Saturday 5 February 2022

தம்பி சாணக்கியனே!

தம்பி சாணக்கியனே!
நீங்கள் முன்னர் இலங்கை
சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்
தொகுதியின் அமைப்பாளராக இருந்த போது, ராஜபக்சே ஆட்சியின் செல்லப்பிள்ளையாய் இருந்த போதும், பிள்ளையானின்
ஆதரவாளராகவும் செயற்பட்ட போதும்,
2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில்
போட்டியிட்ட போதும் உங்கள்
ஈழத்தமிழ் மீனவர்கள் பிரச்சனை கோமாவில் இருந்ததா அல்லது
தாங்கள் ஒரு தமிழன் என்பதை மறந்து கோமாவில் இருந்தீர்களா?
2009 இலங்கையில் உக்கிரமான இராணுவச்சமர் நடைபெற்ற போதும்,
இலங்கையில் போர் முடிந்த கையோடு வந்த ராஜபக்சே ரெஜிமெண்டோடும் நீங்கள் ஒட்டியிருந்த காலங்களில் இலங்கையின் தமிழர் நீதியை பற்றி ஒரு ஒப்புக்கேனும் உங்கள் வாய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
போர் முடிந்து கண்ணீரோடு மக்கள் முள்வேலிக்குள் நின்ற போது நீங்கள் எங்கே யாருடன் உண்டுகழித்தீர்கள் எங்கு தான் நீங்கள் இருந்தீர்கள்
என்று சொல்ல முடியுமா?
ஆனந்தபுரத்தில் தமிழர்கள் மாட்டிக்கொண்டிருந்த போது சாணக்கியன் அவர்களே நீங்கள் யாருடைய ஆதரவாளராக இருந்தீர்கள்?
அல்லது யாருக்கு சாணக்கியனாய் இருந்தீர்கள்?
2006 மாவிலாறு சமர் ஆரம்பித்து கிழக்கின் இதயபூமி கொட்டியாரபுரபற்று பற்றி எரிந்த போது நீங்கள் யாருடைய அரியணையை காப்பாற்ற ஏவுகணை செய்து கொண்டிருந்தீர்கள்?
இந்த நிமிடங்கள் போரை நடத்தினர் என்று நீங்க கோஷம் இடும் ராஜபக்சே குடும்பத்தினர் உங்கள் நெருங்கிய நண்பர்களா? அல்லது நேற்றைய எதிரிகளா?
நீங்க யாருங்க யாருங்க யாருங்க? புலிகள் போராடிய போது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் சொல்லுங்க சொல்லுங்க ...
இதற்கெல்லாம் பொதுவெளியில் பதில் சொல்லி விட்டு, தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வாங்க
அப்புறமா யோசிப்போம்...

அனுஷாந். 

No comments:

Post a Comment