Friday, 5 February 2021

Kim Tong Un

 Kim Tong Un

கிம் ஜாங் உன் மக்களைக் கொடுமைப்படுத்துவார். பிடிக்காதவர்களைக் கொல்வார். அண்டை நாடுகளை அச்சுறுத்துவார். தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த ஏழு ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் இருக்கின்றன. அவர் நினைத்தால் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அணு ஆயுதப் போரைத் தொடங்க முடியும். அவர் விரும்பினால் அண்டை நாடுகளுடன் உறவை முறித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உறவை புதுப்பித்துக் கொள்ளலாம். வடகொரியாவை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் கிம் பரம்பரையின் வாரிசு அவர். உலகில் மிகக் குறைந்த வயதில் அதிகாரங்களைப் பெற்ற தலைவர்களில் இவர் முக்கியமானவர். வலிமையான தலைவர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங், கிம் ஜாங் உன்னின் தாத்தா

கிம் ஜாங் உன்னின் இளமைக் காலம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் 1982-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அவர் பிறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஆனால் தென்கொரியாவின் உளவுத்துறையினர் அவர் 1983-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். வடகொரியாவின் தலைவர்கள் பொதுவாக தங்களது குழந்தைகளை வெளிநாடுகளில் ரகசியமாக வளர்ப்பது வழக்கம். அதுவும் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு நாடுகளில் பிரித்து வளர்க்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் பிறந்த சில ஆண்டுகளிலேயே சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகருக்கு அனுப்பப்பட்டார் கிம் ஜாங் உன். அங்கு தொடக்கக் கல்வி பயின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு சோல் பாக் பாக் சோல் என பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசு என்பதால் அடையாளம் தெரியாத வகையிலேயே அவர் வளர்க்கப்பட்டார். பாதுகாப்புக்காக உடன்படிக்கும் மாணவர் என்ற பெயரில் ஒரு பாதுகாவலரும் அவருடன் தங்கியிருந்தார். பெர்னில் உள்ள வடகொரியத் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் மகன் என்ற பெயரிலேயே கிம் ஜாங் உன் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டார். இப்போது கடும் சினம் கொண்டவராக அறியப்படும் கிம் ஜாங் உன் இளமைக் காலத்தில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். கூடைப் பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட கிம் ஜாங் உன், மைக்கேல் ஜோர்டானின் தீவிரமான ரசிகர்

2010-ஆம் ஆண்டில்தான் கிம் ஜாங் உன்னைப் பற்றிய அடிப்படையான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. கிம் ஜாங் இல்லுக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்யப் போகிறவர் என்றும் அடையாளப்படுத்தப்பாட்டார். 2011-ஆம் ஆண்டில் கிம் ஜாங் இல் இறந்த நாளிலேயே சுப்ரீம் லீடர் என்ற பெயரில் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக் கொண்டார் கிம் ஜாங் உன். அன்றைய நாள் முதல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்தையின் வழியில் அடுத்தடுத்து அணு ஆயுதச் சோதனைகளைச் செய்தார். தேவைப்படும்போதெல்லாம் புதிய வகை ஏவுகணைகளைச் சோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தினார். விண்வெளிக்குச் செல்லும் அளவுக்கு திறன் மிக்க ராக்கெட்டுகள் இவரது காலத்திலேயே உருவாக்கப்பட்டன.

அதே நேரத்தில் தனக்கு எதிரானவர்கள் என்ற தெரிந்தவர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் கிம் ஜாங் உன் மேற்கொண்டு வந்தார். அவர்களில் ஒருவர் ஜாங் சுங்-தயீக். கிம் ஜாங் உன்னின் மாமா. கிம் ஜாங் உன் பதவிக்கு வருவதற்கு உதவியாக இருந்தவர். பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும், கட்சியைப் பிளவுபடுத்த முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 5 நாள்கள் கழித்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக பல தகவல்கள் உலா வருகின்றன. தயீக்கை ஒரு அறையில் அடைத்து, வேட்டை நாய்களைக் கொண்டு கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபர் வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேசியதாகக் கண்டறியப்பட்டது. வடகொரிய அரசு இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு விளையாட்டு அரங்கத்தில் ஒன்றரை லட்சம்பேர் கூடியிருக்க அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பொது இடத்தில் இதுபோன்று தண்டனைகள் நிறைவேற்றப்படுவது, வட கொரியாவில் சர்வசாதாரணம். மரணதண்டனைகள் சாதாரணத் துப்பாக்கிகள் கொண்டு நிறைவேற்றப்படுவதில்லை. போர்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்களை இதற்காகவே வடகொரிய அதிகாரிகள் வைத்திருக்கிறார்கள்.

மனித உரிமை என்பதற்கு அதிபராகப் பார்த்து அளிக்கும் சலுகை என்பதுதான் கிம் ஜாங் உன் உள்பட வடகொரிய ஆட்சியாளர்களின் அகராதியில் பொருள். சிறைகள், வதை முகாம்கள், கொலைக்களங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் இந்தப் பொருள் புதைந்திருக்கிறது. சிறையை விட்டுத் தப்பிக்க நினைத்தவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் கொல்லப்படுவார்கள். அதற்கு இன்னொரு ஆதாரம். அது கிம் ஜாங் நம்மின் கொடூரமான கொலை. இவர் கிம் ஜாங் உன்னின் சகோதரர். தந்தை கிம் ஜாங் இல்லின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். இவர்தான் வடகொரியாவின் அதிபராவார் என்று நினைத்திருந்தபோதுதான் அந்த இடம் கிம் ஜாங் உன்னுக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தார் கிம் ஜாங் நம். தகவல் அளிக்கும் இயந்திரத்தின் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது ஒரு பெண் அவர் அருகே வந்து அவரது முகத்தில் ஒரு திரவத்தைப் பீய்ச்சி அடித்தார். மற்றொரு பெண் அவரது முகத்தில் ஈரமான ஒரு துணியை வைத்து மூடினார். பதறிப்போன கிம் ஜாங் நம், அருகேயிருந்த காவல்துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்தார். என்ன நடந்தது என அவர்களிடம் விளக்கினார். சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் வந்தது. அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. ஏனென்றால் அவர் முகத்தில் தெளிக்கப்பட்டது வி.எக்ஸ். எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும் கொடிய ரசாயனம். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இந்த ரசாயனம், தோல்வழியாக உடலுக்குள் ஊடுருவி சில நிமிடங்களில் உயிரைப் பறித்துவிடும். இதனைத் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் போர்க்குற்றத்துக்கு ஒப்பாகும். இத்தகைய கொடிய ரசாயனம் சாதாரணமாக யாருக்கும் கிடைக்காது. தற்போதிருக்கும் ஆதாரங்களின்படி பார்த்தால், 4 வடகொரிய உளவாளிகள், இரு பெண்களைப் பயன்படுத்தி கொலையை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இப்போது கிம் ஜாங் உன்னின் அரசியல் பிம்பம் சற்று மாறியிருக்கிறது. ட்ரம்புடன் சொற்போர் நடத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடன் நேசக் கரம் நீட்டுகிறார். சீனாவின் அதிபர் ஸீ ஜின்பிங்கையும், தென்கொரிய அதிபர் மூன் ஜேவையும் சந்தித்து உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இப்போது அமெரிக்க அதிபருடனான சிங்கப்பூர் சந்திப்பை எதிர்நோக்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பு கிம் ஜாங் உன்னுக்கு புதிய கதவுகளைத் திறக்கக்கூடும்.


https://www.youtube.com/watch?v=kfpqKnaYy6k&ab_channel=WallStreetJournal

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144

அதிபர் டிரம்ப்புடனும் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிம் முயற்சி மேற்கொண்டார். 2018 ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. வட கொரியாவில் அணுசக்திப் பரிசோதனைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அந்த சந்திப்பு நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் - பகைமை மாறி நட்பு
படக்குறிப்பு,

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் - பகைமை மாறி நட்பு

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தி வைப்பதாக அப்போது திரு. கிம் கூறினார். ``அணுகுண்டு தயாரிக்கும்'' முயற்சியில் வெற்றி அடைந்துவிட்டதால், அணுகுண்டு பரிசோதனை வளாகத்தை மூடிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்புகள் இருந்தன. ஆனால் கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிப்பது என்ற உத்தரவாதத்தை வடகொரியா அளிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறினர். அணுசக்தி சோதனைகளை நிறுத்துவதாக ஏற்கெனவே வாக்குறுதிகள் அளித்தபோது அவற்றை கடைபிடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் சேர்ந்து சாதாரண முறையில் - ஆனால் பெரிதும் முக்கியத்துவமான - வகையில் சந்தித்தனர். வடக்கு மற்றும் தென் கொரியா இடையில் ராணுவம் இல்லாத இடைநிலப் பகுதியில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கிம் ஜாங்-உன்னும் மூன் ஜேவும்

இருந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு பின்னர் மோசமானது. வட கொரியா தன் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடாத வரையில், தடைகளை நீக்க முடியாது என டிரம்ப் மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

பிறகு 2020 ஜனவரி மாதத்தில், அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது நீண்டதூர ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக கிம் அறிவித்தார். ``இந்த உலகம் புதிய ராணுவ ஆயுதத்தைப் பார்க்கப் போகிறது'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.


ஆட்சி நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சர்களை கிம் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார். 2011ல் இருந்து ஆறு ஆண்கள் இந்தப் பதவியை வகித்துள்ளனர். ராணுவப் படைகளின் விசுவாசத்தின் மீது அவருடைய நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இது உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிம் -ன் சகோதரி கிம் யோ-ஜாங் கொரியா தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.

வட கொரியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு 2013ல் தீவிர முயற்சி நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது தான் தன் சகோதரியின் கணவர் சாங் சோங்-தயீக்கிற்கு அவர் மரண தண்டனை நிறைவேற்றினார். அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டில் தங்கியிருந்த பெரியம்மா மகன் கிம் ஜோங்-நாம் பிப்ரவரி 2017ல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கொல்லப்பட்டதற்கும், கிம் தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

கிம் ஜாங் உன்: "நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா" - யார் இவர்?

கிம் உடன் சில நிகழ்ச்சிகளில், முந்தைய அறிமுகம் இல்லாத ஒரு பெண் பங்கேற்ற காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் வரையில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. திரு கிம் ``காம்ரேட் ரி சோல்-ஜு'' என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக 2012 ஜூலையில் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.

திரு. கிம் மற்றும் திருமதி ரி ஆகியோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
படக்குறிப்பு,

திரு. கிம் மற்றும் திருமதி ரி ஆகியோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிம்- இன் மனைவி ரி பற்றி அதிகம் தகவல்கள் கிடையாது. ஆனால் அவருடைய மிடுக்கான தோற்றத்தைப் பார்த்து, அவர் உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரி ஒரு பாடகராக இருக்கலாம் என்றும், அதனால் கிம் கவனத்தை பெற்றிருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக தென் கொரியா புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் கிம் யோ-ஜோங், தென் கொரியாவில் ஒலிம்பிக் போட்டியில் கிம் சார்பில் கலந்து கொண்ட போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிம் -இன் மூத்த சகோதரர் கிம் ஜோங்-ச்சோல் அதிகாரப்பூர்வ பதவி எதிலும் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=NnG0HB5Jg3E&ab_channel=News7Tamil

https://www.youtube.com/watch?v=NnG0HB5Jg3E&ab_channel=News7Tamil

https://www.youtube.com/watch?v=33waoauq01w&ab_channel=criminalsandcrimefighters

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144







Tuesday, 19 January 2021

அமெரிக்க அதிபர்கள்

அமெரிக்க ஐக்கிய இராட்சியத்தின் அதிபராக நாளைய தினம், ஜோ பைடன் அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்கின்றார். இந்த பின்னனியில் நடந்து முடிந்த அமெரிக்க நாட்டின் ஜனநாயகத்தேர்தலில் பல சிக்கல்கள் குளறுபடிகள் நடந்தன, அப்படி என்னதான் நடந்துவிட்டது என்பதை விபரிக்கும் ஒரு ஆவண செய்தியாக தேன் தமிழ் ஓசையின், தடாகம் தொலைக்காட்சி உங்களுக்காக அதனைகாட்சிப்படுத்துகின்றது. தேன் தமிழ் தடாகம் தொலைக்காட்சிக்காக ஆவணப்ப்டுத்துபவர் தேன் தமிழ் ஓசை தேவதாஸ்!

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். 

இதன்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20 இன்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்பார்கள். தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குவதற்கான நேரம், அதாவது ஜனவரி 20 வரையிலுமான காலம், ப்ரெசிடென்ஷியல் ட்ரான்சிஷன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்குகிறார். இது பதவியேற்றவுடனேயே பணியைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறது. அதன் படி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பொறூப்பை ஏற்றுக்கொள்வார்.


புதிய அமெரிக்க அதிபர், ஜோ பைடன்: தன் சொந்த வாழ்வில் சோகங் களை சந்தித்த மனிதர், சோகங்கள் தாளாமல் தற்கொலைக்கு  துணிந்த ஒரு சோக மனிதன், நடத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் போராட்டம். மூன்று தடவைகள் அதிபராகும் போட்டியில் ஈடுபட்டு, இறுதியாக அவர் வென்று இன்று அதிபராக பதவி ஏற்கின்றார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி, அதிபர் பதவியை பிடிக்கிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.

ஜோ பைடனின் சொந்த வாழ்க்கை போலவே, தற்போது நடந்த, தேர்தல் களமும், மிக சிக்கல் வாய்த்ததும், போராட்டம் மிக்கதாகவும் அமைந்தது.

ஆனால், தமது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதை டிரம்ப் பிரசாரக் குழு குறிப்பாக உணர்த்தியது.

மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் நாளன்று இரவே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக தவறாக கூறினார் அதிபர் டொனால்டு டிரம்ப். பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் ஏதுமில்லாமல் கூறினார் டிரம்ப்.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா ஆன நிலையில், புதிய தொற்றுகளும், மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருந்தபோது இந்த தேர்தல் நடந்தது. பைடன் அதிபரானால், பொது முடக்கங் களை அறிவிப்பார், இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் எனறு டிரம்ப் வாதிட்டார். மறுவலத்தில்,

கோவிட் 19 பரவாமல் தடுப்பதற்குத் தேவையான, போதுமான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார் ஜோ பைடன். இவ்வாறான தேர்தல் பரப்புரைகளின் பின்னனியில் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.

இந்த பவி ஏற்பு விடயத்தில் சட்டசிக்கல் வரக்கூடுமா என்று உங்களில் சிலர் நினைக்க கூடும். ஆம். நிச்சயமாக. எந்தெந்த மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

அவரின் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே இவரின் நோக்கம். இது முதலில் அந்தந்த மாகாணங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.

ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும், ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். அவர் தனது முயற்சிகளில் வெற்றிபெறவில்லை என்றால், தோல்வியை ஏற்க அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும்.ஈது இவ்வாறு இருக்க,  டரம்பின் ஆதரவாளர்கள் ட்ரம்பின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வாசிங்டன் னகரில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள், வாசிங்டனில் உள்ள ஹபிடல் ஹில்ல் என்ற அரச அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து க்லவரங்களில் ஈடுபட்டார்கள். இதனால் வரலாற்றில் ஒரு மோசமான ஜனாதிபதி என்ற வரலாற்று வடுவையும் ட்ரம் அவர்கள் பெற்றதோடு மட்டுமல்ல, அமெரிக்காவின் கரி நாளாகவும் இது வர்ணிக்கப்பட்டது;

ஒரு சிலர் இந்த கேள்வியை மனதுக்குள் எழுப்பக்கூடும் அதாவது டொனால்ட் ட்ரம் பதவி ஏற்பில் கலந்து கொள்வாரா என்பதே அது!  ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கவோ அல்லது பைடெனின் பதவியேற்பு விழாவில் புன்னகையுடன் பங்கேற்கவோ எந்தக் கட்டாயமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்குச் சில சட்டப் பொறுப்புகள் உள்ளன. பைடெனின் குழு பொறுப்பை ஏற்கத் தொடங்க, அவர் தனது நிர்வாகத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். அதேவேளை தற்போதைய அதிபர் என்றவகையில் தனது பொறுப்பை அவர் கன்னியமாக னேராக கையளிக்கவேண்டும். இது கொஞ்சம் உணர்வு பூர்வமான னிலையும் சங்கடமான் னிலையுமாகும். எனவே அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு தன் தோவியை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்த வெற்றியின் மூலம் 1990க்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பதவி வகிக்கிற முதல் அதிபராகிறார் டிரம்ப்.

1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள் ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற் றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.

8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வருக்கிறார் பைடன்.

78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருக்கின்றார்.

ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார்  பல்லின பின்புலம் குறிப்பாக இந்தியாவின் தமிழகத்தில் உள்ள ஒரு பெண்மணியை தாயாகவும், பிறேசில் நாட்டு குடிமகனை தந்தயாகவும் கொண்ட பெண்மனி உப ஜனாதிபதியாகின்றார். இவர் வேறு பலவகைகளில் முதலாவது என்று சொல்லத் தக்க பெருமைகளையும் தன்னோடு கொண்டுவருகிறார்

உபஜனாதிபதி தமிழ் பின்னனியை கொண்ட பெண் என்பதால், எமது ஈழத்து உறவு  களுக்கு மிகுந்த உட்சாகம். தமது இனப்பிரச்சினயில் கமலா ஹரிஸ் காத்திரமான சில நகர்வுகளை கையாளக்கூடும் என்பதே அந்த உட்சாகத்துக்கான காரனமாகும். ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவயில் இருந்து ட்ரம் நிர்வாகம் விலகிக் கொண்ட அதேவேளை பைடனின் நிர்வாகம் மனித உரிமை பேரவயில் இணன்ந்து கொள்ளும், அதேவேளை மார்ச் மாததில் நடக இருக்கும் மனித உரிமை பேரவிக்கு தலமை தாங்கும் நாடாக பிரித்தானிய அமைகின்றது என்பதானால் எமது இழத்து உறவுகளூகு இந்த பதவி ஏற்பு மகிழ்ச்சியாக்வே அமைகின்றது.

புதிய ஜனாதிபதியாகும் பைடன் அவர்கள்,  புதிய நிர்வாகத்தை கட்டமைக்கிற கடுமையான பணியை உடனடியாக  தொடங்கவேண்டும்,  சீர்குலைந்து போயுள்ள வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். இதைவிட  மூன்று மாதங்களுக்கு உள்ளாக அவர் ஓர் அமைச்சரவையை அமைக்கவேண்டும், முன்னுரிமை கொள்கைகளை முடிவு செய்யவேண்டும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற, கூர்மையாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஆள்வதற்குத் தயாராக வேண்டும் இப்படியான பல்வேறுவிதமான அவசர அவசிய பொறுப்புகளை பைடன் அவர்கள் விரைந்து செயலாற்றவேண்டும்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். 

தேன் தமிழ் ஓசையின் தாடாகம் தொலைக்கட்சிக்காக தொகுத்து வழங்கியவர் தேன் தமிழஸோசை தேவதாஸ்




Thursday, 7 January 2021

தேன் தமிழ் தடாகத்தின் சர்வதேச செய்திகள், முதலில் புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

 புலம்பெயர் தமிழர்களின் செய்திகள் 

                                                            09 Saturday January

இந்த வார இறுதியில் இன்றும் நாளையும் நோர்வே முழுவதும், குறிப்பாக பேர்கன் நகரிலும், கடுமை யான பனிப்பொழிவு நிகழும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நோர்வே நாடுமுழுவதும், கொரோண தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, முதலில் 84 வயதுக்கு மேற்பட்ட, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் ஏற்றப்படும் என பேர்கன் கொம்யூன் அறிவித்துள்ளது.


லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரானா தடுப்பூசிக்கு, பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அந்த நிறுவனம் தயாரிக்கும் கோவி ஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மார்டனா ஆகிய நிறுவனங்களின், தடுப்பூசியை தொடர்ந்து இந்த தடுப்பூசியும் இங்கிலாந்தில் களமிறங்குகிறது. பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு, பிரிட்டனில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்?

கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள். வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும்,

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன்,

சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின்

கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

Sunday, 27 December 2020

ஆயிரம் ரூபாய் தாளில், உமர் லெப்பை பணிக்காரும் தலதா யானையும்

 எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று...

யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணி ந்து நிற்கும் மனிதனும் #கிழக்கு_மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே.
அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை #1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில்பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது.
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரனமான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது.
இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிறது.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர்என்று சொல்லப்படுகிறது.
அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களின் பெயரால் #பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது.
Courtesy:
எமது வரலாறு WHATSAPP Group - 9

Tuesday, 22 December 2020

இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்! கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!

இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்!  கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!


                                    என் உறவுகளே! கடந்த பொதுத்தேர்தலில், கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் அவர்களை பேசாலை கிராமத்துக்கு வருகை தந்து, எமது மக்களின் வாழ்வாதரமான மீன்பிடி சம்பந்தமாகவும், டின்மீன் தொழிற்சாலை மீள்திறப்பு விடயமாகவும், துறைமுகம் தொடர்பாகாவும், நவீன சந்தை தொடர்பாகவும், உங்கள் வாயால், எமது மக்களுக்கு உறுதி மொழி தந்தால், எமது கிராமத்தில் குறைந்தது 1000 வாக்குகளை சேகரிக்க முடியும், அத்தோடு மீன்பிடி கிராமமான வங்காலை, தலைமன்னார், தாழ் வுபாடு, பள்ளிமுனை வாக்காள பெருமக்களையும் கவரமுடியும், என அவ ரிடம் எடுத்து சொன்னேன்.


ஆரம்பத்தில் அவர் தாமதித்தார் இருந்த போதும், எனது அண்ணன் செல்வம் பீரிஸ் அவர்களை அவரிடம் தூதனுப்பி, அவரை பேசாலைக்கு வரவழைத்தேன். திரு, செல்வம் பீரிஸ் வீட்டில் நடத்தபட்ட கூட்டத்தில், மேலே சொல்லப்பட்ட விடயங்களை செய்துதருவாதாக அமைச்சார் வாயாலே சொல்லவைத்தேன். எனது ஊடகமான தேன் தமிழ் ஓசை வழியாக அமைச்சர் அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தோம். எமது ஊர்மக்களின் எதிர்ப்பை மீறி இதனை நான் செய்தேன்.

இந்திய இழுவைப்படகு சம்பந்தமாக அமைச்சர் அவர்கள், காத்திரமான சில செயல்பாடுகளை செய்வார் என நான் பேசாலை மக்களுக்கு தேர்தல் காலத்தில் எடுத்துக்கூறினேன்.  எனது உறவுகள் அதை நம்பவில்லை, வாக்கும் அளிக்கவில்லை. இருந்தபோதும், அமைச்சர் அவர்கள் பேசாலை மக்களுக்கு சொன்னது போல பேசாலையில் துறைமுகம் அமையும், அதற்கான உறுதிமொழியை, பாராளமன்ற வரவு செலவு திட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளார். அதேபோல இந்திய இழுவை படகு விடயமாக இரண்டு நாடுகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இது போதாதென்று முல்லைதீவில் நடந்த கூட்டம், ஒன்றில் கூறுகையில், தான் பாராளமன்றத்தில், மன்னார் பாராளமன்ற உறுப்பிணர் சார்ள் நிமலனாத னிடம்  இந்திய இழுவைபடகுக்கு எதிரான போராட்டஙக்ளை நடத்துங்கள், முடிந்தால் இந்திய படகுகளை கைப்பற்றிவாருங்கள் என, உத்தியோகபற்றற்ற ஒரு கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். எனவே பேசாலை மக்களே, தொப்புள் கொடி உறவு, தமிழ் தேசிய உறவுகள் என்று பாராமல், எமது மண்ணையும், நமது வாழ்வாதார கடல் வளங்களையும்   நாசமாக்கும், கொள்ளையடிப்பதையும் எவர் செய்தாலும், அதை தடுத்து நிறுத்தி, அவர்களை சிறைப்பிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்துவோம்.  பேசாலை மீனவர்கள் முன்பு இப்படியான சிறை பிடிப்பை மேற்கொண்டார்கள், தற்போது கடல் தொழில் அமைச்சரே சொல்வதினால், துணிந்து இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடிப்போம், எமது கடல் வளத்தை நாமே பாதுகாப்போம்   அன்புடன் பேசாலைதாஸ் 





Friday, 4 December 2020

யாழ் . இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..?

 யாழ் . இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..?

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை 7 வீதிகள் கொண்ட பிரமாண்டமான ஆலயமாகக் கட்டியெழுப்பிய வெடியரசன் என்ற சிறந்த தமிழ் மன்னனை தமிழர்கள் மறந்துவிட்டமை வரலாற்றுத் துரோகம் போர்த்துக்கேயரின் கப்பல்களைக் கடலில் வைத்து தகர்த்தெறிந்த பெரும் பலத்துடன் விளங்கியவன். வெடியரசன் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் , ஈழத்தில் தமிழ் மன்னர்கள் கோலோச்சிக்கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இராசதானியின் கீழ் சிற்றரசனாக இருந்தவனே விஷ்ணுபுத்திர வெடியரசன் என்ற பலம்பொருந்திய தமிழ் மன்னன் .
யாழ்ப்பாண இராசதானியின் கரையோரப் பகுதிகளை , குறிப்பாக , பொன்னாலை , கீரிமலை , காரைநகர் , நெடுந்தீவு ஊர்காவற்றுறை போன்ற கரையோரப் பகுதிகளை இவனும் இவனது சகோதர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் . இப்போது வலிகாமம் எனக் கூறப்படும் பிரதேசத்தில் வெடியரசனதும் அவனது சகோதரர்களினதும் ஆட்சி பரந்து விரிந்திருந்தது . தொல்புரம் , சுழிபுரம் , கொட்டியாவத்தை ஆனைக்கோட்டை போன்ற இடங்களிலும் இவன் சிறு தளங்களை அமைத்திருந்தான் என வரலாறு கூறுகின்றது.
கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது . இதன் நிமித்தம் இவர்கள் பாதுகாப்பு கருதி , காரைநகர் , ஊர்காவற்றுறை நெடுந்தீவு ஆகிய இடங்களில் கோட்டைகளை அமைத்திருந்தனர் அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே நெடுந்தீவு கோட்டையாகும் . இவ்விடங்களின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் கோட்டைகளைக் கட்டினர் .
இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான் . போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது . முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன் பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால் வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு.
அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்த்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது. நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பின்னாளில் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு தங்கினர் எனவும் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அவற்றைக் கைப்பற்றினர் எனவும் கூறப்படுகின்றது.
வெடியரசன் வரலாற்றை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
குறிப்பு
கடந்த ஒக்டோபர் 29 ம் திகதி தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள், பெளத்த துறவிகளோடு நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்குப் போயிருந்தார்கள். அப்போதே இந்த நடவடிக்கை பெளத்தமயமாகும் ஆபத்து என்று எச்சரித்தனர் நெடுந்தீவு வாழ் மக்கள்.

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?

 

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?

#ஜெய்ஸ்ரீராம்.

ராமர் பாலம் மிதக்காது.அதுமட்டுமின்றி அது கல்லே இல்லை.. அட நம்புங்க..

ராமர் பாலத்தின் கற்களை பற்றி பார்க்கும் முன்பு அந்த பாலத்தை பற்றிய நமது நம்பிக்கைகளை பார்ப்போம்.

(Disclaimer: என் பதில படிச்சுட்டு என்ன ராமருக்கு எதிரானவன் அப்படினு சொன்னிங்கனா.. அந்த ராமர் மேல சத்தியமா நா உங்களுக்கு சாபம் குடுத்திடுவேன்)

ஒரு விஷயம்.... ஒரே விஷயம் ஆனா அதை இரண்டு வெவ்வேறு விதமாக சொன்னா கூட நம்ம மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ராமர் பாலம்.

எப்படினு கேக்கறீங்களா.

1) இலங்கையிலிருந்து திரும்பி ராமேசுவரத்தில் சீதையால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூசை முடித்த பின் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்காக தனது வில் முனையால் அந்த பாலத்தை ராமரே உடைத்ததாகவும் அதனால் சிதறிய பாகங்கள்தான் இன்றளவும் ஆங்காங்கே மிதந்து கொண்டு காணப்படுகிறதுனு ஒரு நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கு. இத நம்ம ஏத்துக்கிட்டோம்.

2) இல்ல ராமர் பாலம் உடையல, செயற்கைகோள் ல இருந்து பாத்தா தெரியுதே அதுதான் ராமர் பாலம். இதயும் நாம ஏத்துக்கிட்டோம்.

என்னிக்காவது யோசிச்சதுண்டா? செயற்கைக்கோள் மூலமாக நாம் பார்க்கும் அந்த பாலம் மிதப்பது கிடையாது. ஆனால் மிதக்கும் கற்களால் ராமர் பாலம் உருவாக்கப்பட்டது இது தான் அந்த கல் னு யாராச்சும் சொன்னா அதையும் ஏத்துக்கறோம்.

எப்படி ரெண்டுமே சாத்தியம்.? 🙄

சரி விஷயத்துக்கு வர்றேன்.

ராமர் பாலம், ராமாயணத்தின் படி :

ஒரு யோஜனை என்பது குத்து மதிப்பாக 12. 87கிமீ கள்

ராமாயணத்தின்படி ராமர் பாலம் 100 யோஜனை நீளமுடையது, அதாவது 100 × 12.87 = 1287.48 கிமீ கள். ஆனால் ராமேசுவரத்தின் அரிச்சல் முனையில் இருந்து இலங்கைக்கு வெறும் 20கிமீ தான். அதுக்கு ஏன் இவ்வளவு நீளமான பாலம் கட்டனும். ராமாயண காலத்தில் பூகோள அமைப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

ராமர் பாலம், பூகோளத்தின் படி:

இந்தியாவை பொறுத்தவரை ராமர் பாலம் என்றும். உலக அளவில் ஆதாம் பாலம் என்றும் கூறப்படும் இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பரப்பு ஆகும். தலை மன்னாரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆராய்ச்சி படி இது 18,400 வருடங்களுக்கு முன்பு உருவான இயற்கை நிலப்பரப்பு ஆகும்.ஆராய்ச்சி செய்தது நம்ம மெட்ராஸ் யுனிவர்சிட்டி தான். இது மொத்தமாக 48 கிமீ நீளமுள்ள பாலம் போன்ற அமைப்பு ஆகும். இதன் பெரும்பாலான பகுதிகள் கடலில் 10மீ ஆழத்திற்கு மூழ்கியும் சில பகுதிகள் மட்டும் வெளியே தெரியும்படியும் இருக்கும். செயற்கைகோளின் மூலம் பார்க்கும்போது சிறிய பாறைகள் மற்றும் மணற்திட்டுகளாலான நீளமான பாலம் போல காட்சி தரும். 1480ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாகவே இது கடலுக்குள் மூழ்கியது அதற்கு முன்பு வரை இதன் மீது மனிதர்கள் நடந்து செல்ல ஏதுவாக இருந்துள்ளது.

பூகோளமும் ராமாயணமும்:

இது இயற்கையாக உருவான அமைப்பு அல்ல என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எனவே ராமரே இதனை கட்டி இருக்கலாம். ராமர் கட்டிய இந்த பாலம் (அல்லது இயற்கையாக உருவான) எந்த சூழ்நிலையிலும் மிதக்க வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் இந்தியா இலங்கைக்கு இடையே உள்ள கடல் மட்டத்தின் ஆழம் குறைவானதே அதன் மீது நிலையான பாலம் அமைக்க ஏதுவானதே. அவ்வாறு கற்கள் மிதந்தால் அதன் மீது அதிக எடை கொண்ட போர் ஆயுதங்களுடன் வானரப்படை கடந்து செல்லும் போது கற்கள் அவர்களை கவிழ்ந்து விட்டிருக்காதா?.

ராமர் பாலத்தின் பாறை ஒன்று கோவை, சூலூர் குமரன் கோவில் வளாகத்தில் உள்ளது. பக்தர்கள் தொட அனுமதி உண்டு. அதை நாம் தொடும்போதே நம் எடை தாங்காமல் அது நீருக்குள் மூழ்கும். கிட்டத்தட்ட தெர்மாக்கோல் போல.. கையின் எடையையே தாங்காத அந்த கல் படையினரின் எடையை எவ்வாறு தாங்கி இருக்கும். அந்த பாலத்தின் மீது அனுமனும் ராமரும் ஆடியபடியே கடந்து சென்றனர். அந்த ஆட்டத்தில் கற்கள் கலைந்து போய் மூழ்கடிக்காதா? எனவே ராமர் பாலம் நிலையாக இருந்தது என்பதே மெய். பாலத்தை கடக்கும் போது ஆங்காங்கே இடைவெளியை நிரப்ப பவளப்பாறைகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். எனவேதான் இது இன்றளவும் புனிதமாக பூஜிக்கப்படுகிறது.

ராமர் பாலத்தின் மிதக்கும் கல்:

மிதக்கும் கல் என கூறப்படும் அது உண்மையில் பவளப்பாறை ஆகும். பைப் கோரல் வகையை சார்ந்தது. பைப் கோரல் பவளப் பாறைகளில் உள்ள பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது என்பது அறிவியல் ரீதியான உண்மை. மேலும் கடல் நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளதும் மற்றொரு காரணமாகும்.

இந்த பாறைகள் இந்திய இலங்கை கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இதுவே இலங்கை பகுதியில் ஏற்படும் புயலிலிருந்து நம் நாட்டை பாதுகாக்கிறது. இதனை அழிப்பது குற்றமாகும். ஆனாலும் விஷமிகள் இதனை வியாபார நோக்கத்தோடு அழித்து விற்று வருகின்றனர்.

தான் கடவுள் என்று வெளிப்படுத்தாமல் மனிதனாகவே வாழ்ந்த அவதாரம் தான் ராம அவதாரம். எனவே மிதக்கும் பாலத்தை மனிதனால் உருவாக்கி இருக்க முடியாது அப்படி உருவாக்கினால் அவர் மனிதனாக இருக்க முடியாது.

இந்துக்கள் மட்டுமின்றி ஆபிரகாம் நம்பிக்கை மதங்கள் இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது புனிதமான பாலமாகும். இலங்கையில் உள்ள ஒரு பெரிய பாத சுவடு சிவனுடையது என இந்துக்களாலும் புத்தருடையது என புத்தர்களாலும். ஆதாமுடையது என இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்வர்களாலும் நம்பப்படுகிறது. ஆதாம் இங்கு தான் இறங்கியதாக நம்பப்படுகிறது. அவன் ஏவாளை அடைய இலங்கையில் இருந்து இந்த பாலத்தை அமைத்து அதன் மூலம் அரேபியா சென்றதாக கூறப்படுகிறது. எனவே உலக அளவில் இது ஆதாம் பாலம் என்றே அழைக்கப்படுகிறது.

#ஜெய்ஸ்ரீராம்

அருந்ததியர்கள் தமிழர்களா? இவர்களில் சிலர் தங்களை ஆதித்தமிழர்கள் என கூறுவதற்கு சான்றுகள் உண்டா? இல்லை ! ,

 


அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் எனப்படுவோர் தமிழ்நாட்டில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் குழுவாவார்கள். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்டார்கள்.

(உட்பிரிவுகள் : ஆதி ஆந்திரா , அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, தோட்டி, பகடை)

பெயர்க் காரணம் :

சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.

விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் கூலிகளாக அடிமட்ட வேலை செய்ய அருந்ததியர்களையும் கூட்டிக்கொண்டு வந்தனர்.

இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.

முகலாயர் வருகையின் போது முகவை (Raamanaathapuram) மண்ணில் ஒரு பாதி அருந்ததியர்கள் இசுலாம் மதத்தை தழுவினார்கள்.

ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு தான் கல்வி பெற்று பலர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள்.

விடுதலைக்குப் பின் சட்டப்படி இவர்கள் பட்டியல் சமுகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.

தொழில்கள் : ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.

இவர்கள் ஆதி தமிழர்கள் அல்லர் ஆதி தெலுங்கர்கள் என்பதே சரி !

குறிப்பிடத்தக்க மக்கள் :

மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற பாடகர்

ஒண்டிவீரன் பகடை - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்

நன்றி :