Thursday 30 May 2019

பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை

பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு தயவு செய்து எவரும் இடமளிக்கக்கூடாது என கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.</p><p>கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.</p><p>முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம்.</p><p>அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.</p><p>இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.</p><p>ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது. தௌஹீத் பள்ளிவாசல்களை உடைப்பதோ தப்லீக், தௌஹீத், சூபிஸம் வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதன் ஊடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.</p><p>எனவே இதுதொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களாகும்.</p><p>இதைவிடுத்து இப்பிரச்சினை தொடர்பில் மார்க்கத்திற்கு முரண்பாடான செயற்பாடுகள் எங்காவது நடைபெறுமாக இருந்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் தலைமைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றினால் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.</p><p>தவிர ஊர்களில் நினைத்தவர்கள் எல்லாம் தங்களின் சொந்த விருப்பத்திற்கு பள்ளிவாசலை உடைக்கின்ற நிலைமையினை ஏற்படுத்திவிடக்கூடாது.</p><p>இவ்வாறான செயற்பாடுகள் மிகமோசமான நிலைமையினை ஏற்படுத்துவதோடு கடந்த யுத்தகாலங்களிலே சகோதர இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதினூடாக எவ்வாறான விளைவுகளை சந்தித்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.</p><p>ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக இச்சம்பவத்தினை கண்டிப்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்.</p><p>அத்துடன், தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்ற வேறுபாடுகள் வித்தியாசங்களை உருவாக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் முஸ்லிம்கள் "லாயிலாஹ இல்லழ்ழாஹ்" எனும் கலிமாவை சொன்னவர்கள் எங்களுக்குள் பலவேறுபாடுகள் இருக்கலாம்.</p><p>எனவே இந் சூழ்நிலையில் மிகக்கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.</p><p>குறிப்பாக பள்ளிவாசல்களை உடைப்பது, இன்னும் ஒரு குழுவுக்கு எதிராக அறிக்கைகளை விடுவது, காட்டிக்கொடுப்பது, சந்தர்பத்தினை பயன்படுத்தி அரசியல் ரீதியாக பழிவாங்க முனைவது, சந்தர்பத்தினை பயன்படுத்தி மார்க்கரீதியான பிளவுகளை தூண்ட முனைவதெல்லாம் மிகமோசமான பாதகமான அல்லாஹ்வினால் மன்னிக்கமுடியாத குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.</p><p>இது ஒரு முனாபிக்தனமான செயற்பாடாகும். எனவே தயவு செய்து தீவிரவாதிகளுக்கும், எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நீங்கள் எவரும் துணைபோய்விடக்கூடாது என மிக அன்புடன் புனித மக்காவில் இருந்து மிக உருக்கமாக இந்த கோரிக்கையினை” விடுப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment