Saturday 6 May 2023

முல்லை மக்களின் கவனத்திற்கு!

 முல்லை மக்களின் கவனத்திற்கு!


முல்லை மக்களின் கவனத்திற்காக,முல்லைபந்தல் வானொலி நிகழ்ச்சியை நடாத்திவரும் லண்டன் செபஸ்ரியான் டலிமா அவர்கள் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் முல்லை மாவாட்டத்தில் அதிலும் குறிப்பாக புதுகுடிருப்பு ஊரிலே பல வீதி விபத்துக்களும், கோரமான  சாவுகளும் இடம் பெற்றிருப்பது மனவேதனை அளிக்கின்றது. இந்த வீதி விபத்துகளும், கோரச்சாவுகளுக்கும் நாம் எல்லோரும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துகுள் இருக்கின்றோம். பொலிசார் வீதி வேகம், மற்றும் ஹெல்மட் அணிவதையும் கவனிக்கவேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


நகர சபை ஊழியர்கள் மத சார் தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் இதில் அதிக அக்கறை காட்டவேண்டும். குறிப்பாக புதுகுடியிருப்பு முக்கிய சந்தியொன்றில் அணமைக்காலமாக இடம் பெற்ற  அநியாக விபத்து சாவுகளை தேன் தமிழ் ஓசை, முல்லை பந்தல் வழியாக நமது முல்லை மக்களுக்கும், எனது புதுகுடியிருப்பு மக்களுக்காகவும் இந்த பகிரங்க வேண்டுதலை முன் வைக்கின்றேன். இபடிக்கு  செபஸ்ரியான் டலிமா  லண்டன்.








No comments:

Post a Comment