Friday 16 August 2019

மூச்சடக்கி முத்தமிட்டு

மூச்சடக்கி
முத்தமிட்டு
மார்பை கசக்கி
எச்சில் பட்டு
ஊடல் பிடியில்
தொப்புள் தொட்டு
உசுப்பும் கடியில்
முனகல் இட்டு
யோனி நுழைத்து
இன்பம் கொண்டு
கசியும் திரவம்
பிசிறியடித்து
நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால்
முடிந்து போகும்
ஆணின் மோகம் ஆனால்..
உன் உணர்வு கடியில்
உதடு வலித்து
முரட்டு பிடியில்
மார்பு வலித்து
உருட்டும் அசைவில்
வயிறு வலித்து
சொருகும் அதிர்வில்
கருப்பை வலித்து
சுமக்கும் கனத்தில்
உடல் வலித்து
உணரும் வலியை
வெளியே சொல்லாமல்
வேண்டும் நேரமெல்லாம்
உடல்பசிக்கு விருந்தாகி
புணரும் சலுகையாக
பிள்ளை வலியும் பெறுக்கிறாளே
அவளுக்காக என்ன
செய்ய இயலும் உன்னால்..
வேறொன்றும் செய்யாதே
பெண்ணும் உயிரென்று மதி..
உயிர் கொண்டு நேசி......
உள்ளார்ந்து யாசி...
பெண்மையை கையாளும்
மென்மை உனக்கே புரிந்துவிடும்
பெண் என்பவள் பூவானவள்
அதை கசக்கி எறிந்து விடாதே
அதை நுகர்ந்துவிட்டு
அரவணைத்துக்கொள்
தேவதையாக
இருப்பாள் அவள்
உன் மனதில்!!!

ஒரு ஆணோடு பாலியல்

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று
உணரும் தருணத்தில் அதிலிருந்து
முழுமையாக விலகி விடலாம்.

ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான்
பெரிய தவறு செய்கின்றனர்.

இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.

முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள
புகைப்படங்களை நீக்கி விட முடியும்.

கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள்
பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து
அதை நீக்கி விட இயலும்.

யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய
ஆபாச வலைத்தளத்தில்
ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் ,
இது என்னுடைய அனுமதி இல்லாமல்
என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை
நீக்கி விடுவார்கள்.

இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.

உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .

------------------------------------------------

பெண்ணுரிமை செயற்பாட்டாளர்
எழுத்தாளர் பத்மாவதி

BBC தமிழ்

கடலோரத்தில் புதர்

கடலோரத்தில் புதர் ஒன்று இரண்டு குருவிகள் கூடு
அமைத்து, குடித்தனம் செய்தன. இரண்டு முட்டைகள்
இட்டன். கருத்தோடு பேணி வந்தன.
ஒரு நாள் கடல் பொங்கி ஆடியது, இரண்டு முட்டை
களும் நீருக்குள் போய்விட்டன. குருவிகள் பதறித் தவித்தது.
ஒரு குருவி விசும்பி அழ, மறு குருவி சொல்லிற்று.
''எதற்கு அழுகிறாய்? உனக்கு அந்த முட்டைகள்
வேண்டும். அவ்வளவுதான். நான் எடுத்து தருகிறேன்''
என்று வீரம் பேசியது.
'எப்படி முடியும்?' மறு குருவி கேட்டது.
உழைத்தால் முடியும். முட்டைகள் கடலுக்குள் தானே
இருக்க வேண்டும். கடல் நீரை மறுபக்கம் இறைத்து விட்டால்
முட்டைகள் தெரியும் அல்லவா! அப்போது அவற்றை நாம்
எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!'' உறுதியாக பேசியது.
'முடியுமா?'மறு குருவி சந்தேகம் எழுப்பியது.முயற்ச்சித்தால் முடியும்!' இறுமாப்புடன் அந்தக் குருவி பேசியது.
இரண்டு குருவிகளும் உயரக் கிளம்பின. தங்கள் அழகால் கடல்நீரை
முகர்ந்து மறுபுறம் கொட்டின. இரவு பகல் பாராமல் அலைந்தன, முட்டைகள் கிடைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் உழைத்தன. பசி, தூக்கம், நோவு எல்லாம் மறந்து நீரை அலகால் முகர்ந்து மறு கரையில் ஊற்றி:
கொண்டிருந்தன.
கடற்கரை வழியே ஒரு முனிவன் நடந்து வந்தான்
இடஒம் வலதுமாய் இந்த குருவிகள் அலைவதை
பார்த்தார், தன் மனோசக்தியை அவற்றுக்கு செலுத்தி
அவற்றின் நோக்கம் அறிந்து கொண்டான். சிரித்தான்.
அதே மனோசக்தியால் அந்த முட்டைகளைக் கண்டுபிடித்து
நீரிலிருந்து அவற்றை மிருதுவாய் எடுத்து கரையில்
வைத்தான். தன் வழியை நடந்து போனான். குருவிகள்
முட்டையைப் பார்த்துத் திகைத்தன, துள்ளிப்பறந்தன.
'நான் சொன்னது நடந்துவிட்டது பார். உழைத்தால் !
உயரலாம். முயற்சித்தால் முடியலாம். நாம் நீர் முகர்ந்து அந்த
கரை சேர்த்து கடல் வற்றி முட்டைகள் வெளியே வந்து
என்றுமுதல் குருவி கூவிற்று,
மறு குருவி 'ஆமாம், ஆமாம் என்றது.
"மீனாட்சி, அந்தக் குருவிகள் முயற்சி செய்திருக்காவிடில்
முட்டைகள் கிடைத்திருக்காது. முட்டைகள் கிடைத்ததற்கு
முயற்சி மட்டுமே காரணமில்லை.
- இது ரொம்ப சூட்சுமமான கதை மீனாட்சி. யோசி
போசிக்க எத்தனையோ விஷயங்களை இதிலிருந்து புரியும்
கண்மூடி இந்த கதைக்குள்ளேயே இரு."
மாதவன் அப்பா மீனாட்சியின் தலையில் கை கை
அழுத்தினார். நெற்றியில் புறங்கையால் வருடினார்.

இரண்டு நாய்க் குட்டிகள்

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில்
விழுந்துவிட்டன.
அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.
சத்தம் கேட்டுக்
கிணற்றை எட்டிப்
பார்த்த
முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி.
தான் ஆசையாக வளர்த்த நாய்
குட்டிகள்
கிணற்றில்
விழுந்து கிடக்கின்றன அதன்
அருகில் பெரிய ராஜநாகம்
படம்
எடுத்து ஆடிக்
கொண்டு இருந்தது.
கிணற்றில்
ஒரு பகுதி கரையும்
மறு பகுதி தண்ணீரும்
இருந்தது.ராஜநாகம் நாய்
குட்டிகளை ஒன்றும்
செய்யவில்லை,நாய ்
குட்டிகள் தண்ணீரில்
இறங்காதவாறு காவல்
காத்து கொண்டு இருந்தது.
ராஜநாகம் மற்றும் நாய்
குட்டிகள் 48
மணி நேரம் கிணற்றில்
ஒன்றாக இருந்தன.இந்த 48
மணி நேரமும் நாய்
குட்டிகள் தண்ணீரில்
விழாதவாறு ராஜநாகம்
அமைதியாக
காவல்
காத்து கொண்டு இருந்தது.
பிறகு வனத்துறையினர்
கிணற்றுக்குள்
இறங்கிய போது ராஜநாகம்
மறு கரைக்கு சென்றது.நாய்
குட்டிகளை காப்பாற்றிய
வனத்துறையினர் அந்த
ராஜநாகத்தையும்
காப்பாற்றி காட்டில்
விட்டனர்.
”அதிகம் விஷம் உடைய
ஒரு ராஜநாகம்
இரண்டு சிறிய
உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல்
பாதுகாப்பு கொடுக்கும்
இந்த பூமியில் தான்,
சின்னஞ்சிறு குழந்தைகளையும்
சிறுமிகளையும் பாலியல்
பலாத்காரம்
செய்யும் மனித மிருகங்கள்
வாழ்ந்து கொண்டு இருக்கிறது”
இதுபோன்ற உயிர்களிடத்தில்
இருந்தாவது நல்ல
பண்புகளை கற்று கொள்ளுங்கள்...!!

மனதை அனுபவி



மனதை அனுபவி
நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை.
முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும்.
ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.
இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள்.
மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.
ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன்
மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார்.
எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள்.
எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட வேண்டும்.
சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும்.
ஓஷோ

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் .
பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் .
பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர்.
பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர்.
விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.
அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் .
என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .
படித்ததில் பிடித்தது . ....

லாவோட்

லாவோட் சூ தன் சீடர்களோடு போய்க் கொண்டிருந்தபோது ஒரு
காட்டு வழியாகப் போனார். ஒரு பெரிய அரண்மனை வேலை நடந்து
கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் மரங்களை வெட்டி
கொண்டிருந்தனர். காடு முழுக்க வெட்டியாகிவிட்டது. ஒரு பிரம்மாண்ட
மான மரம் மட்டும் அப்படியே இருந்தது. பத்தாயிரம் பேர் அதன் நிழலில்
உட்காரலாம். அவ்வளவு பிரம்மாண்டமான மரம். தன் சீடர்களை அனுப்பித்
காடு முழுவதும் மொட்டையடித்த பின் அந்த ஒரு மரத்தை மட்டும் யாரும்
வெட்டாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தைத் தெரிந்துவரச் சொன்னார்.
அவர்களும் போய், "இந்த மரத்தை மட்டும் ஏன் விட்டு
வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அருமையான பதில் வந்தது. 'அதுவா? இது பிரயோசனமில்லாத
மரம், ஒவ்வொரு கிளையிலும் ஏகப்பட்ட முண்டும் முடிச்சும். என்ன!
செய்வது இதை வைத்துக்கொண்டு? நேராயிருந்தாலாவது தூண்கள்
செய்யலாம். அதுவுமில்லை. தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம்.
என்றாலும் முடியாது. வெட்டி எரிக்கலாம் என்றாலோ கிளப்புகிற புகையின் விஷத்தில் கண்கெட்டுப் போகும். எந்தப் பிரயோசனமும் இல்லை.
அதனால்தான்" என்றார்கள்.
திரும்பிப் போய்ச் சொன்னார்கள். லாவோட் சூ சிரித்தார். "இந்த
மரத்தைப் போலத்தான் இருக்க வேண்டும். பிழைத்திருக்க வேண்டுமானால்
இந்த மரத்தைப் போலத்தான் இருக்கவேண்டும். எந்தப் பிரயோசனமும்
இல்லாமல் இருக்கவேண்டும். யாரும் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள்.
நேராக இருந்தால் வெட்டி எடுத்துப்போய்த் தூணோ தட்டுமுட்டுச்
சாமானோ செய்துவிடுவார்கள். அழகாக இருந்தால் சந்தையில்
விற்கப்படும் பண்டமாகிப் போவாய். இந்த மரத்தைப்போல
பிரயோசனமும் இல்லாமல் இருந்து விடு. யாரும் எந்தத் தொந்திரவும்
செய்ய மாட்டார்கள். செளகரியத்துக்கு வளரலாம்.ஆயிரக்கணக்கானோர்
உன் நிழலில் இளைப்பாறலாம்" என்றார்.
ஒஷோ