அன்பின் யாத்திரை ' என்ற நூலில்.
***
" முட்டையிடு்வதற்கான நேரம்
வரும் முன்பாகவே,
பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டத் தொடஙங்கிவிடுகின்றன.
அதைப் பார்க்கும் போது,
' நாளையத் தேவைக்கு பறவைகள் இன்றே செயல் படுகின்றன ' என்று உங்கள் மனம் நினைக்கிறது இல்லையா ?
ஆனால், உண்மையில், அதன் செய்கை அப்படிப்பட்ட தல்ல.
நாளை என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உங்களுக்குத்
தெரியாத உண்மை.
' இங்கிப்போது ' என்று நிகழ் காலத்தில் அவைகள் வாழ்கின்றன.
யாரோ அதற்கு வழிக் காட்டுகிறார்கள்.
அந்த வழி காட்டியை ' இயற்கை ' அல்லது ' கடவுள் ' என்று
நாம் அழைப்போம்.
அது உண்மைதான்.
நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், நாளைய நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக சிந்திக்கும் திறன் எல்லாம் பறவைகளுக்கும் கிடையாது.
பகுத்தறிவோடு, நாளைய நிகழ்வுகளைப் பற்றிய சிந்திக்கும் திறன் பறவைகளுக்கு இருந்தால்,
அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே இவ்வளவுகஷ்ட்டப் பட்டு அதன் கூட்டினைக் கட்டிக் கொண்டு இருக்காது.
தன்னைவிட வலிமைக் குறைந்த பறவையின் கூட்டிற்கு சென்று,
அதனை விரட்டி விட்டு,
தான் அதில் குடியியேறிவிடும்.
சில மனிதர்கள் போலவே
செயல்பட்டு விடும்.
ஆனால்,
பறவைகள் எந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இருக்கின்றனவோ,
அந்த அளவிற்கு பொறுமையாகவும் காத்திருக்கின்றன.
இயற்கை உணர்த்துவதைத்
தெரிந்து கொண்டு, அதை மீறாமல் நடக்கின்றன.
ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் இந்த பொறுயின்மை ?
எதற்காக இந்த எல்லை மீறிய திட்டமிடுதல் ?
எதற்காக இந்த பரபரப்பு ?
பிறகு வருத்தமே வாழ்க்கையாகப் போனது.
எதற்காக இந்த வருத்தம் ?
இத்தனைக் கேள்விகளையும்,
நீங்கள் உங்கள் மனதைக் கேளுங்கள்.
இனி,
உறுதியாக நம்புங்கள்.
உங்கள் பார்வைக்குப் புலப்படாத இறைவனின் கரங்கள், உங்களை சுற்றிலும் வியாபித்திருக்கின்றன.
காத்திருங்கள்.
இது உண்மை என்று உணருங்கள்.
நீங்கள் ஒரு செய்தியை நம்புங்கள்.
அதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது அனைத்து விஷயங்களும், செயல்களும் கவனிக்கப் படுகின்றன.
இது உறுதி. "
No comments:
Post a Comment