Thursday 24 March 2022

வங்க நகரின் கிணற்றடி குருசடியில் ஒரு சிலுவை.

 வங்க நகரின் கிணற்றடி குருசடியில் ஒரு சிலுவை.

புனித ஜோசேவாஸ் இலங்கை வந்திறங்கிய வங்காலை இப்பகுதியில் அவரினால் நிலைநாட்டப்பட்ட ஞாபக சிலுவை காலப்போக்கில் சிதைவடைந்து அழிவுற்ற நிலையில், அவ்விடத்தில் 2022.03.22 மாலை 5.00 மணியளவில் வங்காலை பங்குத்தந்தை அருட்பணி. ம.ஜெயபாலன் அடிகளாரின் தலைமையில் பங்கு மக்களால் புதியதோர் திருச்சிலுவை நிறுவப்பட்டது.

புனித ஆனாள் ஆலய அருட்பணி பேரவையின்  உதவியுடன் எமது மீனவர்களின் ஒத்துழைப்போடு இவ்வரலாற்று நிகழ்வு ஆசீர்வாதமாய் நிறைவேறியது.

இந்நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி இனிதே நிறைவேறிட கரம் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விசேடமாக இம்மரச் சிலுவையை உருவாக்க உழைத்தவர்கள், உழவியந்திரம் தந்துதவியவர், கடல் போக்குவரத்துக்காக படகுச் சேவையினை வழங்கிய இரு நல்லுள்ளங்கள் மற்றும் சரீர உதவி புரிந்தோர் அனைவருக்கும் பங்கு மக்கள் சார்பான நன்றிகள்.

மேலுமாக, இந்நிகழ்வினை முன்னின்று வழி நடத்திய எம் பங்குத்தந்தை வண. பிதா. ஜெயபாலன் அடிகள், உதவி பங்குத் தந்தை அருட் பணி. பிரசாந்தன், அருட் சகோதரி ராத்தி ஆகியோருக்கும் எம் இதய பூர்வமான நன்றிகள்.

அத்தோடு இத்திருச் சிலுவை நிறுவும் பணியினை ஆரம்பித்த எமது முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி மார்க்கஸ் அடிகளாருக்கும் நன்றி கூறுவதில் நாம் புளகாங்கிதம் அடைகின்றோம்.

ஈற்றில் புனித ஜோசேவாஸ் முனீந்திரரின் இலங்கைக்கான வருகையின் வரலாற்றுப் பதிவு இன்றைய தினம் புதுப்பிக்கப்பட்டது.

இறைவனின் நாமம் போற்றப்படுவதாக..

No comments:

Post a Comment