Sunday 29 May 2022

உக்ரைன் ரஷ்யா மோதல்.. நார்ட் ஸ்ட்ரீம் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு..?

உக்ரைன் ரஷ்யா மோதல்.. நார்ட் ஸ்ட்ரீம் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு..?

உக்ரைன் ரஷ்ய மோதலால் எரிவாயு தடைபட்டதால், நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய யூனியன் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு ஜெர்மன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஐரோப்பாவிற்கு ரஷ்யாவில் இருந்து உக்ரைன் வழியாக குழாய் மூலம் எரிவாயுவை வழங்கும் நோவோப்ஸ்கோவ் கம்ப்ரசர் நிலையத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து மூன்றில் ஒரு பங்கு எரிவாயு இந்த கம்ப்ரசர் நிலையத்தின் வழியாக தான் செல்கிறது. 

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோப்ஸ்கோவ் கம்ப்ரசர் நிலையம் ஐரோப்பாவிற்கு தினமும் 32,6 மில்லியன் கனமீட்டர் ரஷ்ய எரிவாயுவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் இந்த அறிவிப்பு ஐரோப்பா முழுவதும் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனால் பொருளாதார இழப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்.

நார்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) என்பது 1,230 கிலோமீட்டர் நீளமுள்ள நீருக்கடியில் உள்ள இரட்டை குழாய் திட்டம் ஆகும். இது பால்டிக் கடலுக்கு அடியில் இரட்டை குழாய் வழியை பின்பற்றி ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் ஆண்டுக்கு 110 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை இயக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் உக்ரைனுக்கு செலுத்தப்படும் போக்குவரத்து கட்டணம் சேமிக்கப்படும்.

இதனால் நோவோப்ஸ்கோவ் கம்ப்ரசர் நிலையத்திற்கு மாற்றாக நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு செய்துள்ளது. ஆனால் இதனை செயல்படுத்த ஜெர்மனி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மொத்த ஐரோப்பாவையும் பாதிக்க கூடும். ரஷ்ய எரிபொருள் தடையால் பல நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்க தயக்கம் காட்டுகின்றன.

ஜெர்மனி இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா ஜெர்மனிக்கு எரிபொருள் அளவை குறைத்துள்ளது. இந்த புதிய தடைகள் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஹங்கேரி போன்ற நாடுகள் தடைகளை வீட்டோ செய்ய முடிவு செய்துள்ளன.

ரஷ்யாவின் ரூபிளில் பணம் செலுத்துவதற்கு பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஜெர்மன் அதிபரும் மக்கள் ஆதரவை இழந்து வருவதால் தடையில் இருந்து பின்வாங்குகிறது. மேலும் தற்போதைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவை விட்டால் எரிபொருளுக்கு வேறு வழி இல்லை. ரஷ்ய எரிபொருளில் செயல்படுவது போன்றே பெரும்பாலான ஐரோப்பிய தொழில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனவே விரைவில் ரஷ்யா மீதான தடையை குறைத்து நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை செயல் படுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

Nord Stream 2 is being developed and operated by Nord Stream 2 AG, a subsidiary of the Russian state energy company Gazprom[10] headquartered in Zug, Switzerland.[11]

In 2011, Nord Stream AG started evaluation of an expansion project consisting of two additional lines (later named Nord Stream 2) to increase the overall annual capacity up to 110 billion cubic metres (3.9 trillion cubic feet). In August 2012, Nord Stream AG applied to the Finnish and Estonian governments for route studies in their underwater exclusive economic zones for the third and fourth lines.[12] It was considered to route the additional pipelines to the United Kingdom but this plan was abandoned.[4][13] In January 2015, it was announced that the expansion project was put on hold since the existing lines were running at only half capacity due to EU restrictions on Gazprom.[14]

In June 2015, an agreement to build Nord Stream 2 was signed between Gazprom, Royal Dutch ShellE.ONOMV, and Engie.[15] As the creation of a joint venture was blocked by Poland, on 24 April 2017, Uniper, Wintershall, Engie, OMV and Royal Dutch Shell signed a financing agreement with Nord Stream 2 AG,

On 31 January 2018, Germany granted Nord Stream 2 a permit for construction and operation in German waters and landfall areas near Lubmin.[16] In May 2018 construction started at the Greifswald end point.[17]

Pioneering Spirit was one of the ships involved in pipelaying

Opposition[edit]

Nord Stream 2 faced opposition from Western politicians outside Germany, who saw it as an instrument of Russian influence in German and European politics. Common reasons for the opposition to Nord Stream 2 are negative historical relations with Russia and strongly supporting common and shared EU positions towards Russia.[18]

President of the European Council Donald Tusk said that Nord Stream 2 is not in the EU's interests.[19] Italian Prime Minister Matteo Renzi and Hungarian Prime Minister Viktor Orbán have questioned the different treatment of Nord Stream 2 and South Stream projects.[19][20] Some claim that the project violates the long-term declared strategy of the EU to diversify its gas supplies.[21] A letter, signed by the leaders of nine EU countries, was sent to the EC in March 2016, warning that the Nord Stream 2 project contradicts the European energy policy requirements that suppliers to the EU should not control the energy transmission assets, and that access to the energy infrastructure must be secured for non-consortium companies.[22][23] A letter by American lawmakers John McCain and Marco Rubio to the EU also criticized the project in July 2016.[24] Isabelle Kocher, chief executive officer of Engie, criticised American sanctions targeting the projects, and said they were an attempt to promote American gas in Europe.[25]

In June 2017, Germany and Austria criticized the United States Senate over new sanctions against Russia that target the planned Nord Stream 2 gas pipeline from Russia to Germany,[26][27] stating that the United States was threatening Europe's energy supplies.[28] In a joint statement Austria's Chancellor Christian Kern and Germany's Foreign Minister Sigmar Gabriel said that "Europe's energy supply is a matter for Europe, and not for the United States of America."[29] They also said: "To threaten companies from Germany, Austria and other European states with penalties on the U.S. market if they participate in natural gas projects such as Nord Stream 2 with Russia or finance them introduces a completely new and very negative quality into European-American relations."[30]

In January 2018, United States Secretary of State Rex Tillerson said that the U.S. and Poland oppose the Nord Stream 2 pipeline, saying they see it as undermining Europe's overall energy security and stability.[31] The Nord Stream 2 pipeline was also opposed by Ukrainian President Petro Poroshenko, Polish Prime Minister Mateusz Morawiecki, U.S. President Donald Trump, the European Council President Donald Tusk and British Foreign Secretary Boris Johnson.[32][33]

US sanctions and subsequent waiver and negotiations[edit]

In January 2019, the US ambassador in Germany, Richard Grenell, sent letters to companies involved in the construction of Nord Stream 2 urging them to stop working on the project and threatening with the possibility of sanctions.[34] In December 2019, the US Congress approved sanctions on companies and governments working on the pipeline, to which German Foreign Minister Heiko Maas responded, urging the US not to meddle in European energy policy.[35] Following the US Senate's vote to override the Trump administration's defense bill containing punitive measures on the pipeline, the US State Department alerted companies of sanctions risk they face, urging them to pull out from the project.[36] According to a PolitiFact "fact check", the sanctions did not impede construction of the pipeline.[37]

On May 19, 2021, the United States President Joe Biden waived sanctions on Nord Stream 2 AG and its CEO Matthias Warnig, in a move that was opposed by both Republican and Democratic lawmakers,[38][39] with Republican senator Jim Risch saying it was "a gift to Putin and will only weaken the United States".[40] Russian and German officials welcomed the sanctions waiver, but Yuriy Vitrenko of Naftogaz criticized the move and said Ukraine would press Washington to impose sanctions to stop the pipeline.[41] On May 25 at the White House, President Biden told reporters that he waived the sanctions because the pipeline was nearly completed and because they would have hurt relations with Europe.[42] Protesting Biden administration's policies, senator Ted Cruz held up dozens of diplomatic nominations, telling CNN "I look forward to lifting the holds just as soon as they impose the sanctions on Nord Stream 2 that are required by federal law."[43][44] According to PolitiFact, this positive signal to Germany and Russia was accompanied by sanctions on other areas of Russian industry as part of a changing strategy to reopen negotiations over Ukraine.[37]

Washington Post reports that Biden obtained a promise from Angela Merkel in summer 2021, that Nord Stream 2 would not be sanctioned, but that Germany would support other sanctions, and Germany would scrap Nord Stream 2 if Russia invaded Ukraine. By the time Russia invaded in 2022, Olaf Scholz had replaced Merkel, but Scholz kept the promise.[45]

On July 21, 2021, the US and Germany proposed an agreement to shield Ukraine and other Central and Eastern European countries from any future Russian efforts to use the pipeline as a geopolitical weapon.[46] The deal was immediately opposed by Ukraine and Poland and US lawmakers on both sides of the aisle, with Foreign Policy reporting that it had become a "lightning rod issue" and that "Biden's post-Trump-era honeymoon period with some Eastern European allies has come to a screeching halt."[47] Deutsche Welle reported that the deal promoted "strong condemnation" from Poland, with government spokesman Piotr Müller saying "We have emphasized from the very beginning that Nord Stream 2 is a geopolitical project that destabilizes the political situation in central and eastern Europe."[48] Lithuanian Prime Minister Ingrida Simonyte called the project a "mistake" saying it was not just for its economic impact on Ukraine, but for the EU's increased dependence on a country where there is no rule of law.[48]

In September 2021, a group of bipartisan lawmakers in the US House of Representatives attempting to undo Biden's decision sanctions waiver, introduced an amendment to the defense bill.[49] In November 2021, a group of Senate Republicans led by senator Risch renewed efforts to impose sanctions on the pipeline, also as an amendment to the National Defense Authorization Act (NDAA) defense bill[50] In response, the Biden administration reportedly lobbied Democratic allies to nix the sanctions amendments, and Secretary of State Antony Blinken and top aides reportedly made calls urging senators to kill the sanctions amendments that would remove leeway for a White House waiver.[51][52] Republicans stalled the bill from passing on November 29, but it passed the next week on Dec 7, omitting the sanctions amendments despite strong support for them in Congress.[53][54]

Following reports of Russian troops massing near the border with Ukraine and fears of an invasion, the US Secretary of State Antony Blinken announced new sanctions on November 23, targeting eight people and 17 vessels as "pursuant to PEESA in connection with Nord Stream 2."[55]

Stance of Germany and role of the SPD[edit]

Questions have mounted about the links between the pipeline project, leaders of Germany's Social Democrat Party (SPD), and Moscow. One of the last acts of former Chancellor Gerhard Schröder in office was to sign the deal creating the Nord Stream project in 2005. Schröder subsequently became chairman of the company behind it and took several directorial positions in Russian energy companies in the following years. In more recent years, opposition to his lobbying became more heated across Germany.[56]

The project was supported by the northeastern German state of Mecklenburg-Vorpommern, the landfall site for the line, and where former Chancellor Angela Merkel had her constituency. In 2019 the US sanctioned German companies and individuals helping to build the line, but in January 2021, state premier Manuela Schwesig set up a Foundation called Stiftung Klima- und Umweltschutz MV [de] to "acquire, manage, own, provide or let land, tools and machines to help the completion" of the pipeline. But in 2022, questions mounted about the Foundation, its association with Gazprom and its activities that helped companies helping to build the project evade US sanctions. On February 24, 2022, German Court of Auditors expressed concern about the Foundation, which said it would stop helping the pipeline project, declining to say what it had done so far. Public records showed it purchased a ship to complete the laying of pipeline in the Baltic.[56]

In January 2022, the new German Chancellor Olaf Scholz, who long supported the project, came under pressure to block the project at the 2022 EU summit.[57][58] Amid reported misgivings of many in the Biden administration about Berlin's stance on Russia, Chancellor Scholz visited the US for what Foreign Policy called a "salvage mission".[59] After avoiding the pipeline issue at a press conference at the White House on February 7, Scholz responded to repeated questions from reporters saying the US and Germany were "absolutely united", while Biden went further and said that the Nord Stream 2 project would end if Russia invaded Ukraine.[60][61][62] Following the meeting with Biden and ahead of a meeting scheduled with Russian President Vladimir Putin for February 15, Scholz faced criticism in the media for refusing to say openly that Germany would cancel the pipeline in the event of a Russian invasion of Ukraine, though others said it was due to diplomatic tactics or legal concern.[63][64] Following the Scholz and Putin meeting in Moscow, Putin said the pipeline would cement European energy security, and that it is "purely commercial."[65] Scholz then visited Kyiv to meet Ukrainian president Zelenskyy and was accused of using the "Merkel playbook" when avoiding questions about the pipeline at a joint press conference.[66]

Suspension[edit]

In response to Putin announcing Russia's recognition of the Donetsk and Luhansk republics and the deployment of troops in those territories, German Chancellor Scholz suspended certification of Nord Stream 2 on 22 February 2022[67]

On March 2, it was reported that Nord Stream 2 AG, a subsidiary of Russian state-owned gas company Gazprom had ended business operations and laid off all 106 members of its staff as a result of sanctions imposed as a result of the Russo-Ukrainian War, though earlier reports that it had filed for bankruptcy were denied.[68]

Royal Dutch Shell, which financed 10% of the project, may have to write off $1B if it never opens.[69] On March 2, Wintershall Dea revealed that it had decided to write off its financing of Nord Stream 2, which it highlighted totals around EUR 1 billion.[70] On March 7, Uniper announced that it had taken the decision to record a full impairment loss on its loan to Nord Stream 2.[71] The company noted that it will recognize an impairment loss of its loans towards Nord Stream 2 AG in the amount of EUR 987 million.[71]

Nord Stream 2 AG could seek compensation from the German government and international arbitration under the Energy Charter Treaty (ECT).[72][73]

Sunday 22 May 2022

பிறமொழிகளும் மெல்லிசை மன்னரும்

 பிறமொழிகளும் மெல்லிசை மன்னரும்

தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர் அன்று இளைஞராக இருந்த சி.ஆர். சுப்பராமன்.


அந்தக்கால புகழ்பெற்ற நடிகையான பானுமதியின் பரணி பிக்சர்ஸ் கமபனியின் ஆஸ்தான இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் ! பானுமதியின் தாயரிப்பில் ரத்னமாலா , லைலா மஜ்னு , சண்டிராணி போன்ற படங்கள் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் வெளிவந்ததுடன், லைலா மஜ்னு , சண்டிராணி இசைக்காகவும் பேசப்பட்டன. சுப்பராமனின் அகால மரணத்தால் அவர் நிறைவு செய்யாத படங்களை அவரது உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி நிறைவு செய்தனர். தங்கள் குருநாதர் போலவே பிற மொழிப்படங்கள் சிலவற்றிற்கும் இசையமைத்த பெருமை மெல்லிசை மன்னர்களை சாரும்.


பக்த மார்க்கண்டேயா , தெனாலிராமன் , குடும்ப கௌரவம் , ராஜா மலையசிம்மன் போன்ற படங்கள் தமிழிலும் , தெலுங்கிலும் 1950 களின் ஆரம்பத்திலேயே மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்தன. குறைந்த அளவில் திரைப்படங்கள் வெளிவந்த காலத்தை ஒட்டிக் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த போதிலும் தமிழ் படங்களில் இசையமைப்பதை முதன்மையாகக் கருதியதையும், முன்னுரிமை கொடுத்ததையும் காண்கிறோம். 1950 களின் தமிழ் சினிமாக்களில் வசனங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட பிறர் கேட்பதற்கான செந்தமிழ் நடையில் அமைந்த உரைகள் ,அல்லது செந்தமிழ் நடையில் அமைந்த சொற்பொழிவுகளாக இருந்தபோதும் அதைப்போலல்லாது முழுமையாக செவ்வியல் சாராது மெல்லிசைசார்ந்து இசை வழங்கியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.


இசையில் மெல்லிசையை முக்கியமாக கருதிய மெல்லிசை மன்னர்கள் பிராந்திய மொழிகள் எதுவானாலும் அந்த மொழிகளின் வழக்காறுகளை, தனித்தன்மைகளை வெளிக்கொணராது மெல்லிசையை மட்டுமே பிரதானமாகக் கொண்டனர். அதாவது அவர்களது இசை எந்தப்பகுதியைச் சார்ந்த இசை என்பதை அவர்களது இசையை வைத்து கூறிவிட முடியாது மெல்லிசைமன்னர்களின் இசையில் எந்த பிராந்தியத்தின் மண்வாசனையும் வீசாது. ஹிந்தி திரைப்படங்களில் இசையமைத்த பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த இசையமைப்பாளர்கள் தங்கள் தங்கள் மாநிலம் சார்ந்த இசைகளை தங்களது பாடல்களால் கலந்து கொடுத்தார்கள். வங்காளிகளான சலீல் சௌத்ரி ,ஹேமந்த் குமார் , எஸ்.டி.பர்மன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வங்காள நாட்டு பாங்கு இசையையும் , நௌசாத் இசையில் உத்தர பிரதேசத்து இசையையும் , சங்கர் ஜெய்கிஷன் இசையில் பஞ்சாப் இசையையும் நாம் கேட்க முடியும்.


எஸ்.டி.பர்மன் , சலீல் சௌத்ரி , ஆர்.டி.பர்மன் போன்றோர் வங்காள நாட்டுப்புற இசையின் படகுப் பாடல்களை மிக பொருத்தமாக , அழகாக பயன்படுத்தினார்கள். எஸ்.டி பர்மன் இசையில் சுஜாதா என்ற, படத்தில் Sun Mere Bandhu Re என்ற பாடலும், Bandini [1963] படத்தில் " o janewale ho sake to laut " என்ற பாடலும் , சலீல் இசையில் Char Diwari படத்தில் "kaise manaaun piyava " என்று தொடங்கும் பாடலும் , ஆர்.டி.பர்மன் இசையில் " O Majhi Re Apna Kinara " என்ற பாடலும் வங்காளிகள் bhatiali பாடல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.


எஸ்.டி.பர்மன், சலீல் சௌத்ரி மட்டுமல்ல ஹிந்தியில் புகழ் பெற்ற வங்காள இசையமைப்பாளராக இருந்த ஹேமந்த் குமார் தாகூரின் பாடல் [ ரவீந்திர சங்கீதம் ] மெட்டுக்களில் அமைத்து பிரபலப்படுத்திய முக்கிய இசையமைப்பாளராவார்.


இன்று மெல்லிசையின் உச்சங்களாகக் கருதப்படும் இப்பாடல்களின் ஊற்று அவர்கள் சார்ந்த நாட்டுப்புற இசையின் தாக்கத்தின் பிரதிபலிப்புகளே மலையாள சினிமாவில் நீலக்குயில் படத்தில் அறிமுகமான ராகவன் மாஸ்டர் மலையாளத்து நாடன் பாட்டுக்களை அறிமுகம் செய்தார். அந்தப்படத்தில் அவரே இசையமைத்துப் பாடிய " காயலாரிகத்து வலையெண்ரிஞ்சப்போ வளை கிலுக்கிய சுந்தரி " என்ற பாடல் மலையாள நாட்டார் பாடலின் இனிமையைக் கொண்டது. மலையாள நாடன் பாடல்களின் மாதுர்யங்களைக் வெளிக்கொண்டுவந்ததில் பாடலாசிரியர் பி.பாஸ்கரன் மற்றும் ராகவன் மாஸ்டர், ஜி.தேவராஜன் போன்றோர் முக்கிய பங்காற்றினர்.. Kerala People's Arts Club என்கிற கம்யூனிஸ்ட் கலை இயக்கத்திலிருந்து வந்த கே.ராகவன் , ஜி.தேவராஜன் மலையாள நாடன் பாடல்களின் மாதுர்யங்களை தங்கள் இசையில் இழைத்து பெருமை சேர்த்தார்கள் மெல்லிசைமன்னர்களின் இசையில் பெரும்பாலும் மொழி வேறுபாடுகளால் அவை இன்ன மொழிப்பாடல் என வேறுபாடுமேயன்றி இசைமுறையில் அவ்வாறு அமைந்திருப்பதில்லை. மெல்லிசை என்ற பொதுமையான திரையிசை நீரோட்டத்தில் தங்களை வெளிப்படுத்த விரும்பினார்கள் என்ற வகையிலும் அக்காலத்தின் தேவையை ஒட்டியதாக மெல்லிசையை முன்தள்ள வேண்டிய தேவையால் அவர்கள் கவனம் செலுத்தியதும் நம் கவனத்திற்குரியதாகும். இவர்களது முன்னோடியும் ,சமகாலத்தவருமான கே.வி.மகாதேவனின் இசையில் தமிழ்நாட்டு இசைமரபை ஒட்டி பாடல்கள் இருப்பதை நாம் கவனிக்க முடியும். நாட்டுப்புற இசைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதும் அதன் வகைமாதிரிகள் சில என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ஆனாலும் எந்தவகை இசையென்றாலும் அதைக் கொடுக்கும் ஆற்றல்மிக்க மெல்லிசைமன்னர்கள் சில படங்களில் அந்த கதை களத்திற்கு ஏற்ப தமது பாடல்களில் நாட்டார் பாங்கில் தந்ததையும் நாம் மறக்க முடியாது. சிவகங்கை சீமை , பாகப்பிரிவினை போன்ற படங்ளின் பாடல்கள் இதற்கு சான்றாகும். ஆனாலும் அவர்களின் பெரு விருப்பும் , மனச்சாய்வும் மெல்லிசையின் பக்கமே இருந்தது வெள்ளிடைமலை!


இந்திய சினிமாவில் ஹிந்தியை அடுத்து வியாபாரரீதியில் முன்னணியில் இருந்த தமிழ் சினிமாவில் இசையமைப்பது என்பதும், அதில் முன்னணியில் இருக்க முடிந்தததென்பதும் இலகுவான காரியமல்ல என்ற வகையில் மெல்லிசைமன்னர்கள் கூடியவரையில் தமிழ் சினிமாவிலேயே தங்களை நிலை நிறுத்த விரும்பியமையும் மிக இயல்பானதாகும்.


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்த போதும் தென்னிந்தியாவின் இதர மொழிகளிலும் இவர்களது இனிமைமிக்க இசையைப் பயன்படுத்த பலரும் முனைந்தனர். அந்த வகையில் மெல்லிசைமன்னர் தெலுங்கு .மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியது தற்செயலானதன்று.


ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவின் இசையமைப்பாளர்கள் பலரும் தமிழ் திரைப்படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். எஸ்.ராஜேஸ்வரராவ், எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி , ஏ.ராமாராவ் , ஆதிநாராயணராவ் , மாஸ்டர் வேணு, டி.சலபதிராவ் போன்றோர் மட்டுமல்ல இசையமைப்பாளர்களும் பாடகர்களுமான கண்டசாலா,ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி , ஆர்.பாலசரஸ்வதி தேவி ,கே. ஜமுனாராணி , பி.சுசீலா போன்ற பலரும் தெலுங்கு மொழிக்காரர்களே! தமிழ் சினிமாவின் மெல்லிசைமுன்னோடியான சி.ஆர்.சுப்பராமனும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவரே.


இக்கலைஞர்களும் தமிழ் திரையை தங்கள் இசையால் வளப்படுத்தியவர்கள் என்பதை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. கலை என்பது மொழி எல்லைகளைக் கடந்தது. கேட்கக் கேட்க இன்பமளிக்கின்ற அற்புதமான பாடல்களை அவர்கள் நமக்குத் தந்தார்கள்.


அவற்றில் சில பாடல்கள் ... 01 பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மிஸ்ஸியம்மா - ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 02 வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா - ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 03 ஆகா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் - கண்டசாலா + பி.லீலா - இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 04 எந்தன் உள்ளம் துள்ளி - கணவனே கண் கண்டா தெய்வம் - பி.சுசீலா - இசை : ஏ.ராமாராவ் 05 அழைக்காதே நினைக்காதே - மணாளனே மங்கையின் பாக்கியம் - பி.சுசீலா - இசை : ஆதிநாராயணராவ் 06 கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண் - பி.பி.ஸ்ரீனிவாஸ் - இசை : ஆதிநாராயணராவ் 07 கோடை மறைந்தால் இன்பம் வரும் - மஞ்ச்சல் மகிமை - கண்டசாலா + பி.சுசீலா - இசை : மாட்ஸர் வேணு 08 மாறாத சோகம் தானோ - மஞ்ச்சல் மகிமை - கண்டசாலா + பி.சுசீலா - இசை : மாட்ஸர் வேணு இது போன்ற பல சாகாவரம் பெற்ற பாடல்கள்களைக் கூறிக் கொண்டே போகலாம்.


தெலுங்கு இசைக்கலைஞர்கள் தமிழ் திரைக்கு இனிய பாடல்களைத் தந்தது போலவே மெல்லிசைமன்னர்களும் தங்கள் இசையால் ஏனைய மொழிப்படங்களையும் வளப்படுத்தினர்.


1960 களில் வெளிவந்த மெல்லிசைமன்னர்களின் இனிய பாடல்கள் தெலுங்குத் திரைப்படங்களிலும் புகழ்பெறத் தொடங்கின. பெரும்பாலும் தமிழில் மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்த படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, அவர்களது பாடல்களும் அப்படியே தெலுங்கு மொழிக்கு மாற்றப்பட்டன. இப்படங்களின் இசையமைப்பாளர்கள் வேறு சிலராக இருப்பதால், படங்களின் பின்னணி இசையை அந்தப்படங்களின் "இசையமைப்பாளர்கள்" செய்திருப்பார்கள் என்றே சொல்ல முடியும். ஏனெனில் பாடல்கள் அனைத்தும் மெல்லிசைமன்னர்கள் தமிழில் இசையமைத்துப் பெரும் புகழடைந்த பாடல்களே! தமிழில் வெளிவந்த பின்வரும் படங்கள் தெலுங்கு மொழியில் வெளிவந்தன.


பாசமலர் [Raktha Sambandham ] நெஞ்சில் ஓர் ஆலயம் [ Maarani Manasula ] போலீஸ்காரன் மகள் [ Constable Kuluru ] பாவமன்னிப்பு [ Paapa Parikaaram ] பாசம் = Manchi Chedu நிச்சயதாம்பூலம் [ Pelli Thampoolam ] வீரத்திருமகன் [ Aasa Jeevulu ] கர்ணன் [ Karna ] படகோட்டி [ Kaalam Mirindi ] சர்வர் சுந்தரம் [ Server Sundaram ] கறுப்புப்பணம் [ Kaavala Pillalu ] ராமு [ RAmu ]


மெல்லிசைமன்னர்கள் ஒன்றாக இருந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள் இவையானாலும் , இருவரும் பிரிந்த பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனியே இசையமைத்த படங்களிலும் நல்ல பாடல்களைக் கொடுத்தார். குறிப்பாக 1970களில் குறைந்தளவு தெலுங்குப்படங்களில் இசையமைத்தாலும் சில படங்களில் தனித்துவமான பாடல்களை அமைத்தார். குறிப்பாக மரோ சரித்திரா என்ற படத்தில் நல்ல பாடல்கள் அமைந்தன. இப்படம் பின்னர் ஹிந்தியில் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் வெளி வந்தது. ஏலவே கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை , மன்மதலீலை பின்னர் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் தெலுங்கில் அதே பாடல்களுடன் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன.


மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்:


தமிழ் நாட்டு மக்களின் இசை ரசனையை விட மலையாளிகளின் இசை ரசனை சற்று வித்தியாசமானது. தங்கள் அடையாளங்களை பேண விரும்புபவர்கள். தங்களது கலை, கலாச்சாரத்தில் பெருமிதத்துடன் கொண்டாடுவது என பலவிதத்திலும் முன்னனணியில் நிற்பவர்கள். இவர்களது கலை ரசனையும் வித்தியாசமானது. கல்வியிலும் மேம்பட்டு நிற்பதால் , அதனால் விழிப்புணவு இதற்க்கெல்லாம் அடிகோலியது என்று கூறலாம். இவர்களது முன்னேற்றங்களில் கம்யூனிஸ்டுக்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.


பொதுவாக மலையாளிகள் எல்லாவிதமான இசையையும் கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை அவர்கள் நடாத்தும் இசை நிகழ்ச்சிகளின் மூலம் காண முடியும். அந்த நிகழ்ச்சிகளில் பாடும் சிறுவயதினர் கூட பிற மொழிப்பாடல்களை மிக அநாசாயமாகவும் , அனுபவித்தும் தங்கள் சொந்த மொழிப்பாடல் போல பாடி பிரமிக்க வைப்பதை நாம் காணலாம். பிற மொழிப்பாடல் என்ற சுற்றில் தமிழ், ஹிந்தி என தனித்தனியே சுற்றுக்கள் வைப்பதும் , கர்நாடக இசை , ஹிந்துஸ்தானி இசை , கஸல் இசை என பலவிதமான இசைச்சுற்றுக்களை அவர்களது இசைபோட்டி நிகழ்ச்சிகளில் காண முடியும். இதைத் தமிழ் இசைப் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்! பிற மொழி சுற்றோ பல்வகையான இசைச் சுற்றோ இருக்கவே இருக்காது.


அதே போலவே பிறமொழிகளில் திறமைமிக்க இசையமைப்பாளர்களை எல்லாம் மலையாளப்படங்களில் பயன்படுத்திருப்பதையும் நாம் காண முடியும். இசையமைப்பாளர்களில் சலீல் சௌத்ரி, நௌசாத் , பாம்பே ரவி , ரவீந்திர ஜெயின், உஷா கண்ணா மற்றும் பாடகர்களில் மன்னாடே, லதா மங்கேஷ்கர் போன்ற ஹிந்தி திரையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர்கள் பலரும் மலையாளப்படங்களை தங்கள் பாடல்களால் பெருமைப்படுத்தினர். உதாரணமாக செம்மீன் படப்பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் ஒலித்தன. தேசிய விருதையும் மலையாள சினிமாவுக்கு பெற்றுக் கொடுத்தது.


தமிழிலும் பிற மொழி இசையமைப்பாளர்கள், லஷ்மிகாந்த் ப்யாரிலால் போன்றவர்கள் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து மறைந்து விடுவார்கள். அவர்களது பாடல்கள் நன்றாக இருந்தாலும் தொடர்ச்சியாக இசையமைப்பதில்லை. அவர்களில் மனோஜ் கியான் , அம்சலேகா போன்றோர் சில படங்களுக்கு இசையமைத்து கொஞ்சம் பெயர் எடுத்தார்கள். ஆனால் பாம்பே ரவி தொடர்ச்சியாக பல மலையாளப்படங்களுக்கு இசையமைத்து பல இனிய பாடல்களை தந்ததுடன், அவரது பாடல்களைக் கேட்பவர்கள் ,அவர் ஒரு மலையாள இசையமைப்பாளர் என்று சொல்லும் வகையில் அவரது பாட்டுக்கள் வாத்திய அமைப்புகளில் மலையாள மணம் வீசுவதைக் காண முடியும்.


சலீல் சௌத்ரி இசையமைத்த செம்மீன் படம் தென்னிந்தியாவின் முதல் தேசிய பெற்றது. அதே போல பாம்பே ரவி இசையமைத்த சில பாடல்கள் தேசியவிருதுகளையும் பெற்றுக்கொடுத்தது. பாம்பே ரவியின் இனிமைமிக்க இசைக்கு அவர் இசையமைத்த இரண்டு பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.


மஞ்சள் பிரசாதமும் நெற்றியில் சார்த்தி [சித்ரா ] சாகரங்களே பாடி உணர்த்திய சாமகீதமே [ ஜேசுதாஸ் ] இவ்வ்விதம் பிற மொழி இசையை ரசிப்பதிலும் ,அவர்களது திறமையை பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டிய மலையாளிகள் தங்களுக்கென தனித்துவத்தையும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.


இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் படத்தயாரிப்பாளர் தாம் பயன்படுத்தும் கலைஞர்களை புகழ்வதே வழமை என்றாலும் , அவர்கள் தரும் பாடல்களை ரசித்த இசை ரசிகர்களும் அவர்களை நன்கு தெரிந்து பெருமைப்படுத்துவதையும் நாம் மலையாளிகளிடம் காண முடியும். மிகப் பெரிய இசை லயிப்பு அவர்களிடம் இருக்கும் .


இசையில் அவர்களது மனச்ச்சாய்வு என்பது பெரும்பாலும் மெல்லிசையும் ,கஸல் மற்றும் முக்கியமாக கர்னாடக இசை ராகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட Semiclassical Songs போன்றவற்றிற்கு மிகமுக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளன.


1960களின் நடுப்பகுதியிலிருந்து 1990களின் நடுப்பகுதிவரை மலையாளப்படங்களில் செவ்வியல்சார்ந்த மெல்லிசைப் பாடல்களைக் [ SemiClassical Songs ] கணிசமான அளவில் எல்லா இசையமைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். குறிப்பாக பாடகர் ஜேசுதாஸின் குரலை வைத்து அவர்கள் நிகழ்த்தியிருக்கும் ராக வீச்சுக்கள் அற்புதமானவை. அதுமட்டுமல்ல அவரது குரலை பலவிதங்களிலெல்லாம் பயன்படுத்தி தங்களுக்கென இசையையும், இசைக்கலைஞனையும் உருவாக்கியதுடன் , கொண்டாடியும் மகிழ்ந்தார்கள்.


ஜேசுதாஸ் பாடிய சில Semi Classical இசைசார்ந்த பாடல்கள் தேவி கன்யாகுமாரி - இசை : ஜி.தேவராஜன் நாத பிரம்மத்தின் சாகரம் நீந்தி - இசை : ஜி.தேவராஜன் கோபி சந்தன குறி அணிஞ்சு - இசை : ஜி.தேவராஜன் நட்சத்திர தீபங்கள் ஒருங்கி - இசை : ஜி.தேவராஜன் ராக சாகரமே பிரியா காண சாகரமே -இசை : ஜி.தேவராஜன் சத்ய சிவ சௌந்தர்யங்கள் தன - இசை : ஜி.தேவராஜன் காட்டிலே பால் முழம் - இசை : ஜி.தேவராஜன் கதிர் மண்டபம் சொப்ன - இசை : ஜி.தேவராஜன்


தமிழ் நாட்டை விட பார்ப்பனீயம் அங்கே இறுக்கமாக இருப்பதால் இவ்விதம் Semiclassical பாடல்கள் செவ்வியலிசை சார்ந்து வருகிறது என இசை தெரிந்த சில கருதுகின்றனர். செவ்வியலிசை [ கர்நாடக இசை ] என்பது பிராமணர்களின் சொத்தா? இக்கருத்தில் உண்மையில்லை என்பதும் ராகம் சார்ந்த மெல்லிசையில் தென்னிந்திய மக்களுக்கு எப்போதும் ஒரு விருப்பம் இருந்ததென்பதே உண்மையாகும். இதற்கு மலையாளிகள் மட்டும் விதிவிலக்கானவர்கள் என்று கூறிவிட முடியாது.


சாதாரண ஒரு தமிழ் ரசிகர் எடுத்த எடுப்பில் மலையாளிகள் கொண்டாடும் ஒரு பாடலை ரசிக்க முடியுமா எனது சந்தேகம் தான் நமக்குத் பரிட்சயமான ராகங்களில் இசைக்கப்பட்டாலும் , வாத்திய எளிமையாலும் , இசையமைப்பின் முறையாலும் அவை தனித்தடத்தில் பயணிக்கும் இசை என்று சொல்லலாம்.


உதாரணமாகச் சில பாடல்கள்: தளிரிட்ட கினாக்கள் தன் தாமரை - மூடுபடம் 1963 - எஸ்.ஜானகி - இசை : எம்;எஸ்.பாபுராஜ் தாமசம் எண்டே வருவான் - பார்கவி நிலையம் 1964 - ஜேசுதாஸ் - இசை : எம்;எஸ்.பாபுராஜ் ஏன்டா சொப்னத்தில் தாமரை பொய்கையில் - அச்சாணி - ஜேசுதாஸ் - இசை: ஜி தேவராஜன்


தமிழ், மலையாளம் சினிமாக்கள் சமகாலத்திலேயே தொடங்கப்பட்டன. எனினும் 1940 களிலேயே தமிழ் சினிமா கணிசமான அளவில் வளர்ந்தது போல 1950 களிலேயே மலையாள சினிமா இந்த பயணம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. சென்னையில் வளர்ந்திருந்த சினிமா ஸ்டுடியோக்கள் அன்றைய தென்னிந்திய சினிமாக்களின் மையமாக இருந்தது. குறைந்தளவிலான சந்தை வாய்ப்பைக் கொண்ட மலையாள சினிமாவில் பெருமுதலீடுகளற்ற படங்களே வெளியாயின.ஆனாலும் தங்கள் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்ற ஆவல் மலையாளத் திரைத்துறையினரிடம் இருந்தது என்பது கவனத்திற்குரியது.


1950 களில் மெகபூப் , அகஸ்டின் ஜோசப், வைக்கம் மணி போன்ற பாடி நடிக்கும் நடிகர்களுடன் சாந்தா நாயர் , பி. லீலா , மெகபூப் போன்ற பாடாக, பாடகர்கள் பிரபலமாக இருந்தனர். அகஸ்டின் ஜோசப்என்பவர் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது நல்லதங்காள் [ 1950 ] படத்தில் இக்கலைஞர்களின் பாடல்களை நாம் கேட்கலாம் . இந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் பின்னாளில் புகழ் பெற்ற வி.தட்க்ஷிணாமூர்த்தி.


இசையைப் பொறுத்தவரையில் 1960 களில் புது எழுச்சியும் ,தனித்துவமும் உருவாகியது. மலையாள சினிமா இசையை வளப்படுத்தியதில் கே.ராகவன் ,ஜி.தேவராஜன் , பாபு ராஜ் , வி. தட்க்ஷிணாமூர்த்தி , பி.ஏ. சிதம்பரநாதன் , எம்.பி.ஸ்ரீநிவாசன் , எம்.கே.அர்ஜுனன் போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர் வி.தட்க்ஷிணாமூர்த்தி இசையில் கர்னாடக இசையும் ,அது சார்ந்த மெல்லிசையும்,கே.ராகவன் இசையில் நாட்டார்பண்பும் , மெல்லிசையும் , வடக்கன் பாட்டுகளும் ,பாபுராஜ் இசையில் கஸலும், மாப்பிள்ளை பாட்டுகளும், மெல்லிசையும் , பி.ஏ.சிதம்பரநாதன் இசையில் மெல்லிசையும் ,தேவராஜன் இசையில் நாட்டார் இசை மெல்லிசையும் , எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் மெல்லிசையும் , Semiclassical இசையும் , எம்.கே.அர்ஜுனன் இசையில் மெல்லிசையும் என மலையாள திரை இசைக்கென சிறப்பான ஒரு தனித்துவத்தைக் காட்டி வளர்த்தெடுத்தனர்.


இக்காலப்பகுதியில் தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பாடி புகழபெற்ற பின்னணிப்பாடகர்களான ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் முன்பு அதிகம் பாடிக்கொண்டிருந்தனர். 1960 களில் வீசிய புதிய அலையில் சில புதிய மலையாளப்பாடகர்களும் அறிமுகமாயினர். இவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் , பிரமானந்தன் , ஜெயச்சந்திரன், மாதுரி , வசந்தா போன்றோரின் பெயர்கள் அதிகம் பேசப்பட்டன.


குறிப்பாக கே.ஜே.ஜேசுதாஸ் தனக்கென மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தார். தனது குரல் வளத்தால் எல்லோரையும் கவர்ந்த ஜேசுதாஸ் இசையமைப்பாளர்களின் அபிமானத்திற்குரிய பாடகரானார். அவரது பாடும் திறனுக்கும் , குரலின் இனிமைக்கும் ஏற்ப பாடல்கள் வடிமைக்கப்பட்டன. மலையாளிகள் தங்களுக்கென ஓர் தனித்துவமான பாடகன் கிடைத்து விட்டான் என்று கொண்டாடினார்கள். சினிமா நடிகர்களுக்கு இணையாக அவர் போற்றப்பட்டார். அவரது வருகையின் பின்னர் தான் மலையாள இசை அரங்கின் பொற்காலம் உருவாகியது. அவர் வரும் வரை ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் பாடிக்கொண்டிருந்தனர். மலையாள பாடல்களையும் அது குறித்த மலையாளிகளின் பேட்டிகளையும் கேட்டால் அவர்கள் தங்கள் இசை தமது ஆத்மாவை தழுவுபவை என்பதைக் குறிப்பிடத் தவறுவதில்லை. தமக்கான தனித்துவத்தை பேணுவதில் பேரவா என்று நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஹிந்திப்பாடல்களும் ஹசல் இசையும் அவர்களது இசை கச்சேரிகளிலும் [ கான மேளா ] ஒலிப்பதை நாம் காண முடியும்.


கேரளத்து திருமணங்களில் பாடி புகழ்பெற்ற பாபுராஜ் என்ற இசைக்கலைஞர் அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆரம்ப காலத்தில் அவருடன் பாடகர் ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் போன்றோர் இணைந்து பாடியுமிருக்கின்றனர். அவர் பின்னாளில் திரை இசையமைப்பாளரான பின்பு இரு பாடகர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பாபுராஜ் குறித்து பின்னாளில் நினைவு கூறும் ஜெயசந்திரன் அவரது பாடும் முறையையும் , ஹார்மோனியம் வாசிக்கும் திறமையையும் குறித்துப் பேசியிருக்கிறார். பாபுராஜ் மட்டுமல்ல சலீல் சௌத்ரி ஹிந்தி திரையில் மிகவும் புகழபெற்றவர். புதிய ஒலிநயங்களையெல்லாம் வெளிப்படுத்துவதில் வல்லவர்.


மலையாளப்பாடல்கள் தனித்துவமானவையாகவும் இருப்பதற்கு தனித்துவம் மிக்க மண்சார்ந்த அதன் பாடல் வரிகளும் முக்கியகாரணங்களாகும். மலையாள நாட்டுப்புற மக்களின் வேர்களிலிருந்து வளர்ந்த கலைஞர்களின் பங்களிப்பு அங்கே அலாதியானது. அவை மலையாள வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் நன்கு பிரபலித்தன. அதில் கம்யூனிஸ்டுக்களின் பங்களிப்பே அதிகம். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கலைக்குழுவின் கேரளா பிரிவான "கேரளா மக்கள் கலைமன்றத்தினர் " ஆற்றிய பங்கு மலையாள சினிமா வளரவும் ,நல்ல ரசனை உருவாகவும் வழி காட்டியது.


மலையாள சினிமாவில் பாடல்கள் எழுதிய கவிஞர்களான பி.பாஸ்கரன், வயலார் போன்றவர்களும் , மலையாள சினிமாவில் நிரந்தர புகழ்பெற்ற கதாசிரியர் வாசுதேவன் நாயர், ராமு காரியத் போன்றோர் அந்த அமைப்பிலிருந்து வந்தவர்களே. இவர்கள் பாடல் எழுதுதல் , வசனம் , இயக்கம் என பல ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்கினர். இந்த பின்புலத்தில் மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னர் எப்படி இசை அமைத்தார் என்பது சுவாரஸ்யமானது ஆகும் . தமிழ் சினிமா இசை இந்தியாவின் அதிக புகழ்பெற்ற வணிக சினிமாவான ஹிந்தி திரையிசையை அடியொற்றி வந்ததும் , அதன் பகட்டான popular இசைசார்ந்து இருந்ததையும் காணமுடியும். அதில் நன்கு தேர்ச்சி பெற்ற மெல்லிசைமன்னரின் இசை மண்ணும் , மக்களின் இசைசார்ந்து வளர்ந்த ஒரு தனிப்போக்கைக் கொண்ட இசை ரசனைக்கு பொருந்துமா என்ற கேள்வி நியாயமானது. ஆனாலும் அடிப்படையில் ராகம் சார்ந்த மெல்லிசையில் வல்லவர்களாயிருந்த மெல்லிசைமன்னர் முற்று முழுதாக தமிழில் தான் அமைப்பது போன்ற இசை தராமல் ஏற்கனவே மலையாளிகள் வளர்த்தெடுத்த இசைப்பாங்கைச் சார்ந்து வழங்கினார். அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்று சொல்லலாம் .


தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக்கொண்டு வளர்ந்த மலையாள சினிமா இசையை பல்வேறு விதமான இசையமைப்பாளர்களும் வளப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் பிறப்பால் மலையாளியாகவும் தமிழ் திரை இசையில் முன்னணி இசையமைப்பாளராகவும் விளங்கிய மெல்லிசைமன்னரை 1970 களிலிருந்து பயன்படுத்தத் தொடங்கினர். 1950களிலேயே ஜெனோவா [ 1953 ] . லில்லி [ 1958 ] என ஒரு சில படங்களுக்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்தாலும் அவை குறிப்பிட்டு சொல்லும் அளவில் இல்லை எனலாம். அவரது முதல் படமான ஜெனோவா [ 1953 ] தமிழிலும் , மலையாளத்திலும் வெளியான போதும் அப்பாடல்கள் பிரபலமடையவில்லை.


எம்ஜி.ஆர் நடித்த ஜெனோவா [1953] படத்தில் இடம் பெற்ற பல பாடல்களை ஏ.எம்.ராஜா , பி.லீலா போன்றோர் பாடினர். அப்பாடல்களை இப்போது கேட்கும் போது மெல்லிசைமன்னரின் இனிய இசை ரசிக்கும்படியாக இருப்பதை காணமுடியும்.


அதே போல லில்லி [1958] படப்பாடல்கள் கேட்க கிடைக்கின்றன. லில்லி [ 1958 ] என்ற படத்தில் பிரேம்நசீர் , சத்யன் போன்றோர் நடித்தனர் " ஆலப்புழா கடவினு ஞானும் கோட்டிற்கேறி " என்று தொடங்கும், பாடகர் மகபூப் பாடிய பாடல் நாட்டுப்புற இசையில் அமைந்திருக்கும்.


" ஜேசு நாயகா பிரேமா நாயகா " என்று தொடங்கும் பாடல் சாந்தா நாயர் மாற்று பி.லீலா குழுவினர் பாடியிருப்பார்கள். இவை தவிர ஜி.கே.வெங்கடேஷ் , ஏ.எல்.ராகவன் போன்றோர் பாடிய பாடல்களும் இருப்பதாக பாட்டு புத்தகம் தகவல் தருகிறது.


1970 களில் தங்கள் தனித்துவமான இசையால் தமக்கென ஓர் தனித்துமான மெல்லிசை அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த இத்தனை மலையாள இசையமைப்பாளர்களும் களமாடிக்கொண்டிருந்த மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னரின் மீள் வருகை அமைகிறது.


தமிழ் சினிமாவில் பெரும்பாலும்அதிக எண்ணிக்கையிலமைந்த வாத்தியக்குழுவை பயன்படுத்திப்பழகிய மெல்லிசைமன்னர் மலையாள பாடல்களை .தமிழ் போல அல்லாமல் மலையாள இசையமைப்பாளர்களின் போக்கிலேயே பெரும்பாலான பாடல்களை குறைந்த அளவில் வாத்தியங்களை பயன்படுத்தித் தந்தார் என்று சொல்லலாம்.


1960 களின் நடுப்பகுதியிலிருந்து மலையாளத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் வி.தட்க்ஷிணாமூர்த்தி - ஜேசுதாஸ் கூட்டணி , தேவராஜன் - ஜேசுதாஸ் கூட்டணி , பாபுராஜ் - ஜேசுதாஸ் கூட்டணி , எம்.கே.அர்ஜுனன் - ஜேசுதாஸ் கூட்டணி, சலீல் சௌத்ரி - ஜேசுதாஸ் கூட்டணி என இசையமைப்பாளர்களும் பாடகர்கரும் என இசையில் ஏராளமான பாடல்கள் வெளியாகி புகழின் உச்சியில் ஜேசுதாஸ் இருந்தார்.


மலையாள இசையமைப்பாளர்களால் இனிமையூட்டப்பட்ட ஜேசுதாஸின் குரல் வளத்தால் நிறைந்த மலையாளத்திரையிசை பாடல்களை தனது இசையாலும் வளப்படுத்திய பெருமை மெல்லிசைமன்னருக்கு உண்டு. அந்தவகையில் Semi Classical பாணியில் மட்டுமல்ல ஹசல் பாணியிலும் தன்னாலும் இசையமைக்க முடியும் என மெல்லிசைமன்னரும் நிரூபித்தார் என்பதற்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை கீழே தருகின்றேன். மேலே குறிப்பிட்டது போலவே பின்னாளில் மெல்லிசைமன்னரின் இனிய இசையால் விஸ்வநாதன் - ஜேசுதாஸ் கூட்டணியிலும் பல வெற்றிப்பாடல்கள் உருவாகின.


இந்தப்பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது என்று கூறலாம். 01 சுவர்க்க நந்தினி சொப்ன விகாரி நீ - லங்காதகனம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 புஷ்பாபரணம் வசந்த தேவண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 ஆ..நிமிசத்திண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 கதகளி கேளி தொடங்கி - அஜயனும் விஜயனும் 1976 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 மறந்நுவோ நீ ஹ்ருதயேசவ்ரி - அக்சயபாத்ரம் 1977 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 அஷ்டாபதியில் - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 07 சுப்ரபாதம் சுப்ரபாதம் - பணி தீராத வீடு 1973 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 கற்பூர தீரத்தின் - திவ்யதரிசனம் 1974 - ஜெயச்சந்திரன் - மாதுரி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 ஸ்வர்ணக்கோபுர நர்த்தகி சில்பம் - பணி தீராத வீடு 1974 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 10 பூக்காலம் இது பூக்காலம் - ஸ்நேகத்திண்டே முகம் 1978 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.


அதேபோலவே மெல்லிசைபாங்கிலும் தமிழ் பாடல்களை போலல்லாது அங்கேயும் வேறுபட்ட வகையில் மிகுந்த தனித்துவமிக்க பாடல்களையும் தரமுடியும் என்று மெல்லிசைமன்னர் நிரூபித்தார்.


01 ஈஸ்வரன் ஒருக்கால் - லங்காதகனம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 சூர்யன் இன்னொரு நட்ஷத்திரம் - லங்காதகனம் 1971 - ஏசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 நட்சத்திர ராத்யத்தில் - லங்காதகனம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 ஆகாச பூரணி - திவ்யதரிசனம் 1974- ஏசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 ஸ்வர்க்கமென்ன கானகத்தில் - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 புஷ்பாபரணம் வசந்த தேவண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 07 ஆ..நிமிசத்திண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 வீணை பூவே குமாரன் ஆஸாண்டே - சந்ரகாந்தம் 1974 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 பிரம்ம நந்தினி - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜேசுதாஸ் + வசந்தா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 10 வீணை பூவே குமாரன் ஆஸாண்டே - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 11 சில்பி தேவா சில்பி - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 12 கதகளி கேளி தொடங்கி - அஜயனும் விஜயனும் 1976 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 13 மறந்நுவோ நீ ஹ்ருதயேசவ்ரி - அக்சயபாத்ரம் 1977 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 14 அஷ்டாபதியில் - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.


ஜேசுதாஸ் அதியுச்ச நிலையில் பாடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஜெயச்சந்திரன் தனது தனித்துவமான பாடும் முறையால் பல இனியபாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். மெல்லிசைமன்னருக்கும் ஜேசுதாசுக்கும் இடையே சில உரசல்கள் இருந்த காரணத்தால் வேறு சில பாடகர்களும் பாடும் வாய்ப்பை பெற்றனர். அதில் கணிசமான அளவில் பாடும் வாய்ப்பைப் பெற்று தலை சிறந்த பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் - விசுவநாதன் கூட்டு அணியில் பல இனிய பாடல்கள் வெளி வந்தது போலவே ஜெயசந்திரன் - விஸ்வநாதன் கூட்டு அணியில் பல பாடல்கள் வெளிவந்தன.


எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்: 01 பஞ்சவடியிலே - லங்காதகனம் 1971 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 திருவாபரணம் சார்த்தி - லங்காதகனம் 1971 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 மலரம்பனெழுதிய மலையாளக் கவிதை - மந்திரக்கொடி 1971 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 சுப்ரபாதம் சுப்ரபாதம் - பணி தீராத வீடு 1973 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 கற்பூர தீரத்தின் - திவ்யதரிசனம் 1974 - ஜெயச்சந்திரன் - மாதுரி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 ஸ்வர்ணக்கோபுர நர்த்தகி சில்பம் - பணி தீராத வீடு 1974 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 07 கற்பூர தீரத்தின் - திவ்யதரிசனம் 1974 - ஜெயச்சந்திரன் - மாதுரி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 அஷ்டபதியிலே - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 -ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 கிலுக்காதே கிலுக்கும்னா கிலுக்காம்பட்டி - மந்திரக்கொடி 1971 - ஜெயச்சந்திரன் + சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.


ஜேசுதாஸ் , ஜெயசந்திரன் மட்டுமல்ல ஜோலி ஏப்ரகாம் , எஸ்.ஜானகி , பி.சுசீலா, வாணி ஜெயராம் போன்ற பலருக்கும் புகழ் தரும் பல பாடல்களை தந்தவர் விஸ்வநாதன்.


எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்.


01 மாலினி தடமே - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - எஸ்.ஜானகி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 வீணே பூவே குமாரன் ஆசாண்டே [ ஜானகி ] 03 நிஷீதினி நிஷிதீனி - யக்ஷகானம் 1976 - எஸ்.ஜானகி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 வசந்தமே நீ வன்னு விழிச்சால் - கூட்டவும் சிஷ்யனும் 1976 - எஸ்.ஜானகி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 மதுரமுள்ள நொம்புரம் - அக்சயபாத்ரம் 1977 - வாணி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 முல்லைமாலை சூடிவண்ண - ஆயிரம் ஜென்மங்கள் 1976 - வாணி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 07 பிரியமுள்ள சேட்டன் அறிவான் - அக்சயபாத்ரம் 1977 - சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 கதிர் மண்டபம் ஒருக்கி -மந்திரக்கொடி 1973 - சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 ரஜனி கந்தி விடார்னு - பஞ்சமி 1976 - ஜோலி ஏப்ரகாம் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்


மேலே குறிப்பிட்ட பாடகர்கள் மட்டுமல்ல தானே பல பாடல்களையும் பாடி தன்னை மலையாள சினிமாவிலும் நிலைநிறுத்தியவர் மெல்லிசைமன்னர். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் இசை நிகழ்சிகளில் பாடப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்


01 பிரபாதம் அல்லா நீ - சந்த்ரகாந்தம் 1971 - விஸ்வநாதன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 ஹ்ருதயவாகினி ஒழுக்குன்னுவோ - சந்த்ரகாந்தம் 1971 - விஸ்வநாதன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 கண்ணீர் துள்ளியே - பணி தீராத வீடு 1973 - எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்


தன்னுடைய வழமையான பாணியிலிருந்து சற்று மாறுபட்டும் , மலையாள இசையமைப்பாளர்கள் வளர்த்தெடுத்த பாணிக்கும் நெருடலில்லாமல் அதனுடன் இசைந்து போகக்கக்கூடியதும் அதே வேளை தனது தனித்துவ திறமையால் ஆங்காங்கே தனது வாத்திய இசை பிரயோகங்களாலும் மக்களை மகிழ்விக்கும் பல இனிய பாடல்களை மெல்லிசைமன்னர் தரத்தவறவில்லை என்பதும் நம் அவதானத்திற்குரியது.


மாறும் கலாச்சார சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை தகவமைக்கவும் படைப்புணர்வின் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தவும் , அதன் பின்புலத்தில் அவர் பல்வேறு விதமான கற்பனை விரிவுகளை வளப்படுத்துவதிலும் பல்வேறு இசைவகைகளில் அவர் காட்டிய ஆர்வம் அவற்றின் மூலங்கள், அவற்றிலிருந்து உயிர்ப்பு ஒலிநயங்களும் , பிற சேர்க்கைகளும் அவர் படைப்புக்கு உதவியிருக்கும் என்பதை நாம் வியப்புடன் நோக்குகின்றோம்.




படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்:

படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன் நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால் ரசிகன் புது அனுபவம் பெறுகிறான். உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் அந்தப்படைப்பின் மூலம் பரவசமும் அடைகின்றான் படைத்தலும்,அதனால் விளையும் பரவசமும் வெவ்வேறு நிலைகளில் இயங்குகிறது."இன்பம் தரவும் ,பெறவும் பயன்படுத்தப் பெறுகிற சாக்கு இருக்கிறதே இது தான் கலை " என்பார் அன்னதா சங்கர் ராய்.[கலை - அன்னதா சங்கர் ராய், பக்கம் 5]


மனம் முழுவதும் பாடலில் பறிகொடுக்கும் ஒரு ரசிகன் பாடலில் ஒளிந்திருக்கும் நூதனங்களையும் , இசையமைப்பாளரின் உளப்பாங்கையும் உணரத் தலைப்படுகிறான். இசை ரசனையின் விரிதளத்தில் பயணிக்கும் ஒரு இசை ரசிகன் அந்தப் பயணத்தின் பலனாய் புதிய தேடலுக்கும் ஆட்படுகிறான். ரசிப்பின் அனுபவம் என்பது, நாளடைவில் இசையைப் படைத்த படைப்பாளிகள் எங்கனம் தமது படைப்பின் ரகசியங்களை மறைக்க முயன்றதையும் , அதன் பயனாய் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளுக்கு பலவிதமான மாறுவேடங்களை புனைந்து உலாவிடுவதையும் கண்டு ரசிக்கவும் செய்கிறான்.


இசையமைப்பாளர்கள் தாம் அனுபவித்த பிறரது படைப்புகளில் தம்மைக்கவர்ந்த அம்சங்களை நுட்பமாகக் கையாளும் போது அவை வெளியே துருத்திக் கொண்டு நிற்காதவண்ணம் காண்பிப்பதும் தங்களது இசைக்குள் அவற்றை அமிழ்த்திச் தங்கள் படைப்பிற்கு வளம் சேர்ப்பதையும் காண்பதை ரசிகனின் விரிந்த ரசனை பெற்றுக்கொடுக்கிறது. பரந்துபட்ட இசைரசிப்பு ரசிகனின் நுண்ணிய , ஆழமான பார்வையையும் விரிவடைய செய்கிறது. இசை ரசனையை புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறது.


“இசையமைப்பு” என்ற படைப்பு செயற்பாட்டில் ஒரு படைப்பாளியின் சுதந்திர உணர்வு திரைப்படத்தை சார்ந்து இயங்குவதும் அதற்கப்பால் பரந்த ரசிகர்களைச் சார்ந்தும் இயங்குவதால் இசையமைப்பாளர்கள் எங்கெல்லாம் இசைப்பயணம் நடாத்தினார்கள் கண்டு கொள்ள ஏதுவாகிறது.இசையின் விரிந்த பயணத்தின் பலனாக இசையின் குறிப்பிட்ட இசைத்துணுக்குகள் சில கணங்களிலே முகம் காட்டி கரைந்து செல்வதையும் ,சில இசைத்துணுக்குகள் பூதாகாரமாகக் காட்டப்படுவதையும் வேறு சில பாடல்களில் மிக இயல்பாய் செல்வதையும் அவதானிக்கிறான்.


கலைஞர்கள் நாடுவது முழுமையான சுதந்திரம் என்ற வகையில் . சினிமாவில் அது எல்லா நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாகத் தமிழ் சினிமாவில் பணபலம் கொண்ட தயாரிப்பாளர்களும் , புகழ்பலம் கொண்ட நடிகர்களும் தங்கள் தகுதியை மீறி தேவையற்ற அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த காலம் என்பது மெல்லிசைமன்னர்களின் காலமாக இருந்தது.


ஒருமுகப்படுத்தி நிற்கவேண்டிய இசையமைப்பாளர்களது படைப்பின் இலக்கு பலதிசையிலும் சிதைக்கப்பட்டது. பரிசோதனை முயற்சிகளை எண்ணிப்பார்க்க முடியாத சோதனையான காலம் என்று சொல்லலாம். இது போன்ற தடங்கல்களை ஒருவிதமான பொறுமையோடு தான் அவர்கள் சகித்துக் கொண்டார்கள். கலைத்துரையாயினும் , தொழில்நுட்பத் திறனாயினும் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் கூட நடிகர்களுக்கு கீழ்ப்படிந்தே செயல்பட நேர்ந்தது. இசையைப் பொருத்தவரையில் ஒருவிதமான தத்தளிப்பே நியதியாக இருந்தது.


இசைப்படைப்பின் போது மேலெழும் அசாதாரண அகஎழுச்சியலை , வினோதமான கற்பனை வளம் கொண்ட தயாரிப்பாளர்கள்,நடிகர்களால் அதன் ஜீவ ஓட்டம் சிதைக்கப்பட்டன.


எனினும் அதை மீறமுடியாத இசைக்கலைஞன் தயாரிப்பாளர்கள் , நடிகர்களைக் குசிப்படுத்தும் ஒரு முறையைக் கையாண்டு, அவர்கள் ஏற்கனவே கேட்ட இசைமாதிரிகளை ஜாடைகாட்டி தற்காலிக விடுதலை பெற்றுவிடுகிறான்.சினிமாவின் வணிகம் சார்ந்து எழும் நிர்பந்தங்கள் இசையமைப்பளர்களை அடிபணிய வைத்திருக்கிறது. இவை போன்ற தடைகளையெல்லாம் தாண்டி நல்ல பாடல்களை அவர்கள் தந்தது தான் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயமாகும்!


தங்கள் இசையின் நடை சிறப்பையும், எளிமையையும் வெளிப்படுத்த அவர்கள் இசைச்சிலம்பம் ஆடவில்லை.போகிற போக்கில் இயல்பாய் அமைந்த நடையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதுவே அவர்களின் படைப்பாற்றலாகவும் விளங்கின.


ஒரு சிறிய இசைத்துணுக்கை வைத்துக் கொண்டு அதனை குழைத்துக் குழைத்து கேட்பவர்களை பிரமிக்க வைப்பது, அதனைப் புதிய ,புதிய சங்கதிகளை போட்டு வளப்படுத்துவது என தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் இசைஜுவாலைகளில் எரியவைத்தார்கள். போடும் ஒவ்வொரு விதம்விதமான மெட்டிலும் இனிமையைக் குழைத்து அவர்கள் எதைத் தெரிந்தெடுப்பது என திக்குமுக்காட வைத்தார்கள்.


மெல்லிசைமன்னர்கள் இசை அமைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காத அல்லது ஒலிப்பதிவாகாத மெட்டுக்கள் எல்லாம் காற்றோடு காற்றாகக் கரைந்தன. சில பாடல்கள் வேறு சில படங்களுக்கு மாற்றியும் கொடுத்ததால் தப்பின. உதாரணமாக :


நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் - [ பாலும் பழமும் ] அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் [ காதலிக்க நேரமில்லை ]


போன்ற பாடல்கள் வேறு படங்களுக்கு போடப்பட்ட மெட்டுக்களாகும். மெல்லிசைமன்னர் வேறு பல பாடல்களை இந்த வகையில் வெவ்வேறு படங்களில் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். சில பாடல்களை சாயல்களை, சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றியும் கொடுத்து அவர்களை திசை திருப்பி வைப்பார். அவை ஒரே மெட்டு என்பதை அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத வண்ணம் கொடுத்திருக்கின்றார் . குறிப்பாக எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களில் கொடுத்திருக்கின்றார். ஒரே மேட்டை இரண்டு நடிகர்களுக்கும் விதம் விதமாக மாற்றி கொடுத்தார். உதாரணமாக .


அந்த மாப்பிளை காதலிச்சான் [ எம்.ஜி.ஆர் ] பணம் படைத்தவன்1965 அம்மாக்கண்ணு சும்மா சொல்லு [ சிவாஜி ]


இவ்விதம் விதம்விதமான மெட்டுக்களை பலவிதமான இசை ஊற்றுக்களிலிருந்து அவர்கள் பெற்றிருப்பதை காண முடிகிறது. ஒரே மேட்டை வைத்துக் கொண்டே பலவிதமான ஜாலங்கள் காட்டுவது ,தாள நடைகளை மாற்றுவது என மாந்திரீகர்களுக்குரிய வகையில் வித்தைகளைக் காட்டினார்.


இக்கட்டுரை அந்த மூலங்களைத் தேடிய பயணமாக அமைகிறது.


காற்றில் மிதந்துவரும் பூவின் வாசம் ஒருகணம் நம்மைத் தழுவி மறைந்து விட்டாலும் அதன் நறுமணத்தை மனதில் நிறுத்தி சென்று தான் தனித்துவத்தின் சுவடுகளை நெஞ்சில் பதித்து செல்வது போல , அல்லது அதன் நறுமணம் நம்மில் ஒட்டிக்கொள்வது போல இசையின் உயிர்வீசும் நறுமணத்துகள்கள் நம் மனதில் இனம்புரியாத அர்த்தங்களை , உணர்வுகளை புதைத்துவிட்டு சென்று மறைகின்றன. வாசத்திற்கும் இசைக்கும் நம் நினைவுகளை மடைமாற்றும் அற்புத சக்தி இருக்கிறது.


நிலத்தில் விழும் விதை முளைத்து மரமாகி ,விழுது விட்டு ஒன்றில் ஒன்று தங்குவது போல ,ரசிக்கும் இசைத்துணுக்குகள் தோற்றுவிக்கும் உணர்வுகள் விதையாகி நிலைத்துவிடுகின்றன.படைப்பில் இயங்கும் ஒரு பொழுதில் ஒரு கலைஞனின் அந்த ரசத்துளிகள் தன்னிச்சையாக போகிற போக்கில் கலந்தும் விடுகின்றன.ரசத்துளிகள் தரும் உணர்ச்சி அலை மேதைகளின் படைப்புகளில் தோன்றி புதிய வடிவம் பெற்றுவிடுகின்றன.கலாபூர்வமாகப் பார்க்கும் விதத்தில் , அல்லது வெளிப்படுத்தும் விதத்தில் வெவ்வேறு விதமாக அமைந்து விடுகின்றன.


கலைகளில் புதிய ,புதிய அம்சங்கள் சேர்மானம் அடைவது போல் சில கதைகள் புதிய வடிவங்களில் கலைவடிவமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன அவை திட்டமிட்டும் செயற்படுத்தப்பட்டு வந்திருப்பதை ஆள்பவர்களின் ஆதிக்கத்தின் தந்திரமாக இருப்பதையும் காண்கிறோம்.


இந்திய சூழலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள பார்ப்பனீயம் மகாபாரதம் , ராமாயணம் , அரிச்சந்திரா போன்ற கதைகளை பல்வேறு வடிவங்களில் , பல்வேறு கலாச்சார சூழலுக்குதக்கவாறு தகவமைப்பதை வரலாறு முழுவதும் காண்கிறோம். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு இந்தியனுக்கும் மகாபாரதம் ,ராமாயணம் அத்துப்படியாகத் தெரியும் என்பதே அதற்குச் சான்றாகும். இடைவிடாத பிரச்சாரத்தால் அவை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


படைப்பாற்றல் என்பது சூனியத்திலிருந்து உதிப்பதில்லை. எந்த ஒரு படைப்புக்கும் ஒரு ஆதார மூலம் இருக்கிறது. அதே போல உலகப்புகழ் பெற்ற கலைவடிவங்கள் பலவும் மீள ,மீள வெவ்வேறு விதங்களில் வடிவம் எடுத்து வந்திருக்கின்றன என்னும் உண்மையிலிருந்து இதற்கான எடுத்துக்காட்டை நாம் கூறலாம். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் சேக்ஸ்பியரின் நாடகத்தை உலகெங்கும் பரப்பி அதற்கான தனி மரியாதையை ஏற்படுத்திநார்கள். இருபதாம் நூற்றாண்டின் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஏற்பட்ட கலாச்சார பரிவர்த்தனையின் விளைவாய் நாடகத்துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அறிமுமாகியதுடன் .பார்சி நாடகம் ஐரோப்பிய நாடகங்களின்மரபுகளை உள்வாங்கியது.


பார்சி நாடகத்தின் தாக்கத்தால் தமிழ்நாடகமும் மாற்றம் கண்டது. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக அரங்கம் பார்சிநாடகத்தை உள்வாங்கி தமிழ் மக்கள் இசையும் இணைத்த வண்ணம் வளர்ந்தது. சங்கரதாஸ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல சம்பந்தமுதலியாரின் நாடகங்கள் சேக்ஸ்பியரின் நாடக மொழி பெயர்ப்புகளுடன் வசனங்களையும் ,தமிழர் பாரம்பரியங்களையும் இணைத்து உருவாகியது.


ஒரு காலத்தின் தேவைகளை ஒட்டி பிறக்கும் படைப்புக்கள் கலை நுணுக்கத்தால் நிலை பெற்று மரபாகி நிலைபெற்று விடுகின்றன. கால ஓட்டத்தில், குறிப்பிட்ட அந்தக் காலத்திற்குப் பொருந்தாவிட்டாலும் அந்த மரபின் ஈர்ப்பில் மயங்கும் ஒரு கலைஞன், அதனை உயிர்ப்புடன் தனது சொல்லும் திறன் கொண்டு இயம்பிக்காட்டுவதால் தனித்தன்மை மிக்க ஒன்றாக மாற்றுகிறான். பாமரத்தனமான இந்திய , இதிகாச , புராணக் கதைகள் எல்லாம் இவ்விதமாக திரும்பத் திரும்ப புதிய கலை வடிவங்களில் புகுந்து நிலைத்து நிற்கின்றன. இன்றைய காலத்தில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இதிகாசக்கதைகள் எல்லாம் மீண்டும் . மீண்டும் சுழன்றடிக்கும் துர்ப்பாக்கியமும் நிகழ்கிறது.


தமிழ் சினிமா இசையைப் பொறுத்தவரையில் பலவிதமான இசை, வாத்தியங்கள், நுணுக்ககங்கள் என பலவற்றை புதுமையாகக் கையாண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்ற ரீதியில் அவர்களது படைப்புகளில் பிறரது படைப்புகளின் சில அம்சங்கள் மட்டுமல்ல அவர்களே இசையமைத்த சில பாடல்களின் அம்சங்கள் புதிய ,புதிய பாதைகளிலும் திரும்ப திரும்பவும் வந்துள்ளன என்பதையும் காண்கிறோம். பலவிதமான இசைவகைகளின் போக்குகளெல்லாம் எவ்விதம் அவர்களது இசையில் கலந்து கொடுத்துள்ளார்கள் என்பதை அவதானிப்பது ரசனையைத் தூண்டுவதுடன் அவை பற்றிய சிந்தனைகளையும் தூண்டுபவைகளாக இருக்கின்றன.


சில பாடல்களை கேட்ட மாத்திரத்தில் அதனுடைய அசைவுகள் மனதில் இனம் புரியாத சலனங்களை எழுப்புகின்றன. எங்கோ ஓர் இடத்தில் ஒருகணத்தில் நழுவித் போகும் மெட்டின் ஒரு கணத்துளி ரசவாதம் உண்டாக்கிவிடும். அதை எங்கோ கேட்டிருக்கின்றோம் என்ற ஆவலை நம்முள் அவை தோற்றுவிக்கின்றன.அதை நாம் திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது, குறிப்பாகப் பாடும் பொழுது நமது ஞாபகக் கதிர்கள் பாய்ந்து நினைவு நரம்புகளில் ஒளியைப்பாய்ச்சி தட்டியெழுப்புகின்றன. செவியில் நுழைந்து இதயத்தில் எங்கோஒரு மூலையில் தங்கிவிட்ட ஒளிப்பிழம்புகள் ஒளிரத்தொடங்குகின்றன. இந்த அனுபவம் பலவிதமான ஒலிகளைக் கேட்டுப் பழகிய எல்லோருக்கும் பொதுவாக அமைவதில்லை. ஆனால் இசையில் ஈடுபாடும் ,கூர்மை நுணுக்கத்துடன் கேட்பவர்கள் இலகுவில் கண்டடைந்து விடுவர். அவை நீரோட்டத்தில் வருகின்ற அலையில் திடீரென தோன்றி மறைகின்ற குமிழிகள் போல மாயவித்தைகளை மனதில் தோற்றுவிக்கின்றன. இந்த ரசவாத மாயவித்தைகளை மிக இயல்பாக செய்து காட்டும் இசைக்கலைஞர்களை நாம் வியக்கும் அதே வேளை அதற்கான அவர்களின் முன்முயற்சிகளையும் எண்ணி பார்க்கின்றோம்.


இவை ஒருபுறமிருக்க இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசித்து பின் அவர்களுக்கு “தீவிர” ரசிகர்களாகி அவர்களை பாராட்டுவதும் , கடந்து போன காலங்களை நினைத்து ஏங்குவதும் பழம்பெருமை பேசுவதும் இவர்களைத் தாண்டி இசை வளரவில்லை என்று கூறவிழைவது என்பது குருட்டுத்தனமாதாகும். அதை விஸ்வநாதனின் ரசிகர்கள் என்று சொல்பவர்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லையாயினும் மறைமுகமாக செய்து வருகின்றார்கள். அதை அவர்கள் தர்க்க ரீதியில் விளக்கவும் முடியாது. அதுமட்டுமல்ல இந்த ரசிகர்கள் தமிழ் பாடல்களைத் தாண்டி இசையைக் கேட்கமுடியாதவர்களாயும் இருக்கின்றார்கள் என்பதையே இவை காட்டுகின்றன.


ரசிகர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சந்திப்புக்கள் அல்லது கூட்டங்கள் மெல்லிசைமன்னர்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள், குறிப்பாக வெளிநாட்டு இசைகளை இப்படி பயன்படுத்தியுள்ளார் ,அப்படிப் பயன்படுத்தியுள்ளார் என கருத்துக்களை அள்ளி வீசுவது போன்ற அறியாமையை இலகுவில் காணக்கூடியதாய் இருப்பதை நாம் காண முடியும்.


மெல்லிசைமன்னரை மிகைப்படுத்துவதென்பது மிகுந்த உள்நோக்கத்ததுடன் நடாத்தப்படுவதாகவே தெரிகிறது. குறிப்பாக இளையாஜாவை மறைமுகமாக நிராகரிப்பதை மெல்லிசைமன்னரின் ரசிகர்கள் என்ற பெயரில் தங்களை உயர்சுவை கொண்டவர்களாகக் கருதும் சிலர் செய்துவருகின்றனர். குறிப்பாக மெல்லிசை மன்னர் காலத்தில் அறிமுகமான ஒரு சில வாத்தியங்களை " இதை " அவர்தான் அறிமுகப்படுத்தினார் அதுமட்டுமல்ல இதை வேறு யாராலும் செய்ய முடியாது என்று உளறுவார்கள். ஒருவர் தனது உரையில் விஸ்வநாதனின் ஒரு பாடலின் நடுவில் வரும் வயலினைக் குறிப்பிட்டு " இப்படியெல்லாம் வயலினை வாசிக்க இன்று யாராவது இருக்கிறார்களா " என்கிறார்!


மனசுக்கு இசைந்த வண்ணம் சபையில் இருப்பவர்களை மகிழ்வூட்ட பேசுவதும் ஒரு போக்காகவும் மட்டுமல்ல சில வேளைகளில் பேசுபவர்களை மிஞ்சும் வண்ணமும் சபையில் இருப்பவர்களும் சேர்ந்து பிதற்றுவதையும் மிக இயல்பாக கேட்கமுடியும். அதில் ஒலிக்கும் தொனி என்னவென்றால் இளையராஜா ஒரு “சாதனையாளன் அல்ல “என்பதான ஒரு கிளப்பின் பஜனை பாடலாக இருப்பதைக்கான முடியும். இதுவரை இசையைத் தங்கள் ஏகபோகமாக வைத்திருந்த சிறுகும்பலின் வெறுப்பு பெருமூச்சு மட்டுமல்ல மெல்லிசைமன்னர்களின் இசையின் தொடர்ச்சியாக அதை எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுத்துச் சென்ற இளையராஜாவை மறைமுகமாக நிராகரிக்கும் சாதிய மனநிலை கொண்ட குருட்டுப்பார்வையாகும். இசையின் முழுஅதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்திருப்பதாகப் பாவனை செய்து கொள்ளும் இவர்களால் தங்களுள் ஒருவரை விஸ்வநாதனுக்கு , இளையராஜாவுக்கு நிகராக கொண்டுவரமுடியவில்லை என்பது வேடிக்கை. இது இளையராஜா பெரு மதிப்பு வைத்திருக்கும் மெல்லிசைமன்னர்களை அவருக்கு எதிராக நிறுத்தும் வக்கிரம் தவிர வேறல்ல.!


பாரதி சொன்னது போல “மறைவாகப் பழங்கதைகள் பேசல்” என்பதற்கு இது போன்ற பஜனை மடங்களின் பாவலாக்கள் நல்ல உதாரணமாகும். ஆனால் மெல்லிசைமன்னரிடம் கேட்டால் அவர் "எனக்கு ஒன்னும் தெரியாது தம்பி "என்று விடுவார்.


இந்த இடத்தில் சில விஷயங்களைக் கூறியே ஆக வேண்டும். மெல்லிசைமன்னர்களின் இசையமைப்பில் போது அவர்களுடன் சில வாத்தியக்கலைஞர்களும் சேர்ந்து இருந்தே இசையமைப்பது அவர்களது முறையாகும். விஸ்வநாதன் போடும் மெட்டுக்களை அவர்கள் வாசித்துக் காண்பிப்பார்கள். அவரது உதவியாளர்கள் அவர் போடும் மெட்டுக்களை இசைக்குறிப்புகளாக எழுதிக்கொள்வார்கள். ஒரு மெட்டு எல்லோருக்கும் திருப்தி என்றவுடன் அதற்கான இடையிசையை வழங்கும் போதும் ஒரு வாத்தியக்கலைஞர் " இதை இப்படி இசைத்தால் சிறப்பாக இருக்கும் " என்று தனது எண்ணத்தை சொல்லும் போது விஸ்வநாதனுக்கும் அது பிடித்திருந்தால் வைத்துக்கொள்வார். இதை அவரிடம் வேலை செய்த இசைக்கலைஞர்கள் விஸ்வநாதன் மரணத்திற்கு பின் அவரது நினைவு நிகழ்ச்சிகளில் இது குறித்து பேசியிருக்கின்றன.


ஜெயா டி.வி தயாரித்த “என்றும் நம்முடன் எம்.எஸ்.வி “ என்ற விசுவநாதன் நினைவு நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றிய வாத்தியக்கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் , உதவியாளர்கள் , கலைஞர்களின் பிள்ளைகள் என பலரும் தாம் நேரில் கண்ட , கேட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


அதில் சிலர் விஸ்வநாதனின் படைப்பாற்றல் பற்றியும் , அவரது எளிமையுயும் கலந்து பேசினர். அதில் விஸ்வநாதன் " அவர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தது போல லத்தீன் இசை கொடுப்பார் " [றம்பட தாமஸ் ] சிலர் பியானோ கலைஞர் இதை மேலைத்தேய இசையில் இப்படி சொல்லுவார்கள் என்று சொல்லும் போது அவர் வியப்புடன் கேட்பார் , அவர் படிக்கவில்லை அதைத் தெரிந்து கொள்வார் என்றும் கண்ணதாசனின் மகன் காந்தி கலைக்கோயில் படத்தில் இடம்பெற்ற தங்கரதம் வந்தது பாடலை ஆபோகி ராகம் என்று பாலமுரளி சொன்ன போது அப்படியா என்று பணிவுடன் கேட்டார் என்றார்.


மற்றவர்களிடம் வேலை வாங்கும் திறமையும் மிகுந்த படைப்பாற்றலும் மிக்க விஸ்வநாதன் தனக்குத் தெரியாத விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார் என்பதும் தனது படைப்புகளில் மற்றவர்கள் கூறும் நல்ல அம்சங்களை இணைத்துக் கொண்டார் என்பதும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அதனாலேயே அவர் அடிக்கடி இதெல்லாம் ஒரு " கூட்டு முயற்சி " என்று கூறியதையும் நாம் பழைய ஒளிப்பதிவுகளிலும் , அவர் வழங்கிய பேட்டிகளிலும் நாம் கேட்கலாம்.


மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்த காலத்திலும் பின்னர் தனியே பிரிந்து இசையமைத்த போதும் மிகச் சிறந்த இசை உதவியாளர்களை தாம் இசையமைக்கும் மெட்டுக்களை இசைக்குறிப்புகளாக எழுதவும் , வாத்திய இசையை ஒருங்கமைக்கும் பணிகளை நிர்வகிக்க உதவியாளர்களையும் பயன்படுத்தி தனது பணியை இலகுவாக்கிக் கொண்டு புதிய , புதிய மெட்டுக்களை அமைப்பதில் கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்ல , அந்தக்காலத்தில் எல்லா இசையமைப்பாளர்களும் உதவியாளர்களை வைத்துக் கொள்ளுவதென்பது சகஜமாகவும் இருந்தது. அந்தக்காலத்து இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பிலும் அவர்களுடன் பணியாற்றிய வாத்தியக்கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களின் பங்களிப்பும் கணிசமான அவளில் இருந்தே வந்துள்ளன. பின்னாளில் முற்றுமுழுதாகத் தனியே எந்தவித உதவியுமின்றி தனது படைப்புகளைத் தன்னந்தனியனாக படைக்கும் ஆற்றலை இளையராஜா வளர்த்துக் கொண்டு எல்லோரையும் பிரமிக்க வைத்தார். இது குறித்து பின்னாளில் கருத்து தெரிவித்த பிரபல புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.


" நான் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் குழல் வாசித்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் இசைஞானி இளையராஜா தவிர்ந்த எல்லோரின் இசையிலும் ஏதோ ஒரு விதத்தில் பிறரது இசைப்பங்களிப்பு இருக்கிறது. இளையராஜாவின் படைப்பு முற்றுமுழுதாக அவருடைய படைப்பே! அவர் எழுதிய பின் தான் எல்லோரும் பார்க்க முடியும் "


விஸ்வநாதனுக்குப் பின்வந்த இளையராஜாவோ அவரது படைப்பில் வேறு யாரும் குறுக்கீடு செய்ய அனுமதிக்காமல் எல்லாவற்றையும் இசைக்குறிப்புகளாக எழுதிக் கொடுத்துவிடுவதை நாம் அறிவோம். இளையராஜாவைப் பொறுத்தவரையில் தனது படைப்புகள் மீதான அதீத தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அது. உலக இசைமேதைகளான மோஷார்ட் , பீத்தோவன் போன்றவர்களும் அப்படித்தான் தங்கள் படைப்பை எழுதினார்கள்.


மெல்லிசைமன்னரின் இந்த " அதிதீவிர " ரசிகர்கள் உலக இசைகளோடு மெல்லிசைமன்னரை தொடர்புபடுத்திப் பேசினாலும் அவரது ஆதர்சம் ஹிந்தி இசைத்தான் என்பதை அவரது பெரும் பாலான பாடல்களை உதாரணம் காட்டிக் கூற முடியும். என்னென்ன பாடல்களையெல்லாம் பிறநாட்டுப்பாடல்கள் என்று சொல்கிறோமோ அவையெல்லாம் அவர் ஹிந்தியிசையில் பெற்றுக்கொண்டார் என்பதையும் நிறுவ முடியும். கலா நுடபத்திறனுடன் அவர் அவற்றை தனது கைத்திறனால் வெகுசாமர்த்தியமாக கலந்து கொடுத்தார். தான் பாடிப்பாடி செதுக்கிய மெட்டுக்களை அழகு மின்னும் வண்ணம் வெளிப்படுத்த அதன் அலங்கார வெளிப்பாடுகளாக காட்டுவதற்கே தான் அனுபவித்த பிற இசையமைப்பாளர்களின் இசைத்துளிகளின் சாரங்களை அங்கங்கே இழைத்து கொடுத்தார்.


மெல்லிசைமன்னர்களின் இசையில் இன்னன்ன இசைத்தொடர்புகள், அதன் குணவேறுபாடுகள், அதனிலிருந்து வேறுபடும் சிறப்பியல்புகள், அதன் மூல வடிவங்கள் என்பன பற்றிய அறிவில்லாதவர்கள் “அதிதீவிர " ரசிகர்களே ஆவர்.


பழைய தமிழ் சினிமாப்பாடல்கள் எல்லாம் நல்ல தமிழிசை என்ற அறியாமை நம் மத்தியில் சிலருக்கு உண்டு . இவர்களுக்குத் தமிழிசை என்றாலே சினிமாப்பாடல் தான் என்பதை நினைக்கும் போது இவர்களின் அறியாமையை நாம் புரிந்து கொள்ளலாம் தமிழுக்கு அப்பால் உள்ள இசைவகைகள் ,மற்றும் உலக இசை அனுபவமே இல்லாத. மட்டுப்படுத்தப்பட்ட, குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டாத இசைகேட்கும் வாய்ப்புகள் பெற்றதாகவே நமது சமூகம் இருந்திருக்கிறது. நம்மவரில் பெரும்பானமையானவரின் பாடல் ரசனை என்பது சினிமாப்பாடல்களாகவே இருக்கிறது. அதன் காரணமாக தாம் நினைப்பதே உலகம் என நினைக்கின்றனர்..


உண்மையில் இந்த " ரசிகப்பெருமக்களின் " பொன்மொழிகள் அனைத்தின் சாராம்சம் என்பது இத்தனை இசைநுணுக்கங்களும் மெல்லிசைமன்னரின் சொந்தபடைப்பு என்பதும் வெளியிலிருந்து அவர் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுமேயாகும். இது உண்மைதானா ? மெல்லிசைமன்னர் தனது படைப்புகளில் எதையுமே எடுத்துக் கொள்ளவில்லையா? அவை முழுவதும் அவரது மூளையில் உதித்த இசைமுத்துக்களா ? புதிய சுவையுணர்வை பெறவில்லையா? என்பதை கால , தேச, அழகியல் நோக்கில் ஆராய்ந்தால் விடை கிடைத்து விடும்.


மெல்லிசைமன்னரின் “வெறிபிடித்த” ரசிகர்களாகத் தம்மைக்காட்டிக் கொள்ளும் சில இவ்விதம் பிதற்றினாலும் , இவை குறித்து மிகத் தெளிவாக மெல்லிசைமன்னர் பலமுறை பேசியிருக்கிறார். தனது வழிகாட்டியாக மெல்லிசைமன்னர் கருதிய ஹிந்தி இசையமைப்பாளர் நௌசாத் பற்றி அவர் கூறிய கூற்றிலிருந்து அதனை நாம் குறிப்பிடலாம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்.


" நம்மை வட இந்தியாவில் ஒரு இசை நிகழ்சசி செய்யக்கேட்டார்கள். நௌசாத் தலைமை தாங்க வேண்டும் என்றோம் . நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் நௌசாத் வீடு சென்றோம். பழைய இசைத்தட்டுக்கள் எல்லாம் வைத்திருந்தார். அந்தக்காலத்தில் வெளிவந்த எல்லா இசையமைப்பாளர்களது [ தமிழ், தெலுங்கு , கன்னடம் ] இசைத்தட்டுக்களையும் வைத்திருந்தார்.நமக்குத் புத்திமதியும் வழங்கினார். " கவிஞர்கள் என்றால் எல்லோருடைய கவிதைகளையும் படிக்க வேண்டும் : இசையமைப்பாளர்கள் என்றால் எல்லோருடைய இசையையும் கேட்க வேண்டும். அப்படியென்றால் தான் முன்னேற முடியும் " என்றார். நான் அவரது ரசிகன். எனது பாடல்களைக் கேட்டு கடிதம் எழுதுவார். நானும் எழுதுவேன். சென்னை வந்தால் எனது வீட்டில் தான் தங்குவார்.


மெல்லிசைமன்னரின் இசையில் நௌசாத் இசையின் பாதிப்புக்களை நாம் துல்லியமாகக் கேட்க முடியும். தமிழ் திரையின் புதுமை முன்னோடியாக விளங்கியவரும் , மெல்லிசைமன்னர்களின் குருநாதருமான சி.ஆர். சுப்பராமனின் இசைப்பாணி என்பதே நௌஸாத்தின் இசைப்பாணி ஆகும். அந்த வகையில் மெல்லிசைமன்னர்களின் இசையில் நௌசாத்தின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது இயல்பானதே . மெல்லிசைமன்னரின் இசையில் பிறரது பாதிப்பு இருப்பதென்பது அவை நேரடியாகத் தெரிகிறது என்று அர்த்தமல்ல. நெருப்புப்பொறியாக பறந்து வேகத்தில் மறையும் இசைத்துணுக்குகளையெல்லாம் விரித்து,விரித்து ஆலாபனைகளாக்கி இனிய பாடல்களாக்குவதும் அவற்றை பல சமயங்களில் தொனிகளாகவும் வெளிப்படுத்தும் அற்புதங்களை நாம் காணமுடியும்.


அவை பாடலின் ஆரம்பமாகவும் , இடையிசையாகவும் , கோரசாகவும் , வாத்திய இசையாகவும் , ஹம்மிங்காகவும் என பலவிதங்களிலெல்லாம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். சில பாடல்கள் ஹிந்தி திரைப்படங்களின் டைட்டில் இசையிலிருந்தும் , பின்னனணி இசையிலிருந்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.


அவற்றை தமது ஆழ்ந்த ரசிப்பாலும் ,நுணுக்கரிய பார்வையாலும் அவற்றோடுணைந்து பாடிப்பார்ப்பதாலும் , அவர்கள் கையாண்ட மூலப்பாடல்களின் சுருதியும் , மெல்லிசைமன்னர்கள் கையாண்ட சுருதி மாறுபாடுகளும், வெவ்வேறாகவும் , சில சமயங்களில் அவற்றின் தாளநடை வித்தியாசமானவையாகவும் இருந்தாலும் அவற்றை வாத்திய இசையில் இசைத்து பார்ப்பதாலும், பாடிப்பார்ப்பதாலும் நுட்பத்திறன் உடையோர் இலகுவில் கண்டுபிடித்து விடலாம்


அவர்களது இசையில் ஊடுருவி நிற்கும் பிற இசையமைப்பாளர்களது இசை கூறுகளை தர விளைவதே இப்பகுதியின் நோக்கம்.


1950 களிலிருந்து இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னர்கள் 1960களின் நடுப்பகுதியில் பிரிந்து சென்ற பின்பும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் தனியே 1980களின் இறுதி வரை உற்சாகத்துடன் படைப்பில் ஈடுபட்ட பேராற்றல்மிக்க படைப்பாளியாவார். ஒவ்வொரு பத்தாண்டுகளில் வரிசைப்படி அவர் இசையமைத்த பாடல்களில் ஹிந்தி திரையிசையின் தாக்கத்தை கேட்க முடியும் என்ற வகையில் அந்தப் பாடல்கள் தரப்படுகின்றன. மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் ஹிந்தி இசையிலிருந்து பெற்றவை:


1950 களில் வெளிவந்த பாடல்கள்

01 எல்லாம் மாயை தானா - தேவதாஸ் [1953] பாடியவர் : ஆர்.பாலசரஸ்வதி தேவி - இசை; சி.ஆர்.சுப்பராமன் 02 ஆனந்தம் ஆனந்தம் ஆனேன் - ஜெனோவா 1953 - AB கோமளா - இசை: விஸ்வநாதன் 03 பரிதாபமே இல்லையா - ஜெனோவா 1953 - லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே - அவன் 1953 - AM ராஜா + ஜிக்கி - இசை: சங்கர் ஜெய்கிஷன் 05 தேவலோக தேவமாதா - ஜெனோவா 1953 - P லீலா - இசை: விஸ்வநாதன் 06 துணை நீயே தேவ மாதா - ஜெனோவா 1951 - பி.லீலா - விஸ்வநாதன் 07 சந்தோசம் வேணுமென்றால் - தேவதாஸ் 1953 - பாலசரஸ்வதி தேவி - இசை: விஸ்வநாதன் 08 செந் தமிழ் தென் மொழியாள் - மாலையிட்ட மங்கை 1958 - மகாலிங்கம் + கோமளா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 09 இரை போடும் மனிதருக்கே - பதிபக்தி 1958- P.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. *** "இரைபோடும் மனிதருக்கே " பாடலில் வரும் சாரங்கி இசை ஹிந்திப் பாடலின் சாரங்கி இசையும் ஒரே மாதிரி இருக்கும் 10 என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் - தங்கப்பதுமை 1959 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி. 11 தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை 1957 - AM ராஜா + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 ஆசையும் என் நேசமும் - குலேபகாவலி 1957 - கே.ஜமுனாராணி குழுவினர் - விஸ்வநாதன் ராமமூர்த்தி. 13 கசக்குமா இல்லை ருசிக்குமா - பத்தினித் தெய்வம் 1957 - TMS + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 14 காமுகர் நெஞ்சில் நீதியில்லை - படம்: மகாதேவி 1957 –ஜமுனாராணி -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 15 சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர - புதையல் 1957 - பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த் 16 அன்னம் போல பெண்ணிருக்க - மாலையிட்ட மங்கை 1958 - பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 17 துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம் - தலைக்கொடுத்தான் தம்பி 1957 - A.M.ராஜா + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 18 தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை 1953 - AM ராஜா + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 19 உனக்காக எல்லாம் உனக்காக - புதையல் 1957 - JP சந்திரபாபு - விஸ்வநாதன் ராமமூர்த்தி.


1960 களில் வெளிவந்த பாடல்கள்

20 நடக்கும் என்பார் நடக்காது - படம்: பணக்காரங்க குடும்பம் 1963 – TMS -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 21 நாளாம் நாளாம் திருநாளாம் - படம்: காதலிக்க நேரமில்லை 1964 –BPS சுசீலா -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 22 அழகே வா அறிவே வா - ஆண்டவன் கட்டளை 1963- சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 23 சிலர் குடிப்பது போல் நடிப்பார் - சங்கே முழங்கு ௧௯௬௭ - LR ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் 24 உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன் 1965 - பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 25 குங்குமப் பொட்டின் மங்களம் - குடியிருந்த கோயில் 1967- TMS + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் 26 அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை 1962- BPS + P.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 27 உங்க பொன்னான கைகள் - காதலிக்க நேரமில்லை 1962- BPS + குழுவினர் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 28 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - பாவமன்னிப்பு 1961 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 29 தொட்டால் பூ மலரும் - படகோட்டி 1964 - TMS சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 30 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - பந்தபாசம் 1963 - TMS + BPS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 31 யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசி தீரும் 1962- பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 32 மௌனமே பார்வையால் - கொடிமலர் 1968 - BPS - இசை:M .S.விஸ்வநாதன் [ நல்ல இன்ஸபிரேசன்] 33 வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய் 1964 -TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 34 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி 1965- சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 35 முத்தான முத்தல்லவோ - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 36 நாங்க மன்னருமில்லை - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் 1963 - GK வெங்கடேஷ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 37 வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா 1962 - TMS BPS சுசீலா - ஜமுனாராணி - விஸ்வநாதன் ராமமூர்த்தி 38 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - கற்பகம் 1962 - Pசுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 39 தேரோடும் எங்கள் [ பாகப்பிரிவினை ] 40 காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே - பாக்கியலட்சுமி 1960 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 41 பாலிருக்கும் பழமிருக்கு - பாவமன்னிப்பு 1960 - சுசீலா + MSV - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 42 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் 1964 - சீர்காழி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 43 யார் அந்த நிலவு - சாந்தி 1967- TMS - இசை விஸ்வநாதன் ஹிந்திப்பாடலின் சாரங்கி இடையிசை இந்தப்பாடலின் இடையிசையை நினைவூட்டும் 44 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு -பந்தபாசம் 1963- TMS+ BPS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 45 கண்கள் இரண்டும் உன்னைக்கண்டு தேடுமோ -மன்னாதி மன்னன் 1960- சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 46 இந்த நிலவை நாம் பார்த்தால் - பவானி - TMS BPS P சுசீலா LR ஈஸ்வரி - விஸ்வநாதன் 47 கண்ணுக்கு குலம் ஏது - கர்ணன் 1964- பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 48 முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும்வரை 1966- TMS + பி.சுசீலா - இசை விஸ்வநாதன். இந்தப்பாடல் படே குலாம் அலி கான் பாடிய ஹசல் இசையில் MeghMalkar ராகத்தில் பாடிய ஒரு பாடலிலிருந்து வந்ததே என்பர். 49 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாவமன்னிப்பு – TMS - - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி . 50 நாளாம் நாளாம் திருநாளாம் - காதலிக்க நேரமில்லை 1964 - P .B.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி . 51 மஞ்சள் முகம் நிறம் மாறி - கர்ணன் 1964 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி 52 ஒருவர் வாழும் ஆலயம் - நெஞ்சி ஓர் ஆலயம் 1962 - TMS + L R ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 53 ஒரே பாடல் உன்னை அழைக்கும் - எங்கிருந்தோ வந்தான் 1972 - TMS - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி 54 என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ் 55 பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை 56 எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி 57 அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சம் மறப்பதில்லை 1963 - PBS + ஜானகி - விஸ்வநாதன் ராமமூர்த்தி 58 காதல் நிலவே கண்மணி ராதா - ஹல்லோ MR ஜமீன்தார் 1963 - PBS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 59 சொல்லத்தான் நினைக்கிறேன் " பாடல் சாயல் 60 பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு 1961 - MSV + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி இருபாடலிலும் வரும் எக்கோடியன் இசை ஒரே மாதிரி இருக்கும்.SDB 61 ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி 1967 – சுசீலா -இசை : விஸ்வநாதன் 62 காதல் சிறகை காற்றினில் விரித்து - பாலும் பழமும் 1961 - சுசீலா + குழுவினர் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 63 பாட்டு வரும் பாட்டு வரும் - நான் ஆணையிட்டால் 1966 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் 64 ஹல்லோ மிஸ் எங்கே போறீங்க - என் கடமை - - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் 65 நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா - காதலிக்க நேரமில்லை 1964 - ஜேசுதாஸ் + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 66 உன்னைத்தான் நானறிவேன் - வாழ்க்கைப்படகு 1962 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 67 என் உயிர்த்த தோழி கேளடி சேதி - கர்ணன் 1964 - சுசீலா + குழுவினர் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 68 பட்டத்துராணி பார்க்கும் பார்வை - சிவந்த மண் 1970 - எல்.ஆர்.ஈஸ்வரி =- இசை: எம்.எஸ் விஸ்வநாதன் 69 துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில் 1969- TMS+ ஈஸ்வரி + குழுவினர் - இசை : விஸ்வநாதன் மெட்டில் " பட்டத்துராணி " பாடலும் , தாள அமைப்பு மற்றும் வாத்திய அமைப்பில் " துள்ளுவதோ இளமை " பாடலின் அமைப்பையும் இந்த ஹிந்தியப்பாடலில் கேட்கலாம் மேல் சொன்ன பாடலின் பாதிப்பை துள்ளுவதோ இளமை என்ற பாடலும் விசுவநாதன் பின்னாளில் இசையமைத்த நினைத்தால் இனிக்கும் படத்தில் வரும் எங்கேயும் எப்போதும் பாடலில் " காலம் சல்லாபக் காலம் " என்ற வரிகளை நினைவூட்டும் பகுதிகளும் வரும். 70 தங்கச்சி சின்ன பொண்ணு - கருப்பு பணம் 1964- சீர்காழி + ஈஸ்வரி + குழுவினர் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 71 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி 1964 - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 72 நடக்கும் என்பார் நடக்காது - பணக்காரக்குடும்பம் 1963 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - பறக்கும் பாவை 1969 - TMS சுசீலா - விஸ்வநாதன் 73 கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன் 1965 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 74 நடக்கும் என்பார் நடக்காது - பணக்காரக்குடும்பம் 1963 - TMS - விஸ்வநாதன் ன் ராமமூர்த்தி 75 உலகம் பிறந்தது எனக்காக - பாசம் 1962 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 76 ராதைக்கேற்ற கண்ணனோ - சுமைதாங்கி 1963 - எஸ்.ஜானகி - விஸ்வநாதன் ராமமூர்த் 77 காதலிலே பற்று வைத்தாள் - பார் மகளே பார் 1963 - பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 78 ஆறோடும் மண்ணில் எங்கும் - பழனி 1963 - TMS + BPS + சீர்காழி - விஸ்வநாதன் ராமமூர்த்தி. தமிழ் பாடலின் இடையே வரும் "போராடும் வேலையில்லை " என்ற பகுதி ஹிந்திப்பாடலின் மேட்டை ஒத்திருக்கும் .பாடல் முடிவில் வரும் தாள அமைப்பு தேவதாஸ் படத்தில் வரும் " சந்தோசம் தரும் சவாரி " தரும் பாடலை ஞாபகப்படுத்துவதை கேட்கலாம். 79 பச்சை மரம் ஒன்று - ராமு 1966 - BPS - விஸ்வநாதன் இந்தப்பாடலில் வரும் மவுத் ஓர்கன் வாசிப்பு ஹிந்தி பாடலை ஒத்திருக்கும். 80 மாதவிப் பொன் மயிலாள் - இருமலர்கள் - 1966- TMS - இசை : விஸ்வநாதன்


1970 களில் வெளிவந்த பாடல்கள்:

81 அடியேனைப் பாரம்மா பிடிவாதம் - வணக்கத்துக்குரிய காதலியே 1976- ஜோலி ஏப்ரகாம் - இசை: விஸ்வநாதன். 82 வழி வழியே வந்த தமிழ் பண்பாடு - நம்ம வீட்டு லட்சுமி 1970- சுசீலா - இசை: விஸ்வநாதன் 83 மஞ்சள் இட்ட நிலவாக - அவள் தந்த உறவு 1977- சுசீலா - இசை: விஸ்வநாதன் 84 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் 1971 - TMS + சுசீலா - விஸ்வநாதன் 85 யாதும் ஊரே யாவரும் கேளிர் - நினைத்தாலே இனிக்கும் 1978- SPB + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் 86 ஆனந்தம் விளையாடும் வீடு - நினைத்தாலே இனிக்கும் 1978- TMS + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் 87 பூமழை தூவி வசந்தங்கள் - நினைத்ததை முடிப்பவன் 1973- TMS - இசை விஸ்வநாதன் 88 மௌனம் கலைகிறது - என்னைப்போல் ஒருவன் 1978- TMS - இசை விஸ்வநாதன 89 கல்யாண சந்தையிலே - சுமதி என் சுந்தரி 1972 - சுசீலா - விஸ்வநாதன் 90 நான் பார்த்தால் பைத்தியக்காரன் - உழைக்கும் கரங்கள் 1974 - TMS - விஸ்வநாதன் 91 ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் - சுமதி என் சுந்தரி 1972 - TMS + சுசீலா - விஸ்வநாதன் 92 என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே 1975 - ஜேசுதாஸ் - இசை : விஸ்வநாதன். 93 வம்சாயி காதல் கவிதைகள் - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - TMS + P சுசீலா - இசை: விஸ்வநாதன் 94 ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - காவியத்தலைவி 1973 -P சுசீலா - இசை: விஸ்வநாதன் 95 சிரித்து வாழ் வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - TMS - இசை : விஸ்வநாதன் 96 தமிழ்ப்பாடலின் பின் இசையை உற்று நோக்கினால் ஒற்றுமையை அவதானிக்கலாம். 97 மல்லிகை என் மன்னன் மயங்கும் - படம்: தீர்க்க சுமங்கலி 1972 – வாணி -இசை : விஸ்வநாதன். 98 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்- தெய்வ மகன் 1968 - TMS + சுசீலா - விஸ்வநாதன் 99 யாதும் ஊரே யாவரும் கேளிர் - நினைத்தாலே இனிக்கும் 1978 - SPB + சுசீலா - விஸ்வநாதன் 100 உனக்காக எல்லாம் உனக்காக - புதையல் 1957 - JP சந்திரபாபு - விஸ்வநாதன் ராமமூர்த்தி 101 அன்பு வந்தது என்னை ஆழ வந்தது - சுடரும் சூறாவளியும் 1972 - SPB - விஸ்வநாதன் 102 என் ராசாவின் ரோஜா முகம் - சிவகாமியின் செல்வன் 1974 - சுசீலா - விஸ்வநாதன் 103 அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் - அன்பைத்தேடி 1975 - ரோஜாரமணி - விஸ்வநாதன் 104 திருமுருகன் அருகினில் - மேஜர் மீனாட்ச்சி 1976- SPB+ வாணி - இசை விஸ்வநாதன் 105 ஊஞ்சலுக்குப் பூ சூட்டி - அவன் தான் மனிதன் 1975- TMS - இசை விஸ்வநாதன் 106 காதல் சரித்திரத்தை - என்னைப்போல்ஒருவன் 1974- TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் 107 மாந்தோரண வீதியில் -பாட்டும் பரதமும் 1974- ட்மஸ்+ சுசீலா - இசை விஸ்வநாதன். 108 வானிலே மேடை அமைந்தது - நினைத்தாலே இனிக்கும் – SPB 109 எங்கேயும் - நினைத்தாலே இனிக்கும் – SPB 110 ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் 1975- TMS - இசை விஸ்வநாதன் 111 மலரே குறிஞ்சி மலரே - படம்: DR சிவா 1975 – ஜேசுதாஸ் + ஜானகி -இசை : விஸ்வநாதன் 112 ஒத்தையடி பாதையிலே - நிமிர்ந்து நில் - 1973 - TMS + சுசீலா - இசை : விஸ்வநாதன் 113 அம்மம்மா தம்பி என்று நம்பி - ராஜபார்ட் ரங்கதுரை 1974 - TMS - விஸ்வநாதன் 114 எத்தனை மனிதர்கள் உலகத்திலே - நீதிக்குத்தலைவணங்கு 1974 - ஜெயச்சந்திரன் - விஸ்வநாதன் 115 தங்கத்தில் முகம் எடுத்து - மீனவ நண்பன் 1975 - ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் - விஸ்வநாதன் 116 காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் - வாழ்ந்து காட்டுகிறேன் 1975 - வாணி ஜெயராம் - விஸ்வநாதன்


1980 களில் வெளிவந்த பாடல்கள்:

117 தேடும் கண்பார்வை தவிக்க - மெல்லத் திறந்தது கதவு 1986- SPB எஸ்.ஜானகி - இசை :MSV + இளையராஜா 118 சிப்பியிருக்குது முத்தமிருக்குது - படம்: வறுமையின் நிறம் சிவப்பு 1980 – SPB + ஜானகி -இசை : விஸ்வநாதன் .


இந்தப்பாடல்கள் எல்லாம் நேரடியான தழுவல்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்தப்பாடல்களுக்கான இசை உந்துதல் இடையிசையாக , ஆரம்ப மெட்டாக , ஹம்மிங்காக என பலவிதங்களில் மெல்லிசைமன்னர் இசையில் ஊடுருவி நிற்கின்றன.


தமக்கு வெளியே உள்ள நல்லிசைகளை தேனீ போல சேகரித்து ,அவற்றை ஆங்காங்கே கலந்து தரும் ஒரு மெல்லிசைமன்னர்களின் ஆற்றலை எண்ணி வியக்கிறோம். அதே போல மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் மேதமையால் அவரது சமகால இசையமைப்பாளர்களும் பின் வந்த இசையமைப்பாளர்களும் அவரது படைப்புக்களை உள்வாங்கிய அ திசயத்தையும் காண்கிறோம்.




பெற்றதும் கொடுத்ததும்.

இதுவரை மெல்லிசை மன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில் இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய திரைப்படங்களின் பாடல்களிலும் அவர்கள் இசை அனுபவங்களையும் பெற்றார்கள்.


மெல்லிசை மன்னர்களின் சமகால இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றின் சாயல்கள் இருப்பதைக் காண்கிறோம். ஆண்டு வரிசையில் அவை மெல்லிசைமன்னர்களுக்கு முன் வந்த பாடல்கள் என்பதை வைத்து நாம் இதைக் காண்கிறோம்.


பெற்றது. வாவேக மன மோகனா - சாகு மகளு 1963 - பி.லீலா - இசை : டி.ஜி.லிங்கப்பா மாதவிப் பொன் மயிலாள் - இருமலர்கள் 1967 - டி.எம்.எஸ் - விஸ்வநாதன்


அகலே நீலஹாசம் - அத்தியதே கண்மணி 1969 - ஜேசுதாஸ் + ஜானகி - இசை பாபுராஜ் மலரே குறிஞ்சி மலரே - டாகடர் சிவா 1975 - ஜேசுதாஸ் + ஜானகி - இசை:விஸ்வநாதன்.


குரு நாத துணை செய்யும் - Njanappana Poonthanam - பி.லீலா - 1600 நூற்றாண்டு பக்திப்பாடல் கண்ணன் வந்தான் எங்கள் - ராமு 1966 - டி.எம்.எஸ் + சீர்காழி - விஸ்வநாதன்


நாம் சாதாரணமாக கேட்கும் ஒலிகளை ஒரு நல்ல கலைஞன் அதை எடுத்தாளும் போது உயர்வாக நிலைபெற்றுவிடுகின்றது. அதனூடே எழும் உணர்ச்சியலை நம்மை புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறது இந்த வகையிலேயே மெல்லிசை மன்னர்கள் பிற பாடல்களிருக்கும் இசைக்கூறுகளை உணர்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தினர்


சினிமா இசை என்பது பெரும்பான்மையான மக்களின் ரசனைக்குரியது ; அவர்களால் ரசிக்கப்படுகின்ற , மற்றெந்த இசையையும்விட .கட்டுப்பாடற்ற விரிந்த களத்தைக் கொண்டுள்ள அதேவேளை இந்த இசை மக்களின் உளப்பாங்கையும் , விருப்பங்களையும் வெளிப்படுத்தும் இசையாகும்.


நதி மூலமும் , ரிஷி மூலமும் காண்பது கடினம் என்பர். ரிஷிகள் உயர்வானவர்கள் என்ற சிந்தனையின் அடிப்படையில் அவர்களின் பூர்வீகம் மற்றும் அவர்கள் யாருக்குப் பிறந்தார்கள் என்பதெல்லாம் பார்க்கக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. அறிவும் ,நல்ல சிந்தனையும் எங்கிருந்தும் வரலாம்.. கண்டுபிடிக்க முடியாத பல நதிகளின் மூலங்களை எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தேடுதல்களால் கண்டுபிடிதித்திருக்கிறார்கள். எல்லைகள் வகுக்கப்பாடாத காலத்திலிருந்து நதிகள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. மனிதனால் வகுக்கப்பட்ட எல்லைகள் ஊடாக அவை இன்று ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நதிகளின் ஊற்று மூலங்கள் வெவேறு பகுதிகளில் கண்காணாத இடங்களில் உருவாகுகின்றன.


இதற்கு உதாரணங்கள் பலவற்றை உலகெங்கும் காட்ட முடியும். ஓரிடத்தில் ஊறும் நீர் பெருகி ஓடும் பகுதிகள் அவற்றை உரிமை கொண்டாடுவதையும் நாம் காண்கின்றோம். நதிமூலம் , ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்ற கருத்தை மீறி மனிதனின் அறியும் ஆர்வம் அவற்றின் மூலங்களைக் கண்டடைந்துள்ளது. இந்தத்தேடுதல் இசையிலும் உண்டு.சாதாரண ஒரு இசைரசிகன் தான் கேட்கும் ஒரு பாடலின் சாயல் வேறு ஒருபாடலில் இருப்பதை உணர்கிறான். அதை நுட்பமாக சிந்தித்து ஆராயும் ரசிகன் அதன் சூட்சுங்களை அறியும்ஆவல் படைத்தவனாகிறான்.


கலைஞர்களிடம் ஒரு சிறு பொறியாக மூளும் அருட்டுணர்வு படைப்புணர்ச்சியை உண்டு பண்ணிவிடுகிறது. அக்கினிக்குஞ்சு என்று பாரதியால் வர்ணிக்கப்பட்ட சிறு நெருப்பு பொறி காட்டுத்தீயெயை உருவாக்குவது போல , சிறு துளி சேர்ந்து வெள்ளமாகி , பெருநதியாக மறுவதுபோல கலைஞர்களின் உள்ளத்திலும் சிறு பொறிகளின் தெறிப்புகழ்படைப்புகளுக்கு ஆதாரமாகின்றன.


மூன்று தசாப்தங்களாக தங்கள் இசையால் மக்களைக் கட்டி வைத்த மெல்லிசைமன்னர்களின் இசையும் ,அவற்றின் மூலங்களையும் , ஓட்டங்களை காண்பது எளிதான காரியமுமல்ல. இசையே வாழ்வாக வாழ்ந்த மெல்லிசைமன்னரின் இசை , அவரது ரசனை , படைப்பாற்றல் உந்துதல் போன்றவை குறித்து மிகக்குறைந்த அளவிலேயே அவரது உரையாடல்களில் அவர் சொல்லியிருக்கின்றார் என்பதால் இசைத்தாகம் மிக்க அவரது படைப்புகளிலேயே நாம் அவற்றை தேட வேண்டியுள்ளது.


படைப்பாற்றலில் ஓங்கியிருந்த அவரது வேகமும் , ஆற்றலும் அவர் பெற்ற மூலப்பொறிகளால் எங்கனம் வளம் பெற்றன என்பதையும் அறிய முடியும். அவரது படைப்பிலேயே நாம் அவரது ரசனையையும் தரிசிக்கின்றோம். அவர் காலத்தில் வாழ்ந்த அவரே ஆகர்ஷித்த இசையமைப்பாளர் வகுத்த இசைமரபின் உள்ளோட்டத்தில் சுழன்றது மட்டுமல்ல அதிலிருந்த பல வடிவ சோதனைகளும் அவரது படைப்பு ரகசியம் ஆகும். குறிப்பாக ஹிந்தி திரையிசையில் மாபெரும் எழுச்சியை தந்த நவுசாத் அலியின் இசை மீது அளவற்ற பிரியமும் , அவரை தனது வழிகாட்டியாகவும் கொண்டவர் என்பதை மெல்லிசைமன்னர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கின்றார். தனது தகமை , திறமை எல்லாவற்றிற்கும் நவுசாத்தின் இசையே காரணம் எனவும் கூறியிருக்கின்றார்.


ஆனாலும் அவரது படைப்பின் வீச்சு நவுசாத்தை தாண்டியும் எல்லை கடந்து பலதரப்பட்டதாக இருப்பதையும் நாம் காண்கிறோம். சென்ற பகுதியில் ஹிந்தி திரையிசையிலிருந்து நல்ல இசைக்கூறுகளையெல்லாம் தழுவியும் ,மருவியும் இசைவுபட வெளிப்படுத்திய பாங்கு அவரது கலாமேன்மையைக் காட்டுவனவாகும்.


தமிழ் திரையில் ஹிந்தியில் நிழல்படாத இசையமைப்பாளர்கள் இல்லை என்று சொல்லலாம். 1940கள் தொடங்கி 1980கள் வரை அதன்பாதிப்பை நாம் காணமுடியும்.நாம் பெரிதாக நினைக்கும் பல பழைய இசையமைப்பாளர்களும் ஹிந்திப்பாடல்களை அப்படியே தழுவி இசையமைத்திருக்கிறார்கள். அன்று முன்னணியிலிருந்த ஜி.ராமநாதன் தொடங்கி புதுமை முயற்சிகளை மேற்கொண்ட சி.ஆர்.சுப்பராமன் என அனைவரும் தங்கள் படைப்பூக்கத்தின் தூண்டு புள்ளியாக ஹிந்தி பாடல்களை பயன்படுத்தினர்.


அந்தக்காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் இயங்கிய டி.ஆர்.சுந்தரம் நேரடியாக ஹிந்திப்பாடல்களை பிரதியெடுக்கும் படி இசையமைப்பாளர்களிடம் வேண்டிக் கொள்வாராம். ஆனாலும் " நம்மால் சொந்தமாகவும் இசையமைக்க முடியும் " என்று ஜி .ராமநாதன் விலகிச் சென்றார்.


ஆனாலும் ஹிந்திப்பாடல்களை ஆங்காங்கே பிரதி எடுக்கும் வேலை நடந்து கொண்டே தான் இருந்தது. 1970 கள் வரை மாடர்ன்தியேட்டர்ஸ் இசையமைப்பாளர் வேதா வை அமர்த்தி பல ஹிந்திப்பாடல்களை பிரதியெடுக்க வைத்தது. குறிப்பாக ஜெய்சங்கர் நடித்த படங்களில் அவை வெளிவந்தன. " நான் மலரோடு தனியாக " - " இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது " போன்ற இனிய பாடல்களும் , யார் நீ படத்தில் முழுமையாக முழுப்பாடல்களும் பிரதி செய்யப்பட்டு வெளிவந்தன.


பிரதி எடுப்பது , பிறரது இசையைக் கையாள்வது பற்றி பிரபல பாடகர் ஜேசுதாஸ் பின்வருமாறு கூறுகிறார் நான் பல இசையமைப்பாளர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் சொன்னவைகளை மனதில் வைத்து சொல்கிறேன். ஒரு பாடல் என்பது முதலில் அவரது சொந்தமாக இருக்க வேண்டும். ஆனால் அதை கேட்பவர்கள் " இல்லை இது பத்து வருடத்திற்கு முன்னரேயே வேறு ஒரு இடத்தில் வந்திருக்கிறது " என்று யாரவது கூறினால் அது அவருடையது இல்லை என்றாகி விடுகிறது. அந்த மாதிரி யாரும் சொல்லக்கூடாது.  ஆனால் எல்லாம் ஒரே பாணியில் முழுமையாக , சுத்தமாக இருக்க முடியாது. இருக்கிறது ஏழு சுரங்கள் தான் : இருக்கிறதிலே செய்து கொண்டிருக்கின்றார்கள். அதிலே ஏதும் வரலாம் "


சில வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் கண்ணதாசன் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஸ்வநாதன் கண்ணதாசனின் மகள் விசாலி எழுதிய பாடலை ரசிகர்களுக்காக தான் இசையமைக்கும் முறையைக் காண்பித்த போது எங்கோ உருவான மெட்டு மெல்ல மாறி " எனக்கொரு காதலி இருக்கின்றாள் " என்ற பாடல் மெட்டுக்கு வந்து விட்டது. உடனே அதை உணர்ந்த விஸ்வநாதன் அதை மீண்டும் பாடி புதிய டியூனுக்கு மடை மாற்றிக் காட்டினார்.


ஜேசுதாஸ் கூறியது போல "இருப்பது ஏழு சுரங்கள்" , அதற்குள் எல்லாவிதமான இசையும் அடக்குவதால் இசையமைப்பாளர்கள் தாம் கேட்டு , ரசித்து ,இன்புற்ற இசையின் தாக்கம் அவர்களையறியாமலேயே வந்து விடுவதுண்டு. அது குறித்து விஸ்வநாதனே மிக அருமையாக பின்வருமாறு கூறுகிறார்/


” இந்த இசையமைப்பு ,பாட்டெழுதுவது என்கிற தொழிலிலே நமக்குப் பிடிச்ச விசயங்கள் எங்கோ நமக்கு அறியாமல் ,ஒளிஞ்சு நிற்கும். வேறு யாராவது கம்போசர்களைக் கேட்டாக் கூட அந்தச் சாயல் வந்திடும் , இல்லை அந்தச் சாயல் அறியாமல் வந்திடும். அதனாலே அதனைத் திருடினேன் என்று சொல்லக் கூடாது. பாக்கியுள்ளவர்கள் திருடினேன் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒழிச்சு வைக்க வேணும்.அதனை ஓபன் ஆகத் திருடினேன் என்றளவுக்கு வைச்சுக்கக் கூடாது. நானும் காப்பி அடிச்சிருக்கேன் .என்னைப் பார்த்து சிலர் காப்பி அடிக்கிறதா சொல்லிக்கிறாங்க! இருக்கலாம் , But அதை ஒழிச்சு வைக்கணும்."


இசையில் தாம் அனுபவித்த பிற இசைகளின் சில இனிய இசைக்கூறுகளை , இசை ஒலிக்கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றை ஆங்காங்கே இசை அடுக்குகளில் சேர்ப்பதும் , இனிய ஒலிநயங்களை சேர்ப்பதும் அதன் இயல்பிலே நிறைந்து ஒன்றுதலும் சற்றே விலகி அதன் மென் நளினங்களைக் காட்டி செல்வதும் எங்கோ தொடங்கி இனிமையை நீக்கமறக் கொடுக்கும் உத்திகளை உலகெங்கும் காண்கிறோம்.


மேலைத்தேய செவ்வியலிசையில் இந்த விதமாக இசையின் நுட்பங்களையெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு பரீட்சாத்தமாக செய்து பார்த்தவர்கள் மேலைத்தேய இசைக்கலைஞர்கள். அவர்களில் ஜே.எஸ்.பாக் , மொசார்ட் , ஹைடன் போன்றவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.


மேலைத்தேய செவ்வியல் இசையின் இளமை குன்றாத இனிமைக்கு எடுத்துக்காட்டாடாக விளங்கியவர் மொஸாட் என்ற இசைக்கலைஞன். இவரது சமகாலத்தவரும், வயதில் மூத்தவருமான.ஹைடனின் பல படைப்புகளில் மொஸாட்டின் பாதிப்பு அதிகம் இருப்பதை நாம் காணலாம். அதனை அவர்கள் Musical variations என்று அழைத்தனர்.


இயற்கையில் தாம் காணும் நல்லவற்றை மனிதன் தன்வயப்படுத்தி வளர்ந்த நீண்ட பழக்க தோஷம் அழகியல் கலைவடிவங்களிலும் ஆழ தடம் பதித்துள்ளது. கால வளர்ச்சிக்கு ஏற்ப கலைவடிவங்களிலும் அவை மாற்றம் பெற்று வளர்ந்திருக்கிறது. ஒரு மூலத்திலிருந்து கிடைக்கும் அம்சங்களை ஒவ்வொரு கலைஞர்களும் தங்களுக்குரிய வகையில் பயன்படுத்தி மாறுபாடான பலவித பரிமாணங்களை எட்டுவதும் , அதன் விளைவாய் மாற்று வடிவங்களின் மீதான நுண்பார்வை பின் அதன் விளைவாய் அதை ஒப்பீடு செய்யும் ஒப்பியல் என்கிற ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்கிறது.


பிறரது படைப்புகளைக் கையாள்வது அவற்றை விரிவாக அழகு சேர்த்தெடுத்து செல்வது அல்லது இட்டுக்கட்டுவது மற்றும் பல முனைகளில் ஊடாடுவது , பரிமாற்ற உள்வினையாற்றுவது என படைப்பின் விஸ்தீரணங்களைக் காட்ட முயலும் போது அவை மீள , மீள பயன்படுவதால் அவை சலிப்புக்கும் விமர்சனங்களுக்கும் இலகுவில் உள்ளாக்கப்படுகின்றன. ஆனாலும் பொதுவாக கலைகளில் இவ்விதமான ஒரு சில முக்கிய கூறுகள் மீள மீள பயன்படுத்துவதும் மரபாக இருந்து வந்துள்ளதை காண முடியும். அவை கேலிக்கும் , விமர்சனங்களுக்கும் உள்ளானதை நாடக வரலாற்றிலும் காண்கிறோம்


ஆங்கிலேய காலனித்துவவாதிகளால் சேக்ஸ்பியரின் நாடகங்கள் உலகெங்கும் பரப்பபட்டன. தன்னிகரில்லாத மேதை என்று நாடக உலகில் பேசப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங்களில் பல ஏற்கனவே பயன்படுத்தப்படட கதைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன.


ஷேக்ஸ்பியரை தங்களது ஆதர்சக்கவிஞன் என அவருக்குப் பின்வந்த பலர் கூறிக்கொண்டனர். அவர்களில் ரொமாண்டிக் கவிஞர் ஜான் கீட்ஸ் (1795-1821) ஷேக்ஸ்பியரால் மிகவும் கவரப் பெற்றார், தனது மேசைக்கருகே சேக்ஸ்பியரின் மார்பளவு சிலை ஒன்றை அருகில் வைத்திருந்தார்.அதன் மூலம் ஷேக்ஸ்பியர் தனது படைப்பாற்றலைத் தூண்டுவார் என்று ஜான் கீட்ஸ் நம்பினார் . கீட்ஸின் கவிதைகளில் ஷேக்ஸ்பியரின் சாயல் இருப்பதாகவும் மற்றும் ஷேக்ஸ்பியரின் மனத்தகத் தோற்றங்கள் நிறைந்தவை என்றும் கூறப்படுகிறது.


ஷேக்ஸ்பியரை வணங்கியவர்களை " Bardolatry " என்று கேலி செய்தார் அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா [1865-1950 ] . ஆனாலும் ஷேக்ஸ்பியரை ரகசியமாக பாராட்டினார் என்றும் தனது நெருங்கிய நண்பர்களிடம் அடிக்கடி சேக்ஸ்பியரின் மொழியறிவு குறித்த வியந்து பாராட்டியுமிருக்கின்றார் எனவும் அறியக்கிடைக்கின்றது.


இது போன்ற கருத்துக்கள் இருந்தாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் ஷேக்ஸ்பியரை முன்மாதிரியாகக் கொண்டது மட்டுமல்ல , பல நாவலாசிரியர்களும் தங்கள் படைப்புகளுக்கு சேக்ஸ்பியரின் தலைப்புகளை பயன்படுத்தினர்.


ஆங்கில இலக்கியத்தின் கொடுமுடி என புகழப்பட்ட ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. ஆங்கில நாடக வரலாற்றில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்ததாக அவரது காலத்தில் பெயர் எடுத்தவர் பென் ஜோன்சன்


சேக்ஸ்பியரின் சமகாலத்தவரான பென் ஜோன்சன் நாடக்கலைஞராவர். ஷேக்ஸ்பியரை விட ஒன்பது வயது இளையவர். சேக்ஸ்பியரின் வாரிசு என அறியப்பட்டவர். பின்னாளில் அவர் ஷேக்ஸ்பியர் பற்றி பல விமர்சனங்ககளை வைத்தார். ஷேக்ஸ்பியர் மீது முதன்முதலில் கடுமையான விமர்சனத்தை வைத்தவரும் பென் ஜோன்சனே ! அதில் முதன்மையானது ஷேக்ஸ்பியரிடம் கலை இல்லை என்பதாகும்.


பென் ஜோன்சன் [ Ben Jonson 1572 -1637 ] ,சேக்ஸ்பியர் குறித்து சொன்ன கருத்து மிகக்கடுமையானவையாக இருந்தன . சேக்ஸ்பியரின் படைப்புகள் எல்லாம் "பாசிபிடித்தவை " [ Mouldy ] என்றார். அவரது படைப்புகள் எல்லாம் அவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியவை மட்டுமல்ல. சேக்ஸ்பியரின் படைப்புகளில் The Tempest நாடகம் ஒன்று மட்டுமே பிற வடிவங்களிலிருந்து பெற்றது என்பதற்கான அடையாளம் காணப்படவில்லை என்றார் பென் ஜோன்சன். அதிகம் திருடியவர் என்ற திருட்டுப்பட்டம் பெற்றவர் சேக்ஸ்பியர்.


இது ஷேக்ஸ்பியர் பற்றிய கடுமையான ஓர் விமர்சனம் என்றாலும் சேக்ஸ்பியரின் தனித்தன்மையும் , அவரது படைப்பாற்றலின் திறனுக்கு அடிப்படைக்காரணங்களாக அவரது வாசிப்பு , அதனை உள்வாங்கும் சக்தி ,அதனூடே எழும் கற்பனைசக்தி, அவற்றை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் போன்றவை ஏனைய கவிஞர்களான ஸ்பென்சர், மில்டன், பர்ன்ஸ், கீட்ஸ் மற்றும் டென்னிசன் போன்றோரைவிட அதிகமாக இருந்தது என்பர். மத்திய காலத்தின் தலை சிறந்த ஆங்கிலேயக் கவிஞரும் , எழுத்தாளரும் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனவும் போற்றப்படுகின்ற Geoffery Chaucer [ 1340 - 1400 ] என்பவர் சேக்ஸ்பியரின் பேரபிமானத்திற்குரியவராக திகழ்ந்தார். The Canterbury Tales என்ற படைப்பு Geoffery Chaucer ன் புகழுக்கு எடுத்துக்காட்டாகும்.இவரின் கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களை அமைத்தார்.


கிரேக்க தத்துவவாதியும் , சுயசரிதை எழுத்தாளருமான Plutarch [ கி.பி.46 - 120 ] என்பவர் எழுதிய Parallel Lives என்ற ஆக்கத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து தனது Antony and Cleopatra, Julius Caesar, Coriolanus, Timon of Athens போன்ற நாடகங்களுக்கான விஷயங்களை எடுத்தாண்டார். பலரது ஆக்கங்களை அவர் இரவல் வாங்கினாலும் அதை படைப்பூக்கத்துடன் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதுவே சேக்ஸ்பியரின் பலம் என்று அவரது படைப்புகளை ரசிப்பவர்கள் கருதுகின்றார்கள். ஆனாலும் இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி உலக இலக்கியத்தில் பெருங்கலைஞர்களுக்கு சமதையாக பேசப்படுபவர் சேக்ஸ்பியர்.


ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியது போலவே பண்டைய கதைகள் மீள , மீள சொல்லப்பட்டு வருகின்றன தென்கிழக்கு ஆசியாவில் மகாபாரதம் , ராமாயணம் போன்ற கதைகள் பல்வேறு சமூகங்களிலும் வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. வால்மீகியின் உள்ளடகத்தை எடுத்துக் கொண்ட கம்பன் தனது கவித்திறத்தால் அதை கம்பராமாயணம் ஆக்கியது போல!


“ வால்மீகரின் சீதைப்படிமம் கம்பனாலும் , எழுத்தச்சனாலும் , துளசிதாசராலும் , குமாரனாசானாலும் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீதைப்படிமத்திலும் காலத்தின் சிந்தனையும் , கவிஞரின் அகவைய உள்ளடக்கத்தின் முத்திரையையும் காண்கிறோம் " என்பார் பேராசிரியர் வானமாமலை.[ இலக்கியத்தில் உருவமும் , உள்ளடக்கமும் - பக்கம் 17


சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக அரங்கம் பார்சி நாடகத்தை உள்வாங்கி தமிழ் மக்கள் இசையையும் இணைத்த வண்ணம் வளர்ந்தது. சங்கரதாஸ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல சம்பந்தமுதலியாரின் நாடகங்கள் சேக்ஸ்பியரின்நாடக மொழி பெயர்ப்புகளுடன் வசனங்களையும் ,தமிழர் பாரம்பரியங்களையும் இணைத்து உருவாகின.


பழைய இலக்கியங்களும் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளது என்பதை இலக்கிய வரலாற்றில் நாம் காண்கிறோம். மக்கள் வாழ்வும் , நாகரீகமும் மாறும் போது கலைவடிவங்களிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. படைப்பு முனைப்பு அதிகம் உள்ளவர்கள் தங்கள் ஆற்றல்களுக்கேற்ப பல்வேறு நுட்பங்களுடன் கலந்து தரும் போது அவை புத்துப்பொலிவும் பெறுகின்றன. மக்களுக்கு நன்கு பழக்கமான பழங்காலக் கதைகள் மீண்டும்சொல்லப்படுவதும் ரசிக்கப்படுவதும் அதுவே மரபாக இருக்கிற சூழ்நிலையில் அவை மக்களின் சொத்தாகக் கருதப்படுகின்றன. பொதுச் சொத்தாக இருக்கும் அவற்றை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை தங்களது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.


ஆனால் சினிமாப்பாடல்கள் என்பது புதியதொரு கலைவடிவமாக இருப்பதால் அதன் முன்னோடிகளாக மேல்நாட்டு இசையும் , அவர்களை அடியொற்றியே கலப்பிசையாக உருவான ஹிந்தி திரைப்பட இசையும் நாம் கேட்டுப் பழகாத சில ஒலிநயங்களை கொண்டிருக்கும் நிலையில் அதே போல தமிழிலும் அழகுடனும் ,சுவையுடனும் ,உணர்ச்சியுடனும் இழைத்து தரும் போது அவற்றின் வேறுபாடு புதிய எழுச்சியை உருவாக்குகின்றன.


மெல்லிசைமன்னர்கள் இசையில் அதிகமாக ஊடுருவிய லத்தீன் அமெரிக்க மற்றும் ஹிந்தித்திரையிசையின் இனிய பக்கங்களை நாம் காண முடியும். தமிழ் திரைப்பட இசையமைப்பு என்பது இயந்திரமாக்கப்பட்ட நிலையில் ஒரு படத்திற்கு ஐந்து ,ஆறு பாடல்கள் என விதிக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாடல்களுக்கான நிறைந்து ஒன்றக்கூடிய ஒலிநயங்களை தமிழுக்கு அப்பாலும் தேட வேண்டிய நிர்பந்தம் இசையமைப்பாளர்களுக்கு உண்டாகிறது.


ஒருவகையில் இதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் இந்தியாவின் மகாகவி என்று போற்றப்பட்ட ரவீந்திரநாத் தாகூர்! தாகூரின் உலக இசை ஈடுபாடு இந்திய இசையுடனான கலப்பிசைக்கு உந்துதல் கொடுத்தது.


ஆங்கிலக்கல்வியை முதலில் பெரும் வாய்ப்பைப் பெற்ற வங்கத்தில் தாகூரின் அறிவு ஒளி பலதிசைகளிலும் பரவிய நிலையில் மேற்கத்தேய இசையின் மீதான ஈடுபாடும் அமைந்தது. வங்காளத்தில் சத்யஜித்ராய் , சலீல் சௌத்ரி போன்ற கலைஞர்கள் தங்கள் குழந்தைப்பருவத்திலேயே மேற்கத்தேய செவ்வியலிசை கலைஞர்களின் படைப்புகளை இசைத்தட்டுக்களில் கேட்கும் வாய்ப்புகளை பெற்றனர்.


.பின்னாளில் சலீல் சௌத்ரி தனது வீரியமிக்க இசையால் ஹிந்தி திரையுலகில் வாத்தியக்கலவைகளில் மேலை சங்கீதத்தை மிக உன்னதமாகப் பயன்படுத்தி ஹிந்தி திரையிசையை மெருகேற்றினார்.


இதில் ஆச்சர்யம் கலந்த உண்மை என்னவென்றால் திரை இசையமைப்பாளர்களுக்கு ஏதோ ஒரு இசையில் இருந்து ஏதோ ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் அதிலிருந்து அற்புதமான , இனிமைமிக்க இசையை முழு நிறைவுடன் வழங்கும் அற்புத ஆற்றல் இருந்தது. உதாரணமாக பீத்தோவன் இசையமைத்த ஒரு சிறிய பகுதியை வைத்துக் கொண்டு சலீல் சௌத்ரி ஒரு விதமாகவும் மெல்லிசைமன்னர் வேறு விதமாகவும் நிறைவான பாடலை தந்ததை நாம் இங்கே குறிப்பிடலாம்.


பீத்தோவனின் இசைவடிவமான Fur Elise என்ற படைப்பு தமிழில் " மெல்லிசைமன்னரின் இசையில் "என் மனது ஒன்று தான் " என்ற பாடலின் பல்லவையாக மட்டும் வெளிவந்தது. அதே போல ஹிந்தியில் அதற்கு முன்பே சலீல் சௌத்திரியின் இசையிலும் அப்பாடல் பல்லவையாக வெளிவந்தது. ஆயினும் இரண்டு பாடல்களும் ஆரம்பங்கள் ஒன்றாக இருந்த போதிலும் அவற்றின் பிபகுதிகள் வெவ்வேறு பாடல்களாக அமைந்தன.


பிற இசையமைப்பாளர்களிடமிருந்து மெல்லிசைமன்னர்கள் பெற்ற இசை அனுபவங்கள் இதுவரை பார்த்தோம்.


அவர்கள் தங்கள் இசைப்படைப்புகளுக்கு கலை உணர்வுடன் புதுப்புது ஆடைகளைப் புனைந்து மிக இயல்பாக வேறு வேறு பாடல்கள் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். சில சமயங்களில் தங்கள் மேல் திணிக்கும் பலவந்தங்களை திசை திருப்பும் வகையிலும் நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பது போல அவர்களை அறியாவண்ணம் அவர்களே நிராகரித்த மெட்டுக்களை அல்லது கேட்ட பாடல்களை , அவர்களே இது புதிதான பாடல் என்று உணர வைத்த சாமர்த்தியத்தையும் காண்கிறோம். மெல்லிசைமன்னர் தானே இசையமைத்த சில பாடல்களை எடுத்து அவற்றிற்கு புது ஆடை புனைந்து கொடுத்தது போல ஒரே மெட்டை வைத்து வெவ்வேறு ஜாலங்கள் காட்டி அல்லதுமேலே கூறியது போல பலவிதமான Musical Variations களில் அவற்றை அமைத்து காட்டினர். சில சமயங்களில் ஒரே சந்தத்தை வைத்து வித்தை காட்டினார்கள்.


வீடு வரை உறவு வீதி வரை மனைவி மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு பேசுவது கிளையா பெண்ணரசி மொழியா போன்ற பாடல்கள் ஒரே சந்தத்தில் அமைந்திருப்பதையும் , இவற்றை மாறி மாறிப் பாடிக்கொண்டு இருக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.


நாளாம் நாளாம் திருநாளாம் நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை மல்லிகை முல்லை பூப்பந்தல் …


இந்தப்பாடல்களும் மேலே குறிப்பிட்ட பாடல்களைப் போலவே ஒன்றை ஒன்று மருவி பாடிக்கொண்டே இருக்கலாம்


01 சுதந்திர பூமியில் பலவகை - - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் பூமியில் பறப்பதும் வானத்தில் - சாந்தி நிலையம் - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்


02 கால்கள் நின்றது நின்றது தான் - பூஜைக்கு வந்த மலர் - ராகவன் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும் - டி.எம்.எஸ் சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்த இரு பாடல்களுள் " நாளாம் நாளாம் " பாடல் ஒளிந்திருக்கிறது


03 நினைக்கத்தெரிந்த மனமே - ஆனந்த ஜோதி - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி உறவு என்றொரு சொல் இருந்தால் - இதயத்தில் நீ - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி


04 அத்தை மக்கள் ரத்தினத்தை - பணக்காரக்குடும்பம் - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசிதீரும் - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி


05 அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை - பி.பி.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பருவத்தில் கொஞ்பணம் படைத்தவன் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி


06 கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பவளக்கொடியிலே முத்துக்கள் - பணம் படைத்தவன் - டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்ராம நாம் ஒருவரை ஒருவர் - குமரிக்கோட்டம் - டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி


07 தேவியிடம் தேடித் போவேனோ - சில நேரங்களில் சில மனிதர்கள் - வாணி - இசை : விஸ்வநாதன் கைகொட்டி சிரிப்பார்கள் - அபூர்வ ராகங்கள் - ஷேக் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி


08 தண்ணிநிலவு தேனிறைக்க - படித்தால் மட்டும் போதுமா - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி அத்தை மகனே - பாதகாணிக்கை - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி நிலம் பார்த்து மெதுவாக உனைநாடாவா ….அத்தை மகனே ...யார் யார் யார் அவள் யாரோ.


09 அன்புள்ள மான்விழியே - குழந்தையும் தெய்வமும் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் கொடியில் இரண்டு மலர் உண்டு - குழந்தையும் தெய்வமும் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் - - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்


10 புது வீடு வந்த நேரம் - எங்க பாப்பா - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் மன்னிக்க வேண்டுகிறேன் - இருமலர்கள் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்


11 இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் காதலின் போன் வீதியில் - பிள்ளையோ பிள்ளை - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்


12 காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் - பாக்கியலட்சுமி 1961 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆதி மனிதன் காதலுக்கு பின் - பலே பாண்டியா 1961 - பி.பி.எஸ். ஜமுனாராணி - இசை விஸ்வநாதன் ராம.


13 சொல்லவோ சுகமான கதை சொல்லவோ - பாக்கியலட்சுமி 1961 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி நினைத்தால் சிரிப்பு வரும் - பாமா விஜயம் - சுசீலா- இசை விஸ்வநாதன்


14 பொட்டு வைத்த முகமோ - Sumathi என் சுந்தரி 1961 - எஸ்.பி.பி - இசை விஸ்வநாதன் சுமை தங்கி சாய்ந்தால் - தங்கப்பதக்கம் 1971 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன்


16 ஓ.. லட்சுமி ஓ ஷீலா - நீல வானம் 1968 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் நல்வாழ்த்து நான் சொல்லுவேன் - பட்டிக்காடா பட்டணமா 1973 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் [ அது தான் மானம் …]


17 பாட்டொன்று தருவார் - சர்வர் சுந்தரம் 1968 - ஈஸ்வரி + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி சிலை எடுத்தான் ஒரு - சர்வர் சுந்தரம் 1968 - ஈஸ்வரி + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி


18 ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் - என் கடமை 1964 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி கடலோரம் வாங்கிய காற்று - ரிக்சாக்காரன் 1972 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன்


18 புன்னகையில் ஒரு பொருள் வந்தது - பவானி 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் சிரித்தாள் தங்கப்பதுமை - Kannan என் காதலன் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய் 1964 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதியபூமி 1968 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி


19 அமைதியான ந்தியினிலே ஓடம் - ஆண்டவன் கட்டளை 1964 - டி.எம்.எஸ் + சுசீலா- விஸ்வநாதன் ராம. அந்த மாப்பிள்ளை காதலித்தான்- பணம் படைத்தவன் 1964 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் அம்மா கண்ணு சும்மா சொல்லு - ஞான ஒளி 1971 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் வட்ட வட்ட பாறையில் வந்து நிற்கும் - பழனி 1965 - சீர்காழி + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி


20 வெத்திலை போட்ட பத்தினி - வீராதிருமகன் 1964 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி சொந்தமும்மில்லை பந்தமுமில்லை - ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் 1964 - ஜி .கே. வெங்கடேஷ் - இசை வி


21 தானே தனக்குள் ரசிக்கின்றாய் - பேரும் புகழும் - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் அழகென்னும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பபவன் - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்


22 நானும் கூட ராஜா தானே - புன்னகை - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் - ராஜபார்ட் ரங்கதுரை - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் நான் பார்த்தா பைத்தியக்காரன் - உழைக்கும் கரங்கள் - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்


23 கண்ணனை நினைக்காத நாளில்லையே - சீர்வரிசை 1974- எஸ்.பி.பி + சுசீலா - இசை விஸ்வநாதன் ஜமுனா நதி இங்கே - கௌரவம் 1974 - எஸ்.பி.பி + சுசீலா - இசை விஸ்வநாதன்


24 பெற்றெடுத்த உள்ளம் என்றும் - கண்ணா நலமா 1972 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் சத்தியத்தின் சோதனைக்கு - கிரககப்பிரவேசம் 1972 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்


25 இது மார்கழி மாசம் - பிராப்தம் 1973 - ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் கல்யாண வளையோசை - ஊருக்கு உழைப்பபவன் 1974 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன்


26 மார்கழி பனியில் - முத்தான முத்தல்லவோ 1976 - .எஸ்.பி.பி - இசை விஸ்வநாதன் மன்மத லீலை மயக்குது ஆளை - மன்மதலீலை 1976 - .எஸ்.பி.பி - இசை விஸ்வநாதன் எதற்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன் 1974 - .எம்.எஸ்.வி - இசை விஸ்வநாதன் வானிலே மேடை அமைந்தது - நினைத்தாலே இனிக்கும் 1979 - .எம்.எஸ்.வி - இசை விஸ்வநாதன்


27 தண்ணிலவு தேனிறைக்க - படித்தால் மட்டும் போதுமா 1962 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி அத்தை மகனே - பாதகாணிக்கை 1962 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி [ நிலம் பார்த்து மெதுவாக] * யார் ஆர் யார் அவள் யாரோ - பாசமலர் 1961 - பி.பி.எஸ் + சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி


28 மெல்ல வரும் காற்று - கௌரி கல்யாணம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் நல்ல இடம் நான் வந்த இடம் - கௌரி கல்யாணம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன்


29 கல்யாண வளையோசை கொண்டு - ஊருக்கு உழைப்பவன் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் கண்ணுபடப் போகுது கட்டிக்கையா - சொந்தம் - எல்.ஆர் ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்


30 விளக்கேற்றி வைக்கிறேன் - சூதாட்டம் 1971 - சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் இதோ எந்தன் தெய்வம் - பாபு 1972 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்


கொடுத்தது.


மெல்லிசைமன்னர்களின் இசையில் பிற இசைஅமைப்பாளர்களின் தாக்கத்தை காணும் நாம் , அவர்களுக்குப் பின்வந்த இசையமைப்பாளர்களும் , ஏன் அவர்களது சமகால இசையமைப்பாளர்களும் இவர்களுடைய இசையில் உந்துதல் பெற்றதையும் காண்கிறோம். தமிழில் அதிக புகழபெற்ற சில பாடல்களில் இவர்களது தாக்கத்தை நாம் வியப்புடன் பார்க்கின்றோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின் " மன்னவன் வந்தானடி தோழி " என்ற புகழ் பெற்ற பாடலை எடுத்துக்கட்டாகக் கூறலாம்.


01 விந்தியம் வடக்காக - தெனாலி ராமன் 1956 - வி.என்.சுந்தரம் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி அம்பகிகாபதி படத்தில் வரும் தொகையறாக்கள் இவ்விதமாக இருக்கும்


02 வெட்கமாய் இருக்குதடி - பார் மகளே பார் 1964 - சூலமங்கலம் + லீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி மன்னவன் வந்தானடி - திருவருட்செல்வர் 1967 - சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்


03 கல்யாண வளையோசை கொண்டு - ஊருக்கு உழைப்பவன் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் மாம் பூவே சிறுமைனாவே - கல்யாணமாம் கல்யாணம் - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : சந்திரபோஸ்


04 ஒத்தையடி பாதையிலே - கல்யாணமாம் கல்யாணம் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் தன்னந்தனியாக நீ வந்த போது - சங்கமம் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : ராமமூர்த்தி


05 நாளாம் நாளாம் - காதலிக்க நேரமில்லை - பி.பி.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் பூத்திருக்கும் விழியெடுத்து - கல்யாண மண்டபம் - பி.பி.எஸ் + சுசீலா - இசை : பார்த்தசாரதி


06 பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் - தெனாலி ராமன் 1956 - வி.என்.சுந்தரம் - இசை விஸ்வநாதன் வர சொல்லடி அவனை - பாதுகாப்பு - சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


07 சித்திர பூவிழி வாசலிலே - இதயத்தில் நீ 1963 - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி நவராத்திரி சிவ ராத்திரி - நவராத்திரி 1963 - சுசீலா - இசை : மகாதேவன்


08 ராஜாவின் பார்வை - அன்பே வா 1966 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்த ராகமும் இந்த தாளமும் - என் ரத்தத்தின் ரத்தமே 1990 - சந்தியா - இசை : சங்கர் கணேஷ்


09 பொன்னெழில் பூத்தது - கலங்கரை விளக்கம் 1966 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் எனது விழியில் உனது பார்வை - நான் ஏன் பிறந்தேன் 1972 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : சங்கர் கணேஷ்


10 அழகுக்கு அழகு - வீரத்திருமகன் 1964 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி காலங்கள் தோறும் திருடர்கள் - இருவர் உள்ளம் 1964 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை கே.வி.மகாதேவன்


11 நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும் 1961- டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் ராம கடலோரம் வீடு கட்டி - கஸ்தூரி திலகம் 1974 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை ஜி.தேவராஜன்


12 வெட்கமாய் இருக்குதடி - பார் மகளே பார் 1964 - சூலமங்கலம் + லீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி மன்னவன் வந்தானடி - திருவருட்செல்வர் 1967 - சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்


13 நான் நன்றி சொல்வேன் என் - குழந்தையும் தெய்வமும் 1965 - சுசீலா - இசை விஸ்வநாதன் பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு - தாய்க்கு தலை மகன் 1966 -டி.எம்.எஸ். + சுசீலா - இசை KVM


14 பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டிவரை உறவு 1967 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் கண் ஒரு பக்கம் - நிறைகுடம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : வி.குமார்


15 ஆறோடும் மண்ணில் எங்கும் - பழனி 1963 - டி.எம்.எஸ் + சீர்காழி + பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் நேரான நெடுஞ்சாலை - காவியத்தலைவி 1969 - எம்.எஸ்.வி - இசை : வி.குமார்


16 இறைவன் உலகத்தை படைத்தானா - உனக்காக நான் 1979 - ஜேசுதாஸ் - இசை : விஸ்வநாதன் பூ கொடியின் புன்னகை - இருவர் 1986 - சந்தியா - இசை : ஏ.ஆர். ரகுமான்


17 தங்கப்பதகத்தின் மேலே - எங்கள் தங்கம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் என்ன விலை அழகே - காதலர் தினம் 1998 - உன்னி கிருஷ்ணன் - இசை : ஏ.ஆர். ரகுமான்


18 பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி1964- டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பொன்மானைத் தேடி - எங்க ஊரு ராசாத்தி 1980 - வாசுதேவன் + சைலஜா - இசை கங்கை அமரன்


19 வா வெண்ணிலா - மெல்ல திறந்தது கதவு1986 - எஸ்.பி.பி + ஜானகி - இசை விஸ்வநாதன் ஏ வெண்ணிலா என் நெஞ்சமே - இது ஒரு தொடர் கதை 1986 - எஸ்.பி.பி + ஜானகி - இசை கங்கை அமரன்


இளையராஜா


01 ஓ ஓ.தேவதாஸ் - தேவதாஸ் 1953 - கே.ராணி + கே.ஜமுனாராணி - இசை : சுப்பராமன் /விஸ்வநாதன் ராமமூர்த்தி அடி வான்மதி என் காதலி - சிவா1990 - எஸ்.பி.பி. + சித்ரா - இசை : இளையராஜா ஓ..ஓ...பார்ட்டி நல்ல பார்ட்டி தான் - இதயம் 2991 - மலேசியா வாசு + குழு - இசை : இளையராஜா


02 நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை 1963 - சுசீலா + பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி வான் உயர்ந்த சோலையிலே - இதயக்கோயில் 1986 - எஸ்.பி.பி. + Janaki - இசை : இளையராஜா


03 சிங்காரப்புன்னகை - மகாதேவி 1957 - எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராசாத்தி உன்னை - வைதேகி காத்திருந்தாள் 1985 - ஜெயசந்திரன் - இசை : இளையராஜா


04 சித்திர பூவிழி வாசலிலே - இதயத்தில் நீ 1953 - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி கொட்டிக் கிடக்குது செல்வங்கள் - வாழ்க வளர்க 1986 - சித்ரா - இசை : இளையராஜா.


மெல்லிசைமன்னரின் இசைமுறையை சங்கர் கணேஷ் , வி.குமார் நேரடியாக பின்பற்றினர். அவர்களுடைய பல பாடல்கள் மெல்லிசைமன்னரின் பாணியிலேயே இருக்கும். இவர்களும் பல இனிய பாடல்களை தந்ததை யாரும் மறுக்க முடியாது.


ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவையாகவும், வித்தியாசமான இனிய ஒலிகளையெல்லாம் ஒன்றறக் கலப்பதாகவும் அவற்றினூடே புதிய கலை அனுபவம் பெற வைப்பதும் புதிய இசைமரபின் வளர்ப்புப்பண்ணையாகவும் உருவாகிய மெல்லிசைமன்னர்களின் இசை தமிழ் திரை இசையை புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது.


கொண்டாடப்பட்ட இசையாக இருக்கும் திரை இசையில் தமதுமரபு சார்ந்தும் பிற இசைமரபுகளையும் காலத்தேவை கருதி ஆங்காங்கே இணைத்து புதிய மறுபடைப்பாங்ககளாக உருவாக்கிக் காட்டி தமக்கு பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் மெல்லிசைமன்னர் விளங்கினார்.


மறுபடைப்பாக்கங்களின் நுணுக்கம் புரியாத , இசையாற்றலற்ற சிலர் ரீமிக்ஸ் என்ற பெயரில் மெல்லிசைமன்னர்களின் பாடல்களை குதறிய கொடுமைகளும் 1990 க்கு பின் வந்தவர்களால் நிகழ்ந்தது. அதை மெல்லிசைமன்னர் " ரீமிஸ் என்பது கற்பழிப்புக்கு சமமானது " என்று கண்டித்ததும் நம் காலத்தில் தான் நிகழ்ந்தது.




மகாநதிகளின் சங்கமம்

1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் , சங்கர் கணேஷ் , இளையராஜா , அகத்தியர் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒரு பாடல் என்ற வகையில் பாடல்களை இசையமைத்தார் படத்தின் பின்னணி இசையை இளையராஜா அமைத்தார்.


நான் ஒரு பொன்னோவியம் கண்டே எதிரே - இசை : இளையராஜா நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்சேன் - இசை : சங்கர் கணேஷ் நான் பார்த்த ரதிதேவி எங்கே - இசை : ஜி.கே.வெங்கடேஷ் போன்ற பாடல்கள் நினைவில் நிற்கின்றன.


பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் பங்களிப்பு ஒவ்வொரு பாடல்களாகவே இருந்தது.


இது ஏன் புதுமையாக பேசப்பட்டது என்றால் ஏற்கனவே 1940 மற்றும் 1950 கள் வரையான காலப்பகுதியில் ஒரு படத்திற்கு இரண்டு அல்லது சில சமயம் மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருந்ததும் , பின் அது 1960 ,1970 , 1980கள் வரையான காலப்பகுதியில் மறைந்தும் போன ஒரு சங்கதியாகவும் இருந்ததனாலேயே ஆகும்.


1930,1940களில் ஏன் 1950 களில் கூட இரு இசையமைப்பாளர்கள் பல படங்களில் பங்களிப்பு செய்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்:


01 மனோன்மணி [1941 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 02 ஜகதலப்பிரதாபன் [1944 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 03 மிஸ் மாலினி [1947 ] இசை: எஸ்.ராஜேஸ்வரராவ் + எஸ்.அனந்தராமன் 04 அபிமன்யூ [1948 ] இசை: சி.ஆர்.சுப்பராமன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 05 கீதாகாந்தி [1949 ] இசை: சி.என்.பாண்டுரங்கன் + லக்ஸ்மான் பிரதர்ஸ் 06 திகம்பரசாமியார் [1950 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 07 பாரிஜாதம் [1950 ] இசை: சுப்பராமன் + எஸ்.வி.வெங்கடராமன் 08 மர்மயோகி [1951 ] இசை: சுப்பராமன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 09 நிரபராதி [1951 ] இசை: கண்டசாலா + பத்மநாபசாஸ்திரி 10 கல்யாணி [1952 ] இசை: சுப்பராமன் + வி.தட்க்ஷிணாமூர்த்தி 11 தேவதாஸ் [1953 ] இசை: சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 சொர்க்கவாசல் [1954 ] இசை: இசை: சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி


இவ்விதம் பல உதாரணங்களையும் காட்ட முடியும்.


பின்னாளில் தங்கள் தனித்துவங்களைக் காண்பித்து சிறந்த பாடல்களை தந்த இசையமைப்பாளர்கள் இவ்விதம் இருவராக பணியாற்றிய காலங்களில் வெளிவந்த திரைப்படப் பாடல்களைக் கேட்டால் யார் யார் எந்தப்பாடல்களை இசையமைத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. எல்லா பாடல்களும் ஒரேவகையாக இருப்பதைக் காணமுடியும்.


மர்மயோகி படத்தில் இடம்பெற்ற சில அற்புதமான பாடல்களான " மனத்துக்கிசைந்த ராஜா " , " இன்பம் இதுவே இன்பம் " போன்ற பாடல்கள் யார் இசையமைத்தார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த இரண்டு பாடல்களையும் சுப்பராமன் இசையின் சாயல் இருப்பதைக் காணலாம். இது எனது ஊகம் மட்டுமே!


தேவதாஸ் படத்தின் சில பாடல்கள் இசையமைத்து முடிந்த நிலையில் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் அகால மரணமடைந்தார். அந்த நிலையில் அவர் ஒப்பந்தமாகிய வேறு சில படங்களை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு மெல்லிசைமன்னர்களின் பொறுப்பாய் அமைந்தது. தேவதாஸ் , சொர்க்கவாசல் ,சண்டிராணி போன்ற படங்களில் மெல்லிசைமன்னரின் கைவரிசையும் உண்டு. " வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே " என்ற பாடலை விஸ்வநாதன் இசையமைத்தார் என அவரே கூறியிருக்கின்றார்.


ஒரு படத்திற்கென இசையைக்கப்பட்ட பாடல்கள் வேறு படங்களில் பயன்பட்டிருப்பதை பழைய திரைப்படங்களில் நாம் காணலாம்


கூண்டுக்கிளி படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடலை தயாரிப்பாளரும் , இயக்குனருமான ராமண்ணா தனது இன்னொரு படமான குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டார். அந்தப்பாடல் தான் குலேபகாவலியில் இடம் பெற்ற இனிய ஜோடிப்பாடலான " மயக்கும் மாலை பொழுதே நீ போ போ " என்ற பாடல். அதே போலவே மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் " என்ற பாடல் எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த திருடாதே படத்தில் பயன்படுத்தப்பட்டது.


அமரதீபம் [ இசை: டி.சலபதிராவ் ] படத்தில் " நாடோடி கூட்டம் நாங்க " என்று தொடங்கும் ஒரு பாடல் ஜி.ராமநாதன் இசையில் இடம் பெற்றது.


இசையமைப்பாளர்களிடம் உதவியாளர்களாக இருக்கும் பலரும் இசையமைப்பில் வாத்தியங்களை ஒழுங்குபடுத்துவது , சில சமயங்களில் உதவியாளர்களின் மெட்டுக்களை இசையமைப்பாளர்கள் தங்கள் பெயரிலேயே போட்டுக் கொள்வதும் நடந்திருக்கின்றது.


வி.குமாரிடம் உதவியாளராக இருந்த சேகர் என்ற உதவியாளர் அமைத்த பாடல் தான் நீர்க்குமிழி படத்தில் இடம்பெற்ற " ஆடி அடங்கும் வாழ்க்கையடா " என்ற பாடலாகும். அன்றைய நிலையில் திறமையிருந்தாலும் உதவியாளர்கள் நிலைமை இவ்விதமாகவே இருந்தது.


"தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த புண்ணியம்மா" என்ற பாடலை பொண்ணுக்கு தங்க மனசு [இசை : ஜி.கே.வெங்கடேஷ் ] படத்தில் உதவியாளராக இருந்த இளையராஜா முதன் முதலில் இசையமைத்தார். அவர் பெயர் கூட டைட்டில் எழுத்தில் கிடையாது.


மேலே குறிப்பிட்டபடி இரு இசையமைப்பாளர்கள் பங்குபெற்ற திரைப்படங்களில் அந்த இருவரும் சேர்ந்து இசையமைத்தார் என்பது பொருள் அல்ல. வெவ்வேறு நிலைகளில் தனித்தனியே இயக்குனரின் அல்லது தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே இசையமைத்தார்கள் என்பதை பின்னாளில் சில சமயங்களில் இசையமைப்பாளர்களின் முத்திரை தெரியும் பாடல்கள் அமைந்தன.


திரைக்கு பின் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் ஹிந்தி திரையுலகிலும் இருந்திருக்கிறது. எஸ்.டி பர்மனின் உதவியாளராக ஜெய்தேவ் இருந்ததும், பிற்காலத்தில் 1970களில் எஸ்.டி.பர்மனின் இசையில் அவரது மகனான ஆர்.டி. பர்மன் பங்காற்றியது பற்றிய செய்திகள் வெளியாயின. குறிப்பாக எஸ்.டி.பர்மன் தனது கடைசிக் காலங்களில் இசையமைத்த திரைப்படங்களில் ஆர்.டி.பர்மனின் பங்களிப்பு இருந்தது என்பர்.


1950களில் புகழபெற்றிருந்த நௌசாத் , அணில் பிஸ்வாஸ் போன்ற பெரிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்த குலாம் முகம்ட் ,அக்காலத்திலேயே சில படங்களுக்கு இசையமைத்து பெரும் புகழ் பெற்றார். 1968ல் குலாம் முகமட் இசையமைத்த Pakeezah என்ற திரைப்படம் அவரது மரணத்தால் தடை பட்ட போது அந்த படத்தின் இசைப்பணிகளை நிறைவு செய்தவர் நௌசாத். அப்படம் பின்னர் 1972இல் வெளியாகி பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன. அதிலும் குறிப்பாக ஆர்.டி. பர்மனின் இசை அதிக பிரபல்யமடைந்திருந்த நேரத்திலேயே செவ்வியலிசை பாணியில் அமைந்த குலாம் முகமட்டின் இசை பிரபல்யம் அடைந்தது.


பலர் தனித்தனியே இசையமைத்து கொண்டிருந்த காலத்தில் இருவர் இணைந்து இரட்டையர்களாக இசையமைத்ததையும் இந்திய திரையுலகில் காண்கிறோம். ஹிந்தியில் சங்கர் ஜெய்கிஷன் , கல்யாண்ஜி ஆனந்தஜி , லஷ்மிகாந்த் பியாரிலால் , தமிழில் லக்ஷ்மன் பிரதர்ஸ் , விசுவநாதன் ராமமூர்த்தி , சங்கர் கணேஷ் , மனோஜ் கியான் போன்றோர் நன்கு தெரிந்தவர்கள். இரட்டையர்களாக இருந்து இசையமைத்தார்களேயன்றி வேறு வகையில் யாரும் ஒன்றிணைந்து இசையமைக்கவில்லை என்று கூறலாம்.


ஆனால் தனித்தனியே பெரும் புகழ் பெற்ற இரு இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தார்கள் என்ற ஒரு வரலாற்று பெருமை விஸ்வநாதனையும் இளையராஜாவையுமே சாரும்.


நட்சத்திர அந்தஸ்து பெற்ற இரு பெரும் இசையமைப்பாளர்களான விஸ்வநாதனும் இளையராஜாவும் சமகாலத்தவர்கள் என்ற போதும் விஸ்வநாதன் 15வயது மூத்தவர். விஸ்வநாதன் இசையால் பெரும் பாதிப்புக்குள்ளானவர் இளையராஜா.அவரது இலட்சிய இசையமைப்பாளர் விஸ்வநாதன். இயல்பாகவே புதுமை நாட்டமும் மரபு இசைசார்ந்த மெட்டுக்களை அமைப்பதிலும் வல்லவரான விஸ்வநாதனும் , வாத்திய இசையில் மாபெரும் பாய்ச்சலைக்காட்டி இந்திய இசையுலகை உலுக்கிய இளையராஜாவும் இணைந்தது தமிழ் திரையுலகின் வரலாற்று சம்பவமாகும்.


இருவரது இசைவரலாற்றிலும் இந்த சம்பவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மரபு இசையிலும் ,அத்தோடிணைந்து நவீன இசைகளை உள்வாங்கி புதுமை செய்ததில் மெல்லிசைமன்னர் ஒரு படி முன்னே தமிழ் திரையிசையை நகர்த்தினார் என்றால் அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக மாபெரும் .பாய்ச்சலைக்காட்டிய இளையராஜா. மெல்லிசைமன்னரின் இசைத் தொடர்ச்சியாகவே இருந்தார். இருவரும் தமிழிசை மரபுகளிலும் மெல்லிசையிலும் ஊறித்திளைத்தவர்கள். மெல்லிசைமன்னரின் மெல்லிசை 1960, 1970களை உலுக்கியது என்றால் இளையராஜாவின் மெல்லிசை 1980, 1990களை உலுக்கியது


ஒலிகள் நம்மை ஆழமாகப் பாதிக்கின்றன. நாம் கருவில் இருக்கும் போதே கேட்கின்ற "ம்" என்ற அல்லது ஒருவித இரைச்சல் ஒலி [Drone ] அதிர்வுகள் நாம் பிறப்பதற்கு முன்பே இருக்கின்ற ஒலிகளாகும். இதனை குறிப்பிட்ட ஓர் ஒழுங்கில் . இயற்கையுடன் இசைந்த ஒத்திசைவாக இசையாக உருவாக்கும் போது ஆழ்மனத்தில் பரவச நிலையைத் தருகிறது. அவை ஆழ்நிலையில் நம்மைப் பாதிக்கின்றன.


இந்த ஒத்திசைவு [ Harmony ] இசையின் அழகுகளை மேலைத்தேய செவ்வியலிசை அற்புதமாக வெளிப்படுத்தியது. தமிழ் சூழலில் மெல்லிசைமன்னர்களே அதன் இனிய பக்கங்களைக் காண்பித்த முன்னோடிகள் ஆவர் . இதற்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த "படிக்க படிக்க நெஞ்சில் இனிக்கும் பருவம் என்ற காவியம் " [ இரத்தினபுரி இளவரசி 1960 ] என்ற பாடலின் இனிய வாத்திய இசை சிறந்த உதாரணமாகும்.


ஒலிகளை பின்னணி இசையாக கையாண்டு இளையராஜா சாதனையின் சிகரத்தில் இருந்தார். அந்த இனிய இசையை மெல்லிசைமன்னரின் மெட்டுகளில் நெய்த்தெடுத்து தனது ரசனையின் அழகுகளை நனவோடை இசையாக மாற்றிக் காட்டினார் இளையராஜா.


தழுவி ,தாவித்தாவி வரும் மெட்டின் இனிமையை தான் எப்படியெல்லாம் ரசித்தாரோ அந்த விதங்களிலெல்லாம் இசை ரசிகர்களையும் தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வது போல பிரமிப்பூட்டும் பின்னணியாக அமைத்து மெட்டா , பின்னணி இசையா என்று பிரமிக்க வைத்தார் இசைஞானி !


அந்த இனிமையை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் , இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த மெல்லத்திறந்தது கதவு , செந்தமிழ்பாட்டு , செந்தமிழ் செல்வன் , விஸ்வத்துளசி போன்ற படங்களில் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். மெல்லத்திறந்தது கதவு பாடல்களின் பின்னணி இசையின் சிறப்பை மெல்லிசை மன்னரே மதுரையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாராட்டினார்


சமகாலத்து இரு இசைமேதைகளின் ஒன்றிணைவு மெல்லத் திறந்தது கதவு படத்தில் ஏற்பட்டது. இளையராஜா புகழின் அதி உச்சநிலையிலிருந்த போது இந்த இணைவு ஏற்பட்டது. மெல்லிசைமன்னரின் விருப்பத்திற்காக இசைந்த இளையராஜா இந்த மாதிரியான ஓர் இணைவை நீண்ட காலமாக விரும்பியுமிருந்தார் எனபதை அவரே குறிப்பிட்டும் இருந்தார்.


எண்ணற்ற இனிய மெல்லிசைப்பாடல்களை இசையமைத்து குவித்த மாபெரும் கலைஞன் விஸ்வநாதன் தனது ரசிகனும் திறமைமிக்கவருமான இளையராஜாவுடன் இணைய விரும்பியதும் அதற்கு இளையராஜா இசைந்ததும் இரு மேதைகளின் பெருமைக்கும் ,பணிவுக்கும் எடுத்துக்காட்டாகும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் இளையராஜாவின் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாகும்.


இந்த இணைவு குறித்தும் அது பெற்ற வெற்றி பற்றியும் பின்னாளில் மெல்லிசைமன்னர் கூறும் போது " அது ஒரு ஆத்மார்த்தமான இணைவு " என்றும் பின்னாளில் வேறு சிலரும் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினார்கள் நான் அதை ஏற்கவில்லை என தெரிவித்தார்.


மெல்லத்திறந்தது கதவு படத்தில் இருவரும் இணைந்து நல்ல பாடல்களைத் தந்தார்கள்.கனியும் சுவையும் போல இரண்டறக்கலந்த அப்பாடல்களை விஸ்வநாதன் மெட்டமைக்க இளையராஜா வாத்திய இசையை அமைத்தார். கேட்பவர்களுக்கு உடனடியாக அவை இளையராஜா பாடல் போலத்தெரிந்தாலும் அதன் ஜீவன் மிக்க மெட்டுக்களை அமைத்தவர் விஸ்வநாதன் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். இருவரும் மெல்லிசையை அதிகம் கடைப்பிடிப்பதும், ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்று இருப்பதால் இருவரின் இணைப்பும் மிக நேர்த்தியானதாக, ஆத்மார்த்தமானதாக அமைய காரணமாகியது.


கைதேர்ந்த இருமேதைகளின் இசையின் ஆழமிக்க ஒன்றிணைவுக்கும், இசையின் இனிமைக்கும் காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மெட்டைக் குழப்பாத இனிய ஹார்மோனி இசையுமாகும். தனது முன்னோர்களின் இசையையும், அதன் அமைப்புகளில் இளையராஜாவுக்கிருந்த திளைப்பும் , ஞானமும் அதை பேராற்றலுடன் அந்த ஓட்டத்திலேயே எடுத்து செல்லும் கலா மேதமையுமாகும்.


அநாசாயமாகப் பாய்ந்து செல்லும் மெல்லிசைமன்னரின் மெட்டுக்களை தனது வாத்திய இசையால் மடக்கிப்பிடிக்கவும், அதையே விஸ்தரித்து மெட்டில் பொதிந்திருக்கும் உணர்ச்சி வேகங்களை வெளிப்படுத்தவும் சிந்தனை வெளிப்பாட்டில் மெல்லிசைமன்னருடன் ஒன்றித்து நிற்கும் இளையராஜாவால் மட்டுமே அது முடியும் என்பதை இந்த திரைப்படங்களின் பாடல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமல்ல இருவருக்குமிடையே இருந்த அன்பும் புரிந்துணர்வும் இந்த இனிய இசையின் கூட்டணிக்கு மிகமுக்கியமானதாகும்.


மெல்லத்திறந்தது கதவு படத்தின் அனைத்துப் பாடல்களும் இருவரின் மேதமைக்கு எடுத்துக் காட்டாக இருந்ததது. அப்பாடல்கள் மட்டுமல்ல அடுத்தடுத்து இசையமைத்த சில படப்பாடல்களும் தனி சிறப்புமிக்கவையாக அமைந்தன.


செந்தமிழ் செல்வன் படத்தில் வரும் பாடல்கள்:


01 பாட்டு இசைப்பாட்டு - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 02 குயிலே இள மாங்குயிலே - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 03 கூடு எங்கே தேடி கிளி இரண்டும் - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி + சித்ரா - இசை : விஸ்வநாதன் இளையராஜா 04 அடி கோமாதா - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா " அடங் கொப்பரானே சத்தியமா நான் காவல்காரன் " என்ற காவல்காரன் பாடலை நினைவூட்டும்.


செந்தமிழ் பாட்டு படத்தில் வரும் பாடல்கள் 01 வண்ண வண்ண சொல்லெடுத்து - செந்தமிழ் பாட்டு 1992 - ஜிக்கி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 02 சின்ன சின்ன தூறல் என்ன - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 03 அடி கோமாதா - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா


இருவரும் இணைந்து இசையமைக்கும் முன்பே இளையராஜா தாய்க்கொரு தாலாட்டு[1985] படத்தில் "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்" புதிய பறவை [1964] படத்தின் தனிப் பாடலை " இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே " என்று டூயட் ஆக மாற்றிக்காட்டினார். அது வாத்திய இசையின் ஜாலமிக்க எளிமைக்கும் ,இனிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


மெல்லிசை மன்னர்களின் படகோட்டி பாடலான " தொட்டால் பூ மலரும் " என்ற பாடல் Remix என்ற பெயரில் குத்திக் குதறியதை இசைரசிகர்கள் மறைந்திருக்கும் முடியாது. அதுஒரு பாடலை எப்படி அசிங்கம் செய்யலாம் என்பதற்கு இந்த வகை Remix ஐ உதாரணமாகக் கொள்ளலாம்.


1980 களில் இளையராஜா உச்சத்திற்கு வந்த போதும் மெல்லிசைமன்னரின் புகழ் மெல்ல மெல்ல குறைந்த போதும் அவரது இசையில் அருமையான பாடல்கள் வெளிவரத்தான் செய்தன. " கவிதை அரங்கேறும் நேரம் " , "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு " போன்ற பல பாடல்கள் ஆர்ப்பாட்டங்களில் மங்கியிருந்தாலும் இன்றும் அவை மெல்லிசையின் தரத்தில் உயரத்திலேயே நிற்கின்றன.


இளையராஜா தான் இசைத்துறைக்கு வருதற்கான காரணமே மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " மாலைப்பொழுதில் மயக்கத்திலே " என்ற பாடல் தந்த பாதிப்பு என்றும் அவர்களின் இசை தனது நாடி நரம்புகளில் ஊறியிருக்கின்றது என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்.


சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜாவின் ஆதர்சபுருஷர்!


அந்த வகையில் மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் இளையராஜாவை பாதித்திருப்பது மட்டுமல்ல பாடல் அவரது இசைவெளிப்பாட்டு உத்திகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. தனியே மெட்டுக்கள் சாயல்கள் மட்டுமல்ல வாத்திய அமைப்புகளிலும் அவை மறைமுகமாக ஊடுருவி நிற்கின்றன.


01 காற்று வந்தால் தலை சாயும் நாணல் - காத்திருந்த கண்கள் 1962 - பி.பி.எஸ் + சுசீலா = இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A மாலை மயங்கினால் இரவாகும் - இனிக்கும் இளமை 1979 - பி.பி.எஸ்.-சைலஜா - இசை: இளையராஜா B முத்தம் போதாதே - எனக்குள் ஒருவன் 1985 - எஸ்.பி.பி - ஜானகி - இசை: இளையராஜா


பாடலுக்கிடையே தாலாட்டு அமைப்பை இணைப்பது ...


02 வீடுவரை உறவு - பாதகாணிக்கை 1962 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 - எஸ்.பி.பி - இசை: இளையராஜா B காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள் 1985 - ஜெயசந்திரன் - இசை: இளையராஜா


03 தரை மேல் பிறக்கவைத்தான் - படகோட்டி 1964- டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A கடலிலே எழும்பிற அலைகளைக் கேளடி - செம்பருத்தி 1992 - இளையராஜா - இசை இளையராஜா


இருவரது இசையில் உள்ள ஒற்றுமைகளை அதன் உள்ளோசைகளில் வெவ்வேறு கலைஞர்களின் இசைகளிலிருந்து எடுத்தாளும் சந்தங்களும் பாடல் வடிவ அமைப்புகளில் உள்ள நெருக்கமும் ஒன்றுக்குள் ஒன்று அகத்தூண்டுதல் பெற்று ஊடுருவிச் செல்வதையும் நாம் காண முடியும். பொதுவாக இந்த ஒப்பீட்டு முறையை நாட்டுப்புற இசை ஆராய்ச்சிகளிலும் நாம் காண முடியும்.


20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களாக விளங்கிய இந்தியாவின் மகாகவிகள் என்று போற்றப்படுகின்ற தாகூரும் , பாரதியும் சமகாலத்தவர்களாக இருந்த போதும் தம் வாழ்நாளில் சந்திக்கும் வாய்ப்பு பெறாதவர்கள்.


தமிழ் சினிமாவில் தமிழ் மரபிசையிலும், நவீன இசையிலும் தம் காலத்தின் அசைக்க முடியாத நாயகர்களாக தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் மெல்லிசைமன்னரும் இசைஞானி இளையராஜாவும். சமகாலத்து இசைமேதைகளான இருவரின் இந்த இணைப்பு இசைரசிகர்களுக்கு பேருவுகையாக அமைந்தது


இசையில் மெல்லிசைமன்னரின் பாதிப்பால் வளர்ந்த இளையராஜா யாரும் எண்ணிப் பார்க்க முடியாதவண்ணம் வாத்திய இசைமூலம் தனக்கென புதிய பாணியை அமைத்து மெல்லிசையின் பாதையையே மாற்றி அமைத்தார். இருவரும் பின்னாளில் சேர்ந்து இசையமைத்தாலும் இந்த இருவர் பற்றிய ஒப்பீடுகளும், விமர்சனங்களும் வெளிவரவும் செய்தன.


மேலைத்தேய இசையிலும் இருவரை இணைத்து அல்லது ஒப்பிட்டு பேசுவது வழக்கத்திலுள்ளது. உதாரணமாக ஹண்டேல் - பாக் என்று இரு இசைமேதைகளையும் மொஸாட் - பீத்தோவான் போன்றோர்கள் ஒப்பிட்டு பேசப்படுகின்றன. மிகச் சிறந்த இசை வழங்கியவர்களில் ஹண்டேல் - பாக் என்ற ஒப்பீட்டை எடுத்துக் கொண்டால் இருவரும் அதிசிறந்த கலைஞர்கள் எனக்கருதப்படுகின்றனர். இருவரும் அதி உச்ச இசையமைப்பாளர்கள் என்று கருதப்பட்டாலும் இருவரும் இருநிலைப்பட்ட இசையமைப்பாளர்களாகவும் இருந்தனர். பாக் முற்றுமுழுதாக மதம் சார்பான இசைக்கலைஞராகவும் , ஹண்டேல் மதம் சாராத இசைக்கலைஞராகவும் விளங்கினர். பாக் தேவாலயங்கள் சார்ந்து இயங்கியதும் ஹண்டேல் மதம்சாராத அரச நிகழ்வுகளுக்காகவும் இசை எழுதினார். அந்த வகையில் ஹண்டேல் ஒரு மதம் சார்பான இசையமைப்பாளர் அல்ல. மேற்கில் இசைவாணர்கள் மதம் சார்ந்தும் ,மதம் சாராத , கடவுள் நம்பிக்கையற்ற வகையில் இயங்கியதையும் காண்கிறோம்.


ஆனால் இந்திய இசையமைப்பாளர்கள் மிகுந்த தெய்வபக்தியுடையவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.! அந்த வகையில் விஸ்வநாதனும் இளையராஜாவும் விதிவிலக்கானவர்களுமல்ல. இங்கே தெய்வீகக் கடாட்சமிக்கவர்களாலேயே அது சாத்தியம் எனவும் நம்பப்படுகிறது.


பொதுவாக இசை என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு மனித மனங்களில் ஆழமான தாக்கத்தையும் , எழுச்சியையும் ஏற்படுத்துவதால் அது ஓர் தெய்வீக சக்தி என்பதாக நினைக்க வைக்கிறது. ஆனாலும் எந்தவித இசைப்பின்னணியுமற்ற குடும்பங்களிலிருந்து வந்த இந்த இரண்டு இசைமேதைகளும் தங்களது கடின உழைப்பாலும் முயற்சியாலுமே முன்னுக்கு வந்தார்கள் என்பதை இவர்கள் இசையமைத்த பாடல்கள் மூலம் நாம் அறிகின்றோம். எந்த ஒரு துறையிலும் தீவிர நாட்டமும் , ஆர்வமும் , முயற்சியும் , அதனுடன் பயிற்சியும் இருந்தால் யாரும் எந்தத்துறையிலும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த இரு இசைமேதைகளும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


நிறைவாக …. விருது பெறுவதால் ஒரு கலைஞனின் பெருமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் ,அவரது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த அங்கீகாரமும் முக்கியமான விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் மெல்லிசைமன்னர்!


தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர்,மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்க முடியாத காலத்து மனிதராகவும் வாழ்ந்து மறைந்தார். அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது."உழைக்கத் தெரிந்தது , பிழைக்கத் தெரியவில்லை" என்பார்! .


அவரது பாடல்கள் எல்லாம் எம் ஜி ஆர் பாட்டு என்றும் , சிவாஜி பாட்டு என்றும் நாம் அடையாளம் கண்டு கொண்டாடினோம்! இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.அதற்கு கைமாறாக அவர் தந்த இசைப்படைப்புகள் தமிழர்களை ,தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன. தமிழ்ப்பாடல்களைத் தலைநிமிர வைத்தன! தமிழ் திரையிசையைப் பொறுத்தவரையில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கோலோச்சிய 1960 , 1970 கள் மிக முக்கியமான காலப்பகுதியாகும். திரை இசை வளர்ச்சியில் பின்வந்த தலைமுறையினரை அதிக பாதித்த நவீன இசைக்கலைஞர் என்றவகையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.


தனது ஒப்பற்ற இசைத்திறனால் வளர்ந்து இசையின் இலக்கணமாக திகழ்ந்த , தனிப்பெரும் ஆளுமையான விஸ்வநாதனை முக்கிய காலகட்டத்தின் பிரதிநிதியாக காலம் கனிந்து தனதாக்கிக் கொண்டது. இசையமைப்பில் அவர் காட்டும் ஆர்வமும் , துடிப்பும் , உற்சாகமும் அவரது இறுதிக்காலம் வரை தொய்வின்றி இருந்தது. ஊரெல்லாம் உற்சாகமாகப் பாடித்திருந்த பழங்காலத்துப் பாணர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற எண்ணம் என்னுள் எழுவதுண்டு. " நியூஸ் பேப்பரைக் கொடுத்தாலும் விஸ்வநாதன் இசைமைப்பான் " என்று கண்ணதாசன் கேலியாக கூறினாலும் நம் காலத்து இசைப்பாணராகவே அவர் வாழ்ந்து மறைந்தார்.


பழங்காலத்து இசைப்பாணர்கள் போல எந்தவித சுமைகளுமற்ற சுதந்திர இசைப்பறவையாக வாழ வேண்டும் என்ற அவா அவர் மனதில் இருந்தது என்பதை அவர் பற்றி இசை ஆய்வாளர் வாமனன் எழுதிய குறிப்பொன்றில் பின்வருமாறு எழுதுகின்றார். இன்னொரு விஸ்வநாதன் உண்டு. திரை உலகை விரும்பாத விஸ்வநாதன் . இன்னொருஜென்மம் வேணும் .. புள்ள குட்டி எதுவுமே இல்லாம .. என் ஆர்மோனியம், நான். அவ்வளவுதான் இருக்கணும் .. ரோட்டுலே நான் ஆட்டுக்கு எந்தக்கவலையும் இல்லாம பாடிக்கிட்டே போகணும் ...


அவரது உடல் மறைந்தாலும் அவர் ஊறித்திளைத்த இசையும் அதிலிருந்து அவர் படைத்தளித்த அற்புதமான பாடல்களும் நம் நெஞ்சங்களை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. தலைமுறை தாண்டியும் அவரது மெல்லிசைப்பாடல்கள் இசை நிகழ்ச்சிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ராகத்தையும் செதுக்கிச் செதுக்கி அதில் உயிரைக் குடிக்கும் இசைவார்ப்புகளை நமக்கு விட்டு சென்ற மாமேதையை பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.


"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்காத தெரியாதா " என்ற அதி உன்னதமான பாடலை நடபைரவி ராகத்தில் நமக்குத் தந்து நம்மை நெஞ்சுருக வைப்பது மட்டுமல்ல , இனிவரும் சந்ததிகளையும் உருக வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.


இசைவல்லாளன் எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற மாமேதையின் பெயரும் காலங்களைக்கடந்து நிற்கும். “என்னுடைய நாடி, நரம்புகளிலெல்லாம் அவரது பாடல்கள் ஊறியிருக்கின்றன” என்று இசைஞானி இளையராஜா கூறியது வெறும் வார்த்தையல்ல!!


பல்லாயிரம் நல்லிசை ரசிகர்கள் மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.


முற்றும்.