Saturday 22 June 2019

கல்முனை கற்றுத்தரும் பாடம்! பேசாலைதாஸ்

கல்முனை கற்றுத்தரும் பாடம்! 
பேசாலைதாஸ்
                                                கல்முனை பிரதேச சபையை தரம் உயர்த்தகோரி பிக்குகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனையாகி ன்றது! முதலில் நான் இதை மனோகனேசன் அவர்களின் கூற்றுடன் ஆர ம்பிக்கின்றேன் அவர் ஊடகங்களுக்கு சொல்வது இதுவே! "ஞானசார தேரர், தற்போது கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட் டமாக கருதி முடித்து வைக்கிறேன் என எனக்கு தொலைபேசியில் தெரி வித்தார்"நல்லது, நன்றி, செய்யுங்கள்" என்றேன். அம்பாறை மாவட்ட, முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் தரப்பின் பிடிவாத மும், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலா மையும் இந்த பிரச்சினையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

                                                   வேறு ஒரு தளம் என அமைச்சர் குறிப்பிடுவது பெள்த்த பிக்குகள் மட்டம்! அவர் அதை ஒரு வேண்டாத கோணத்தில் நோக்கலாம், ஆனால் எனது பார்வை வேறு ஒரு கோணத்தில் நகர்கி ன்றது. தேச ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் இந்த நகர்வு, அவரது அமைச்சைப்பொறுத்தவரை நல்லதே என நினைக்கி ன்றேன். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின்னர், பெளத்த பிக்குகளிடம், தமிழ்ர் மீதான பார்வை கொஞ்சம் மாறுதல் அடைந்துள்ளது, அதாவது முஸ்லிம் மக்களைவிட, தமிழர்கள் ஆபத்தானவர்கள் அல்ல என்பதே அந்த சிந்தனை நகர்வு!

                                                               தமிழர்களுக்கு பல பிரச்சனை உள்ளது அது தீர்த்துவைக்கப்படவேண்டிய ஒரு விடயம் என்பது பலதரப்பாலும் ஆமோ திக்கப்பட்ட விடயம், ஆனால் அந்த பிரச்சனையை வைத்துக்கொண்டு, சிங்கள அரசியல்வாதிக,ள் மலிமான அரசியல் விளம்பரங்களை நடத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற துடித்ததின் விளைவே, தமிழர் விடு தலை போராட்டாம் எழுச்சிபெற காரனம் ஆகியது. அந்த போராட்டம் கூர்ப்படைந்து தனி நாட்டு கோரிக்கைக்கு வழி சமைத்தது. தற்கால உலகமயமாதல் கோட்பாட்டுக்கு சற்றும் ஒத்துவராத இந்த தனி நாட்டு போராட்டம் சர்வதேச அரங்கில் சந்தேக கண்கொண்டு பார்க்கப்பட்ட தோடு, அதனை அழிக்கவும்  வழிகாட்டியது, இறுதியில் முள்ளிவாய்க் கால் துய‌ரத்துடன் முடிவைந்தது!

                                                       தமிழ் விடுதலை ஆயுதபோராட்டம் முடிவடை ந்து, ஜனநாயகவழிமுறைக்குள் தீர்வுகாணஅது தள்ளப்பட்டுள்ளது! ஆனால் தற்போதுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் இந்த புலிகளின் போரா ட்டத்தைவிட பயங்கரமானது, அதாவது விடுதலைபுலிகளின் போராட்டம் தமிழர் சுயபாதுகாப்பு அல்லது தமிழர் தாமே தமது பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு தனி நாடு என்ற எல்லைக்குள் சுருக்கப்பட ஒரு விடயம்! ஆனால் முஸ்லிம் பயங்கரவாதம் என்பது சர்வதேச ஒழுங்கமைவில் ஒரு சர்வதேச இஸ்லாம சாம்ராட்சியத்தை ஸ்தாபிப்பதே ISIS அமைப்பின் முக்கிய நோக்கம்! இது சர்வேதசத்திற்கே ஒரு அச்சுருத்தலான விடயம் என்பதோடு, இலங்கையின் இறைமைக்கே ஆபத்தானது என்று இப்போது சிங்களம் உணரதளைப்பட்டுள்ளது

                                                        இதில் ஒரு விடயம் குறிப்பிட்டாகவேண்டும், அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வு, அதாவது ஒற் றையாட்சிக்குள் சுமூகமான தீர்வு என்பது சிங்கள மக்களையும், ஆட்சிb யாளர்களையும், பிக்குமார்களையும் சந்தோசப்படவைத்துள்ளது என்றே கூறவேண்டியுள்ளது, எனவேதான் அத்ரலி தேரோ மற்றும் ஞானசார தேரர் போன்றவர்கள், பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கையின் இறமைக்கு சர்வதேச மட்டத்தில் இருந்து அச்சுருத்தல் வந்திருக்காது என வெளிப்படையாக கூறுகின்றார்கள். இன்னும் தொடரும்,,,,,,                                                                                                                                  பேசாலைதாஸ்
                                                      இன்னொரு விடயத்தையும் இங்கே அவதானிக்க முடிகின்றது, அதாவது தமது இனத்தின் அரசியல்வாதிகளின் சுயநல மும், அதிகாரவேட்கையும், கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு ஆயுதம் கொடு த்து, அவர்களின் தீவிரவாதத்துக்கு துணைபோனார்கள், என்ற விடயமும் பெளத்த பிக்குகள் உணரத்தலைப்பட்டுள்ளனர், ஞானசார தேரர் இப்ப டிச் சொல்கின்றார், அதாவது தமிழரும் சிங்களவரும் ஒருமித்து பயணம் செய்யவேண்டியுள்ளது என்கின்றார், இதில் ஒரு சூட்சுமம் இருக்கின்றது, அதாவது முஸ்லிம் மக்களை அரசியலில் இருந்து மெல்ல கழற்றிவிடு வதே இக்கூற்றின்  அடிஆழம்!

                                                      இதுவரை காலமும் தமிழ் தேசியவாதத்தையும், தாயக கோட்பாட்டையும் பலவீனப்படுத்த, முஸ்லிம் மக்களையும், கிழ க்கு பிராந்திய பிரதேசவேறுபாடையும், முஸ்லிம் மக்களைக்கொண்டு சிங்களம், அதனை நிறைவேற்றியது, அதன் எதிர்வினையாக, கிணறு வெட்ட, பூதம் கிழம்பிய கதையாக சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத பூதம், கிழக்கில் இருந்து உதயமாகியுள்ளது:

                                                      இப்போது பெளத்த பிக்குகளுக்குள் எழுந்துள்ள விழிப்புணர்வு, சிங்கள இனத்தை காப்பாற்றவேண்டுமானால், இலங்கை என்ற நாட்டுபற்றை வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, இது இனவாதத்தை சற்று பின்தள்ளி, நாட்டுப்பற்றை முன்வைக்கின்றது, இந்த செல்நெறி இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான தோற்றமாக உணரமுடிகின்றது, இந்த அடிப்படையில், மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு இந்த சொல்லாடல்கள் இப்போது அதிகமாக புரள்கின்றது, இதுவரவேற்கவேண்டியவிடயம்!

                                                     மதந‌ல்லிணக்கம் என்று பேசும் போது, இந்துவும் பெளத்தமும், ஒரே அடிமட்டத்தில் இருந்து வந்தவை, புத்தர் ஒரு இந்து!எனவே பெளத்தமும் இந்துவும் ஒரே பார்வையில் பார்க்கப்படலாம், தமிழ ர்கள் பெளத்தத்தை வழிபடுவ்தில் தவ்று ஏதும் இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெளத்தம் பிறந்தது இந்தியாவில்! அசோக சக்கர வர்த்தியால் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இந்த பெளத்தம்,  பார்ப்பணர்களின் இந்துத்துவ கடும் எதிர்ப்பினால், சாதுவான தார்மீக சிந்தனை கொண்ட பெளத்த மதம் இந்தியாவில் இருந்துவிரட்டப்பட்டு, தென்கிழக்கு ஆசியா, சீனாவுக்குள் புகுந்து, அங்குள்ள மக்களை தெய்வ ங்களாக மாற்றி, சீனா,சிங்கப்பூர்,கொங்கொங், கொரியா,யப்பான் போன்ற வளமான நாடுகள் உதயமாக இந்த பெளத்தம் துணை நின்று ள்ளது என்பதே வரலாற்று உண்மை! இன்னும் தொடரும்  பேசாலைதாஸ்

No comments:

Post a Comment