Friday 16 August 2019

மூச்சடக்கி முத்தமிட்டு

மூச்சடக்கி
முத்தமிட்டு
மார்பை கசக்கி
எச்சில் பட்டு
ஊடல் பிடியில்
தொப்புள் தொட்டு
உசுப்பும் கடியில்
முனகல் இட்டு
யோனி நுழைத்து
இன்பம் கொண்டு
கசியும் திரவம்
பிசிறியடித்து
நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால்
முடிந்து போகும்
ஆணின் மோகம் ஆனால்..
உன் உணர்வு கடியில்
உதடு வலித்து
முரட்டு பிடியில்
மார்பு வலித்து
உருட்டும் அசைவில்
வயிறு வலித்து
சொருகும் அதிர்வில்
கருப்பை வலித்து
சுமக்கும் கனத்தில்
உடல் வலித்து
உணரும் வலியை
வெளியே சொல்லாமல்
வேண்டும் நேரமெல்லாம்
உடல்பசிக்கு விருந்தாகி
புணரும் சலுகையாக
பிள்ளை வலியும் பெறுக்கிறாளே
அவளுக்காக என்ன
செய்ய இயலும் உன்னால்..
வேறொன்றும் செய்யாதே
பெண்ணும் உயிரென்று மதி..
உயிர் கொண்டு நேசி......
உள்ளார்ந்து யாசி...
பெண்மையை கையாளும்
மென்மை உனக்கே புரிந்துவிடும்
பெண் என்பவள் பூவானவள்
அதை கசக்கி எறிந்து விடாதே
அதை நுகர்ந்துவிட்டு
அரவணைத்துக்கொள்
தேவதையாக
இருப்பாள் அவள்
உன் மனதில்!!!

No comments:

Post a Comment