Saturday 29 July 2023

அன்பின் உறவுகளே!

 அன்பின் உறவுகளே! தேன் தமிழ் ஓசை என்ற இந்த செய்தி ஊடகத்தின் உரிமையாளரும் கட்டுப்பாட்டாளரும் நானேதான். இதன் நீட்சியாக தேன் தமிழ் தடாகம் என்ற இணைய தொலைக்காட்சி சேவையையும் நிறுவி இருந்தேன். நிதி முடக்கம், தொழில்நுட்பவியளார் பற்றாக்குறை இவைகளினால் அதனை தற்காலி கமாக நிறுத்திவிட்டு, யூடூப் சனலையும். அத்தோடு இணைய வானொலியையும் நடத்தி வருகின்றேன். மன்னாரில் அதுவும் பேசாலையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு, பேசாலையில் கலையகம் கொண்டு இயங்கிவந்தது தேன் தமிழ் ஓசை. பேசாலை மீனவர்கள் பயன் அடையவேண்டும் என்ற உன்னத குறிக்கோளு டன், என் ஆரம்பகால அரசியல் நண்பனான அமைச்சர் டக்ளஸின் உதவியல் பேசாலையில் படகு பாதுகாப்பு துறையை, டின்மீன் தொழிற்சாலை மீளுருவாக்கம் மற்றும் இந்திய மீனவ ஆக்கிரமிப்பு இவைகளில் கவனம் செலுத்த பேசாலைக்கு அவரை அழைத்துவந்து எனது வானொலி மூலமாக பரப்புரை வழங்கினேன்.

போலியான தமிழ் தேசியவாத பேசாலை நபர்களினால் எனது வானொலி பேசாலையில் இயங்க நெருக்கடிகள் நடந்தன, இறுதியில் நடந்தது என்ன? ஊரின் பணத்தில், தமிழ் தேசியவாத உணர்வில் அரசியலுக்கு வந்த பேசாலை மகனே கோவில் காணியை அட்டை போட்டு மறைமுகமாக சிங்களவ னுக்கு விற்றதுமல்லாமல், இப்போ கம்பரெலியா பணத்தில் சொகுசு ஜீப்பில், காணி பூமியில் பவணி வருகின்றார்கள்! கொஞ்சம் யோசித்து பாருங்கள்? ஐக்கிய தேசிய கட்சியின் , ஐக்கியதேசிய அரசின் ஆதரவில், மாவட்ட நீதிபதியாக இருந்த, கயுஸ் அவர்களை மிஞ்சும் அளவுக்கு, இவர்கள் வளர்ந்தது எப்படி? இவர்கள் என்னை மட்டும் தமிழ் தேசிய எதிப்பாளர் என முத்திரை குத்தலாமா?

இது எல்லாம் போகட்டும்! பேசாலையில் உள்ள இளம் பெண்களும், ஆண்களும் ஊடகதுறையில் அனுபவம், அறிவு இல்லாதலால், அதனை பயிற்றுவிப்பதற்கு, ஊடக அனுபவம் பெற்ற ஒரு மலையாக் முஸ்லிம் மகனை ஊருக்கு அழைத்துவந்து அவர்களுக்கு பயிற்ச்சி அளிக்க முற்பட்டேன், முஸ்லிம் ஆதரவு மீடியாக என மேற்குறிக்கப்பட்டவர்களினால் முத்திரை குத்தப்பட்டு எதிர்ப்புகளை சந்தித்தேன். என்னைப் பொறுத்தவரை மன்னாருக்கென, அதிலும் குறிப்பாக பேசாலை மக்களுக்கு ஒரு காத்திரமான ஊடகமும் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் தேவை!

பேசாலை மீன்வளம் கொண்டது, காலுக்கடியில் இல்மனைட் படலம் உள்ளது, எண்ணைய்வளம் உள்ளது, இது போன்ற இயற்கை அரண்கள் கொண்டது, சர்வதேசமே மன்னார் தீவை அபகரிக்கபார்க்கின்றது, மன்னரை விற்று அரசியல் இலாபம் பெற சிங்களம் துடிக்கின்றது. இந்தியா இதற்கு முன்னணியில் உள்ளது. இதனை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட நமக்கான ஓர் ஊடகம் தேவை! பேசாலை சொந்தங்களே இது பற்றிய உங்கள் கருத்து என்ன? ஒன்றாக இணைந்து நமது மன்னார் மண்ணை, காடுகளை, கரையோரங்களை, எமது இருப்பை காப்பாற்றுவதில் உங்கள் கருத்து என்ன? செயல்பாடு என்ன? என்னோடு இணைந்து செயலாற்ற வாருங்கள். முதலில் மன்னாரை போலி தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளிடமும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்தும் காப்பாற்றுவோம்! இல்லை எனில் திரும்பி போகும்போது மன்னார் பேசாலை நமக்கற்றதாக காட்சிதரும் நன்றி பேசாலைதாஸ் 004792278528

Like
Comment

Friday 21 July 2023

APHA (Action for Perfection Humanity Ahead)

APHA (Action for Perfection Humanity Ahead

                                                   மேற்படி  இந்த தன்னார்வ தொண்டு நிறுவணமானது, யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி குறிப்பாக பாசையூர், கரையூர், நாவாந்துறை இடங்களில் உள்ள, விசேட தேவை கொண்ட பிள்ளைகளுக்கு, அதாவது சாதாரண பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத பிள்ளைகளு க்கு விசேட கல்வி வழங்க ( Special Need Education) முன்வந்துள்ளார்கள். அதாற் கான பாடசாலை இடம், எல்லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது, விசேட தேவை கொண்ட பிள்ளைக ளையும் சந்தித்து விபரங்கள் சேகரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

                                                  இந்த கல்வி நிலையத்தை கொண்டு நடத்த  APHA நிதி உதவிகளை வழங்குகின்றபோதும், வெளிநாடுகளில் உள்ள பாசையூர், கரையூர், நாவாந்துறை மக்களிடம் இருந்தும், நிதி உதவிகளை எதிர்பார்க்கின் றார்கள். விடேச தேவை கொண்ட பிள்ளைகளுக்கான தளபாடங்கள்.கல்வி உபகரணங் கள் கொள்வணவு செய்ய நான்கு இலட்சம் ரூபா உடனடியாக எதிர் பார்க்கின்றார்கள், அதைத் தொடர்ந்து மாதாமாதம் 40,000ரூபா விசேட தகைமை கொண்ட ஆசிரியர்களுக்கு சிறு உதவியையும் எதிர் பார்க்கின் றார்கள்.

                                                  இந்த தொண்டு நிறுவணத்தின் உள்ளூர் தொடர்பாள ராக பாசையூரைச் சார்ந்த திருமதி மதிவதனி அவர்கள் இருக்கின்றார்கள். கல்வி நிறுவணமும் பாசையூரை அண்டி அமைய இருப்பதால், வெளிஊரில் வதியும் பாசையூர் மக்களிடம், அதிலும் குறிப்பாக உங்கள் அப்பா மற்றும் அவர்களின் அமரரான சகோதரங்கள் பெயரிலும், ஓர் நினைவு நிலையமாக இதனை கொண்டு நடத்தலாம் என நான் யோசிக்கின்றேன். முதல் கட்டமாக நான்கு இலட்சமும் பின்னர் மாதாமாதம் 40.000 ரூபாவும் நீங்கள் அனுப்பினால் மிகுதி செலவுகளை  APHA நிறுவணம் பொறுப்பெடுத்துகொள்ளும்.

                                             அமரரான ஸ்டீபன் அலெக்சாந்தர் மற்றும் அமரர்களான  அவரது சகோதரங்களின் நினைவு நிலையாமாக இது செயல்படும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். மற்றது அவர்களின் உருவப்படங்களும் அங்குள்ள ஹோலில் வைக்கப்படும். இது தொடர்பாக மதிவதனி அவர்களை தொடர்பு கொள்ளலாம். நான் நினைக்கின்றேன் திருமதி மதிவதனி அவர்கள் ஒருவகையில் டண்சனின் அண்டியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

                                            கீத் இது தொடர்பாக உங்கள் சகோதரங்களையும், றோபட், பயஸ், லீன் மற்றும் அலோசியஸ் அண்ணன் மகனுடனும் கருத்துக் களை பரிமாறிக்கொண்டு எனக்கு தெரியப்படுத்துங்கள் 

                                                                                                    நன்றி

                                                                                                   அன்புடன் தேவதாஸ்

எமக்கு கிடைக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்கள் இன்னமும் பல எமக்கு வந்து , இந்த நிறுவணத்தின் வெளிநாட்டு முகவர்களில் ஒருவனாக நானும் செயல்படுகின்றேன். நீங்களும் இன்னும் ஆர்வமுள்ள பாசையூர் கரையூர் நாவாந்துறை அன்பர்களும் இணைந்து கொள்ளலாம்.