அந்த நான்கு துறவிகளும்...
இரவு முழுவதும் மௌனமாக இருக்க தீர்மானித்து அமர்ந்தனர்...
சிறிது நேரம் கடந்தது...
முதலாமவன்,
"குளிர்" கடுமையாக உள்ளது என்றான்...
இரண்டாமவன்,
நாம் மௌனமாக இருக்க முடிவெடுத்து அமர்ந்திருக்கிறோம், மறந்துவிட்டாயா? என்றான்.
கோபமடைந்த மூன்றாமவன்,
நீங்கள் இருவரும்
கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா?
என்றான்.
நான்காமவன்,
சிரித்துக்கொண்டே...
இங்கு மௌனமாக இருப்பவன்
நான் மட்டும்தான் என்றான்.
உங்களின் மௌனமும் இப்படிப்பட்டதுதான்.
நீங்கள் தியானத்தில் ஆழமாக செல்ல, செல்ல...
மௌனமும் தொடர்ந்து வரும்...
தியானத்தில்...
தனக்குள்ளே செல்பவன்...
வெளியே வரவும்...
தெரிந்துகொள்ள வேண்டும்...
என்று விரும்புகிறேன்...
மெளனம்
நான் பேசும்போது...
இரண்டு வார்த்தைக்கு இடையில் உள்ள,
"இடைவெளியில்" கவனம் வையுங்கள்...
உள்ளும் - புறமும்,
பேசாமல் இருப்பது மேலானது...
"மௌனம், நிகழ்வது"
நீ உருவாக்குவதல்ல...
ஆனால் ஒரு எச்சரிக்கை.
மெளனமும் பேசும், பேசும், பேசும்...
அப்படி பேசும்...
மௌனம் அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியது...
வார்த்தைகள் தம் ஆற்றலை
இழந்து விடும்போது...
மெளனம் பேசும்...
மெளனத்தால் சொல்ல முடியாதது
எதுவுமே இல்லை...
"ஒரு வரி" வெளிப்படுத்தாத பொருளை..
"இடைவெளி" வெளிப்படுத்தி விடும்...
"சூனியத்தால்" தழுவ முடியாதது எது?
சொற்கள் தோற்று போகும்போது...
மெளனத்தின் அர்த்தம் ஆழமாக இருக்கும்...
வடிவங்கள் முடியும் இடத்தில்...
வடிவமின்மை ஆரம்பமாகிவிடுகிறது...
ஞானம் முடியும்போது,
"அப்பால் "ஆரம்பிக்கிறது...
சொல்லிலிருந்து பெறும் விடுதலையே !!!
உண்மை... உண்மை... உண்மை...
No comments:
Post a Comment