Tuesday, 10 January 2023

காம உணர்ச்சி

 காம உணர்ச்சி

மனிதன்‌ என்று ஒருவன்‌ இருக்குமிடம்‌ எங்கும்‌, காமம்‌ என்று ஒன்று
இருந்தே தீருகிறது.
அது ஆண்மை, பெண்மை இரண்டையும்‌ சோதிக்க ஆண்டவன்‌ நடத்தும்‌ லீலை.
உடல்‌ உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில்‌ பாவங்கள்‌ அதிகரித்தன.
நமது இதிகாசங்கள்‌, புராணங்கள்‌ மட்டுமல்லாது வரலாறும்‌ அதையே குறிக்கிறது.
சரிந்துபோன சாம்ராஜ்யங்கள்‌ பலவற்றிற்கு, காமமே முதல்‌ காரணமாக இருக்கிறது.
தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள்‌, புரட்சிக்காரர்‌ களில்‌ பலர்‌, தம்மை மறந்த நிலையில்‌ பிடிபட்டதற்கும்‌, காமமே காரணமாக இருக்கிறது.
சராசரி மனித வாழ்வில்‌ பசி, காமம்‌ இரண்டும்‌ தவிர்க்க முடியாதவை.
கட்டுபாடாக அதைத்‌ தவிர்த்தவர்களுக்குப்‌ பெயரே ஞானிகள்‌.
உடல்‌ வற்றிப்போய்‌ காய்ந்த எலும்புக்கூடக கிடைக்காமல்‌, பசியோடு அலையும்‌ ஆண்‌ நாய்‌ ஒன்று ஒரு பெண்‌ நாயைக்‌ கண்டவுடன்‌ பசியையும்‌ மறந்து, காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல்‌ உண்டு.
வட மொழியில்‌ “காமம்‌” என்ற வார்த்தைக்கு, “பாலுணர்ச்சி என்பது மட்டுமல்லாமல்‌, வேறு பல பொருள்களும்‌ உண்டு.
ஆனால்‌, பாலுணர்ச்சியை மையமாகக்‌ கொண்டு, இந்துமதத்‌ தத்துவங்களை ஆராயப்‌ புகுந்தால்‌, அதை தவிர்ப்பதற்கு, அது சொல்லும்‌ வழிகள்‌ ஏராளம்‌.
முதலில்‌, சந்நியாசிகளில்‌ ஒரு வகையினர்‌ நிர்வாணமாக இருப்பதே, இந்த உணர்ச்சியைத்‌ தவிர்க்கத்தான்‌.
' பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தைத்‌ தான்‌ பெற்றிருந்தால்‌, பெண்களுக்குத்‌ தன்மீது ஆசை வராது' என்பதே அந்த நிர்வாணத்தின்‌ நோக்கம்‌.
ஆடை, அணி மணி அலங்காரங்களினால்‌ மூடப்பட்ட உடம்பு, சுருதியை
தூண்டிவிடுகிறது. அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும்‌, க்ஷவரம்‌ செய்யப்பட்ட முகமும்‌ பெண்களின்‌ உணர்ச்சித்‌ தந்தியை மீட்டி விடுகின்றன.
ஆகவே, அலங்கோலமான உருவத்தைச்‌ செயற்கையாக தேடிக்கொள்வதே ஜடாமுடி தரிப்பதன்‌ நோக்கம்‌.
அவர்கள்‌ வெறும்‌ கோவணத்தோடு இருப்பதற்கும்‌ காரணம்‌ அதுதான்‌.
அண்மையில்‌ “ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' இயக்கம்‌ அமெரிக்காவில்‌ வெகு வேகமாகப்‌ பரவத்‌ தொடங்யெதும்‌, அங்கு ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களில்‌ ஒன்றில்‌ ஒரு புது யாகத்தைத தொடங்கினார்கள்‌.
சுமார்‌ பன்னிரண்டு ஆண்களும்‌ பெண்களும்‌, “ஒரு ஆண்‌ ஒரு பெண்‌” என்று மாற்றி மாற்றி வட்டமாகத்‌ தொடையளவு தண்ணீரில்‌ நின்றார்கள்‌.
ஒருவர்‌ தோள்‌ மீது ஒருவர்‌ கை போட்டுக்கொண்டார்கள்‌.
“ஒருவரது அங்கத்தை இன்னொருவர்‌ பார்த்தாலும்‌ தோளிலே கை போட்டுக்‌ கொண்டாலும்‌ உணர்ச்சி கிளர்ந்தெழாமல்‌ அடக்கவேண்டும்‌' என்பதே இந்த யாகத்தின்‌ நோக்கம்‌.
“லைப்‌” என்ற பிரபல ஆங்கிலப்‌ பத்திரிகையில்‌ இந்தப்‌ படத்தை நான்‌ பார்ததேன்‌.
உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே, காம வேகத்தைத்‌ தவிர்ப்பதற்கு இந்துமதம்‌ வழி காட்டுகிறது.
சகல உணர்வுகளையும்‌, உறவுகளையும்‌, துறந்துவிட்டநிலைக்கு, 'நிர்வாணம்‌' என்பது பெயர்‌
அந்த மகா நிர்வாணத்தை, இந்து தத்துவங்களில்‌ இருந்தே பெளத்தம்‌ எடுத்துக்கொண்டது.
இந்துமதமே உலகின்‌ ஆதி மதம்‌.
“சந்நியாசம்‌”, “துறவு என்பவை அது உண்டாக்கியவையே.
அந்தத்‌ துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும்‌ என்பதால்‌ பின்னால்‌ தோன்றிய ஒவ்வொரு மதமும்‌ அதனை மேற்கொண்டன.
உணர்ச்சியைத்‌ தூண்டும்‌ உணவுப்‌ பொருள்களையும்‌ உஷ்ணத்தை அதிகரிக்கும்‌ உணவுப்‌ பொருள்களையும்‌ விலக்கி, கடுங்குளிரிலும்கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர்‌ இந்து ஞானிகள்‌.
ஆண்‌ பெண்‌ உறுப்புக்களுக்கு அவர்கள்‌ 'ஜனனேந்திரியங்கள்‌' என்று பெயர்‌ கொடுத்தார்கள்‌.
சில உயிர்களுக்குப்‌ பிறப்பைக்‌ கொடுப்பதற்காக மட்டுமே இந்த அங்கங்கள்‌ படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள்‌ நம்பினார்கள்‌.
அதில்‌ ஏற்படுகின்ற சுகத்தை 'அற்ப சுகம்‌' என்றார்கள்‌.
தமிழுங்கூட அதைச்‌ “சிற்றின்பம்‌ என்றே அழைத்தது.
மனைவி என்பவள்‌ தன்‌ கணவனின்‌ காமச்‌ சூட்டைத்‌ தணிப்பதற்காக வரும்‌ வெறும்‌ கருவியல்ல.
அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம்‌.
ஆணைவிடப்‌ பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு.
கண்ணதாசன்!
அர்த்தமுள்ள இந்துமதம்!

பாடகி M. S. ராஜேஸ்வரி

 பாடகி M. S. ராஜேஸ்வரி அவர்கள்.

கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியிருந்தார்.
குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு
எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு குழந்தைகள் பாட்டுப்படி பிரபலமான ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ சோகப்பாடல் முதல் 1990 க்கு மேல் வந்த ‘துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.
குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதிவரை புகழ்பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.
அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.
புகழ்பெற்ற பாடல்கள் சில…
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா(டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே( களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா( மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை ), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்கள் பிரபலமானவை, இன்றும் ரசிக்கப்படுபவை.
வாழ்க்கைக்குறிப்பு
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் இணைந்தார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது. எம்.எஸ்.ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
ஏவிஎம் காரைக்குடியில் இருந்து சென்னை இடம் மாறிய போது ராஜேஸ்வரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காந்தி மகான் மற்றும் இன்னொரு பாடலும் பாட, அந்த பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
நன்றி இந்து தமிழ் திசை இணையத்தில் இருந்து....

மினிமலிசம்

மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.
மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் தேவையான அளவில் கொண்டு வாழுதல்.
உதாரணமாக ஏழு செட் ஆடைகள் இருந்தால் ஒரு வாரத்தை கழிக்கலாம். வார இறுதியில் அதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்த அடிப்படை ஆடைகள் இல்லாமல் பெரும் நிகழ்ச்சிக்குச் செல்ல ஒரு உயர்ந்த ரக ஆடையும் இரவை கழிக்க இரண்டு மிக சாதாரணமான ஆடையும் வைத்திருந்தால் போதுமானது.
இது ஒரு உதாரணம் இதைப்போன்ற ஒரு பெல்ட் ஒரு செருப்பு ஒரு சூ என்று இவர்கள் பட்டியல்கள் பரிந்துரைகள் செய்கிறார்கள்.
எது தேவையில்லாதது என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய ஒரு வழிமுறை பரிந்துரை செய்யப்படுகிறது.
அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் ஒரு அறையில் அடைத்து விடுங்கள். பிறகு உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.
உதாரணமாக காலையில் முழித்து பல் விளக்க தேவையான பற்பசை குச்சி போன்றவற்றை அந்த அறையில் இருந்து எடுத்து பயன்படுத்துங்கள். அதைப்போன்று உங்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பயன்படுத்த தொடங்குங்கள்.
உதாரணமாக தேவைக்கு ஏற்ற பொருளை மட்டும் அறைக்குள்ளிருந்து வெளியே எடுத்து வைத்தல். சமைக்க தொடங்கும்போது அந்த சமையலுக்கு தேவையான பாத்திரங்களை எடுத்தல் இரவு உறங்க போகும் போது அதற்கு தேவையான தலகாணி எடுத்தல் இப்படி ஒரு மாதம் நீங்கள் வாழுங்கள் அதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அந்த அறையில் இருந்து வெளியே எடுத்து வையுங்கள்.
ஒரு மாதம் முடிந்த பிறகு நீங்கள் வெளியில் எடுத்து வைத்த பொருட்கள் மட்டும் உங்கள் வாழ்வியலுக்கு போதுமானது. ஒரு மாதம் எடுத்தும் அந்த அறையில் எஞ்சியிருக்கும் பொருட்கள் 90% ஆனது உங்களுக்கு தேவை இல்லாத அதாவது அத்தியாவசியம் இல்லாத பொருட்களே.
இப்படியாக நாம் இதுவரை சேர்த்த பொருட்களை தேவையில்லாததை விட்டு விலகலாம் என்று பரிந்துரை செய்கிறது இந்த மினிமலிசம் எனும் வாழ்வியல் கொள்கை.
உலகம் அதன் வேகத்திற்கு அதிகமாக சுழன்று தனது முதல் புள்ளியின் அவசியத்தை வாழ்வியலாக பேசிக்கொண்டு வருகிறது.
நிர்வாணம் என்பது காமத்தின் நிலையாகவும் ஆன்மீகத்தின் நிலையாகவும் பார்க்கப்படுகிறது ஆனால் எந்த ஒரு பொருள் பற்றும் அல்லாத ஏன் ஆடை என்னும் அடிப்படை பற்று கூட இல்லாத ஓர் ஆதி நிலையே நிர்வாணம். இது எனது பார்வையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த எளிமையம் நிலையின் உச்சம் நிர்வாணம்.
ஆனால் இவை அனைத்தையும் தனது அன்றாட வாழ்வாக வாழும் உன்னதமான மனிதர்களை நாம் ஏழை என்று அழைக்கிறோம். அடிப்படைத் தேவைகளையும் அளவான பொருட்களையும் உடையவரும் ஏழைகள் அல்ல அவர்களே இந்த உலகில் வாழ தகுதி படைத்த மானுடர்கள்.

Buy 2 Get 1 Free.. Discount Sale, Outlet, Offer என்று வியாபார உலகில் மயங்கி வீடு முழுவதும் பொருட்களை குவித்துக்கொண்டு இருப்பது என்பது இந்த இயற்கையை நாம் அழித்துக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள். 

உங்களில் ஒருவர்

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*
#முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
#இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் உங்கள் மனதிலும், அதன் #நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
#சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
*நான்… நான்… நான்…*
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் #உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
*நான்* தான் என் #இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் #மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு #கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *”நான்”* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*#உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*#உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது* எல்லாவற்றையும் வழங்கிய இறைவனுக்கு இணை வக்காதே! அதற்கு கூலி நிரந்தர நரகப் படுகுழி எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் வெளியேற முடியாது
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே #தாழ்வுமனப்பான்மை வரும்
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.
என்றும் அன்புடன்

உங்களில் ஒருவர் 

ஆண்மை

 உன்னுடைய ஆண்மை ஒரு பெண்னை அடிப்பதன் மூலமே நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நீ பெண்ணை அடித்தால், பெண்ணும் உன்னை சித்ரவதை செய்ய ஆயிரம் வழிகளை கண்டுபிடிப்பாள். நீ அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போதெல்லாம் அவள் தனக்கு தலையை வலிப்பதாக கூறுவாள்.

உங்கள் இருவருக்கும் இடையில் தொடர்பே இல்லை. எப்படி இருக்க முடியும் நீ அவளை அடிமைப் படுத்தியுள்ளாய். எந்த அடிமையாலும் தன்னுடைய சுதந்திரத்தை அழித்தவனை மன்னிக்க முடியாது. எந்த பெண்ணாலும் அவளுடைய சுதந்திரத்தை பறித்த எந்த ஆணையும் மன்னிக்க முடியாது..
மனோவியலாளர்களால் ஆண் – பெண் உறவை பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்று உள்ளது. அந்த புத்தகத்தின் தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் தலைப்பு
""நெருக்கமான எதிரி"" இப்படித்தான் நெருக்கமான எதிரிகளாக ஆணும் பெண்ணும் இதுவரை வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தைகள்.. இவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கின்றனர்
பெற்றோர்களும் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே, ஒருவரையொருவர் நச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஒருவரையொருவர் ஆளுமைக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர்.இதுதான் குழந்தைகளின் முதல் பள்ளி. இது கணிதத்தையோ, பூகோளத்தையோ, வரலாற்றையோ பற்றிய கேள்வி அல்ல.
இது வாழ்க்கையை பற்றிய கேள்வி. அவர்கள் வாழ்க்கையின் ABC யை கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தாய் தொடர்ந்து தந்தையை நச்சரித்து கொண்டிருப்பதை பார்க்கிறார்கள். தந்தை தொடர்ந்து ஆளுமைக்கு உட்படுத்த, அடிமைபடுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.
குழந்தைகள் மிகவும் கவனிக்கும் தன்மை கொண்டவை. ஏனெனில் அவர்கள் இந்த உலகத்திற்கு புதியவர்கள். அவர்களுடைய கண்கள் தெளிவாக உள்ளன.
அவர்களுடைய பார்வையில் அனுபவத்தின் அழுக்கு படவில்லை. அவர்கள் அதன் போலிதனத்தை முழுவதும் பார்க்கமுடியும்.
ஏனெனில் யாராவது பக்கத்து வீட்டுக்காரர் இவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும்போது வந்தால் இவர்கள் உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்கின்றனர். அழகான விஷயங்களை பேசத் தொடங்கி விடுகின்றனர். பக்கத்து வீட்டுக்காரரை உள்ளே அழைக்கின்றனர். அவர்கள் சண்டை போடுவதேயில்லை போன்ற தோற்றத்தை பக்கத்து வீட்டுக்காரரிடம் உருவாக்குகின்றனர்.
குழந்தையும் போலித்தனத்தை கற்றுக் கொள்கிறது. நீ என்ன என்பது வேறு விஷயம். நீ எப்படி இருக்கவேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அப்படி நீ சமுதாயத்திடம் இருக்கவேண்டும்.ஆனால் சமுதாயம் நீ என்னவாகவேண்டும் என விரும்புகிறதோ அப்படி நீ மாற வேண்டும்.
மிகச் சிறிய குழந்தை பருவத்திலிருந்தே நாம் ஒரு பிளவுபட்ட குணாதிசியத்தை, இருமையை, இரு இருப்புகளை உருவாக்குகிறோம்.பெண்குழந்தை மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என தாய்,, தந்தையிடம் நடந்துக்கொள்வதை வைத்து கற்றுக் கொள்கிறாள். பையன் தந்தை நடந்துக்கொள்வதை வைத்து கணவன் எவ்வாறு இருக்கவேண்டும் என கற்றுக்கொள்கிறான்.
இதனால்தான் பரம்பரை பரம்பரையாக அதே முட்டாள்தனங்கள் திரும்ப திரும்ப செயல் படுகின்றன. முழு உலகமும் துன்பத்தில் வாழ்கிறது, போலித்தனத்தில் வாழ்கிறது. அடிப்படை காரணம் பாரம்பரிய குடும்பம். குழந்தை தாய் தந்தையை மட்டுமே பார்க்கிறது.
யாரும் குழந்தையின் உள்ளார்ந்த திறமையைப் பற்றி கவலைப் படுவதேயில்லை. எல்லோரும் தன்னுடைய இலட்சியத்தைப் பற்றியே யோசிக்கின்றனர். தன்னுடைய மகன் முதலமைச்சர் ஆவதையோ, பிரதமர் ஆவதையோ காண ஆசைப்படுகின்றனர்.
அந்த பையன் தனது உள்ளார்ந்த திறமையால் இசைக்கலைஞன் ஆகவோ, ஒரு ஓவியன் ஆகவோ, ஒரு கணிதமேதை ஆகவோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகவோ மாறக்கூடும் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதேயில்லை. குழந்தை குறித்து யாரும் அக்கறைபடுவதில்லை. அவனை பொருட்படுத்துவதேயில்லை.
ஓய்வு பெறப் போகும் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரின் வழியனுப்பு விழாவை கொண்டாடுவதற்க்காக அவருடைய நண்பர்கள் அவரை அழைத்தனர். அவர் நாட்டின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்தார். மக்கள் அவரை கொண்டாடினர். ஆனால் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். ஒரு நண்பர் “ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்.
அவர், “நான் சோகமாக இருக்கக் காரணம், நான் அறுவை சிகிச்சை நிபுணராக ஒருபோதும் விரும்பியதே இல்லை. நான் ஒரு இசைக் கலைஞனாக விரும்பினேன். நான் என்னுடைய புல்லாங்குழல் எனது கைகளில் இருக்கும்போது தெருக்களில் பிச்சைகாரனாக இறக்க நேர்ந்திருந்தாலும்கூட நாட்டின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதை விட அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏனெனில் இது என்னுடைய தாகமாக இருந்ததில்லை, இது என்னுடைய குறிக்கோள் அல்ல” என்றார்.
உலகம் மிகவும் துன்பமயமாக இருப்பதற்கு அடிப்படைக்காரணம் மக்கள் தங்களுடைய குறிக்கோளை நோக்கி நகர அனுமதிக்கப்படுவதில்லை. எல்லோரும் திசைதிருப்பப் படுகின்றனர்...

வி. குமார் இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

 


இசையுலக ஜாம்பவான்களான கே.வி.மகாதேவன், எம்எஸ்.விஸ்வநாதன் என்ற சிகரங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில்' நீர்க்குமிழி' படத்தில் அறிமுகமான மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் அவர்களின் பிறந்த தினம். (ஜுலை 28, 1934 ) இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம் ஆவார்கள்

.
திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றிய இவர் இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்திவந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
மாநில கணக்காயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனந்த சயனம் என்ற நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.
டிஎம்.சௌந்தராஜன், யேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பி. பாலசுப்பிரமணியம், பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட பலரின் சூப்பர் ஹிட் பாடல்கள் குமாரின் இசையில் வெளிவந்துள்ளன.
மெல்லிசை மன்னரின் இசையில் இருந்து வேறுபட்ட தளத்தில் குமாரின் பாடல்கள் ஒலித்தன..
மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் பிஸியாக இருந்த காலத்திலேயே அவரை வி.குமார் பாட வைத்தார். 'வெள்ளி விழா' படத்தில் ' உனக்கென்ன குறைச்சல், நீயொரு ராஜா, வந்தால் வரட்டும் முதுமை' என்ற அப்பாடலுக்கான குரல் தேர்வில் அவருக்கு இருந்த இசைஞானம் புரியும். கேள்வி பாணியில் பாடல்களை வடிவமைப்பதில் குமார் வல்லவராக இருந்துள்ளார்.
'மண்ணுக்கு மேலாடை' என்ற பாடலில் பத்துக்கு மேலாடை என கேள்வி எழுப்பி பதினோன்றேயாகும் என சுரதாவின் கிண்டல் தொனிக்கும் வரிகளுக்கு இசை தந்தார் குமார். இதே போன்று ' நல்ல பெண்மணி' படத்தில் அப்படியொரு பாடல்.
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
கே.ஜே.யேசுதாஸீம், சுவர்ணாவும் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தனர்.
ஜெயச்சந்திரனோடு ஸ்வர்ணா இணைந்து 'தூண்டில் மீன்' படத்தில் பாடிய இப்பாடல் மிக மிக அரிதான பாடலாகும்.
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ ....
இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். ஸ்வர்ணாவின் குரலுக்கு ரசிகையாகிப் போவீர்கள். இதே படத்தில் பி.சுசீலா, எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடிய சூப்பர் ஹிட் பாடலான 'வாழ்வில் சௌபாக்கியம் வந்தது' பாடலும் இடம் பெற்றுள்ளது.
இன்றளவும் யேசுதாஸ் சூப்பர்ஹிட் பாடல் என சொல்லப்படுவதில் இப்பாடலுக்கு முக்கிய இடமுண்டு. அவர் காதல் கைகூட இந்த பாடலும் துணைபுரிந்ததாக யேசுதாஸ் கூறியுள்ளார்.
இப்பாடல் இசை ரசிகர்களுக்கு அவர் வழங்கிய பரிசு என்றே சொல்லலாம். 'தேன் சிந்துதே வானம்' படத்தில் இடம் பெற்ற இப்பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அப்படியான ஒரு இசைக்கோர்ப்பு. யேசுதாஸ் மிகவும் ரசித்துப்பாடிய இப்பாடல் வாலியின் வளமிக்க சொற்களால் கட்டப்பட்டது.
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன் . . . .
. மிக ஆர்ப்பாட்டமாக பாடக்கூடிய எல்ஆர்.ஈஸ்வரியை 'காதோடு தான் நான் பாடுவேன்' என ஆர்ப்பாட்டமின்றி பாட வைத்து விட்டு, மிக அமைதியாக பாடக்கூடிய பி.சுசீலாவை ' நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்' என பாடவைத்து வித்தியாசம் காட்டினார்.
'இருகோடுகள்' படத்தில் இடம் பெற்ற பி.சுசீலா, ஜமுனா குரலில் ஒலித்த 'புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்' பாடல் நவராத்திரி நாட்களை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், இப்பாடல் இரண்டு மனைவிகள் பாடுவது போல் அமைக்கப்பட்டது.
கே.ஜே.யேசுதாஸ் பாடியதிலேயே மிக வேகமான பாடல் 'ஏழைக்கும் காலம் வரும்' படத்தில் இடம் பெற்றுள்ளது. 'மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு '. அழகான சந்தக்கட்டுடன் அமைந்த இப்பாடல் அவரின் இளமைக்கால குரலை ரசிக்க வைக்கும். அதே போல எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இனிய குரலில் 'ஓராயிரம் கற்பனை', ' படைத்தானே பிரம்மதேவன்', ' பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு', 'பொன்னை நான் பார்த்ததில்லை' உள்ளிட்ட பல இனிய பாடல்கள் நமது ஞாபகத்தொட்டிலை ஆட்டி விடும்.
'நவக்கிரகம்' படத்தில் இரண்டு பாடல்களை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். அதில் 'எல்லாமே வயித்துக்குத் தாண்டா' பாடல் ராகவனின் ஹிட் ரகம். ஆச்சி மனோராமா பாடிய “வா வாத்யாரே ஊட்டாண்ட” பாடலுக்கு இசை வி.குமார் தான். இப்பாடலைத் தொடர்ந்தே அவருக்கு சென்னை பாஷையில் பாடவும், நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
'ஆயிரம் பொய்' படத்தில் எல்ஆர்.ஈஸ்வரி இணைந்து மனோராமா பாடிய 'காவேரி தண்ணியில் குளிச்சவடி' பாடலாகட்டும், தாராபுரம் சுந்தராஜனுடன் மனோரமா பாடிய 'தமிழ் விடு தூது ' பாடலாகட்டும், 'பொன்வண்டு' படத்தில் பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி, ஸ்வர்ணா கூட்டணியில் 'அடி வாடியம்மா' பாடலாகட்டும் அவர் எத்தனை பாடகர்களின் கூட்டணியில் வெற்றிப்பாடல்களை உருவாக்கினார் என அறிய முடிகிறது.
'சதுரங்கம்' படத்தில் வாணி ஜெயராம் பாடிய 'மதனோற்சவம் ரதியோடு தான்' , ' நாடகமே உலகம்' படத்தில் இடம் பெற்ற 'சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்', கஸ்தூரி விஜயம் படத்தில் இடம் பெற்ற 'மழைக்கால மேகம்' ஆகிய பாடல்கள் இன்றளவும் வாணியின் ரசிகர்களால் நேசிக்கப்படுகிறது.
'சிவப்புகல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி', 'நேற்று நீ சின்ன பப்பா', 'கல்யாண சாப்பாடு போடவா?', 'நித்தம் நித்தமொரு', 'எங்கெல்லாம் வளையோசை' போன்ற ஏராளமான பாடல்களை வி.குமார் இசையில் டிஎம்.செளந்தராஜன் பாடியுள்ளார்.
குமார் இசையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மூன்று படங்கள் அரங்கேற்றம், ராஜநாகம், நூற்றுக்கு நூறு. இப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் காலத்தால் மறக்க முடியாதவை. ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது, நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஆகிய 3 பாடல்கள் வி.குமாரின் இசைக்கு சான்றாக உள்ளது.
பாடகி சுவர்ணாவை காதலித்த மணந்த வி.குமாருக்குப் பிடித்த பாடகி பி.சுசீலா தான். ஏனெனில் அவரது இசையில் அதிகப்பாடல்களைப் பாடியவர் சுசீலா தான். இந்த பட்டியலைப் பாருங்கள் உங்களுக்கே அது புரியும்.
'ஒரு நாள் யாரோ', 'கன்னி நதியோரம்', 'அடுத்தாத்து அம்புஜத்தை',' உன்னை தொட்ட காற்று', 'மூத்தவள் நீ கொடுத்தாய்', 'ஆயிரமாயிரம் ஆண்டின்', 'மயக்கத்தை தந்தவன்', ' கண்ணனுக்கு கோபமென்ன',' நீ நினைத்த நேரமெல்லாம்', 'புலவர் சொன்னதும்', 'தில்லையிலே சபாபதி', 'திருக்கோயில் தேடி', 'கண்களால் நான் வரைந்தேன்', 'அச்சம் விட்டு நாணம்', 'சேலை கட்டும் கடையை', 'காலம் நமக்கு தோழன்',' கை நிறைய சோழி',' பல்லாண்டு பல்லாண்டு' உள்ளிட்ட பல பாடல்களை பி.சுசீலா தனித்தும், பல பாடகர்களுடன் இணைந்தும் பாடியுள்ளார்
150 தமிழ்ப் படங்களுக்கும் 5 தெலுங்குத் திரைப்படங்களுக்கும் இசை அமைத்தார். இவரது மனைவி சொர்ணாவும் ஒரு பின்னணிப்பாடகி..
"மெல்லிசை மாமணி" என புகழப்பட்ட வி.குமாரின் பாடல்கள் இசைஞானி பாடல்களைப் போலவே நினைவில் உலவக் கூடியவை. பல பாடல்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காதவை.
இசையமைத்த திரைப்படங்கள்
1. நீர்க்குமிழி
2. நாணல்
3. அவளும் பெண்தானே
4. ஆயிரத்தில் ஒருத்தி
5. காரோட்டிக்கண்ணன்
6. கஸ்தூரி விஜயம்
7. மஞ்சள் முகமே வருக
8. தேன்சிந்துதே வானம்
9. ஏழைக்கும் காலம் வரும்
10. ஆசை 60 நாள்
11. இது இவர்களின் கதை
12. கணவன் மனைவி
13. மிட்டாய் மம்மி
14. நல்ல பெண்மணி
15. பணக்கார பெண்
16. அன்று சிந்திய ரத்தம்
17. முன்னூறு நாள்
18. ஒருவனுக்கு ஒருத்தி
19. சொன்னதைச் செய்வேன்
20. சொந்தமடி நீ எனக்கு
21. தூண்டில் மீன்
22. அன்னபூரணி
23. இவள் ஒரு சீதை
24. கண்ணாமூச்சி
25. மக்கள் குரல்
26. சங்கரி
27. காலம் ஒரு நாள் மாறும்
28. இணைந்த துருவங்கள்
29. மங்கல நாயகி
30. அலங்காரி
31. நாடகமே உலகம்
32. அவளுக்கு நிகர் அவளே
33. கலியுகக் கண்ணன்
34. ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு
35. ராஜ நாகம்
36. சுவாதி நட்சத்திரம்
37. தாய் பாசம்
38. அரங்கேற்றம்
39. கட்டிலா தொட்டிலா
40. மல்லிகைப் பூ
41. பெண்ணை நம்புங்கள்
42. பெத்த மனம் பித்து
43. பொன்வண்டு
44. மேஜர் சந்திரகாந்த்
45. ஜானகி சபதம்
46. நினைவில் நின்றவள்
47. புத்திசாலிகள்
48. பொம்மலாட்டம்
49. எதிர் நீச்சல்
50. ஆயிரம் பொய்
51. இரு கோடுகள்
52. நிறைகுடம்
53. நவகிரஹம்
54. பத்தாம் பசலி
55. பெண் தெய்வம்
56. நூற்றுக்கு நூறு
57. பாட்டொன்று கேட்டேன்
58. புதிய வாழ்க்கை
59. ரங்க ராட்டினம்
60. வெகுளிப்பெண்
61. டெல்லி டு மெட்ராஸ்
62. மாப்பிள்ளை அழைப்பு
63. உனக்கும் எனக்கும்
64. வெள்ளிவிழா
65. தெய்வகுழந்தைகள்
66. எல்லாரும் நல்லவரே
அவளுக்கு நிகர் அவளே [1974]
காரோட்டிக்கண்ணன் [1975]
ஜானகி சபதம் [1975]
ஆயிரத்தில் ஒருத்தி [1975]
எல்லோரும் நல்லவரே [1975]
தேன் சிந்துதே வானம் [1975]
அன்று சிந்திய ரத்தம் [1976]
கணவன் மனைவி [1976]
இவள் ஒரு சீதை [1978]
கலியுகக் கண்ணன்
மக்கள் குரல்
மீண்டும் மகான்
மங்கள நாயகி
தூண்டில் மீன்
நாடகமே உலகம்
நங்கூரம்
ஏழைக்கும் காலம் வரும்
மிட்டாய் மம்மி
நல்ல பெண்மணி
பணக்காரப்பெண்
கண்ணேமூச்சி
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
அலங்காரி
பெண்ணை நம்புங்கள்
கட்டிலா தொட்டிலா
காலம் ஒரு நாள் மாறும்
அவரை இன்றைய நாளில் போற்றுவோம்
பாடல்... 6
கட்டுரை.. 1
படங்கள்.. 2
நன்றி
அன்புடன்
நிர்வாக குழு

கடையேழு வள்ளல்கள் யார்?

 கடையேழு வள்ளல்கள் யார்?

(01) பேகன் - மயிலுக்கு போர்வை அளித்தவர்.
(02) பாரி - முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.
(03) காரி - தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியவர்.
(04) ஆய் - நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு அளித்தவர்.
(05) அதியமான் - நீண்ட நாள் வாழக்கூடிய அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தவர்.
(06) நள்ளி - தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.
(07) ஓரி - விற் போரில் வல்ல ஓரி கொல்லி மலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

Monday, 9 January 2023

சி.எஸ்.ஜெயராமன்

 சி.எஸ்.ஜெயராமன் 

கலைஞர் மு. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனிவர். அதாவது மு.க. முத்துவின் தாய்மாமன். இந்த அறிமுகத்தைவிட இவரை பாட்டு சித்தர் அல்லது இசை சித்தர் என்று தமிழ்த் திரையுலகம் அழைக்கும். அதுவே அவரின் உயர்ந்த அடையாளம். அவரின் குரல் கம்பீரமானது மட்டுமல்ல இனிமையானதும் கூட.

இவர் குரலில் இருந்த கம்பீரமும் கவர்ச்சியும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடும் வாய்ப்பினை கொண்டுவந்தது. 1940 முதல் 1960 வரை இவர் பாடிய பாடல்கள் ஏராளம். எம்ஜியாரும் சிவாஜியும் பெரிதும் மதித்த பாடகர் இவர். அதிலும் சிவாஜிக்கு இவர் குரல் மீது மையல் எனலாம். இவர் குரலுக்காகவே பாடல்கள் பதிவாயின.

பராசக்தி படத்தில் இடம்பெற்ற கா...கா...கா பாடல், விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பாடல், ரத்தக்கண்ணீர் படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் போன்ற பிரபலமான பாடல்கள் இவர் குரலில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தன. அதிலும் 1958 ம் ஆண்டு வெளியான சம்பூர்ண ராமாயணம் படத்தில் இவர் பாடிய சங்கீத சௌபாக்யமே... இன்றுபோய் நாளை வாராய் ஆகிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

இவர் குரலின் சிறப்பை சொல்லும் சம்பவம் ஒன்று இவரின் இளம் வயதில் நடந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார். ஒருமுறை கல்கத்தாவில் சூட்டிங். படப்பிடிப்பின் இடைவேளையில் சி.எஸ். ஜெயராமன் ஒரு மர நிழலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மாபெரும் ஆளுமை வருகிறார். ஆனால் அவர் யார் என்பது ஜெயராமனுக்கு தெரியாது. வெண் தாடியோடு ஒளி பொருந்திய கண்களை உடைய அந்த முதியவர் ஜெயராமனிடம் வந்து, “ஒரு பாடல் பாடு” என்று ஆங்கிலத்தில் சொன்னார். யார் என்று தெரியாத மனிதர் பாடச் சொல்கிறார். ஜெயராமனால் மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவரின் தேஜஸ் இருக்கிறது. உடனே பாடுகிறார். பாடி முடித்ததும் அந்த மனிதர் ஜெயராமனை தட்டிக்கொடுத்து, ‘தெய்வீகக் குரல்’ என்று சொல்லி ஆசீர்வதித்து விட்டுச் சொன்றாராம். அவரின் தொடுதல் சி.எஸ். ஜெயராமனை சிலிர்க்க வைத்துவிட்டது. அந்த மனிதர் நகர்ந்துபோனதும் சுற்றுமுற்றும் இருந்தவர்கள் ஜெயராமனை நெருங்கி ‘அவர் யார் என்று தெரியுமா...’ என்று கேட்டார்கள். சி. எஸ். ஜெ தெரியாது என்று சொன்னார். அப்போது அவர்கள் சொன்ன பதில் சி.எஸ். ஜெயராமனை மகிழ்ச்சியிலும் சிலிரிப்பிலும் ஆழ்த்தியது. அவர் வேறு யாருமல்ல... பாரத தேசத்தின் பெருமை ரவீந்திரநாத் தாகூர்.

பக்திப்பாடல்கள் பாடுவது சி.எஸ். ஜெயராமனுக்கு மூச்சுபோல மாறிபோனது. அதற்கு சிதம்பரத்திலும் தமிழகம் முழுக்க இருக்கும் கோயில்களிலும் அவர் பாடியபோது நிகழ்ந்த அற்புதங்களே அதற்கு ஆதாரம். அந்நாளின் முதல்வர் அண்ணா சி.எஸ். ஜெயராமனை இசைக்கல்லூரி முதல்வராக ஆக்கினார். தகுதி நிறைந்த அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத அளவுக்கு கொள்கைச் சிக்கல் ஏற்பட்டதெல்லாம் தனிக் கதை. 

கொசுறுச் சேதிகள் :  

தெய்வப் பிறவி படத்திற்கான ரிக்கார்டிங். “அன்பாலே தேடிய என்” எனத்துவங்கும் பாட்டிற்கு இடையில் ‘ஹம்மிங்’ பண்ணத் தேவை ஒரு பெண் குரல். பலர் ஆடிஷனுக்கு வந்திருக்கிறார்கள். ஒல்லியான ஒரு பெண்ணும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என்று அவரை அனுப்ப முயற்சித்தபோது ஜெயராமன் தடுத்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அப்படி ‘ஹம்மிங்’கில் ஆரம்பித்து பிரபலமானவர் பின்னணிப்பாடகியான எஸ்.ஜானகி.

எம்.ஜி.ஆருக்கு புதுமைப்பித்தன் உட்பட மூன்று படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார். பிறகு அடுத்தடுத்து பத்து படங்களுக்கு மேல் இசையமைப்பாளராகிவிட்டார். அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘ ரத்தக்கண்ணீர்’. அப்போது ஒரு பாடலுக்கு இசையமைக்க ஜெயராமன் வாங்கிய தொகை 750 ரூபாய். ரத்தக்கண்ணீர் படத்திற்கான இசை, பாடல்கள் அனைத்திற்கும் சேர்த்து இவர் வாங்கிய தொகை பதினோராயிரம் ரூபாய்தான். அதிலே ’குற்றம் புரிந்தவன்’னு ஒரு பாட்டு வரும். பாட்டு இடையிலே எம்.ஆர். ராதாவோட குரல் இடையிடையே வசனமா வரும். ஆரம்பத்தில் இப்படிச் செய்யலாமான்னு நினைச்சப்போ பலர் மலைச்சாங்க. அந்தப் பாடல் நல்ல ஹிட்டாயிடுச்சு. பின்னாளில் பலரும் அந்த மாதிரி நிறைய பண்ணினார்கள்.

Friday, 23 December 2022

kannathasan

தங்கமணி மாளிகையில் தனிவயிரப் பந்தலிட்டு

மங்கையர்கள் சுற்றிவந்து மங்கலமாய்க் கோலமிட்டு

திங்களென்றும் சிங்கமென்றும் சீராட்டிப் பேருரைத்து

கண்ணதாசனைப்பற்றி அறியவேண்டுமாயின் அவரது திரை இசைப்பாடல்களை மட்டும் பார்த்தால் போதாது. அவரது கவிதை தொப்பு கட்டுரைகளை ஒருவன் படிக்கவேண்டும். காமராசர் இரந்து விடுகின்றார் அவருக்கு கண்ணதாசன் எழுதிய தாலாட்டை பாருங்கள்!

திருநாள் அலங்காரச் சிலைபோ லலங்கரித்து

வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும் மகனாக வந்ததில்லை!

வண்ணமலர்த் தொட்டிலிலே வடிவம் அசைந்ததில்லை!

வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பெருமரபில்

ஏழைமகன் ஏழையென இன்னமுதே நீ பிறந்தாய்!

நிமிர்ந்தால் தலையிடிக்கும், நிற்பதற்கே இடமிருக்கும்

அமைவான ஓர் குடிலில் ஐயா நீ வந்துதித்தாய்!

“தங்கமே….! தண்பொதிகைச் சாரலே…..! தண்ணிலவே….!

சிங்கமே…!” என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்

சொந்தமென்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை!

தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!

ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே! என்று கண்ணதாசன் பாடுகின்றான்.