளில் நூபூரம்  பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை  என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது.  எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.  அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். 

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்...

தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா……………….கா…………. என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு....

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை  நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான்  எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

தமிழர்களுக்கும் காகத்துக்கும் உள்ள தொடர்பு:-

*********************************************************

ஒவ்வொரு நாளும் #பழந்தமிழர் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு  காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

காகம் கரைதல் வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில் இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது!

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய  விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் மேலே சொன்ன பாடலில் அழகாகச் சொல்லுகின்றனர்:

காலை எழுந்திரு.

மாலையிலும் குளி.

கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை).

எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

தமிழ் வேதமாகிய திருக்குறளில்  

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள”  (குறள் 527)

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

காக்கையை பற்றி வேறு ஒரு இடத்தில் “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள் 481)

பொருள்:-

பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், #மஹாபாரதத்தில் அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு காக்கைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் குறிப்பு உள்ளது..

முகம் காட்டாமலும் காதலை உருகி வெளிப்படுத்திய கே.பி.ஏ.சி. லலிதா

 முகம் காட்டாமலும் காதலை உருகி வெளிப்படுத்திய கே.பி.ஏ.சி. லலிதா


ஒரு திரைப் படத்தில் முகம் காட்டாமலே தனது குரலின் மூலம் மாத்திரம் திரைப்படத்தின் முழுக் கதையின் நாயகியாக பயணித்தவர். அதுவும் படம் பார்த்து முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்பு அந்த காதல் கதையில்... மொழியில்... உருக்கத்தில்... நெருக்கத்தில்.... இருந்து எம்மை விடுவிக்க முடியாத கதாபாத்திரமாக மாறியவர்.

மலையாளத் திரை பட உலகில் சிறந்த நடிகரான மம்மூட்டி திரையில் முகம் காட்;டி நடிக்க இவர் திரையில் முகம் காட்டாது குரலை மட்டும் ஒலித்து அந்த திரைப்படத்திற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த 'நாராயணி' பெண் பாத்திரத்தை நடித்தவர் என்பதை விட வாழ்ந்தவர் என்றே கூறலாம்.

வைக்கம் முகம்மது பஷீர் என்ற மலையாளத்து கவிஞரின் வாழ்க்கையை வரலாற்றை திரைப்படமாக அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த போது திரையில் முகம் காட்டாது அதே வேளை மிகச் சிறந்த காதல் திரை ஓவியமாக படைக்க முற்பட்ட கதாபாத்திரத்திற்கு லலிதா வினால் உயிர் கொடுக்க முடியும். அந்த திரைப்படம் மதிலுகள் (Mathilukal) 

நிச்சயமாக இத் திரைப்படத்தை பார்க்காதவர்கள் ஒரு தடவை ஒன்றிப் போய் பாருங்கள் இது புரியும். சில நிமிடங்கள் மட்டும் அல்ல படம் முழுக்க அந்த உயிரோட்டம் இருந்து கொண்டே இருந்தது.

படத்தின் இறுதிக் காட்சியில் சிறையில் நீண்ட காலமாக வாடும் பஷீர்(மம்மூட்டி) ஐ  விடுதலை செய்வதாக அறிவித்தல் வந்த போது அடுத்த நாள் அந்த முகம் காணாத காதல் காதலியை மருத்துவ மனையில் சந்திப்பாக இருந்த ஓரே வாய்ப்பு நழுவிப் போவதை ஏற்க முடியாமல் துடித்து 'யாருக்கு வேண்டும் இந்த விடுதலை..." என்று காதலாகக் கத்தும் அளவிற்கு லலிதாவின்  மதிலுக்கு அப்பால் பெண்கள் சிறையில் கைதியாக வாழ்ந்த நாராயணியை மறக்க முடியாது.

அதுவானதுதான் மலையாள நடிகை லலிதாவிற்கான அடையாளம் என்று கூறலாம். இதற்கு அப்பாலும் பல படங்களை கூறமுடியும்.

மலையாளத் திரைப் படத் துறையில் முதன்மை துணைப் பாத்திரமாக அது அம்மாவாக அக்காவாக சேச்சியாக முத்தச்சியாக ஏன் சதிச்சு விளையாடும் வில்லியாக எத்தனை பரிமாணம் இத்தனை இயல்பான நடிப்பை நான் யாரிடமும் காணவில்லை... இனியும் காண்பது அரிது.

கே.பி.ஏ.சி. லலிதா பெயரால் நன்கு அறியப்பட்ட மகேசுவரி அம்மா(25 பெப்ரவரி 1947 - 22 பெப்ரவரி 2022) ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகையாவார். இவர் முதன்மையாக மலையாள நாடகத்திலும் மலையாளத் திரைப்படங்களிலும் பணியாற்றினார். இவரது நடிப்பு வாழ்க்கை இந்தியாவின் கேரளாவின் காயம்குளத்தில் ஒரு நாடக இயக்கமான கே.பி.ஏ.சி கேரள மக்கள் கலைக் கழகத்துடன் தொடங்கியது. 

கேரளாவில் பொதுவுடைமை கருத்துக்களை பரப்புவதில் இந்த அரசியல் அரங்கம் மிகவும் செல்வாக்கு செலுத்தியது. ஐந்து தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராக பதவி வகித்தார். மறைந்த மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குநர் பரதனை மணந்தார்.

பிரபல இயக்குநர் பரதன் மீது அளவில்லா காதல் கொண்ட மனைவி அது பரதனுக்கு சிறிவித்யாவிடம் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாமல் இரு பிள்ளைகளை பெற்று பரதனின் 50 வயதுகளில் மறைவின் பின் பல்வேறு கடன் தொல்லைகளுக்கு மத்தியிலும் வளர்தெடுத்த தாய்.

பணத்தை அதிகம் சேர்த்தவர் இல்லை திரைப்படத்தில் மட்டும் அல்ல குடும்ப வாழ்விலும் எளிமையாக வாழ்ந்தவர் மரண காலத்தில் மருத்துவ மனைச் செலவுகளை கேரள அரசு பொறுப்பெடுக்த அளவிற்கான வாழ்க்கை முறை எல்லோராலும் மதிக்கப்பட்டவர் சேவகியாக வாழந்தவர்.

கேரளத்து இடதுசாரி அரசின் இயல்பான மனிதாபிமானத்திற்கு அப்பால் லலிதாவின் கொள்கை சார்ந்த விடயமும் அவரை அரசின் கவனிப்பிற்குள் கொண்டு வந்தது என்ற விமர்சனத்திற்கு அப்பால் அதற்கான தேவைகள் அனைத்தையும் மலையாள திரைப்பட உலகமும் இந்திய திரைப் படை உலகமும் ஏன் முழு சினிமாவும் கொண்டிருந்தது என்பதே உண்மை.

1998 ஆம் ஆண்டில், தனது கணவர் பரதன் இறந்தபோது, இவர் சில மாதங்களுக்கு ஒரு இடைவெளியை எடுத்துக்கொண்டார், சத்யன் அந்திக்காடு இயக்கிய 'வேண்டும் சில வீட்டுக்காரியங்கள்' என்ற திரைப்படத்தில் பாராட்டப்பட்ட நடிப்புடன் திரும்பி வந்தார்.

அவரின் கணவரின் மரணத்திற்கு பின்பு பத்திரிக்கையாளர் ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பற்றிய கேள்விக்கு, தன் கணவருடன் வாழ்ந்த அந்த 19 வருட காலம் தன்னுடைய சுக்கிர திசை காலம். அதே நேரம் அந்த காலமே தன்னுடைய சனி திசை பிடித்த காலமும் என்கிறார். அவ்வளவிற்கு வெளிப்படையான பெண்ணியக் கருத்தியலை உடையவர்.

லலிதா 2013 ஆம் ஆண்டில் செருகாட் விருதை வென்ற காத தூதாரம் என்ற சுயசரிதையை வெளியிட்டார். தனது கணவர் பரதன் இயக்கிய அமரம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். 

ஜெயராஜ் இயக்கிய சாந்தம் (2000) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தனது இரண்டாவது தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் காதலுக்கு மரியாதை, இயக்குநர் மணிரத்தினத்தின் அலைபாயுதே, காற்று வெளியிடை போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை சாலினியின் தாயாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். 

தமிழ் திரைப்பட உலகிற்கு ஒரு மனோரம்மா என்றால் அதற்கு பல மடங்கு தகுதிகளும் திறமைகளும் உடையவர் இந்த லலிதா 

அண்மையில் அவரிளன் மறைவு என்னை அதிகம் பாதித்துவிட்டது.

இவரின் திரைப் படப் பாத்திரங்களைப் பார்த்தீர்களாயின் நீங்கள் வாழ்ந்த கிராம நகர பிரதேசங்களில் அவரை ஒட்டிய பாத்திரம் மனிதர்களை காணமுடியும். அவ்வாறு உணருவீர்கள் அவ்வாறு மிகவும் யாதார்த்தமான பாத்திரமாக மனிதர்களா பொருந்திவிடுவார்.

இதனை அறிந்திருந்த திரைப்படைத் துறையினர் அப்படியான பாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் கூப்பிடுங்கள் லலிதாவை என்றளவிற்குள் சினிமாவில் வாழ்ந்தவர்.

சினிமாவிற்குரிய பௌதிக அழகு அதிகம் இல்லாவிட்டாலும் அழகியல் என்றால் அந்த குரல் வளம் வட்டாரப் பேச்சு வழக்கு உச்சரிக்கும் பாவனை முகபாவனை சிறப்பாக வாயசைவுகள் அபாரம் மீண்டும் கூறுகின்றேன் முடிந்தால் மதிலுகள் திரைப்படம் கறுப்பு வெள்ளையாக 30 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திரைப் படத்தை பாருங்கள்.

லலிதா 2022 பிப்ரவரி 22 அன்று தனது 73வது வயதில் திருப்பூணித்துறையில் குரலிசை நடிப்பை நிறுத்திக் கொண்டார்.

திருச்சபை வரலாறு பகுதி -- 27

 திருச்சபை வரலாறு

பகுதி -- 27

*************

நவீன காலத் திருச்சபை வரலாறு

(கி.பி. 1517 - 1900)

துறவற சபைகள்

இயேசு சபை

16ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் மறுமலர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் பெரிதும் துணை புரிந்தது இயேசு சபையாகும். புனித லொயோலா இஞ்ஞாசியார் (1491-1556) இதைத் தொடங்கினார். ஸ்பெயின் நாட்டில் பாஸ்க் பகுதியில் பிறந்த இவர் அரசவையில் கல்வி பயின்று பின் போர்வீரரானார். சண்டையின்போது ஒரு காலில் காயமுற்று குணமடைந்து வந்த போது உள்ளூர மனமாற்றம் அடைந்தார். "ஞானப் பயிற்சிகள்" என்ற நூலை எழுதினார். இனிமேலாக 'கடவுளின் உயர் மகிமைக்காக" அனைத்தையும் செய்வதாக உறுதிபூண்டார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இறையியல் கல்வி பயின்றபோது இஞ்ஞாசியாரும் சில நண்பர்களும் சேர்ந்து தங்களை மறைபரப்புப் பணிக்கெ அர்ப்பணித்தனர். இக்குழுவில் பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.

இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும் வெனிஸ் நகரில் 1537இல் குருப்பட்டம் பெற்றனர். இந்த நேரத்தில்தான் அவர் ஒரு மறைப்போதகச் சபையை உருவாக்க எண்ணினார். 1540இல் திருத்தந்தை 3ஆம் பவுல் இந்த சபையன் ஒழுங்குகளை அங்கீகரித்தார். இயேசு சபையின் முதல் தலைவராக இஞ்ஞாசியா உரோமையில் தங்கியிருந்து பணிகளை கவனித்தார்.

இயேசு சபை வளர்ந்தது. இச்சபை சீர்திருத்த சபையினரை எதிர்ப்பதற்காக நிறுவப்படவில்லை . மாறாக, திருச்சபையில் மறுமலர்ச்சி கொணரவும் விசுவாச வாழ்வை ஆழப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. திருத்தந்தைக்குத் தனிப்பட்ட விதத்தில் கீழ்ப்படியுமாறு இயேசு சபையினர் ஒரு வாக்குறுதி எடுத்தனர்.

இஞ்ஞாசியார் இறந்தபோது சுமார் 1000 உறுப்பினர்கள் இயேசு சபையில் இருந்தனர். 16 ஆண்டுகளில் இத்தகு வியப்புக்குரிய வளர்ச்சிபெற்ற இயேசு சபை ஆன்மீகத்தையும் உலக ஈடுபாட்டையும் இணைத்து பணிபுரிந்து வந்துள்ளது.

புதிய துறவற சபைகள்

****************************

இயேசு சபையைத் தவிர பிற பல துறவற சபைகளும் 16ஆம் நூற்றாண்டில் தோன்றின. பிரான்சிஸ்கு சபையில் ஒரு சீர்திருத்தப் பிரிவு எனத் தோன்றியது கப்புச்சியர் சபை (1526). தொடக்கத்தில் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி இச்சபை விரைவாக வளர்ந்தது. திருச்சபையின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தது. புனித கமில்லஸ் தே லெல்லிஸ் கடின நோயாளிகளைப் பராமரிக்க ஒரு சபையை நிறுவினார் (1585). புனித ஆஞ்செலா மெரீசி பெண்களுக்கென ஊர்சுலா சகோதரிகள் சபையைத் தோற்றுவித்தார் (1535).

கார்மேல் சபையில் புனித அவிலா தெரசா மற்றும் புனித சிலுவை யோவான் சீர்திருத்தம் கொணர்ந்தனர். மறைமாவட்ட குருக்கள் இணைந்து செயல்படுவதற்கான ஒரு குழுவை புனித பிலிப்பு நேரி தொடங்கினார் (1548).

புனித வின்செந்த் தே பவுல் (1581-1650) மறைபோதகச் சபையை 1624ல் நிறுவினார். குரு மாணவர்க்கும் குருக்களுக்கும் பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்தினார். பிறரன்புப் பணிபுரிய துறவறப் பெண்டிர் சபை ஒன்றை நிறுவினார் (1633). கப்பலில் கடின உழைப்பு செய்ய கட்டாயப்படுக்கப் அடிமைகளை இவர் மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வு அளித்தார். பிறருக்க எந்நேரமும் உதவி செய்வதில் கருத்தாயிருந்த புனித வின்செந்த் பிறான் பணிகளின் பாதுகாவலர் என்று போற்றப்படுகிறார். அவரது பெயரால் இன்று பணிபுரிவதே வின்செந்த் தே பால் சங்கம்". இதை 1833ஆம் ஆண்டு பிரடரிக் ஓசானாம் என்ற பொதுநிலையினர் தோற்றுவித்தார்.

(தொடரும்)

Thursday 24 February 2022

இசையமைப்பாளர்கள்

 இசையமைப்பாளர்கள் 


இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கருவிகள் இசைப்பவர்கள் உள்ளிட்ட இசைத் துறையில் பிரபலமடைந்து விளங்குபவர்கள் புகழின் உச்சாணிக் கொப்பில் தாங்கள் மட்டுமே தொடர்ந்து அமர்ந்து கோலோச்சிக் கொண் டிருக்கவேண்டுமென்று நினைப்பது தவறு. வல்லவர்கள் யாராயிருப்பினும் அவர்கள் எல்லாம் வல்லவரான இறைவனின் படைப் புக்களே. வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை எக்காலத் திலும் நாம் மறந்துவிடலாகாது.

சர்வதேச மட்டத்தில் இசைத் துறைக்கான அதியுயர் விருது என்று சொல்லப்படும் ஒஸ்கார் (Oscar Award) விருதினை ஒரு தடவையல்ல, இரு தடவைகள் பெற்று தமிழனின் பெருமையை உலகறியச் செய்த ஏ. ஆர். ரகுமான் அவர்கள் மிகவும் தாழ்ச்சியுடன் "எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்று வெளிப்படையாக முழக்கமிட்டு, இசை மேதைகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி ஆகியமையை இசை வல்லுநர்கள் எவரும் மறந்துவிடலாகாது. அனைத்து ஆற்றல்களுக்கும் கருவூலமாக இருப்பவர் இறைவன் மட்டுமே. இதை உணர்ந்துதான் அவர் அவ்வாறு கூறினார் போலும். எல்லாம் செய்ய வல்லவர்கள் ,(omnipotent) என்று இங்கு யாரும் இல்லை. ஒருவேளை அப்படித்தான் யாரும் இருந் தாலும், அவரிடம் வேறு ஏதோ குறைபாடு இருக்கவே செய்யும். ஏனெனில், மானுடரில் முழு நிறைவுள்ளவர்கள் யாரும் இல்லை. எனினும், தம்மிடம் இருப்பதை இல்லாத வர்களுக்குக் கொடுக்கும் கடப்பாடு கிறிஸ்தவர்கள் என்ற மட்டில் நம் எல்லோ ருக்கும் உண்டு. இறைவன் நமக்கு இந்த ஆற்றல்களைத் தந்திருப்பது நாம் மட்டும் நன்மை அடைவதற்காக அல்ல. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்ற சீரிய நோக்குடன், அவ் ஆற்றல்களை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் கொடுப்பதன்மூலம் நாம் இறைவனுக்கே மகிமை சேர்க்கிறோம். அவருக்கே எம் நன்றியையும் சமர்ப்பிக் கின்றோம். எனவே, அகந்தைக்கு இடம் கொடாது, இத் துறையில் நுழையும் புதியவர் களை இன்முகத்துடன் வரவேற்போம். ஆர்வத்துடன் அவர்கள் கேட்கும் உதவிகளை, ஆலோசனைகளை மற்றும் பயிற்சிகளை வழங்குவோம். "உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள்" (லூக்கா 6:30).

இயல்பாகவே சுருதி தப்பாது பாடும் திறன் உள்ளவர்கள் தம்மில் இந்த இசையறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினாலும், யாரிடம் அல்லது எங்கு சென்று தமக்கு வேண்டிய உதவியைப் பெறலாம் என அறிந்திருப்பதில்லை. அல்லது அதற்கான தேடல்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அப்படியே உதவி கேட்டுச் சென்றாலும், புதியவர்கள் இத்துறைக்குள் வருவதைத் திறமைசாலிகள் விரும்புவதில்லை. சில பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள்கூட (உ+ம் பாடசாலை அதிபர்கள், நிறுவனத் தலைவர்கள்) தாம் பணியாற்றும் இடங்களில் இசை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த விரும்பினால், அது தொடர்பில் தமக்கு உதவிட  தமக்கு மிக அருகாமையிலேயே அதற்குத் தேவையான திறமைசாலிகள் இருக்கலாம் என்ற சிந்தனைகூட இல்லாமல், பிற இடங்களிலுள்ள பிரபலம் வாய்ந்தவர் களை அணுகி, அவர்களுக்குப் பணம் கொடுத்து, தாம் திட்டமிட்ட இசை /கலை நிகழ்ச்சிகளை நடாத்தி முடிப்பதைக் கண்டிருக்கிறோம். இது, "கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைதல்" போன்றதாகும். எனவே, அருகில் உள்ள இளந் திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு இதுவிடயத்தில் வாய்ப்பளித்தால், அது அவர்களுக்கு உதவி செய்வதாகவும் அமைவதுடன், திட்டமிட்ட நிகழ்ச்சியைச் சிக்கனமாகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்தியதாயும் இருக்கும்.

(6)

இசையமைப்போ, பாடல் வரிகளோ அவை தனித்துவம் வாய்ந்ததாகவும், இதற்கு முன்னர் இசையுலகில் இதுபோல் வெளி வராதவையாகவும் இருந்தால், அது இசைத் துறையின் வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப் பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அறிந்தோ அறியாமலோ ஒருவரது  படைப்பை (இசையமைப்பு/பாடல் வரிகள்) இன்னொருவர்  திருடி அதைத் தனது பாடல்களுக்கு/ஆக்கங்களுக்குப் பயன்ப டுத்தினால், அது புலமைச் சொத்துரிமைச் சட்டத்தின்கீழ் (under the Act of Piracy of Intellectual Property) ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். சினிமாத் துறையில் மட்டுமல்ல, கிறிஸ்தவ/கத்தோலிக்க பாடல் துறையிலும் கூட இது மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. ஆனால், ஏற்கனவே ஒருவரால் வெளியிடப்பட்ட ஒரு பாடலை/மெட்டை ஏதோ ஒரு தேவை கருதி இன்னொருவர் பயன்ப டுத்த விரும்பினால், முறைப்படி உரிய ஆக்கியோனின் எழுத்துமூல ஒப்புதலைப் பெற்று அவ்வாறு செய்யலாம். துறைக்குப் புதிதாய் அறிமுகமாகும் இசையமைப் பாளர்களும் பாடலாசிரியர்களும் இச் சட்டத் தின்கீழ் குற்றவாளிகளாகக் காணப்படா திருக்க விரும்பினால், துறையில் முதிர்ந்த அனுபவம் உள்ளவர்களிடம் தமது படைப் புக்களைக் காட்டி, அவை இதற்குமுன் வெளி வராதவை என உறுதி செய்ததன்பின், அவற்றினுடைய தன்முதன்மையை (originality) நிரூபிக்க முடியும்.

சில கிராமப் புறங்களில் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் யாருக்காவது பாராட்டு விழா அல்லது பிரிவுபசார விழா நடாத்தும் தருணங்களில் திடீர் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தயார் செய்யும் பொறுப்பு ஒருவ ருக்குக் கொடுக்கப்பட்டால், அவருக்கு அந்த நேரத்தில் கை கொடுப்பது மக்கள் வானொ லியில் விரும்பிக் கேட்கும் ஜனரஞ்சகமான சினிமாப் பாடல் மெட்டுகள்தான். அவர் என்ன செய்வார்? சூழமைவுக்கும் (context) விழா நாயகருக்கும் /நாயகிக்கும் பொருந் தும் வகையில் தான் தேர்ந்தெடுத்த பாடலின் வரிகளைச் சற்று மாற்றியமைப்பார் (பாட லின் வரிகளையும் சுடுவது வழக்கம்). இப்போது பாடல் தயார்!

கத்தோலிக்க வட்டாரங்களிலும், முன்பு அதிகமதிகமான அபிமான திருவழிபாட்டுப் பாடல்களின் மூல மெட்டினை அடிப்படை யாகக் கொண்டு பற்பல புனிதர்களுக்கான பாடல்கள் இயற்றப்பட்டன. (புனித மரியா, புனித சூசையப்பர், புனித அந்தோனியார் போன்ற பிரபலமானவர்களைத் தவிர ஏனைய புனிதர்கள் பெயரில் பொதுவாகப் பாடல்கள் இருப்பதில்லை). அந்த வகையில் பாரம்பரிய குருத்துவ/தேவ அழைத்தலுக் காகப் பாடப்படும் "மகிழ்ந்திடாய் மாநிலமே" என்ற பாடல் தற்போது "இயேசுவின் இருதயமே" என்ற பாடலாக, வரிகள் மட்டும் மாற்றப்பட்டுப் பாடப்படுவதானது, தமிழ் நாட்டில் கத்தோலிக்க மக்கள் மத்தியில் இசையமைப்பாளர்களுக்குத் திடீர் தட்டுப் பாடு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இச் செய்கையை மூல இசையமைப்பாளரை அவமதிக்கும் ஒரு செயலாக நான் பார்க்கிறேன். சம்பந்தப்பட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவினர் இது குறித்த தீர்க்கமான முடிவிற்கு வருவார்களா?

 விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது  ஏன்?



கடவுள் எந்த உருவத்தில் இருப்பார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இந்த விலங்குகளின் முகங்களை வேறு கடவுள் உடலோடு (சில சமயம் மனித உடலோடு)  எதற்காக நம் முன்னோர் இணைத்திருக்கிறார்கள்? இது எல்லோருக்கும் வரும் சந்தேகமே... இதற்கு நான் எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் கருத்தை கொண்டு இங்கு பதிகிறேன்.

பொதுவாக நம் மூச்சை கவனித்தால், நாம் கோபப்படும்போது, கவலைப்படும்போது,  காம வசப்படும்போது, வெறுப்படையும்போது என negative விஷயங்களில் ஈடுபடும்போது மூச்சு கீழ்நோக்கி வேகமாக பாயும். இதை தான் அதோகதி என்பார்கள். 

(அதோ=கீழ்நோக்கி ; கதி = பாய்தல்) உங்கள் காமம், கோபம், குரோதத்தை அக்கணம் கட்டுப்படுத்த நினைத்தால் உடனே நீங்கள் உங்கள் மூச்சை சிறிது சிறிதாக மேல்நோக்கி முடிந்தவரை இழுத்துப்பாருங்கள். உங்கள் மனம் மாற்றமடையும். எனவே எப்போதும் நம்மை நம் மூச்சு நல்லவிதமாகவோ, கெட்ட விதமாகவோ கட்டுப்படுத்துகிறது. 

எனவே நாம் நம் மூச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்த தான் யானை முகம் கொண்ட விநாயகர்.அவ்வளவு பெரிய தும்பிக்கையின் மூலமாக மூச்சை இழுக்க நேரமாகுமல்லவா? அது போல நாமும் நம் மூச்சை நிதானமாக நீளமாக இழுக்க வேண்டும். அதன் மூலம் பிராண சக்தி நம் உடல் முழுதும் பரவி உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்கும். 

மேலும் .நான் என் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக இவர் தன் கையிலேயே அங்குசமும் வைத்திருப்பார். நம்மில் எத்தனை பேர் நம் மனதை கட்டுப்படுத்த முடிகிறது? So, நம் மூச்சை கட்டுப்படுத்தினால், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை புரியவைக்க நம் முன்னோர் அமைத்த உருவமே விநாயகர்.(நன்றி: பாலகுமாரன் - முதிர்கன்னி நாவல் )

 அடுத்து, மனம் என்பதை ஒரு குரங்குக்கு ஒப்பிடுவார்கள். நாம் நம் கண்ணை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தாலே, மனக்குரங்கு பல திசைகளிலும் தாவி ஓடும். கண்டதையும் கையிலெடுத்து அக்கு அக்காக பிரித்து போடும். ஆனால் அனுமனின் உருவத்தை நாம் பார்த்தால் பெரும்பாலும் அது தியானம் செய்யும் நிலையிலேயே இருக்கும்.

இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு குரங்கு, நிலையில்லாமல்  ஆட்டமாட கூடிய ஒரு விலங்கு, தன்னை கட்டுப்படுத்தி, தியானம் செய்கிறது. மனிதனான உன்னால் முடியாதா என நம்மை தூண்டி விட அந்த உருவத்தை கொடுத்திருக்கிறார்கள். மேலும், அனுமனின் தந்தையாக வாயுவை கூறுவதன் காரணம், வாயுவின் கவனிப்பால் குரங்கு உருவில் உள்ள அனுமன் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடிகிறது. 

அதுபோல, மூச்சை கவனித்தால் நாமும் மனம், உடலை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள்.(நன்றி: பாலகுமாரன் - உச்சித்திலகம் நாவல் ) 

அதுபோல வராக உருவம். பன்றி எப்படி தனக்கு வேண்டிய உணவாகிய கிழங்கை (நான் அந்த காலத்து பன்றிய சொல்றேங்க)   பூமிக்குள் மறைந்து இருந்தாலும் தன் முயற்சியால் அகழ்ந்து எடுக்கிறதோ அது போல நாமும் நம் மனதின் உள்ளே இருக்கும் கடவுளை, ஞான ஒளியை தேட வேண்டும் என்பதற்காக அந்த உருவத்தையும் கும்பிடுகிறோம்.

 இப்படி நான் படித்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மூலமாக எனக்கு சில விளக்கங்கள் கிடைத்தது. அதில் மூச்சுப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.....

மரியாதைக்குரிய ஆசிரியர்

மரியாதைக்குரிய ஆசிரியர் 


ஓர் வார இறுதி விடுமுறைக்குபின்

திங்கட்கிழமை  காலை

வகுப்பினுள் நுழைகிறார்

ஆசிரியை சுமதி.

.

அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.

.

அது ...

வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து

'Love you all!' என்று சொல்வது.

.

தான் சொல்வது பொய்யென்று

அவருக்கே தெரியும்.

.

ஆம்!

அந்த வகுப்பிலுள்ள

ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.

 ஒழுங்காய் உடுத்தாத,

எதிலுமே ஒழுங்காய் இல்லாமல்

சுட்டிக்காட்டுவதற்கு

எந்தவொரு 

சிறப்புத்தன்மையும் இல்லாத

'டெடி'என்கிற தியோடர்!

.

அவனிடம் மட்டும்

ஆசிரியை சுமதி

நடந்துகொள்ளும் விதம்

வித்தியாசமானது!

எந்தவொரு

தவறான விஷயத்திற்கும்

அவனையே உதாரணம் காட்டினார்.

எந்த நல்ல விஷயத்திற்கும்

அவனை நிராகரித்தார்.

.

அவ்வாண்டிற்கான

காலாண்டு பரிட்ஷை வந்தது.

முன்னேற்ற அறிக்கைகள்

வகுப்பாசிரியர்களிடமிருந்து

தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன.

.

ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர்,

ஆசிரியை சுமதிக்கு

அழைப்பு விடுத்தார்.

அவர் வந்ததும்,

"முன்னேற்ற அறிக்கை என்பது

ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும்.

தன் பிள்ளைக்கும்

ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை

பெற்றோருக்கு தரவேண்டும்!

நீங்கள் எழுதியிருப்பதை

பார்க்கும்போது

பெற்றோர் அவன்மீது

நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!" என்று

தியோடரின் முன்னேற்ற அறிக்கையை

சுட்டிக் காட்டிக்கூறினார்.

.

ஆசிரியை சுமதியோ

"என்னால் ஒன்றுமே செய்யமுடியாது.

அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம்

ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!" என்றார்.

தலைமை ஆசிரியர்

அலுவலக ஊழியர் ஒருவரிடம்

தியோடரின்

கடந்த கால

முன்னேற்ற அறிக்கைகளை

கொண்டு வந்து 

சுமதியிடம் கொடுக்குமாறு பணித்தார்.

அறிக்கைகள்

கொண்டுவரப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டாய்

விரித்துப்படிக்கிறார் சுமதி.

மூன்றாம் வகுப்பு

அறிக்கையில்

'வகுப்பின் மிகத்திறமையான மாணவன் தியோடர்' என

இருந்ததைக் கண்டு

தான் வாசித்ததை நம்பமுடியாமல்

அதிர்ச்சி அடைந்தார் சுமதி.

நான்காம் வகுப்பு

அறிக்கை சொன்னது.

'தியோடரின் தாய் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளார்.

அதனால் தியோடர் மீது முன்னர்போல அவரால்

கவனம் செலுத்தமுடியவில்லை.

அதன் விளைவு அவனிடம்

தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது,

'தியோடரின் தாயார் இறந்துவிட்டார்.

அவன் மேல்

அக்கறை காட்டும்

உறவு தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'

கண்களில் கண்ணீருடன்

சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.' என்று

ஓர் உறுதியோடு கூறினார்.

அடுத்த திங்கள் காலை

ஆசிரியை சுமதி

வகுப்புக்கு சென்று

பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார்.

இம்முறையும்

தாம் பொய் சொல்கிறோம்

என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட

டெடி எனும் தியோடர் மீது

அவரது அன்பு அளவுகடந்திருந்தது.

தியோடருனனான

தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதென்று

அவர் தீர்மானித்திருந்தார்.

.

அதன் பின்னர் ஒவ்வொரு

நல்ல விஷயத்திற்கும்

தியோடரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது.

.

அவ்வாண்டின்

பள்ளி இறுதிநாள் வந்தது.

எல்லா மாணவர்களும்

தம் ஆசிரியருக்கென

பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அவற்றிற்குள்

ஒரு பெட்டி மட்டும்

ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.

ஆசிரியை சுமதிக்கு

அதை பார்த்ததுமே

அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.

முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும்,

அதனுள் பாதி உபயோகித்த

சென்ட் பாட்டில் ஒன்றும்,

சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது.

அந்தப் பொருள்

தியோடருடையது என்று புரிந்துகொண்ட

முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல்

ஆசிரியை சுமதி

அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார்.

அந்த பிரேஸ்லெட்டை எடுத்து தன் கையில் அணிந்துகொண்டார்.

மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான்.

"இப்போது உங்களிடம்

என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் வைத்திருந்த சென்ட் இதுதான்.

இந்த பிரேஸ்லெட்தான்

பெட்டிக்குள் வைக்கும்முன்

அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

ஓராண்டு கழிந்தது.

ஆசிரியை சுமதி மேசையில்

ஓர் கடிதம் கிடந்தது. ''

‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…

‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார்.

பல ஆண்டுகளின் பின்னர்

அவருக்கு ஒரு கடிதம்

வந்து சேர்ந்தது.

கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...

Mrs. Sumathi

‘I have seen many more people in my life. You are the best teacher I have ever seen’, Now I am going to get married. I cannot dream of my marriage without your presence.

I am your Teddy.

Dr. Theodore

அத்துடன் போய்வர

விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.

ஆசிரியை சுமதிக்கு

இருப்பு கொள்ளவில்லை.

அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை.

பிரேஸ்லெட்

பாதுகாப்பாய் இருந்தது.

அதை அணிந்துகொண்டு திருமணத்திற்குப் புறப்பட்டார்.

அங்கு சென்று பின் இருக்கையொன்றில்

அமர முற்பட்டபோது

அங்கிருந்த ஊழியர்கள்

அவரை எப்படியோ

அடையாளம் கண்டுகொண்டு

முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி

அழைத்து சென்றனர்.

அவருக்கென

ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது.

தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை

அறிமுகம் செய்துவைத்தார்.

''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது'

தியோடரின் கண்களில் கண்ணீர்.

ஆசிரியை சுமதி

பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால்,

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான்

அறிந்திருக்கவேமுடியாது!''

.

.

*இக்கதையை படித்த மரியாதைக்குரிய ஆசிரியர்களே! உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்! இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் / தந்தையாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.*

 விவாகரத்து.


"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்றுப் பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது...

மிகக் கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற கேவலமான ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்லக் காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம்.

"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற. உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே. தைரியமாய் முடிவெடு" என்றுக் கேவலமான  ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறு ஒரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.

பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்துப் போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும் போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்வியக் குச்சியைக் கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்றுக் கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும். 

ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்குக் கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்தப் பயணம் சாத்தியம்.

சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வைத் தொடருகிறோம் என்றுக் கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்தப் பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

தன் இனத்தை நல்ல விதமாக உருவாக்குவதில் இத்தனைப் போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக் காட்டிலும் அதிகப் போராட்டங்கள் இருக்கத் தான் செய்யும்.

சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண் வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் தானே. மாற்றப்பட வேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம் தான்.

தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?

அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பைப் பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படிப் பெற முடியும்?

அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியம் தான்...

மேலை நாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக் கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.

குடும்பம் அமைப்பினைத் தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வைப் பிள்ளைகளுக்கு கொடுக்கத் துவங்கி இருக்கிறார்கள்.

அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றுக் கூறுகிறார்கள்.

இனம் காப்பதில், துணையைத் தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுயப்பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும் தானே...

இது தாங்க உண்மை...

என்னைப் பொறுத்தவரை நீங்கள் காதல் திருமணம் செய்தவர்களோ, அல்லது பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்தவர்களோ உங்கள் திருமண வாழ்க்கையில் முதல் ஒன்றறை வருடத்திற்கு புரிதல் இன்மை, சந்தேகம், சண்டைச் சச்சரவுகள், விட்டுக் கொடுத்தல் இன்மை, தாய் வீட்டுப் பெருமை பேசுதல், தேவையற்ற நட்பால் வரும் பிரச்சனைகள் இவை அனைத்தும் இருக்கத் தான் செய்யும் இவற்றை மட்டும் நீங்கள் கடந்து விட்டீர்கள் எனில் உங்கள் இல்லற வாழ்க்கை நிச்சயமாக இனிமையாக மாறும் இது தான் அப்பட்டமான உண்மை √

விநாயகருக்கு ஏன் யானைதலை?

விநாயகருக்கு ஏன் யானைதலை



விநாயகருக்கு ஏன் யானைதலை??நான் கதையை கேட்க்க வில்லை அதனுடைய கருத்தை கேட்க்கிறேன்??

***********************************************""

பெரிய காது...சகலத்தையும் கேட்கும்திறன்..சிறிய.கூறிய கண்கள்..தொலைதூரம் பார்க்கும்திறன்..மிகப்பெரியதலை 

ஞாபகம் வைத்துக்கொள்ளும்திறன்

வேறு விலங்குகளுக்கு இல்லாத பெரிய துதிக்கை...,மூச்சை நீளமாக உள் இழுத்து..மிக நீளமாக வெளியே விடுவது..போன்ற குணாதிசயங்கள் 

யானைக்கு மட்டுமே உண்டு..

சிறிய அளவில் மூச்சை இழுத்துவிட்டால். .ஆயுள் குறையும்.

ஆனால் நீண்ட துதிக்கை மூலமாக யானைஇயல்பாகவே மூச்சை மெதுவாக இழுத்து. .நிதானமாக வெளிவிடவேண்டியிறுக்கிறது

இதனாலேயே மற்ற விலங்குகளை விட யானை அதிக நாட்கள் உயிரோடு

வாழ்கிறது.....நீண்ட வாழ்க்கை. அதற்கான நீண்ட சுவாசம்..அதனால்

ஏற்ப்படும் கூரிய புத்தி..தொலைதூர பார்வை..அந்த அமைதியால் கிடைத்த 

கேட்கும் திறன்..இவையே கணபதி.

விநாயகர் பிரணவ(ஓம்) வடிவம்..

".ஆ"எழுத்தின்  நீட்டலும் 

"உ" என்ற எழுத்தின் நீட்டலும்

"ம"என்ற எழுத்தின் அழுத்தமும் ஒருங்கே கலந்தது ஓம்

"அ"என்ற ஒலி சிவம்..அது அசையாது

அனைத்தையும் ஏற்கும் குணம்.

"உ"என்பது ஒன்றில் புகுந்து அதற்கு உயிர்பை கொடுக்கும் தன்மை.

"ம"என்பது இந்த இரண்டையும் ஒன்றைசேர்த்தால் கிடைக்கும் சக்தி

இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த சக்தி சொரூபமே விநாயகர்

உங்களுக்கு இப்போது விநாயகரை பற்றி புரிகிறதா?இந்துமதத்தில்..

யாளைதலை உடைய்பொம்மையை வணங்கு..என்று சொல்வார்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ..ஏன்

யானைதலை என்று உனக்குள் கேள்வி எழவேண்டும்

ஏன் உருவவழிபாடு என்று கேட்க வேண்டும்..ஏதோ ஒரு கால கட்டத்தில் 

கடவுளை அடைய சிறந்த வழி எது?

என்று உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்க தலைப்பட வேண்டும்.

நீங்களே உங்களுக்குள் கேள்வி கேட்கும் தன்மையை வளர்ப்பதே 

இந்துமதத்தின் நோக்கம்

இரத்த புற்று நோயை (Blood-Cancer)

இரத்த புற்று நோயை (Blood-Cancer) 

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood-Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.

இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது...

அணுக வேண்டிய முகவரி :

Cancer institute Adyar,

East Canal Bank Road,

Gandhi Nagar Adyar,

Chennai-600020 Land Mark,

Near Michael School.

PHONE :

☎ 044 -24910754

☎ 044 -24911526

☎ 044 -22350241

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

frnzz plz pass this msg... to all !

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

என்னுடைய முகநூல் நண்பர்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்- உண்மைத் தன்மையை இங்குள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்>

அவள் காணும் அழகான உலகம்..!

அவள் காணும் அழகான உலகம்..! 


கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்..!

கதவு திறக்கபட...

பட்டென்று கண்களை துடைத்து கொண்டேன்..

என் கணவர் அருகில் வந்து அமர்ந்தார்.. 

"இன்னும் அழுதுட்டு தான் இருக்கியா..

இன்னமும் என் மேல உனக்கு #நம்பிக்கை வரல .. "

" அப்டி எல்லாம் இல்லீங்க மாமா...!"

"என் கிட்ட வா .. ம்ம்.."

ஆதரவாய் என்னை தன் #நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்...

"இங்க இருக்குற யாருக்குமே என்னய 

பிடிக்கலியே மாமா... எதுக்கு எல்லாரையும் எதுத்து எனக்கு தாலி கட்டுனீங்க.."

சொல்லும் போதே குரல் தழுதழுத்து கரை புரண்டு ஓடிய கண்ணீர் கணவரின் நெஞ்சை நனைத்தது...!

நடந்தது இதுதான்..

பணக்கார வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள் என் #மனைவி ..

எனக்கு தூரத்து உறவான என் மாமாவின் மகள் ..

சிறு வயதிலயே தாயை இழந்து ...! 😢

தந்தையின் நிழலில் துளியும் பேராசை இல்லாமல் பணத்தை சுற்றியே வளர்ந்தாலும்..

அணை வருக்கும் எல்லையில்லா #உதவிகளை செய்யும் #பெருங்குணம் கொண்ட #பேரழகு படைத்தவள்..!

எங்களது குடும்பம் கூட்டுக்குடும்பம்...

தரகர் மூலம் வந்த வரன் அவள் ..

தூரத்து உறவினரான என் மாமாவின் மகள் என்று தெரிந்த வுடன் ..

கல்யாண வேலைகள் துரிதமாக நடந்தது..

பத்திரிக்கைகள் அச்சிடபட்டு பத்தே நாட்களில் முகூர்த்தமும் குறிக்க பட்டது...

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை போல அடுத்து வந்த நாட்களில் அனைத்தும் மோசமாகவே நடக்க ஆரம்பித்தது...!

திருமணத்திற்கு 4 நாட்கள் இருக்க..

என் மனைவியின் அப்பா நெஞ்சுவலியால் இறந்து போனார்..

எனக்கு மட்டுமல்ல

அனைத்து உறவினர்களுக்கு மே பேரதர்ச்சியாய் இருந்தது..

என் மனைவி ஆதரவில்லாமல் நிறுத்தப்பட்டாள்..

அவளின் சொத்துக்களை பங்கு போட வந்த உறவுகள் யாரும் அவள் #கஷ்டத்தை பங்கு போட தயாராக இல்லை..

அவ்வளவு ஏன்..

என் வீட்டிலும் அவளை பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் மாற ஆரம்பித்தன ...

சில #வார்த்தைகள் என் காதில் விழுந்து ரணமாக மாற வைத்தது..

"நா அப்பவே சொன்னேன்ல .. எனக்கு தெரியும் கடைசில இந்த மாதிரி லாம் நடக்கும்னு..!" இது அப்பாவோட அக்கா..

"சின்ன வயசுலயே அம்மாவ முழுங்குனவ .. இப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பனயும் முழுங்கிட்டா ... தரகர் சொல்லும் போதே எனக்கு சந்தேகம் தான்.." இது என் இன்னொரு அம்மாவாக நான் நினைக்கும் என் அண்ணி..

"எனக்கென்னமோ அவ ராசி இல்லாதவளா இருப்பானு தோனுது..." இது நான் உயிராய் நினைக்கும் என் தங்கை..

இன்னும் நிறைய .. நிறைய ..

நினைக்க நினைக்க மனம் கனத்து போனது.

என் உறவுகள் மீதான நம்பிக்கையும் தகர்ந்து போனது அந்த நொடியில் இருந்து..

இறுதியில் திருமணத்தை அனைவரும் கலந்து பேசி நிறுத்தி விட்டார்கள்...

என் மனைவியின் கண்ணீர் என் #உயிரை அரித்துக் கொண்டிருந்தது..

இறுதி முடிவு எடுத்தவனாய் என் அம்மாவின் முன்னால் வந்து நின்றேன்..

சிறு வயது முதலே நான் கண்ட முதல் தெய்வம் அம்மாதான் என்பதை மனதார நேசிப்பவன்..

" உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம,.. உன் மனசுக்கு எது சரினு படுதோ... அத செய் என் மகன பத்தி எனக்கு தெரியும்..! 

யார் என்ன சொன்னாலும் நா உன் கூடவே இருப்பேன் சரியா.. போ...!"

அம்மாவை தவிர

யாருக்குமே என் மனைவியை பிடிக்கவில்லை...

அனைவரின் எதிர்ப்பையும் மீறி ..

எனக்கு குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் ....

ஒரு சின்ன கோவிலில் ...

என் அம்மா தாலியை எடுத்து கொடுக்க ..

மூன்று முடுச்சி போட்டு அவளை என் மனைவி ஆக்கினேன்..

தன் கெளரவம் பாதித்ததாக அப்பா சொல்ல..

தன் எதிர்காலமே நாசமானதாக என் தங்கை சொல்ல..

என் கூட பிறந்தவன் செத்து விட்டான் என்று அண்ணன் சொல்ல..

இன்னும் எண்ணற்ற உறவினர்களின் #சாபங்களோடு ..

என் எதிர்காலம் தொடங்கியது...

அம்மாவின் அடம் பிடிப்பால் எங்கள் சாந்தி முகூர்த்தமும் குறிக்கப்பட்டது..

தற்சமயம்..

அவளின் கண்ணீர் நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது..

"அம்மு .. டேய், .. என்ன பாரு .. என்ன பாரு .. சொல்றேன்ல..."

மெல்ல நிமிர்ந்தாள்...

"உன் கண்ணுல கண்ணீர பாக்க வா எல்லாரையும் எதுத்து உன் கழுத்துல தாலி கட்டின .. ம்ம்ம்..."

அவள் கண்கள் சிவந்து ... கன்னங்களும் சிவந்து ...

அவளின் காயங்களை எனக்கு தெரியபடுத்த ...

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.. என் மடியிலேயே ஆறுதல் படுத்தினேன்..

அவளது கண்களுக்கே வலிக்குமளவுக்கு அழுது இருந்தபடியே ..

உறங்க அதிகாலை ஆனது.. என் மடியிலே இருந்த அவளை எழுப்ப என் மனதும் இடம் தரவில்லை..

என் கண்களுக்கு விழித்தவாறே..

விடிந்தும் போனது...

7 நாட்கள் ரணமாக கரைய ..

ஏச்சுக்களும் பேச்சுக்களும் நான் இல்லாத தருணங்களில் என் உறவுகள் என்னவளை வதம் செய்ய ..

எனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் அனைத்தும் வெளியே வரும் தருணமும் வந்தது...

எதார்த்தமாக நான் உள்ளே நுழைந்த சமயத்தில் என் தங்கையும் அண்ணியும் என் மனைவிைய வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்க.. கண்களில் கண்ணீருடன் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள் என் மனைவி ..

எதையுமே கண்டுக்காதது போல என் அப்பா ஊஞ்சலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், ..

இதுவரை வராத கோபங்கள் அனைத்தும் ஒன்று சேர..

என் தங்கையை அருகே அழைத்தேன்...

"பளார்...." னு விழுந்த அறையில் பொறிகலங்கி 3 முறை சுற்றி சுவற்றில் மோதி கீழே விழுந்தாள்..

அவளிடம் இந்த 20 வருடங்களில் கண்டிப்பாய் கூட நான் பேசியதில்லை ..

என்னிடம் செல்லமாய் வளர்ந்த என் தங்கை வாங்கிய முதல் அரை ...

அப்பா பதறிய படி ஓடி வர.. அண்ணி பயத்தில் நடுங்க..

என் மனைவி என்னை தடுக்கும் பொருட்டு குறுக்கே வந்து நின்றாள்..

அம்மா வீட்டில் இல்லை என்பது உறுதியானது..

சத்தம் கேட்டு வெளியே இருந்த பெண்களும் உள்ளே ஓடி வந்தனர்...

"ச்சி.. நீங்கல்லாம் பொம்பளைகளே தானா..

அவளும் ஒரு சராசரி பொன்னு தானே.. இதுவே உங்க கூட பொறந்த பொறப்பா இருந்தா இப்டிலாம் பேச மனசு வருமா ... ஏற்கனவே காயப்பட்டு வந்து நிக்கறவள எல்லாரும் சேர்ந்து அவ #மனச_குத்தி_கிழிக்கிறிங்க.. " ஆட்காட்டி விரலை உயர்த்தினேன்.. "உங்க எல்லாருக்கும் அவ்ளோதான் மரியாதை... உங்களாலே அவ கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் .. எல்லாரையும் தூக்கி தொங்க விட்ருவேன் ஜாக்கிரதை...!"

ஆத்திரம் ரணகளமாக ..

"நா உன் தங்கச்சி டா .. நேத்து வந்தவளுக்காக என்னையே அடிச்சிட்ட லே ...!"

"நா உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தேன்னு தெரியுமாடி உனக்கு .. என்னைய மாதிரியே நா இல்லாத சமயத்துல உன் அண்ணியா நினைக்கலனா கூட பரவாயில்ல.. அவள ஒரு மனுஷியா கூட நினைக்காத உன்னை.. என் தங்கச்சினு சொல்ற யா ..

இதோ பாரு .. நீ என் தங்கச்சி அவ்ளோதான்.. அவ என்னோட உசுரு.. அவ மனசு கஷ்ட்டபடுத்துறது யாரா இருந்தாலும் என்னாலே மன்னிக்க முடியாது.."

சண்டைகள் பெரிதாக .. அண்ணன் வந்து பிரிவினை உண்டாக்க ..

அப்பா வீட்டை விட்டு வெளியே போக சொல்ல..

இறுதியாக அம்மா வந்து சேர்ந்தாள்..

வீட்டில் நடந்த களபரங்களை அனைவரின் முகங்களை வைத்தே யூகித்து விட்டாள்..

கண்ணீருடன் என் முன்னால் வந்து நின்றாள்.. 

அம்மாவின் கண்களில் ஆயிரம் அர்த்தங்கள்..

புரிந்து கொண்டேன்..

வாடகை கார் வந்து நிற்க..

"நீ போய் கார்ல உக்காரும் மா.. நா அம்மாகிட்ட பேசிட்டு வந்திடேறன்.."

"இல்ல மாமா .. நானும் உங்க கூட வே இருக்கேன்.. நீங்க பேசுங்க .. சேர்ந்தே போயிரலாம்.." குரல் தழுதழத்தபடியே சொன்னாள்...

அம்மா விடம் திரும்பினேன்... 

எனக்கும் கண்களில் நீர் கோர்த்தது..

" அம்மா ... இவ எல்லாத்தையும் விட்டுட்டு வந்த வஇல்ல.. எல்லாத்தையும் இழந்துட்டு வந்த வ ... எல்லாமே நான் தான்னு என்ன மட்டும் #நம்பி வந்திருக்கா ... நீதானே சொல்லுவ.. உன்ன நம்பி வந்தவங்களுக்காக உயிரையே கொடுக்கலாம்னு.. உயிராவே வந்தவள மட்டும் எப்டி மா விட்டுக் கொடுக்கிறது..? நா உன் பையன் மா .. எந்த சந்தர்ப்பத்திலும் தடம் மாற மாட்டேன்... " கனத்த பெருமூச்சுடன்.. "நா போறேன் மா .. நாங்க எங்க இருந்தாலும் .. எங்க நினைவு எல்லாமே உன்னை சுற்றியே இருக்கும்..!

யாருக்காகவும் பேச முடியாமல் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள் என் அன்னை...

ஊட்டி யில் ஒரு அழகான எஸ்டேட் கிராமத்தில் குடியேறினோம்..

நாட்கள் நொடிகளாகி பறக்க..

அவள் அழுகை மட்டும் ஓய்ந்தபாடில்லை, ..

கடுமையாக உழைத்தேன்..

15 வருடங்கள் உருண்டோடியது.. 

எனக்காய் என் மனைவியும் மாறினாள்..

ஆணின் தன்னம்பிக்கையே பெண் தான் என்பதை போல ஓவ்வொரு நிமிடமும் புரிய வைத்தாள்..

வசதி வந்தது..

அழகான இரட்டை #பெண்_குழந்தைகள் அவளை உறித்து வைத்தாற் போலவே...

நீலகிரி மாவட்டத்தில் பெரிய எஸ்டேடக்கு அதிபதி ஆனேன்..

குடும்பம் அழகானது...

இன்று ..

"மாம்ஸ்..."துணி காய போட்டவாறே மனைவி அழைக்க..

"என்ன மேடம்.. ரொம்ப ஹேப்பி மூடுல இருக்கிங்க போல.."

"ம்ம்ம்ம்.. ஆமா.. இப்ப நீங்க என்ன கேட்டாலும் கிடைக்கும்.. !"

"என்னாது, ...

என்னடி மளிகை கடைகாரன் சம்சாரம் ேகக் கற மாதிரி இருக்கு...! அது சரி.. பொண்ணுங்கலாம் எங்கடி.. இன்னும் ஸ்கூல் பஸ் வரலியா..?.."

" வந்துட்டாளுக மாமா .. Home Work பண்ணிட்டு இருக்காளுக..!"

சொல்லியபடியே நெருக்கமாக வந்து #நெஞ்சில் சாய்ந்தபடியே ..

" மாமா.."

"என்ன மா"

"எனக்கு #ஒரு_பையன் வேணும்..!"

"வரும் போது மளிகை கடைல வாங்கிட்டு வரட்டுமாடி தங்கம்..!"

"கிண்டல் பண்ணாதிங்க மாமா.. அப்டியே உங்கள மாதிரியே அம்மா மேலயும்.. பொண்ணுங்க மேலயும் பாசம் வச்சு .. ேநசத்தாலே எல்லாரையும் உருக வெக்கற மாதிரி.' உறிச்சு வெச்ச சமாதிரி.. ப்ளீஸ்மாமா ..."

"அது சரி.. வெவரம் தெரிற வயசுல பொண்ணுங்கள வச்சுக்கிட்டு .. ஏண்டி இப்டிலாம் பேசற ..!"

பட்டென விலகினாள்..

" நைட் பெட்ரூம்க்கு வருவீங்கல்ல.. ம்ம்ம்ம்.. வாங்க.. உங்கள ரேப் பண்ணிடேறன்...!" என் கன்னத்தை கிள்ளியவாறே சொல்லிவிட்டு திரும்ப .. " அடிப்பாவி..." அசந்து போய் நின்றேன்..

இருவரும் சிரித்தபடியே மாடியில் இருந்து கீழே இறங்க ..

உள்ளே ஒரே சிரிப்பு சத்தம்..

என் அம்மா வந்திருந்தார்கள்..

பார்த்தவுடன் எங்களுக்கு கண்ணீரே வார்த்தைகளாக வர.. 

ஓடி வந்து அணைத்துக் ெகாண்டாள் இருவரையும் ..

இனிதாய் தொடங்கியது என் வாழ்க்கை பயணம்..!

குறிப்பு : 

அம்மாவிடம் மகனாக இருக்கலாம்..

அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்..

தங்கை யிடம் அண்ணனாக இருக்கலாம்..

ஆனால்..

#மனைவி யிடம் மட்டுமே #எல்லாமுமாக இருக்க முடியும்..!

மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டுமல்ல..

#மனதுக்கு பிடித்த குடும்பத்தினர் அனைவரின் #மனதையும்_ஆள்பவள்..! ❤️

#ஆண் குடும்பத்தின் #உயிரெழுத்து ..

#பெண் என்பவள் குடும்பத்தின் #தலையெழுத்து ..

மனைவியை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..

ஏனெனில் ..

குடும்பம் தான் அவள் காணும் அழகான #உலகம்..! ❤️ ❤️


மகளிர் தினம்

 மகளிர் தினம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மார்ச் 8ம் நாள் உலகம் எங்கும் மகளிர் தினம் கொண்டாட படுகிறது.
இதன் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். எதற்காக இந்த நாள் வந்தது என்று.
பதிவில் உள்ள புகைப்படம் புரட்சி வீரன் லெனின். 1924ம் ஆண்டு தனது 53வது வயதில் மரணம் அடைந்த இந்த வரலாற்று புரட்சி மகனை சுமார் 88 ஆண்டுகள் அடக்கம் செய்யாமல் இந்த மகனின் உடலை பாது காத்து மக்களின் பார்வைக்கு வைத்தனர். உலக வரலாற்றை புரட்டி போட்ட புரட்சியாளன் லெனின்.
உலகம் எங்கும் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினம் இந்த புரட்சி வீரன் தான் காரணம்.......... முகநூலில் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி விட்டால் மகளிர் தினம் பெருமை அடைந்து விடுமா?
1917ம் ஆண்டு மார்ச் 8ம் நாள் பெட்ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற இடத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட பெண்களின் புரட்சி தான் இன்று மகளிர் தினம். கொத்தடிமைகளை போல பெண்களை பணி செய்ய வைத்து குறைந்த ஊதியம் கொடுத்து வறுமையில் வாடிய பெண்கள் கொதித்தழுந்து ரஷ்யாவின் வீதிக்கு வந்து போராட்ட களம் அமைத்து பல ஆயிரம் பெண்கள் நடுவீதியில் எழுப்பிய ஆவேச குரல் கண்டு துணைக்கு ஆண்களும், கல்லூரி மாணவ மாணவியர், பள்ளி குழந்தைகள், அரசு ஊழியர்கள் பல லச்சம் பேர் ரஷிய வீதியில் பெண்கள் ஆண்கள் பதாகை ஏந்தி எழுப்பிய குரல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வேலை வாய்ப்பு...... சம ஊதியம் சம உரிமை.....இந்த முழக்கத்தை லெனின் அரசு ரஷ்யாவில் அமைந்த போது சட்டமாக ஆக்கி மார்ச் 8ம் நாளை உலக மகளிர் தினம் என்று கொண்டாட வேண்டும் என்று பிரகடன படுத்திய பெருமை லெனினுக்கு..........
பின்னர் ஐ நா சபையில் தீர்மானமாக நிறைவேற்ற பட்டு இன்று உலகம் எங்கும் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.

Monday 21 February 2022

søknad om annonsen i Fin Radio

 சிபான் விளம்பரம் தேடுவதற்கு அல்லது கோருவதற்கு ஒரு விண்ணப்பபடிவம் Fin Radio வெப்சைடில் செய்யவேண்டும் அந்த விண்ணப்பபடிவம் கோருகின்றார்கள் நீங்கள் நான் தரும் விண்ணப்படிவத்தை நமது ஃபின் ரேடியோ இணையத்தளத்தில் நிறுவுங்கள்

                                                   Application for the advert in Fin Radio

                                                        Søknad til annonsen i Fin Radio

                Name of Company     ...................................................................................

                Address of Company ........................................................................................

                                                   ....................................................................................

                the web site of Company   ...................................................................................

                 Email of company        ...........................................................

                  Mobil of company        ..............................................................

               Name of contact person  ...........................................................

              upload the company logo .............................................................

                Text of Advert      ......................................................................

                                              ..................................................................

               Date and place      ...........................................................

               Signature of the responsible person.......................


Sunday 20 February 2022

‘‘குற்றமும் தண்டனையும்’’

 ‘‘குற்றமும் தண்டனையும்’’

         


அந்தக் காலத்தில் மரணமுற்ற ஒரு நபருடைய மனக்கேதம் தீர்ப்பதற்காக, நெய் விளக்கினை நிவந்தமாக விடுவார்கள். அதுபோல என் மனதுக்கு நானே நிவந்தம் விட்டுக் கொள்ளும் பதிவுதான் இது. தஸ்தயேவ்ஸ்கியின் மகத்தான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை நான் படித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இந்த ஒரு மாத காலமும் தஸ்தயேவ்ஸ்கியின் நினைவுகளில்லாத நாட்களே கிடையாது. எனது தூங்கா இரவுகளின் பெரும் பகுதியை ரஸ்கோல்னிகோவும், காத்ரீனா இவானோவ்னாவும் கைப்பற்றியவாரே இருக்கிறார்கள். எனது தனிமையான நேரங்களில் எல்லாம் என் மனம் இந்த நாவலைப் பற்றியே எண்ணம் கொள்கிறது. நான் இருமும் போதெல்லாம் எனக்கு காத்ரீனாவுடைய ஞாபகம்தான் வரும். இப்படி ஒரு மாதகாலமாக என் மன உணர்வுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அரூப உருவம் கொண்ட ஒன்றினை... அர்த்தப்படுத்த முனைவதே இப்பதிவின் நோக்கம்.

              டால்ஸ்டாயைப் படித்தவர்கள் கண்டிப்பாக தஸ்தயேவ்ஸ்கியையும் படிக்க வேண்டும் என்றே நான் சொல்லுவேன்.காரணம் டால்ஸ்டாயினுடைய எழுத்து ஒருவனை நல்லவனாக மற்றிவிடும். ஆனால் நல்லவன் குற்றம் செய்யவே மாட்டான் என்பது கிடையாது. சந்தர்பமும் சூழலும் நல்லவைகளை விட பலம் கொண்டவை. அந்த சந்தர்ப சூழ்நிலையை கடந்து செல்லக் கற்றுத் தருவது தான் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து செய்கிற பணி . இந்த நாவலில் வரக்கூடிய கதாநாயகன் ரஸ்கோல்னிகோவ், பணத்துக்காகவும் தன் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் இரண்டு பெண்களை கொலை செய்து விடுகிறான். இந்த இரட்டைக் கொலைக்கான எவ்வித சாட்சியுமே இல்லை. ரஸ்கோல்னிகோவின் மீது யாருக்குமே சந்ததேகம் வரவில்லை. ரஸ்கோல்னிகோவிற்கும் கொலை என்ற வார்த்தைக்கும் கூட எவ்விதத் தொடர்பும் இல்லவே இல்லை என்றுதான் அவனைச் சூழ்ந்திருந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் கொலை செய்தது ரஸ்கோல்னிகோவ். அதற்கான ஒரே வாழும் சாட்சியும் அவன் தான். அப்படியென்றால் அவன் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் தானே இருக்க வேண்டும் என்று கேட்டால் அது தான் கிடையாது. அவன் செய்த குற்றத்துக்கு அரசாங்கம் அவனை தண்டிக்கவில்லை. அவன் மனமே அவனை தண்டிக்கிறது. அவன் அடையும் மன வேதனைக்குப் பதிலாக சிறையிலே தன் வாழ்நாள் முழுவதும் கழித்திருக்கலாம். அல்லது அரை நிமிட வலியோடு தூக்கிலே மாண்டிருக்கலாம். அப்படிப்பட்டதொரு மனவேதனைக்கு அவன் ஆட்படுகிறான்.

              அப்படி அவன் அடைந்த மனவேதனை என்னவென்று கேட்டால்... ஒரு நிமிடம் நீங்கள் நினைத்துப் பாருங்கள் தேன் எவ்வளவு இனிப்பான ஒன்று. ஆனால் அந்தத் தேன் ஒருவனுக்குக் கசப்பாக மாறினால் அவன் எவ்வளவு பரிதாபத்துக்குரியவன். அப்படிப்பட்டவன் தான் ரஸ்கோல்னிகோவும். மனித வாழ்வி இனிப்பாக இருக்கும் ஒரே விசயமான அன்பானது ரஸ்கோல்னிகோவுக்குக் கசக்கிறது. தன் தாயும், தங்கையும் தன் மீது காட்டுகிற அன்பு அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தாலும், அவனுக்கு அந்த அன்பு கசக்கத்தான் செய்தது. எந்த எதிர்பார்ப்புமில்லாத ரஸூமிகின் என்ற நண்பன் தன் மீது காட்டும் அன்பானது அவனளவில் கசக்கத்தான் செய்தது. ஒரு நல்லவன் குற்றம் செய்தால் அவன் என்ன பாடு படுவான் என்பதற்கு ரஸ்கோல்னிகோவ் ஒரு உதாரணம்.

            எனக்கு இந்த நாவலில் மிகவும் பிடித்தமானதும், இந்த  நாவலின் உச்சமாக நான் கருதுகிற ஒரு பகுதியும் உண்டு. ஒரு குடிகார குமாஸ்தாவான மர்மலதேவ் என்பவன் ஒரு விபத்தில் இறந்து விடுவான். மர்மலதேவ் ரஸ்கோல்னிகோவின் நண்பன். மர்மலதேவின் இறப்புக்குப் பிறகு மர்மலதேவின் மகள் சோனியாவைக்கான ரஸ்கோல்னிகோவ் செல்வான். ஒரு ஒண்டுக் குடித்தனத்திலே தனியாக வாழ்ந்து வரும் சோனியா ஒரு விலைமாது .அவளைக் காண வந்த ரஸ்கோல்னிகோவ் திடீரென்று சோனியாவை பைபிளுடைய ஒரு பகுதியை வாசிக்கச் சொல்வான். தோலால் பைண்டு செய்யப்பட்ட ஒரு பைபிளை கையில் எடுத்து யோவான் சுவிசேஸத்திலுள்ள லாசரஸ் உயிர்த்தெழுதல் பகுதியை அழுது கொண்டே வாசிப்பாள். தன் தகப்பனை இழந்த சோனியாவை லாசரஸின் மரணமும், ஏசு லாசரசுக்குத் தந்த மீட்சியும் அவளைத் தொடர்ந்து வாசிக்க விடவில்லை. இருந்தும் அழுகின்ற குரலில் அவள் பைபிபைபிளை வாசித்தாள். பைபிள் எவ்வளவு புனிதமான ஒன்று. அந்த மாபெரும் புனிதத்தை ஒரு விபச்சாரப் பெண் வாசிக்க அதை ஒரு கொலைகாரன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறானே... நாம் தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி என்ன சொல்ல இயலும்.

           இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாப்பாத்திரம் காத்ரீனா இவானோவ்னா தான். ஒரு காச நோயாளியான இந்தக் காத்ரீனா, இந்த நாவலில் வரும் போதெல்லாம் என் கண்ணில் அனிச்சையாய் நீர் ஊறும். காத்ரீனா ஒன்றும் பிரம்மாதமானவளல்ல. குடிகாரக் கனவனால் சீரழிந்து போகும் பல பெண்களில் அவளும் ஒருத்தி. இந்த நாவல் முழுவதுமே காத்ரீனா வெறும் இருமலாகத் தான் காட்சி படுத்தபடுகிறாள்.அவள் ஒவ்வொரு முறை இருமும் போதும் அவளது கைக் குட்டைகள் இரத்தத்தால் நனையும். அவள் இருமும் போதெல்லாம் நெச்சுக் கூடில் ஏற்படும் வலியின் காரணமாக தன் நெஞ்சிலே கையை வைத்துக் கொண்டு இருமுவாள். அப்படி அவள் இருமும் போது எனக்கும் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று குறு குறுக்கும். தன் கனவனுடைய இறப்பை ஒட்டி நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் தொடர்ச்சியாய் வரும் இருமலின் காரணமாக பொங்கி வரும் குருதியை தன் கைக்குட்டையால் அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே பேசுவாள்.இருமலைத் தாங்க இயலாத போதும் அவள் பேசிக் கொண்டே இருப்பாள். இறுதியாக அவளது மரணமும் கூட  சோகமானதாகவே இருந்தது. இதனால் தான் என்னவோ அசோகமித்திரன் தஸ்தயேவ்ஸ்கியை சித்தரவதைச் சாதகம் என்று சொல்கிறார். ஆம் இலக்கிய உலகிலே டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியர் என்றால், தஸ்தயேவ்ஸ்கிதான் சோபாக்லீஸ்.‘தஸ்தயேவ்ஸ்கி தன்னை விட மேம்பட்டவர் என்பதால் தான் டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தை விமர்சிக்கவில்லை’ என்று அசோகமித்திரன் தனது கட்டுரையில் (படைப்பாளிகள் உலகம் ) கூறுவார். இந்த சிறுவனைப் பொறுத்தமட்டில் டால்ஸ்டாயும் தஸ்தயேவ்ஸ்கியும் இருவரும் மகத்தானவர்களே.

           இந்த நாவலின் முடிவுதான் மிக அருமையாக இருக்கும். சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ரஸ்கோல்னிகோவ், ஒரு நதிக்கரையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பான். நான் கொலை செய்ததில் எனக்கு வேதனையைத் தவற ஒன்றுமே கிடைக்கவில்லை. அதற்கு மாறாக நான் அன்பை மட்டுமே காட்டியிருந்தால் நான் சந்தோசமாக வாழ்ந்திருப்பேனே என்கிற அவனது ஆற்றாமையோடு இந்த நாவல் முடியும். இதைத் தான் டால்ஸ்டாயும் வலியுறுத்துகிறார். ஏன் மனிதனை நேசிக்கும் அத்தனை பேரும் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறார்கள். ஆம்... அர்த்தமற்ற மனித வாழ்வு, அன்பால் மட்டுமே அர்த்தப்படுத்தப்படுகிறது.

- தமிழ் மகன்

சித்தர்கள் ரகசியம்

சித்தர்களின் ரகசியங்கள்


மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ

உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்

முலைமேல் அமிர்தம் பொழியவைத்தானே!

-திருமந்திரம் - 2882

பொருள்

கொல்லனின் பட்டறை உலையில் இட்ட இரும்பு, நெருப்போடு நெருப்பாக உருமாறிவிடுவதைப்போல், சீவன் சிவனோடு இரண்டறக் கலந்து விடுகிறது. தியானப் பயிற்சியின் உச்சத்தில் சீவன் சிவனோடு கலந்து அடையும் பேரானந்த நிலையை வர்ணிக்கிறது இந்தப் பாடல்.

'கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்!' - என்பது சித்தர் ஆய்வாளர்களிடையே புழங்கும் சொலவடை.

'பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்

பலவிதமா யகண்ட பூமியெல்லாம்

ஆரப்பா வங்குமிங்கு நிறைந்துநின்றா

ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்

சீரப்பா சித்தருட மூலங்காணச்

செகத்திலே யெவரறியப் போராரையா

நேரப்பா நாமறிந்து சிறிது சொன்னோம்

நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே'

எனச் சித்தர்களைப் பற்றி போகர் உரைக்கிறார். (ஜெனன சாகரம் - பாடல்: 314) சித்தர்கள் இந்த அகண்ட பூமியில் மலைகளிலும், குகைகளிலும், வனங்களிலும் மறைந்து நின்றனர். அவர்களின் மூலத்தைக் கண்டறிய யாருக்கும் சக்தியில்லை. என் சக்திக்கு எட்டிய சிலவற்றைச் சொன்னேன். நிறைவாவதற்கென மறைவாகவே வாழ்கின்றனர் எல்லா சித்தர்களும் என்பதே இந்தப் பாடலின் சாரம்.

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே!' - என்ற சொலவடை வந்தது இதனால்தான். அவர்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தவிர்த்து, அவர்கள் காட்டிய நெறிகளில் மனதைச் செலுத்தி உலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தம்!

முழுமை பெற்ற சித்தர்களின் அடையாளங்கள் எவை என்பதை கோரக்கர் 'பிரம்ம ஞான தரிசனம்' என்னும் பகுதியில் இப்படிப் பாடுகிறார்.

'கூரான வாசி மறித்தவனே சித்தன்

குறிகண்டு மாயை வென்றவனே முத்தன்

பூராயம் தெரிந்தவனே கிரியைப் பெற்றோன்

பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்

நேரான தீட்சை பெற்றோன் சிவமுத்தன்

நிறைசிவயோகம் புரிந்தான் ஞானியாமே'

முழுமையான சிவயோகம் புரிந்து, சித்தனாகி, குருவாகிய ஆதிசித்தனிடம் தீட்சை பெற்று சீவன் முக்தனாகி, பூவுலக இல்வாழ்வில் கடமையாற்றி, சரியை வழி அடைந்தவனாகி, மூன்று மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை வென்று, சித்தர்களின் பரம ரகசிய மையமான பிரம்ம மூப்பைக் கண்டு பேரானந்த பிரம்மானந்த நிலையில் சதாசர்வ காலமும் லயித்து இருப்பவனே பூரண சித்தன் என கோரக்கர் சித்தர்களை அடையாளப்படுத்துகிறார்.

சித்தர்களில் தனியிடம் போகருக்கு உண்டு. ஏனெனில் பல சித்தர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை அவர் இயற்றிய ஜெனன சாகரம் நூலின் வழியேதாம் அறிய முடிகிறது.

அவர் பழநிமலையில் சமாதி அடைவதற்கு முன்பாக தன் வரலாற்றை ஜெனன சாகரம் என்னும் நூலில் எழுதி வைத்தார். பிறகு கோரக்கரை அழைத்தார். தன்னை சமாதி அடக்கம் செய்துவிட்டு உரகை என அழைக்கப்படும் நாகப்பட்டினத்துக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். அங்கு சென்றபின், தான் பழநியில் அடக்கம் செய்த சமாதியிலிருந்து வெளிப்பட்டு நாகை சென்று அங்கு கோரக்கரைச் சந்திப்பதாகவும் சொன்னார். அவரின் சொற்படி பழநியில் முறையாக போகரை சமாதி நிலையில் அடக்கம் செய்துவிட்டு கோரக்கர் நாகை சென்றார்.

பழநியிலிருந்த போகர், ககனமார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார். கோரக்கரைச் சந்தித்து அவரை வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோரக்கரை அடக்கம் செய்துவிட்டு ககனவெளிப்பாதையில் கடல் தாண்டிச் சென்றார்.

இந்தச் செய்திகள் கோரக்கரின் தனிநூல் தொகுப்புகளில் காணப்படுகிறது. (நூல் எண்: 4,5,6)

ஆகிட இந்நூல்களைச் சித்தன் யானும்

அறிந்த மட்டும் காவிரியின் நதிபாங்குற்று

மோகிதமாய்ச் சோழநாட்டின் கொள்ளிட மப்பால்

முத்தாநதிதீரம் பரூர்ப்பட்டி சிற்றூர்

ஏகிநிறை சமாதியுற்றேன் அதுமுன்னால்

இயற்றும் இந்நூல் வழுத்தல் இனி உற்றேனார்

பாகிதமாய்ப் பாடியபின் பலதேசம் போய்

பரிவாய் முன்னுற்ற பொய்கையூரில் வந்தேன்.

வந்தவுடன் சடையப்பக் கவுண்டன் என்னை

வாகுடனே அனுசரித்து வாழ்த்தி நின்றான்

அந்தமுடன் பரிவிருத்தி நானூற்றெட்டு

ஐப்பசிநேர் தசமிதிதி பரணித்திங்கள்

சிந்தையுறச் சமாதிநிலை யானடைந்து

சிதறாமல் சீருலகில் வாழ்ந்து சித்தாய்க்

கந்தமணம் வீசிடவும் காட்சியாகக்

காசினியில் சாவு இவனுக்கில்லை யாமே

22-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பின் கோரக்கர் வான்வெளி வழியாக பல தேசங்களுக்கும் போய் வந்திருக்கிறார். பழனிமலைக்கு வந்த கோரக்கர், போகருடன் இணைந்து மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல அபூர்வ மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். இருவரும் நீண்ட நாள் வாழக்கூடிய கற்ப ஔடதங்களை உண்டிருக்கின்றனர். பல ஆச்சர்யமான சித்தாடல்களைப் புரிந்துள்ளனர்.

ககன மார்க்கமாக கோரக்கரும் போகரும் சீனதேசம் சென்று வந்திருக்கின்றனர். மீண்டும் நாகை வடக்குப் பொய்கை நல்லூருக்கு கோரக்கர் வருகிறார். அவரை சடையப்ப கவுண்டர் வர வேற்றிருக்கிறார். பர்விரத்தியாண்டு 408 ஐப்பசி மாதம், தசமி திதி, பரணி நட்சத்திரம் தினத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் இரண்டாம் முறையாக சமாதி எய்தி இருக்கிறார். எவ்வித உடல் சிதைவும் இன்றி நறுமணம் கமழ சமாதியிலிருந்து வெளிப்பட்டு, ''எனக்கு இந்த பூமியில் சாவு இல்லை!'' எனச் சொல்லியுள்ளார். மேற்கண்ட கோரக்கரின் பாடல்கள் வழியே நாம் இந்தச் செய்திகளை அறிய முடிகிறது.

இதேபோல் சித்தர் போகரும், தனக்கும் தன் குரு காலாங்கிநாதருக்கும் உள்ள உறவு குறித்தும் தன் சீடர் புலிப்பாணி குறித்தும் தன் சப்த காண்டம் நூலில் குறிப்பிடுகிறார். (போகர் - 7000)

தான் கற்ற மந்திரம், யந்திரம், தந்திர முறைகளில் தேர்ந்து, அதன் ஆற்றல்களால் உலகின் எட்டுதிசைகளுக்கும் சென்று வந்ததாகவும் கூறுகிறார்.

தான் கற்ற யோகக் கலையின் மூலம், மூன்று யுகங்களாக நெடுந்தவம் இயற்றி வரும் சித்தர் திருமூலரைச் சமாதி நிலையில் கண்டதாகவும் குறிப்பிடுகிறார். போகர், திருமூலரைச் சமாதி நிலையில் கண்டபோது அவர் எப்படியிருந்தார் என்பதை வர்ணிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

திருமூலரின் உடலை ஒரு ஜொலிக்கும் ஒளிப்பிழம்பாக கண்ணுற்றதாகவும், அவர் எழுந்து நின்ற சமாதியைச் சுற்றி ஒளிவட்டம் வீசியதாகவும், அவரின் உடலிலிருந்து பல அபூர்வ மலர்களின் நறுமணங்கள் வீசியதாகவும் பரவசமாகக் குறிப்பிடுகிறார்.

போகர் 7000 நூலில் இன்னும் பல ஆச்சர்யமான, அமானுஷ்யமான தகவல்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜெருசலத்திற்கு தன்னுடைய புகை ரதத்தில் (Rail) சென்றதாகவும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் கண்டதாகவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்று இயேசுநாதரின் சீடர்களின் சமாதிகளைக்கண்டதாகவும் கூறியுள்ளார் (மூன்றாவது காண்டம் செய்யுள்: 215)

இம்மானுவேல் என்ற பெயரைக் குறிப்பிட்டு, இயேசுவின் சமாதியில் தான் தியானம் செய்ததையும் குறிப்பிடுகிறார் (செய்யுள் 216)

அங்கிருந்து புறப்பட்டு மெக்கா சென்றடைந்ததாகவும், முகமது நபியின் சீடர்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார் (செய்யுள் 228-230)

அங்கு யாகோபு சித்தரைக் கண்டதாகவும், அவர் தன்னிடம் தீட்சை பெற விரும்பியதாகவும் குறிப்பிடுகிறார்.

போகர் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் சார்பாளர்கள் கற்பனைக் கதை எனக் குறிப்பிடலாம். ஆனால், அவர் கூறிய இந்த அபூர்வமான தகவல்கள் எல்லாம், அவர் சமாதி நிலையில் இருந்தபோது, மெய்யுணர்வின் உச்சநிலையில் அகக் கண்ணில் கண்ட காட்சிகள்!

போகரின் க்ரியா யோகத்தினால் இறந்தவரை பிழைக்க வைக்க முடியும் என்று கூறுகின்றனர். மனதின் மீதும் மரணத்தின் மீதும் நுண்ணிய ஆதிக்கம் செலுத்தி உயிர்த்தெழும் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பது க்ரியா யோகத்தின் மகா ஆற்றல் எனச் சொல்லப்படுகிறது.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததே அவர் பயின்ற க்ரியா யோகத்தின் அற்புதம் என்றும் சில யோகிகளால் கூறப்படுகிறது.....

ஆச்சரியமான தேவதை

 ஆச்சரியமான தேவதை


🌼 *ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்* 

🌼ஒரு நாள், இரு நாள் அல்ல

🌼தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்

🌼இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது*.

🌼அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்

🌼இந்த பெண் படைப்பு....

பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்

🌼அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்

🌼சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்

🌼அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்

🌼இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்

🌼“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. 

🌼ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை

🌼அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்

🌼ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்

🌼அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்

🌼அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்

🌼கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*. 

🌼கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு

🌼*தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்

🌼மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்

🌼“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது

🌼எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல

🌼அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்

🌼அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது

🌼அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்

🌼ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்

🌼இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை

🌼தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்

🌼நன்றி 🌼

அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம்