Thursday 24 February 2022

இசையமைப்பாளர்கள்

 இசையமைப்பாளர்கள் 


இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கருவிகள் இசைப்பவர்கள் உள்ளிட்ட இசைத் துறையில் பிரபலமடைந்து விளங்குபவர்கள் புகழின் உச்சாணிக் கொப்பில் தாங்கள் மட்டுமே தொடர்ந்து அமர்ந்து கோலோச்சிக் கொண் டிருக்கவேண்டுமென்று நினைப்பது தவறு. வல்லவர்கள் யாராயிருப்பினும் அவர்கள் எல்லாம் வல்லவரான இறைவனின் படைப் புக்களே. வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை எக்காலத் திலும் நாம் மறந்துவிடலாகாது.

சர்வதேச மட்டத்தில் இசைத் துறைக்கான அதியுயர் விருது என்று சொல்லப்படும் ஒஸ்கார் (Oscar Award) விருதினை ஒரு தடவையல்ல, இரு தடவைகள் பெற்று தமிழனின் பெருமையை உலகறியச் செய்த ஏ. ஆர். ரகுமான் அவர்கள் மிகவும் தாழ்ச்சியுடன் "எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்று வெளிப்படையாக முழக்கமிட்டு, இசை மேதைகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி ஆகியமையை இசை வல்லுநர்கள் எவரும் மறந்துவிடலாகாது. அனைத்து ஆற்றல்களுக்கும் கருவூலமாக இருப்பவர் இறைவன் மட்டுமே. இதை உணர்ந்துதான் அவர் அவ்வாறு கூறினார் போலும். எல்லாம் செய்ய வல்லவர்கள் ,(omnipotent) என்று இங்கு யாரும் இல்லை. ஒருவேளை அப்படித்தான் யாரும் இருந் தாலும், அவரிடம் வேறு ஏதோ குறைபாடு இருக்கவே செய்யும். ஏனெனில், மானுடரில் முழு நிறைவுள்ளவர்கள் யாரும் இல்லை. எனினும், தம்மிடம் இருப்பதை இல்லாத வர்களுக்குக் கொடுக்கும் கடப்பாடு கிறிஸ்தவர்கள் என்ற மட்டில் நம் எல்லோ ருக்கும் உண்டு. இறைவன் நமக்கு இந்த ஆற்றல்களைத் தந்திருப்பது நாம் மட்டும் நன்மை அடைவதற்காக அல்ல. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்ற சீரிய நோக்குடன், அவ் ஆற்றல்களை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் கொடுப்பதன்மூலம் நாம் இறைவனுக்கே மகிமை சேர்க்கிறோம். அவருக்கே எம் நன்றியையும் சமர்ப்பிக் கின்றோம். எனவே, அகந்தைக்கு இடம் கொடாது, இத் துறையில் நுழையும் புதியவர் களை இன்முகத்துடன் வரவேற்போம். ஆர்வத்துடன் அவர்கள் கேட்கும் உதவிகளை, ஆலோசனைகளை மற்றும் பயிற்சிகளை வழங்குவோம். "உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள்" (லூக்கா 6:30).

இயல்பாகவே சுருதி தப்பாது பாடும் திறன் உள்ளவர்கள் தம்மில் இந்த இசையறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினாலும், யாரிடம் அல்லது எங்கு சென்று தமக்கு வேண்டிய உதவியைப் பெறலாம் என அறிந்திருப்பதில்லை. அல்லது அதற்கான தேடல்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அப்படியே உதவி கேட்டுச் சென்றாலும், புதியவர்கள் இத்துறைக்குள் வருவதைத் திறமைசாலிகள் விரும்புவதில்லை. சில பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள்கூட (உ+ம் பாடசாலை அதிபர்கள், நிறுவனத் தலைவர்கள்) தாம் பணியாற்றும் இடங்களில் இசை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த விரும்பினால், அது தொடர்பில் தமக்கு உதவிட  தமக்கு மிக அருகாமையிலேயே அதற்குத் தேவையான திறமைசாலிகள் இருக்கலாம் என்ற சிந்தனைகூட இல்லாமல், பிற இடங்களிலுள்ள பிரபலம் வாய்ந்தவர் களை அணுகி, அவர்களுக்குப் பணம் கொடுத்து, தாம் திட்டமிட்ட இசை /கலை நிகழ்ச்சிகளை நடாத்தி முடிப்பதைக் கண்டிருக்கிறோம். இது, "கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைதல்" போன்றதாகும். எனவே, அருகில் உள்ள இளந் திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு இதுவிடயத்தில் வாய்ப்பளித்தால், அது அவர்களுக்கு உதவி செய்வதாகவும் அமைவதுடன், திட்டமிட்ட நிகழ்ச்சியைச் சிக்கனமாகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்தியதாயும் இருக்கும்.

(6)

இசையமைப்போ, பாடல் வரிகளோ அவை தனித்துவம் வாய்ந்ததாகவும், இதற்கு முன்னர் இசையுலகில் இதுபோல் வெளி வராதவையாகவும் இருந்தால், அது இசைத் துறையின் வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப் பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அறிந்தோ அறியாமலோ ஒருவரது  படைப்பை (இசையமைப்பு/பாடல் வரிகள்) இன்னொருவர்  திருடி அதைத் தனது பாடல்களுக்கு/ஆக்கங்களுக்குப் பயன்ப டுத்தினால், அது புலமைச் சொத்துரிமைச் சட்டத்தின்கீழ் (under the Act of Piracy of Intellectual Property) ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். சினிமாத் துறையில் மட்டுமல்ல, கிறிஸ்தவ/கத்தோலிக்க பாடல் துறையிலும் கூட இது மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. ஆனால், ஏற்கனவே ஒருவரால் வெளியிடப்பட்ட ஒரு பாடலை/மெட்டை ஏதோ ஒரு தேவை கருதி இன்னொருவர் பயன்ப டுத்த விரும்பினால், முறைப்படி உரிய ஆக்கியோனின் எழுத்துமூல ஒப்புதலைப் பெற்று அவ்வாறு செய்யலாம். துறைக்குப் புதிதாய் அறிமுகமாகும் இசையமைப் பாளர்களும் பாடலாசிரியர்களும் இச் சட்டத் தின்கீழ் குற்றவாளிகளாகக் காணப்படா திருக்க விரும்பினால், துறையில் முதிர்ந்த அனுபவம் உள்ளவர்களிடம் தமது படைப் புக்களைக் காட்டி, அவை இதற்குமுன் வெளி வராதவை என உறுதி செய்ததன்பின், அவற்றினுடைய தன்முதன்மையை (originality) நிரூபிக்க முடியும்.

சில கிராமப் புறங்களில் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் யாருக்காவது பாராட்டு விழா அல்லது பிரிவுபசார விழா நடாத்தும் தருணங்களில் திடீர் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தயார் செய்யும் பொறுப்பு ஒருவ ருக்குக் கொடுக்கப்பட்டால், அவருக்கு அந்த நேரத்தில் கை கொடுப்பது மக்கள் வானொ லியில் விரும்பிக் கேட்கும் ஜனரஞ்சகமான சினிமாப் பாடல் மெட்டுகள்தான். அவர் என்ன செய்வார்? சூழமைவுக்கும் (context) விழா நாயகருக்கும் /நாயகிக்கும் பொருந் தும் வகையில் தான் தேர்ந்தெடுத்த பாடலின் வரிகளைச் சற்று மாற்றியமைப்பார் (பாட லின் வரிகளையும் சுடுவது வழக்கம்). இப்போது பாடல் தயார்!

கத்தோலிக்க வட்டாரங்களிலும், முன்பு அதிகமதிகமான அபிமான திருவழிபாட்டுப் பாடல்களின் மூல மெட்டினை அடிப்படை யாகக் கொண்டு பற்பல புனிதர்களுக்கான பாடல்கள் இயற்றப்பட்டன. (புனித மரியா, புனித சூசையப்பர், புனித அந்தோனியார் போன்ற பிரபலமானவர்களைத் தவிர ஏனைய புனிதர்கள் பெயரில் பொதுவாகப் பாடல்கள் இருப்பதில்லை). அந்த வகையில் பாரம்பரிய குருத்துவ/தேவ அழைத்தலுக் காகப் பாடப்படும் "மகிழ்ந்திடாய் மாநிலமே" என்ற பாடல் தற்போது "இயேசுவின் இருதயமே" என்ற பாடலாக, வரிகள் மட்டும் மாற்றப்பட்டுப் பாடப்படுவதானது, தமிழ் நாட்டில் கத்தோலிக்க மக்கள் மத்தியில் இசையமைப்பாளர்களுக்குத் திடீர் தட்டுப் பாடு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இச் செய்கையை மூல இசையமைப்பாளரை அவமதிக்கும் ஒரு செயலாக நான் பார்க்கிறேன். சம்பந்தப்பட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவினர் இது குறித்த தீர்க்கமான முடிவிற்கு வருவார்களா?

No comments:

Post a Comment