Saturday 1 January 2022

அறிவு... ஆணவம்..

 அறிவு...

ஆணவம்...
ஓஷோ...
ஒரு அழகிய கதை...
🌸அந்த சிறுவனின் பெயர் "ஸ்வதகேது"...
அவனுடைய தந்தை அவனை...
சகல வேத... சாஸ்திரங்களையும்...
சகல கலைகளையும்...
கற்றுக் கொள்வதற்காக...
ஒரு குருவிடம் அனுப்பி
வைத்தார்...
🌸வருடங்கள் பல கடந்தன...
அனைத்தையும் திறம்பட கற்றுக் கொண்டான்.
இன்று குருகுலத்திலிருந்து ஸ்வதகேது வரும்நாள்...
அவனுடைய தந்தை அவன் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்...
தூரத்தில் ஸ்வதகேது...
கம்பீரமாக நடந்து வருவதை கண்டார்...
ஸ்வதகேதுவை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்...
ஆனால்...
அவன் முகத்திலும்...
நடையிலும்...
"மிகுந்த கர்வம்" தெரிவதை கண்டு வருத்தமடைந்தார்...
🌸ஸ்வதகேது தந்தையிடம் ஆசிகள் பெற்றான்.
அவனது தந்தை அவனிடம்...
"கற்றுக் கொடுக்க முடியாததை"...
"கற்றுக் கொண்டாயா"
என்று கேட்டார்.
🌸அவன் சற்று திகைத்தான்...
"கற்றுக் கொடுக்க முடியாததை"...
எப்படி அப்பா கற்றுக் கொள்ள முடியும்?"
என்று கேட்டான்.
🌸முதலில் "அதை" கற்றுக்கொண்டு வா...
என்று கூறி வேறொரு குருவிடம் அனுப்பி வைத்தார்...
🌸குருவை வணங்கி நின்ற ஸ்வதகேதுவிடம்...
குருவானவர்...
நூறு மாடுகளை கொடுத்து...
இவைகள் ஆயிரம் மாடுகள் ஆனவுடன் இங்கே வா...
என்று கூறி அனுப்பி வைத்தார்...
🌸ஸ்வதகேதுவும்...
நூறு மாடுகளையும் அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான்...
🌸ஆரம்ப நாட்களில் யாரிடமும் பேச முடியாமல்...
மிகுந்த துன்பப்பட்டான்...
பிறகு மாடுகளுடன் பேச ஆரம்பித்தான்...
நாட்கள் செல்லச் செல்ல...
தனக்கத் தானே பேச ஆரம்பித்தான்...
கற்றுக் கொண்ட சகல கலைகளையும்...
சாஸ்திரங்களையும்...
மறக்க தொடங்கினான்...
வருடங்கள் கடந்தது...
மொழிகளையும் மறந்தான்... பேசுவதும் நின்று போனது...
தன்னை மறந்தான்...
அமைதியானான்...
திரும்பி போவதையும் மறந்தான்...
🌸ஒரு நாள்...
மாடுகள்...
ஸ்வதகேதுவிடம்...
நாங்கள் ஆயிரம் ஆகிவிட்டோம்...
நாம் போகவேண்டிய நாள் வந்துவிட்டது என்றுகூறி...
அவனை அழைத்துச் சென்றன...
🌸தூரத்தில் மாடுகள் வருவதை பார்த்த குரு...
ஸ்வதகேது தந்தையிடம்...
அங்கே பார்...
"ஆயிரத்து... ஒரு"
மாடுகள் வருகின்றன என்றார்.
🌸"அறிவே" அறிவதற்கு தடை
🌸வார்த்தைகளை...
கையாளுவதில் கவனமாக இருங்கள்...
சிக்கிக் கொள்ளாதீர்கள்...
வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே !!
வார்த்தைகள் "நீங்களல்ல"
🌸பேசுவதை...
நான் விரும்பவில்லை...
ஆனால்...
உங்களுக்கு ஏதோ சொல்ல வேண்டியுள்ளது...
உங்கள் கேள்விகளை அழிக்க பேச வேண்டியுள்ளது...
🌸ஒரே கேள்விக்கு...
இன்று ஒரு பதில் சொல்வேன்...
நாளை வேறொன்று சொல்வேன்...
பிறகு என் பதிலை நானே மறுத்து பேசுவேன்...
🌸எனது நோக்கம் உன்னை மௌனத்தில் ஆழ்த்துவதே !!!
🌸"மௌனத்தை... மௌனத்தால்...
உணர்த்துபவர் எவரோ...
அவரே ! குரு !!!"
🌿ஓஷோ🌿
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் , ’மாபெரும் மௌனம் என்னை ஆட்கொண்டது... நான் ஏன் எப்போதும் வார்த்தைகளை பயன்படுத்த எண்ணினேன் என்று வியந்துபோகிறேன்...!! ரூமி.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
42
1 கருத்து
6 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment