பேர்கன் தமிழ் கலைஞர்கள் சங்கம்
யாப்பு
1) நோக்கம்
1) பேர்கன் வாழ் தமிழ் மக்களிடையே கலைஞர்களை உருவாக்குதல்
2) கலை இலக்கியங்களை வளர்ப்பது
3) தாயகத்தில் உள்ள கலைஞர்களுக்கு உதவுதல்
4) நாம் வாழும் நோர்வே சமூகத்தில் உள்ள கலை இலக்கியக்கிய
கலாச்சாரத்தில் பிணைப்பை ஊக்கப்படுத்துவது
2) அமைப்பு முறை : மூன்று கட்டமைப்பாக இது செயல்படும், பொதுச்சபை, மூத்தோர் அவை, நிர்வாக சபை
பொதுச்சபை
1) பொதுச்சபையில் கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் இதில்
அங்கத்தவர்களாக இருக்கலாம், தமிழர்கள் அல்லாதவர்களும் இதில்
கலந்து கொள்ளலாம்
2) வருடம் ஒரு முறை பொது அமர்வு இடம் பெறும் தேவை ஏற்படின்
பலதடவை இந்த அம்ர்வு இடம் பெறலாம்
மூத்தோர் அவை
1) இந்த அவையில் கலை இலக்கியத்தில் அனுபவமிக்கவர்கள் அல்லது
ஆர்வமுள்ள ஓய்வு நிலையில் இருப்பவர்கள் அங்கத்தவர்களாக
இருப்பார்கள்,
2) தமிழர் அல்லது நோர்வே நாட்டவர் யாராகவும் இந்த அவையில்
இடம்பெறலாம்
3)இவர்கள் நிரந்தர உறுப்பிணர்கள் ஆவார்கள்.
4)ஆலோசனை வழங்குதல் மட்டுமே இவர்கள்து கடமையாகும்
நிர்வாக சபை
1) இந்த நிர்வாக சபை ஒன்பது உறுப்பிணர்களை கொண ஒரு குழு ஆகும், தலைவர், உபதலைவர், செயலாளர், உப செயலாளர், தனாதிகாரி ஆகியோர் இதில் அடங்குவார்கள்
2) நிர்வாக கூட்டம் வருடத்தில் நான்குதடவை கட்டாயம் கூட்டப்படவேண்டும், அவரசரமான நிலையிலும் தலைவர் நிர்வாக கூட்டத்துக்கு அழைப்பு விடலாம்
3) நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.இத்தேர்தலை மூத்தோர் அவை செயல்படுத்தும்,
4) நிர்வாக சபையின் ஆயுள் காலம் மூன்றுவருடம் ஆகும்
5) முதல் இரண்டு வருடம் பூர்த்தியானதும், தலைவர், செயலாளர் தனாதிகாரி ஆகியோர் விலகிச்செல்ல உபதலைவர், உப செயலாளர் அப்பதவிகளை பொறுப்பெடுப்பார்கள்,தனாதிகாரிக்கு ஏற்கனவே இருந்த நான்கு நிர்வாக உறுப்பிணரில் ஒருவரை பொதுச்சபை தெரிவு செய்யும்
No comments:
Post a Comment