Friday 16 August 2019

கடலோரத்தில் புதர்

கடலோரத்தில் புதர் ஒன்று இரண்டு குருவிகள் கூடு
அமைத்து, குடித்தனம் செய்தன. இரண்டு முட்டைகள்
இட்டன். கருத்தோடு பேணி வந்தன.
ஒரு நாள் கடல் பொங்கி ஆடியது, இரண்டு முட்டை
களும் நீருக்குள் போய்விட்டன. குருவிகள் பதறித் தவித்தது.
ஒரு குருவி விசும்பி அழ, மறு குருவி சொல்லிற்று.
''எதற்கு அழுகிறாய்? உனக்கு அந்த முட்டைகள்
வேண்டும். அவ்வளவுதான். நான் எடுத்து தருகிறேன்''
என்று வீரம் பேசியது.
'எப்படி முடியும்?' மறு குருவி கேட்டது.
உழைத்தால் முடியும். முட்டைகள் கடலுக்குள் தானே
இருக்க வேண்டும். கடல் நீரை மறுபக்கம் இறைத்து விட்டால்
முட்டைகள் தெரியும் அல்லவா! அப்போது அவற்றை நாம்
எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!'' உறுதியாக பேசியது.
'முடியுமா?'மறு குருவி சந்தேகம் எழுப்பியது.முயற்ச்சித்தால் முடியும்!' இறுமாப்புடன் அந்தக் குருவி பேசியது.
இரண்டு குருவிகளும் உயரக் கிளம்பின. தங்கள் அழகால் கடல்நீரை
முகர்ந்து மறுபுறம் கொட்டின. இரவு பகல் பாராமல் அலைந்தன, முட்டைகள் கிடைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் உழைத்தன. பசி, தூக்கம், நோவு எல்லாம் மறந்து நீரை அலகால் முகர்ந்து மறு கரையில் ஊற்றி:
கொண்டிருந்தன.
கடற்கரை வழியே ஒரு முனிவன் நடந்து வந்தான்
இடஒம் வலதுமாய் இந்த குருவிகள் அலைவதை
பார்த்தார், தன் மனோசக்தியை அவற்றுக்கு செலுத்தி
அவற்றின் நோக்கம் அறிந்து கொண்டான். சிரித்தான்.
அதே மனோசக்தியால் அந்த முட்டைகளைக் கண்டுபிடித்து
நீரிலிருந்து அவற்றை மிருதுவாய் எடுத்து கரையில்
வைத்தான். தன் வழியை நடந்து போனான். குருவிகள்
முட்டையைப் பார்த்துத் திகைத்தன, துள்ளிப்பறந்தன.
'நான் சொன்னது நடந்துவிட்டது பார். உழைத்தால் !
உயரலாம். முயற்சித்தால் முடியலாம். நாம் நீர் முகர்ந்து அந்த
கரை சேர்த்து கடல் வற்றி முட்டைகள் வெளியே வந்து
என்றுமுதல் குருவி கூவிற்று,
மறு குருவி 'ஆமாம், ஆமாம் என்றது.
"மீனாட்சி, அந்தக் குருவிகள் முயற்சி செய்திருக்காவிடில்
முட்டைகள் கிடைத்திருக்காது. முட்டைகள் கிடைத்ததற்கு
முயற்சி மட்டுமே காரணமில்லை.
- இது ரொம்ப சூட்சுமமான கதை மீனாட்சி. யோசி
போசிக்க எத்தனையோ விஷயங்களை இதிலிருந்து புரியும்
கண்மூடி இந்த கதைக்குள்ளேயே இரு."
மாதவன் அப்பா மீனாட்சியின் தலையில் கை கை
அழுத்தினார். நெற்றியில் புறங்கையால் வருடினார்.

No comments:

Post a Comment