Saturday, 2 February 2019

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  பேசாலைதாஸ்
ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்
ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது
தொடர்ந்து புத்தரை நோக்கி
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்
ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது
எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக
அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்
தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்
நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்
நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தை சொல்லுங்கள்
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்
மௌனமாக சிரித்த புத்தர்
“இதுவும் கடந்து போகும்”
என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது
புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது
நன்றாகப் படித்திருந்தும்
பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு
தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால்
என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து
இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்”
என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும்
இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது
இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்”
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார்
இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்”
என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்
அடுத்து இருந்த அழகான பெண்
“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது
“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்
மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது
என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது
“இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சோர்ந்துவிட மாட்டீர்கள்
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது
‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்
அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்
“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்
கண்டிப்பாக மாறிவிடும்
தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள்
அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்
வெற்றி நிச்சயம்


நேசிப்பதற்காகவே நேசி
நீ ஒருவரை நேசித்தால்
நீ அவரை எல்லா
குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்
ஏனெனில்
அவை அவரின் பாகங்கள்
ஆனால்
அவை மாற ஆரம்பிக்கும்
நினைவில் கொள்
அன்பு ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யாது
ஆனால் அது மாற்றிவிடும்
நீ நேசித்தால் அது புரட்சியை கொண்டுவரும்
ஆனால் அது காலடிசப்தம் கூட கேட்காத அளவு
மிக அமைதியான முறையில் அந்த மாறுதலை கொண்டு வரும்
யாருக்கும் என்ன நிகழ்கிறது என்று கூட தெரியாது
ஆனாலும் எல்லாமும், மிகவும் அமைதியாக
மொட்டு மலர்ந்து மலராவது எப்படி யாருக்கும் தெரியாமல்
சப்தமில்லாமல் நிகழ்கிறதோ
அது போல மாறிவிடுவது நிகழும்
நீ நேசிக்கும் மனிதரை மாற்ற ஒருபோதும் முயற்சி செய்யாதே
ஏனெனில்
அந்த முயற்சியே உன்னுடைய நேசம் முழுமையானதாக இல்லை
நீ அந்த மனிதரின் ஒரு பகுதியைத்தான் நேசிக்கிறாய்
மற்றொரு பகுதியை நேசிக்கவில்லை என்பதை காட்டிவிடுகிறது
நான் உன்னை நேசிக்கிறேன்
ஆனால்
உன்னுடைய மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால்
உன்னுடைய முகம் எனக்குப் பிடிக்கவில்லை
என்று சொல்வது போல இருக்கும்
ஒரு மிகவும் குண்டான பெண் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
இதுவரை ஒரே ஒருவர்தான் என்னை நேசிப்பதாக சொன்னார்
ஆனால்
அவரும் நான் உன்னுடைய ஆன்மாவை நேசிக்கிறேன்
உன்னுடைய உடலை அல்ல என்று கூறினாள்
நீ நேசிக்கும்போது வெறுமனே
நேசி
அந்த நேசம் மாறுதலை கொண்டு வந்தால் சரி
அப்படி அது மாறுதலை கொண்டு
வரவில்லையென்றாலும் சரிதான்
நீ நேசிப்பதற்காகவே நேசி போதும்


கேள்வி : - புலன் ஆசைகளை அடக்கலாமா....???
முக்கியமாகப் பெண் ஆசையை...???
பதில் : - புலன் ஆசைகளை - முக்கியமாக பெண் ஆசையை ஒருக்காலும் அடக்கக்கூடாது
அந்த அடக்கப்பட்ட ஆசை பிரக்ஞை மனதிலிருந்து பிரக்ஞையற்ற மனதிற்குச் சென்று ஆழமாகப் பதுங்கிவிடும்
அது மெல்ல மெல்ல நாளமில்லாச் சுரப்பிகளைத் தாக்கும்
இதனால் பல உடல் கோளாறுகள் ஏற்படும்
மேலும் இந்த அடக்கப்பட்ட உணர்வு சந்தர்ப்பம் பார்த்து இருக்கும்
சமயம் வாய்த்தால்
பாம்பு போல சீறிப்பாயும்
அப்பொழுது அவன் தன்னிலை மறந்து ஒரு பைத்தியம்போலச் செயல்படுவான்
அல்லது மிருகம்போல செயல்படுவான்
பெரும்பாலான போலிச்சாமியார்கள் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்தான்
இவர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
எந்தப் புலன் உணர்வையும் அனுபவித்துத்தான் கடந்து செல்ல முடியும்
அதற்கு அதை அனுபவிக்கும் பொழுது நீங்கள் அதிலேயே பிரக்ஞையாக இருக்க வேண்டும்
உங்கள் மனம் அதிலேயே லயிக்க வேண்டும்
நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால்
உங்கள் மனமும் உடலும் நிகழ்காலத்திலேயே ஐக்கியமாகி இருக்க வேண்டும்
இது மிக முக்கியம்
இதற்கு ' தந்திராயோகம் ' என்று பெயர்
இப்படி லயித்து அனுபவித்த மனம்
ஒரு கட்டத்தில் திருப்தியுற்று அதை விட்டுவிடும்
அப்பொழுதுதான் மனம் பிரம்மச்சரிய நிலையை உண்மையாக அடையும்
அதற்கு முன்பு நடக்காது
இது எல்லா பழக்க - வழக்கங்களுக்கும் பொருந்தும்
முக்கியமாக குடிப்பழக்கம் புகைப்பழக்கதுக்குப் பொருந்தும்
இவற்றை மனம் வெறுக்கச் செய்ய
முதலில் மனத்தை அதனால் நிரப்ப வேண்டும்
அதற்கு ஒரே வழி அவற்றை பிரக்ஞையாக அனுபவித்து விடவேண்டும்
மற்ற முயற்சிகள் எல்லாம் தற்காலிகமானதுதான்
நிரந்தரமானது அல்ல
கேள்வி : - ஆசைகளை விட வேண்டும் என்று சொல்லுவதுகூட ஒரு ஆசை இல்லையா...???
அதைப்போலவே கடவுளை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதும் ஒரு ஆசைதானே...???
பதில் : - கிருஷணன் கீதையில் சொன்னது
'பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைச் செய்தால்
அந்தச் செயல் முழுமையாக இருக்காது
முழுமையற்ற செயலினால் ஏற்படும் பலனும் முழுமையாக இருக்காது'
இதற்கு என்ன அர்த்தம்..???
நீங்கள் கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்த்து தியானம் செய்தால்
அது முழுமையாக ஆகாது
தியானத்தை தியானத்திற்காகவே செய்யவும்
அப்பொழுது பலன் தானே வரும்
ஆனால் தியானம் செய்வதில் மட்டும் வைராக்கியமாக உறுதியாக இருக்கவும்
மற்றவை தானேவரும்"
ஒரு சீடன் : " ஓஷோ , உண்மையிலேயே நீங்கள் யார்..???
ஓஷோ : " எனக்குத் தெரியாத விஷயம் இதுதான்
உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்
சீடன் : " நீங்கள் சிருஷ்டிகர்த்தா எனப்படும் கடவுளா..???
ஓஷோ : "நான் அந்தப் பைத்தியக்காரன் இல்லை"
சீடன் : "நீங்கள் உலக மகா ஜெகத்குருவா..???"
ஓஷோ : " அதற்கு என்று சில பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள்"
சீடன் : " நீங்கள் உங்களையே அடிக்கடி 'நான் ஒரு பைத்தியக்காரன் ' என்று கூறிக்கொள்ளுகிறீர்களே...!!! ஏன்..???
ஓஷோ : " வேறு எப்படிச் சொல்ல..???
நான் ஒரு ஆன்மீகப் பைத்தியக்காரன்தான்"
சீடன் : " சுருக்கமாக உங்களுடைய செய்தி என்ன....???"
ஓஷோ : "எல்லாம் நன்மைக்கே"
சீடன் : "உங்களை இந்த நாட்டு பிரதமமந்திரியாக ஆக்கினால்..???"
ஓஷோ : "உடனே ராஜினாமா செய்துவிடுவேன்" 


ஒப்பிடுதல்:

ஒப்பிடுதல்:
மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.
மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.
"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.
ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான். ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
ஓஷோ

 ஓஷோ...... இந்த உலகம் ஆரோக்கியமற்று, மனநோய் பிடித்திருப்பதாக காணுகிறேன்
இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது
இதிலிருந்து தப்பிக்க என்ன வழி...???
‪பதில்‬ : " இதற்கு முக்கிய காரணம்
பழங்காலந்தொட்டே இந்த மனித இனத்தை ஆக்கிரமித்த மூடக்கொள்கைகளும் பிரக்ஞையற்ற செயல்களும்தான்
இதற்கு எல்லா மதங்களும் பொறுப்பேற்க வேண்டும்
இந்த மதங்களெல்லாம்
இந்த உலகத்தை கடவுள் என்ற ஒரு நபர்தான் ஏற்படுத்தினார் என்று கூறுகின்றன
அவர் எங்கும் நிறைந்தவர்
எல்லாம் தெரிந்தவர் என்று அவை கூறுகின்றன
இதனால் , மனிதன் நாம் கடவுளைவிட புத்திசாலி இல்லை என்று நம்பி
ஏதோ வாழ்ந்து மடிகிறான்
தன்னுடைய பகுத்தறிவு, சுயசிந்தனை எல்லாம் இழந்து
இயந்திரம்போல வாழ்கிறான்
இதுதான் இந்த உலகத்து துன்ப - துயரங்களுக்குக் காரணம்
என்னுடைய பார்வையில்
இந்த உலகத்தை எந்த ஒரு தனிநபரும்
ஏதோ ஒரு காரணம் கருதி படைத்திருக்க முடியாது
இந்த மிகப்பெரிய பொறுப்பை இல்லாத ஒரு தனிநபரிடம் ஒப்படைக்காதீர்கள்
நாம் இந்த பூமியில் இருக்கிறோம்
இதன் அழகிற்கும், ஆனந்தத்திற்கும், அழிவிற்கும் நாம்தான் காரணம்
நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்
நாம் இங்குள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும்
ஆகவே கடவுளை அகற்றிவிட்டு
அங்கு மனிதனை அமரச்செய்யுங்கள்
நீங்கள் எந்த அளவுக்கு இந்த உலகத்து பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக்கொள்கிறீர்களோ
அந்த அளவுக்கு இந்த உலகத்து துன்பங்கள் மறையும்
ஆனால்
எல்லா மதங்களும் என்ன சொல்கின்றன...???
" பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுங்கள் " என்று கூறுகின்றன
இது உங்களிடம் ஒரு ஆழமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது
உங்களை ஒரு சோம்பேறியாக்குகிறது
நீங்கள் உங்கள் சக்தியை முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை
எது நடக்குமோ அதுதான் நடக்கும் என்றும்
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்
என்றும் பேசித் திரியாதீர்கள்
உங்கள் தோல்விக்கு மூலகாரணம் உங்கள் சக்தியை நீங்கள் முழுமையாக உபயோகிக்கவில்லை என்பதுதான்
என்னுடைய அணுகுமுறை என்னவென்றால்
நீங்கள் ஒரு படைப்பாளியாக வேண்டும் என்பதே
ஏனெனில்
உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த சக்தி இருக்கிறது
நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும்
அதற்கு ஒரே வழி
நீங்கள் உங்கள் பழைய கடவுள்களை தைரியமாகத் தூக்கி எறியவேண்டும்
அவற்றை உங்கள் வாழ்விலிருந்து துடைத்து எறிய வேண்டும்
இதற்கு உங்களுக்கு மிகுந்த தைரியமும் சுயசிந்தனையும் தேவை
ஏனெனில்
பிறகு நீங்கள் வெறுமையை உணருவீர்கள்
ஒருவித பயம் உங்களிடம் ஏற்படலாம்
ஆனால் அதுதான் உண்மை
நீங்கள் இதுவரை நம்பிவந்த அனைத்தும் பொய், கற்பனை

வீரமும் அச்சமும் வெவ்வேறு அல்ல, அவை இரண்டும் மனிதன் வாழ்ந்திருக்க மிகவும் அவசியம், வீரமுடன் இருக்க வேண்டிய இடத்தில் அச்சப்படுவதும் தவறு, அச்சப்படும் இடத்தில் குருட்டு தைரியத்துடன் இருப்பதும் தவறு, மனிதன் எதற்க்காக அச்சப்படவில்லை என்றாலும் ஆசையிடம் மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனும் இருக்க வேண்டும், ஆசைக்கு கண்களும் இல்லை செவிகளும் இல்லை, ஆசை தோன்றிவிட்டால் அதை கட்டுப்படுத்துவது பெரும்பாலும் நம் கையில் இல்லை, அது நம்மை எங்கு கொண்டு செல்கிறதோ அங்கே போக வேண்டும், ஆசையின் இயல்பே நம் அறிவினை மயக்கி சிந்தனையை மறைத்துவிடுவது தான். எனவே அவ்வாறு நம்மை வஞ்சித்து கெடுதியை கொடுக்கும் ஆசையிடம் அச்சத்துடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது தான் சிறந்த அறமாகும்
இனிய காலை வணக்கம் 🙏
The Valor and Fear are not different,
They are both essential for man to live.
It is wrong to be afraid of where to stay with Valor. blind beaveness is also wrong in the place where the fear needed
Man should not afraid of anything
Anyway he should be Taking great care of desire with fear.
There is no eye and no ear for desire
When it comes to desire, it is not often in our hands to control it, we will be going according to desire where it goes
Nature of the Desire is it fully covers our mind and hides our thinking
Hence we should be fear about our Desires which deceive us and gives bad reputation

புத்தர் கூறுகிறார் :
வேதங்களிலும் உபநிடதங்களிலும் எந்த உண்மையும் இல்லை
அழகிய வார்த்தைகளை கேட்கும் போது கவனமாயிருங்கள்
தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கேளுங்கள்
மோனத்தை கைக் கொள்ளுங்கள்
எதுவெல்லாம் பொய் எனக் கண்டு கொள்ளும்போது
உன்னுடைய உணர்வுகளில் ஒரு மாற்றம் வருகிறது
மெய்யென்பது இருப்பது இருத்தல்
அது ஒரு எதார்த்தம் ஏற்கனவே இருப்பது
மெய் என்பது ஏற்கனவே இருந்து கொண்டே இருப்பது
மெய்யாலுமே ஆன்மீகவாதியாக இருப்பது என்பது ஒரு
மறுபிறப்பெடுப்பது
இன்னொரு முறை குழந்தையாகி விடுவது
நீ அறிந்ததை அழித்து விடு களங்கம் இல்லாதவனாகி விடு
மெய்யைப் பொய்யென்றும்
பொய்யை மெய்யென்றும்
கொள்பவன்
இழப்பது தன் நெஞ்சுதான்
அவன் ஆசையால் தன்னை நிரப்பிக் கொள்பவன்
மனம் என்பது ஆசையன்றி வேறில்லை
இந்தக் கணத்துக்காகவே இதயம் துடிக்கிறது
மனம் மட்டும் இந்தக் கணத்தில் இருப்பதே இல்லை
அது கடந்த கால அனுபவங்களை அசை போட்டுக் கொண்டு இருக்கிறது
அல்லது எதிர் கால கற்பனையில் திளைக்கிறது
மனம் நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை
ஆனால் நிகழ் காலம்தான் உண்மையில் இருப்பது
உன்னுடைய இதயத்திலிருந்து அன்பைக் காட்டு
கடவுளோடு உன்னை இணைப்பது உன் இதயமே 🌷
🌸 ஓஷோ
தம்ம பதம் I
மெய்யா பொய்யா

ஜென்னும்
Sufiம் (சூபி )
ஓஷோ
சிந்தனையில்,,,
ஜென்னும் சுபிசமும் இரு துருவங்கள்.
சுபிகள் மிகவும் அன்புடையவர்கள். மிகவும் அன்பு செலுத்துபவர்கள்.
மனித விழிப்புத் தன்மையின் வரலாற்றில் சுபிகள் போல தைரியமாக, முழுமையாக அன்பைப் பரிமாறிக் கொள்ளுபவர்கள் வேறு யாருமில்லை
அவர்கள் கடவுள் தன்மையை அல்லது கடவுளை காதலியாய் பாவித்து, உள்ளம் முழுக்க காதலாகி கசிந்து உருகுவார்கள்.
சொல்லப்போனால் பெண் தன்மைக்கு ஏற்ற சுபிசம்.(Sufism).
ஜென் நேர்மாறுதல். ஆண் தன்மைக்கு ஏற்றது.
ஜென் சூன்யத்தை வலியுறுத்துகிறது.
பெளத்தத்தில் கடவுள் கொள்கை என்று ஏதும் இல்லை.. அதற்கு தேவையும் இல்லை.
மதங்களின் முக்கிய அம்சம் பிரார்த்தனை.
புத்த மதத்தில் ( ஜென்) பிரார்த்தனையோ, மந்திர ஜபமோ எதுவும் கிடையாது.
நீங்கள் வெறுமையாக சூன்யமாக இருக்க வேண்டும்.
இந்த சூன்யத்தன்மைக்கு உங்கள் கடவுள் எண்ணமோ, பிரார்த்தனையோ, ஜபமோ தடையாக இருக்கும் என்று கருதுகிறது.
புத்த மதத்தின் சாரமே நீங்கள் சூன்யத்தில் இருப்பதுதான்."நீங்கள் "இல்லாத நிலையில் இருங்கள் என்று கூறுகிறது.
புத்தர் தன் மனித மனம் என்ற தன்மையில் ஆழமாக சென்று பார்க்கும் போது, அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று கண்டறிந்தார்.
புத்தர் மனத்தின் உள்நோக்கி பயணம் செய்தார்.
அவர் மேலும் மேலும் மன ஆழத்திற்கு செல்லும் பொழுது, அந்த வெற்றிடம் அல்லது சூன்யம் மிகவும் பரந்து விரிவதைக் கண்டார்.
அந்த சூன்யத்தின் மையமே உங்கள் உயிர்த்தன்மைதான்.
அது ஒரு மகா வெற்றிடம். அவ்வளவுதான்.
அது தன் உணர்வாய், தன் அறிவாய், உன் விழிப்பாய் உள்ளது.
அது ஒரு புரியாத புதிர். நம் மனதிற்கு அப்பால் செயல்படுவது. அந்தத் தன்மையை இதுவரை யாரும் அறிந்ததில்லை.
இந்தியாவில் உள்ளத்தின் மையத்தை ஆத்மா என்று அழைத்தார்கள். ஆனால் யாரும் அதன் பரிமாணத்தை கண்டறியவில்லை.
புத்தர்தான் முதன் முதலில் உணர்ந்தார்.
ஆத்மா என்றும் உள்ளம் என்றும் உள்ளே எதுவும் கிடையாது. ஏன் அங்கே ஒன்றுமே இல்லை.
ஆகவே அதற்கு "அனாதா" என்று பெயரிட்டார்.
இதன் பொருள் "ஆத்மா இல்லை" என்பதே
அங்கு நீ இல்லை. ஆனால் இருப்பது போல் தோற்றமளிக்கிறது.
ஓஷோ
புல் தானாகவே வளர்கிறது,,

ஜென் தனி மனித விழிப்புணர்வையே வலியுறுத்துகிறது
நாம் ஒரே பயிற்சியை திரும்பத் திரும்ப செய்யும்போது அது
பழக்கமாகி இயந்திரத் தன்மையாகி விடுகிறது
அதில் பிறகு எந்த விழிப்புணர்வும் இருக்காது
பிரபஞ்ச மனம் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இயங்கக் கூடியது
உங்கள் மனதை ஒன்றுமற்றதாக ஆக்குங்கள்
பிரபஞ்ச மனம் ஆகுங்கள் ஞானம் பெறுங்கள்
பிரபஞ்ச மனத்தில் காலம் இடம் மறைந்து விடுகின்றன
பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு பயத்தின் வெளிப்பாடு அல்ல
நமது முகம் அன்பால் மகிழ்ச்சியாக மலர்ந்து இருக்கட்டும்
கருணையோடு காதலோடு இருக்கட்டும்
எந்த வித பயமோ குற்ற உணர்வோ இருக்க வேண்டாம்
கடவுளைப் பற்றிய பலவகை எண்ணங்களே கடவுளை அடைய தடையாய் உள்ளன
பிரபஞ்ச மனம் தன்னறிவாய் தன்னுணர்வாய் செயல் படுகிறது
சூன்யம்தான் உருவமாகி வந்துள்ளது
உருவம் திரும்பவும் சூன்யம் ஆகும்
உடல் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இருக்கும்
மனம்தான் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர் காலத்திலேயோ இருக்கும்
மனத்தை நிகழ் காலத்தில் வைக்கும் பயிற்சிதான் ஜாஜென் 🏵
💐 ஓஷோ
ஜென் 💐

சிலைகளைக் கும்பிடுவது
சரியா..???
மஹரிஷி ரமணரின் பதில்
முஸ்லீம் அன்பரின் சந்தேகம்
திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி
தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம்
பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின்
மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம்
சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு
ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர்
அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது
பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா....???
மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது..???
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா..???
மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம்
ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர்
உங்களை எடுத்துக் கொள்வோம்
உங்களுக்கு உருவம் உண்டா...???
பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள்
ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே...!!!
பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்
மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா...???
பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது
ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது
மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால்
இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்...???
உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்..???
பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்
மஹரிஷி: ஓ...!!!
அப்படி என்றால்,
உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது
ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள்
இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள்,
உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது..???
கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார் 

சிறந்த பொய் 🎈
🎁 ஒரு அரசன் நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு
ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்
ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை
அரச சபைக்கு வந்து
தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்
அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்
அந்த ஏழை சொன்னான்
''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..???
நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது
அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்
''அரசனுக்கு கோபம் வந்து விட்டது
''நீ பொய் சொல்கிறாய்
நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது..???' என்று கத்தினான்
உடனே ஏழை சொன்னான்
"அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்
நான் சரியான பொய் சொன்னேன் என்று
எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்
''அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்
உடனே சொன்னான்
''இல்லை, இல்லை
நீ பொய் சொல்லவில்லை'' என்று அவசரமாக மறுத்தான்
ஏழை சொன்னான்
'நல்லது அரசே
நான் சொன்னது பொய் இல்லை
உண்மைதான் என்றால்
எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்
''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று
ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்

கடவுள் இருக்கிறாரா..???
"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை...????'' சீடன் கேட்டான்
குரு ஒரு கதை சொன்னார்
"கடவுள் இருக்கிறார்" என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான்
'கடவுளே...!!! என்னோடு பேசுங்களேன்....!!!'
அப்போது குயில் ஒன்று பாடியது
அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்
'கடவுளே, என்னோடு பேசுங்களேன்..!?!'
உடனே உரத்த இடியோசை, எழுந்தது
அதையும் பொருட்படுத்தாத அவன்
'பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா..???' என்று இறைவனிடம் கேட்டான்
சுடர்விட்டுப் பிரகாசித்த படி
வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது
அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்
'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா..???'
கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்
அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான்
'கடவுள் இல்லை..!!!
இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்
பார்க்க முடிந்திருக்கும்
அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே..!!!''
கதையைக் கேட்ட சீடன் சொன்னான்
"புரிந்தது குருவே..!!!
கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்
நாம் தான் புரிந்து கொள்வதில்லை..!!!''
என்றான்
உண்மை தானே 

Thursday, 31 January 2019

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP மற்றும் காஷ்ரோ அவர்களின் காலத்தில், கனடாவில் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் பல மில்லியன் சொத்துக்களை, முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலின் முதல் பகுதி கசிந்துள்ளது !
புலிகள் அமைப்பின் நிதிகளை இவர்கள் விரைவில் கணக்காய்வு செய்து, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், மாவீரர் குடும்பங்களிற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கும் விரைவில் கொடுக்குமாறு இறுதி எச்சரிக்கை.
பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள்.
1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை).
2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி).
3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி).
4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்).
5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி).
6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி).
7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்).
😎 ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்).
9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி).
10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்).
11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா).
12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்).
13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்).
14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி).
15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்).
16) ஆதி கணபதி(பல் வைத்தியர்).
17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்).
18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்).
19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா).
20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்).
21) சுரேஷ்(spicyland உரிமையாளர்).
22) தவராஜா(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்).
23) பாலா(கணக்காளர்).
24) செந்தில்(மின்னல்).
25) பாபு(பாபு உணவகம்).
பெயர் பட்டியல் தொடரும் .............
நன்றி,
தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு.
***குறிப்பு: சமூகவலைத்தளத்தின் ஊடாக எமக்கு கிடைத்த செய்தியை, கனடியத் தமிழர்களின் பார்வைக்கு.

Finn ut av tollreglene

Finn ut av tollreglene
Manglende relevant kunnskap om å navigere tollen kan forårsake forsinkelser med forsendelsene og koste deg penger. Det er viktig å vite hvilke avgifter som må betales, og å ha en komplett og omfattende

For å hjelpe deg med å fullføre handelsfakturaen, har vi utarbeidet en brukervennlig mal. Merk: Malen er kun for veiledning. Du har selv ansvaret for utarbeidelse og innlevering av handelsfakturaen.

Det viktigste på handelsfakturaen
Hva inneholder forsendelsen din?


Varebeskrivelse
Dette gir tollmyndighetene en klar indikasjon på hva som er i forsendelsen. Beskrivelsen bør forklare hva det er, hva det er laget av, og hva det brukes til (ved behov). Det bør være tydelig og beskrive alle elementene som inngår i forsendelsen.

Tolltariffkoder
Tolltariffen (HS-koder) klassifiserer varene så tollmyndighetene vet hvilke skatter, avgifter og kontroller som gjelder. Det er valgfritt, men spesifiserte koder bidrar til å fremskynde fortollingen.

Sett en nøyaktig verdi på forsendelsen
Selv om varen er en prøve, gave eller retur, har den fortsatt en verdi på minst produksjonskostnadene. Verdien bør være så nøyaktig som mulig. Hvis tollen stiller spørsmålstegn ved verdivurderingen, kan det føre til forsinkelser og gebyrer. En annet tips er å lage liste over verdien av varene i den valutaen du angir på fakturaen.

Velg korrekte leveringsbetingelser (Incoterms)
Du må fylle ut leveringsbetingelsene (Incoterms) på hver handelsfaktura . Incoterms® 2010 er en globalt anerkjent standard etablert av International Chamber of Commerce. De gjør at tollmyndighetene kan identifisere eieren av forsendelsen hele veien. Hvis du har en salgskontrakt, spesifiserer den leveringsbetingelser (Incoterms). Hvis du ikke har en salgskontrakt, må du velge fra leveringsbetingelsene (Incoterms) som gjelder for transport av forsendelser på land eller i luften. For eksempel betyr DAP (Delivered at Place) at du som avsender betaler for frakt, men mottakeren er ansvarlig for skatter og avgifter.

Hva er de?
«Incoterms» er en kort og lettvint måte å si «International Commercial Terms» på. Disse 11 reglene, som først ble tatt i bruk i 1936, angir hvem som er ansvarlig for hva i internasjonale transaksjoner.
Hvorfor er de så viktige?
Fordi de er kjent og godtatt over hele verden. De reduserer risikoen for potensielt dyre misforståelser, og derfor er de også obligatoriske på alle handelsfakturaer.
Hva dekker de?
Incoterms beskriver alle oppgaver, risikoer og kostnader involvert i transaksjonen av varer mellom selger og kjøper.

EXW – Ex-Works
Kjøperen påtar seg nesten alle kostnader og all risiko i hele leveringsprosessen. Selgers eneste oppgave er å sørge for at kjøperen får tilgang til varene
Når kjøperen har fått tilgang, er resten opp til dem (inkludert lasting av varene). Risikooverføring fra selger til kjøper:. På selgerens lager, kontor eller hvilket som helst sted hvor varene blir hentet fra.

DAP – Delivered At Place. Selgeren dekker kostnadene og risikoen for transport av varene til en avtalt adresse
Varene blir klassifisert som levert når de er på adressen og klar til å losses. Ansvar knyttet til eksport og import er det samme som for DAT
Risikooverføring fra selger til kjøper: Når varene er klare for lossing på den avtalte adressen

DDP – Delivered Duty Paid

  • Selgeren påtar seg nesten alt ansvar i hele leveringsprosessen
  • Selgeren dekker alle kostnader og all risiko ved å frakte varene til den avtalte adressen
  • Selger sørger også for gjøre varene klare for lossing, oppfyller eventuelle forpliktelser knyttet til eksport og import og betaler eventuelle tollavgifter
Risikooverføring fra selger til kjøper:
Når varene er klare for lossing på den avtalte adressen.

CIP – Carriage And Insurance Paid To

  • Selgers ansvar er likt som for CPT, med én forskjell: selgeren betaler også for å forsikre varene
  • Selgeren er bare forpliktet til å kjøpe den laveste dekningen
  • Hvis kjøperen ønsker en mer omfattende dekning, må de ordne med det selv
Risikooverføring fra selger til kjøper:
Når kjøperens transportselskap mottar varene.

DAT – Delivered At Terminal

  • Selgeren er ansvarlig for kostnadene og risikoen ved å levere varene til en avtalt terminal
  • Terminalen kan være en flyplass, et lager, en gate eller en kontainerplass
  • Selgeren tar seg av tollklarering og losser varene på terminalen
  • Kjøperen tar seg av importklareringen og eventuelle relaterte avgifter
Risikooverføring fra selger til kjøper:
På terminalen.

FCA – Free Carrier

  • Det er selgerens oppgave å levere varene til kjøperens transportselskap på et avtalt sted
  • Selgeren må også klarere varene for eksport
Risikooverføring fra selger til kjøper:
Når kjøperens transportselskap mottar varene.

CPT – Carriage Paid To

  • Selgeren har samme ansvar som for FCA, med én forskjell: selgeren dekker leveringskostnadene
  • Som med FCA, er det selgerens ansvar å klarere varene for eksport
Risikooverføring fra selger til kjøper:
Når kjøperens transportselskap mottar varene.

FAS – Free Alongside Ship

  • Selgeren påtar seg alle kostnader og all risiko inntil varene er levert ved siden av skipet
  • Deretter overtar kjøperen risikoen og tar hånd om klarering for eksport og import
Risikooverføring fra selger til kjøper:
Når varene er levert ved siden av skipet.

FOB – Free On Board

  • Selgeren påtar seg alle kostnader og all risiko inntil varene er levert ombord på skipet
  • Selger ordner også med eksportfortollingen
  • Kjøperen påtar seg alt ansvar så snart varene er om bord
Risikooverføring fra selger til kjøper:
Når varene er levert ombord på skipet.

CFR – Cost And Freight

  • Selgeren har samme ansvar som for FOB, men må også betale kostnadene ved å bringe varene til havnen
  • Som med FOB, påtar kjøperen seg alt ansvar så snart varene er om bord
Risikooverføring fra selger til kjøper:
Når varene er ombord på skipet.

CIF – Cost, Insurance And Freight

  • Selgeren har samme forpliktelser som ved CFR, men må også dekke forsikringskostnadene
  • Som med CIP, er de bare forpliktet til å kjøpe den laveste dekningen
  • Hvis kjøperen ønsker en mer omfattende dekning, må de betale for det selv
Risikooverføring fra selger til kjøper:
Når varene er på skipet.

Passer tollen enkelt

Nå kan du se hvordan du enkelt kan passere tollen med en korrekt handelsfaktura. Du kan fylle ut din egen, eller spare tid og bruke vår handelsfakturamal.

For alle eksportforsendelser fra Norge må det følge med en handelsfaktura.

Dette kreves både av tollvesenet i Norge og i utlandet. Kravet gjelder imidlertid ikke forsendelser som kun inneholder dokumenter (kun papir) og veier mindre enn 5 kg.

En fullstendig og presist utfylt handelsfaktura vil forenkle fortollingsprosessen, og kan unngå mange av de vanligste årsakene til forsinkelser. Ved å følge disse rådene kan du hjelpe oss å sørge for at dine sendinger får en problemfri reise helt frem til mottakeren.

Dersom du sender kopi av fakturaen samt fraktbrevet til export.osl@tnt.no før klokken 14:00, får vi sendt den til mottakerlandet som da kan begynne med fortollingen før forsendelsen har ankommet. Dette vil sikre en så smidig som mulig tollbehandling. Husk å merke fakturaen med sendingsnummer.

Viktig informasjon ved forberedelse av handelsfakturaer

Vær oppmerksom på at denne veiledningen er laget med utgangspunkt i størsteparten av verdens tollregler, disse kan allikevel variere fra land til land og endres uten varsel.
  • Fakturaen må være på engelsk.
  • Bruk alltid ordet ”Invoice” i overskriften på dokumentet. ”Proforma invoice” anbefales ikke, da mange land ikke aksepterer slike fakturaer.
  • Eksportørens fullstendige firmanavn, adresse og kontaktinformasjon.
  • Navn, adresse, telefonnummer og e-postadresse til kontaktpersonen hos importøren. Vær oppmerksom på at faktisk mottaker (leveringsadresse) kan være en annen bedrift enn importøren. Husk å påføre importørens EORI-nummer for alle sendinger til land i EU.
  • Fakturadato og Fakturanummer
  • Sørg for at du oppgir INCO terms (internasjonal kode for leveringsbetingelser. Oppgi stedsnavn sammen med koden, eks: "DDU Stockholm" eller "EXW Oslo". Les mer hos tollvesenet.
  • Oppgi årsak for eksport (sale, repair, return after repair, osv)
  • Fullstendig og nøyaktig beskrivelse av hver vare som sendes. Tollvesenet vil vite nøyaktig hva hver enhet faktisk er, varene må derfor beskrives nøyaktig - generiske uttrykk som "samples" og "parts" kan ikke benyttes. Artikkel- eller delenummer er heller ikke tilstrekkelig.
  • For å sikre helt presis beskrivelse av varene, bør tolltariffnummeret for varene som sendes (også kalt varenummer eller HS Tariff Code) alltid oppgis. Få hjelp til å finne riktig varenummer hos tollvesenet.
  • Samlet verdi av varene som fakturaen dekker. Dette må være forsendelsens reelle verdi. Du bør aldri bruke begreper som ”value for customs purposes only”, ”customs invoice”, "no value" eller lignende, tollmyndigheten forstår dette som at verdien på fakturaen ikke er reell, og det vil føre til forsinkelser i fortollingen.
  • For hver forskjellig vare som sendes, skal du oppgi: antall enheter, verdi og valuta, samt opprinnelsesland (hvor varene er produsert).
  • Oppgi brutto- og nettovekt til varene som dekkes av fakturaen. Innpakningen du bruker for å beskytte varene under transporten utgjør forskjellen mellom brutto- og nettovekt.
  • Følgende opprinnelseserklæring: The exporter of the products covered by this document (customs authorization No. ...) declares that, except where otherwise clearly indicated, these products are of ..................... preferential origin according to the rules of origin of the Norwegian Generalized System of Preferences. Hvis vareverdi overstiger 50 000 NOK må et eget EUR.1 skjema fylles ut. Les mer hos tollvesenet.
  • Fakturaen skal være signert. Vi anbefaler bruk av farger på orginalene: signer med blå penn, bruk brevark med firmalogo i farger, osv.
Husk at alle land har egne regler for hva som kreves av dokumentasjon på en forsendelse, sjekk med mottaker eller tollvesenet hvis du er i tvil.

Mer informasjon om:

Nøyaktig Varebeskrivelse

For å sikre riktig fortolling og unngå forsinkelser, er det viktig å oppgi en presis varebeskrivelse på fakturaen som følger din eksportforsendelse. Det holder ikke med generelle beskrivelser; varen skal beskrives så nøyaktig som mulig.

Bruk også HS Tariff Code (varenummer) for å angi nøyaktig hva slags varer du sender. Koden er internasjonal, og vil gjøre det mulig å identifisere varen i importlandet. Finn riktig varenummer hos tollvesenet.

Her er noen eksempler på vanlige feil:

ikke skriv
hvorfor
skriv for eksempel
spare parts
reservedeler til hva?
valve for hydraulic pump
samples
prøver av hva?
Sample sports shoes
electric components
hva slags electric components? kan være alt fra lysbrytere til avanserte kontrollpaneler, må spesifiseres
power supply for laptop
GH37089-38
modellnummer, produktnummer, referansenummer alene sier ikke nok om hva varen er. Kan brukes som supplement til en beskrivelse av varen.
Power supply for laptop, model GH37089-38
SuperGizmo 6 Plus
modellnavn eller produktnavn alene er sjelden nok til å gi en nøyaktig beskrivelse, men kan brukes som supplement
GPS Sports Watch

Midlertidig utførsel

  • Ved midlertidige forsendelser er det viktig at det står spesifisert på fakturaen at utførselen er midlertig, samt oppgi en begrunnelse. F.eks: "Temporary eksport for repair".
  • På samme måte er det viktig at returforsendelsen er tydelig merket med at det er en retur etter midlertidig utførsel, og begrunnelsen. F.eks: "Return after repair"
  • Det er også viktig at man har et unikt identifikasjonsnummer for varen på fakturaen ved utførselen og når varen returneres, slik at man lett kan se at det er samme vare.
  • Oppgi varens verdi og spesifiser reparasjonskostnaden.