அறிவு...
ஆணவம்...
ஓஷோ...
ஒரு அழகிய கதை...

அவனுடைய தந்தை அவனை...
சகல வேத... சாஸ்திரங்களையும்...
சகல கலைகளையும்...
கற்றுக் கொள்வதற்காக...
ஒரு குருவிடம் அனுப்பி
வைத்தார்...

அனைத்தையும் திறம்பட கற்றுக் கொண்டான்.
இன்று குருகுலத்திலிருந்து ஸ்வதகேது வரும்நாள்...
அவனுடைய தந்தை அவன் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்...
தூரத்தில் ஸ்வதகேது...
கம்பீரமாக நடந்து வருவதை கண்டார்...
ஸ்வதகேதுவை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்...
ஆனால்...
அவன் முகத்திலும்...
நடையிலும்...
"மிகுந்த கர்வம்" தெரிவதை கண்டு வருத்தமடைந்தார்...

அவனது தந்தை அவனிடம்...
"கற்றுக் கொடுக்க முடியாததை"...
"கற்றுக் கொண்டாயா"
என்று கேட்டார்.

"கற்றுக் கொடுக்க முடியாததை"...
எப்படி அப்பா கற்றுக் கொள்ள முடியும்?"
என்று கேட்டான்.

என்று கூறி வேறொரு குருவிடம் அனுப்பி வைத்தார்...

குருவானவர்...
நூறு மாடுகளை கொடுத்து...
இவைகள் ஆயிரம் மாடுகள் ஆனவுடன் இங்கே வா...
என்று கூறி அனுப்பி வைத்தார்...

நூறு மாடுகளையும் அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான்...

மிகுந்த துன்பப்பட்டான்...
பிறகு மாடுகளுடன் பேச ஆரம்பித்தான்...
நாட்கள் செல்லச் செல்ல...
தனக்கத் தானே பேச ஆரம்பித்தான்...
கற்றுக் கொண்ட சகல கலைகளையும்...
சாஸ்திரங்களையும்...
மறக்க தொடங்கினான்...
வருடங்கள் கடந்தது...
மொழிகளையும் மறந்தான்... பேசுவதும் நின்று போனது...
தன்னை மறந்தான்...
அமைதியானான்...
திரும்பி போவதையும் மறந்தான்...

மாடுகள்...
ஸ்வதகேதுவிடம்...
நாங்கள் ஆயிரம் ஆகிவிட்டோம்...
நாம் போகவேண்டிய நாள் வந்துவிட்டது என்றுகூறி...
அவனை அழைத்துச் சென்றன...

ஸ்வதகேது தந்தையிடம்...
அங்கே பார்...
"ஆயிரத்து... ஒரு"
மாடுகள் வருகின்றன என்றார்.


கையாளுவதில் கவனமாக இருங்கள்...
சிக்கிக் கொள்ளாதீர்கள்...
வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே !!
வார்த்தைகள் "நீங்களல்ல"

நான் விரும்பவில்லை...
ஆனால்...
உங்களுக்கு ஏதோ சொல்ல வேண்டியுள்ளது...
உங்கள் கேள்விகளை அழிக்க பேச வேண்டியுள்ளது...

இன்று ஒரு பதில் சொல்வேன்...
நாளை வேறொன்று சொல்வேன்...
பிறகு என் பதிலை நானே மறுத்து பேசுவேன்...


உணர்த்துபவர் எவரோ...
அவரே ! குரு !!!"


No comments:
Post a Comment