Thursday 20 June 2024



நானாட்டான் நறுவிலிக்குளத்திலே வறிய விதவை கைவிடப்பட்ட பெண்களுக்காக தைப்பெண்கள் என்ற அமைப்பை உருவாக்கி தையல் ஆடைத்தொழிலில் வருமானம் ஈட்ட முயற்சி செய்கின்றோம். நானாட்டான் பிரதேச செயலகமானது, பல பொருளாதார திட்டங்களை அமுல்படுத்தி வருகின் றது. அத்தகைய திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக செயல்படுத்தினால் நாமும் பயன் அடைவோம். எமது அமைப்பில் இன்னும் பல பெண்கள் இணைய உள்ளார்கள் ஆனால் எம்மிடம் போதிய அளவு தையல் இயந்திரங்கள் இல்லை. அதனை நீங்கள் எமக்கு தரும்படியும், கொஞ்சம் நிதியுதவியும் நல்கும் படி